Thursday, November 30, 2006

நாத்திகன்

நாத்திகன் யார்? என்ற கேள்விக்கு பெரியார் ஒருவரின் பதில்: "சரீரக் கண்ணால் பார்க்கக்கூடாத ஒருவருடைய உதவி யாருக்கு இல்லையோ அவன் நாத்திகன்" என்பதாகும்.கடவுள் இல்லை என்கிற ஒருவனுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிற இறைவனின் பங்கு எவ்வாறு கிடைக்கும்?

ராபர்ட் இங்கர்சால் என்ற நாடறிந்த நாஸ்திகன் ஒருவன் வேதாகமத்தைக் குறைகூறி பல நூல்களை எழுதினான்.தான் எழுதிய நாத்திக புத்தகமொன்றை தெய்வ பக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான்.அந்நூலின் முதல் பக்கத்தில் அவன் கையால் எழுதி இருந்ததைக் கவனியுங்கள்:
"கிறிஸ்தவர்கள்எல்லோரும் என் அத்தை சாராளைப் போல் ஜீவித்தால் இப்புத்தகம் எழதப்பட்டிருக்க மாட்டாது."
இதை வாசிக்கிறவர்களின் கவனம் இங்கர்சாலின் கையெழுத்தில் செல்லட்டும்.

யாக்கோபு:1:22. அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

James:1:22.But be ye doers of the word, and not hearers only, deceiving your own selves

Sunday, November 19, 2006

அறிஞர்களும் வேதமும்

நான் ஒரு வேளை ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது,என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரம் கொண்டு போகலாம் எனக் கூறினால், நான் பைபிளை (வேதாகமத்தை) மாத்திரமே தெரிந்தெடுப்பேன்-கோதே (Goethe)

வேதாகமம் ஒரு பழமையான புத்தகமோ, அல்லது புதுமையான புத்தகமோ அல்ல.அது நித்திய காலமாக உள்ள ஒரு அழிவற்ற நூலாகும்-மார்ட்டின் லுத்தர்

ஒரு சிறு பிள்ளையின் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு இவ்வுலக ஞானிகளின் அறிவைப் பரிகாசம் செய்யும் ஓர் புத்தகமே வேதாகமம்-பேராசிரியர் பீட்டெக்ஸ்

உலகப் புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதிய ஆங்கில எழத்தாளர் சர் வால்டர் ஸ்காட் தனது மரணப் ப்டுக்கையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் பொழுது தனது மூத்த மகனிடம் ,"அந்தப் புத்தகத்தை எனக்குத் தா"என்றாராம்.மகன் அவரிடம்,"எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்?"என்று கேட்டார்.அப்பொழுது ஸ்காட் பதிலுரைத்தார்,"இவ்வுலகில் 'புத்தகம்' என அழைக்கப்படக்கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே"!

நூறு முறை வேதாகமத்தை வாசித்து முடித்த பின் ஸ்பர்ஜன் கூறினார்,"நான் நூறாவது முறை வேதத்தை வாசித்த போது ,முதல்முறை வாசித்ததை விட அதை மிகவும் அழகுள்ளதாகக் கண்டேன்"

சங்கீதம்:19:10.
(கர்த்தருடைய வேதம்)பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
More to be desired are they than gold, yea, than much fine gold: sweeter also than honey and the honeycomb.

Monday, November 13, 2006

மெய்வாழ்வும் மகிழ்ச்சியும் செல்வத்திலா?

இல்லை!
ஜேய் கோல்டுஎன்ற மிகப்பெரிய பணக்காரர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர்.அவரிடம் 700 மில்லியன் டாலர்கள் (சுமார் 864 கோடி)மதிப்புள்ள சொத்து இருந்தது.அவர் தான் மரிக்கும் போது "மகிழ்ச்சியே இல்லாத பரிதாபமானவன் இவ்வுலகில் நானாகத்தான் இருக்கும்"என்று கூறினாராம்.இவ்வளவு செல்வத்திலும் அவரால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியவில்லை.

ஜார்ஜ் ஈஸ்ட்மென் அமெரிக்காவிலிருந்த மிகப் பெரிய போட்டோ தொழிலகத்தின் மிக நேர்மையான அதிகாரியான இருந்தார்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர்.தனது செல்வத்தில் 750 மில்லியன் டாலர்களை தர்மத்திற்கென்று கொடுத்தவர்.அதுகூட அவர் வாழ்வில் முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.தனது 60ஆம் வயதில் மனதில் திருப்தி அற்றவராக 1932ஆம் ஆண்டு மார்ச்சு 14ஆம் நாள் அவர் தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.என்ன பரிதாபம்.

இதேபோல் ராபர்ட் யங் என்ற மிகப்பெரிய கோடீஸ்வரர் தான் பெரிய அதிகாரியாக வேண்டும் என பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு முடிவில் நியூயார்க் மாநகரின் ரயில்வே அதிகாரியானார்.மன மகிழ்ச்சியின்மையின் காரணமாக தான் போராடி பெற்ற செல்வம்,அதிகாரம் எல்லாவற்றையும் எறிந்து விட்டு தனது அரண்மனை போன்ற "ப்ளோரிடா"என்ற மாளிகையில் 1958ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார்.தான் போராடி பெற்ற மிகப்பெரிய பதவியின் மூலம் கிடைத்த செல்வத்திலும் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கவே இல்லை.பரிதாபம் அன்றோ!

இன்பத்திலா?

இல்லை! பைரன் பிரபு (ஜார்ஜ் கார்டன்)என்பவர் ஆங்கிலக் காதல் காவியங்களை எழுதும் சிறந்த கவிஞர்.அவர் உலக இன்பத்தைக் காவியங்களின் வாயிலாக அனுபவிப்பவர்.அவர் தனது வாழ்வின் கடைசி ஆண்டான 36ஆம் வயதில் பின்வருமாறு காவியம் ஒன்றை எழுதினார்:

"என்னுடைய வாழ்நாளெல்லாம் பழுத்த இலையில் உள்ளது
மலரின் மணமும்,கனியின் சுவையும்,அன்பும் போய் விட்டது
பூச்சியும் புழுவும் துக்கமுமே என் பங்கு!"

உண்மையான மகிழ்ச்சியில்லாத வாழ்வால் நிம்மதியற்ற நிலையில் இவ்வாறு எழுதினார்.

பதவியிலும்,புகழிலும் கிடைக்குமா?

இல்லை! பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் புகழ்பெற்ற பிரிட்டீஷ் அதிகாரி.பதவி,புகழ் இரண்டையும் பெற்றவர்.அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

"இளமைப் பருவம் தவறானது,
இடைப்பருவம் போராட்டம் மிக்கது,
முதுமைப்பருவம் வருத்தம் மிக்கது"

பெரும் புகழும் பதவியும் பெற்றவர் இவ்வாறுஎழுதும் போது நம் நிலைமைஎன்ன? சற்றே சிந்திப்பீர்!

பலத்திலா?அதிகாரத்திலா?

இல்லை! மகா அலெக்ஸாண்டர் வரலாற்று சிறப்பு மிக்கவர்.அவர் தனது பலத்தால் இந்த முழு உலகத்தையே வென்றவர்.இத்தகைய ஆச்சரியமான வெற்றியின் முடிவில் தனது கூடாரத்தில் கண்ணீருடன் கூறினது:
"இனி வெற்றி பெற வேறு உலகம் இல்லை!"

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாலமோன் ஞானி பின்வருமாறு தீர்மானித்து எழுதிவைத்துள்ளதை மேற்க்கண்டவர்கள் உறுதிபடுத்தினர்

பிரசங்கி:2:17. ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
Therefore I hated life; because the work that is wrought under the sun is grievous unto me: for all is vanity and vexation of spirit.

அப்படியானால் எங்குதான் அந்த முழுமையான மகிழ்ச்சியினைக் காணமுடியும்?
இயேசு கிறிஸ்துவில் மட்டுமே!

யோவான் 6:35. இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
And Jesus said unto them, I am the bread of life: he that cometh to me shall never hunger; and he that believeth on me shall never thirst.

சங்கீதம் 107:8. தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
Oh that men would praise the LORD for his goodness, and for his wonderful works to the children of men!

அப்போஸ்தலர் 16:31. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house.

Sunday, October 29, 2006

பூவும் சூரியனும்

ஆங்கில கவிஞன் டென்னிசன் ஒரு நாள் தம் நண்பருடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.நண்பர் அவரைப்பார்த்து ,"கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்குக் கிறிஸ்து எப்படிப் பட்டவராக இருக்கிறார்?"என்று கேட்டார்.

டென்னிசன் சற்று அமைதியாக உலாவினார்,

பின்பு,"அதோபாருங்கள்,"என்று ஒரு மலரைச் சுட்டி காட்டினார்.

`அது ஒரு அழகான புஷ்பம்` என்றார் நண்பர்.

அப்பூவிற்குச் சூரியன் எப்படியோ அப்படியே கிறிஸ்துவும் எனக்கு என்றாராம்.

கிறிஸ்து உங்களுக்கு எப்படிப்பட்டவர்?

ஓசியா (Hosea):14:8
"நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று"
"I am like a green fir tree. From me is thy fruit found."

யோவான் (John) :15:4
"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்"
"Abide in me, and I in you."

பிலிப்பியர் (Philippians):1:21
21. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
"For to me to live is Christ, and to die is gain."


இதுவல்லவோ இரண்டறக்கலந்த வாழ்வு?

Sunday, October 22, 2006

இந்திராகாந்தியும் விவிலியமும்

இந்தியாவின் பிரதமராய் இருந்த இந்திராகாந்தி,தன் மகனாகிய சஞ்சய்காந்தியை விமான விபத்திலே பறிகொடுத்தபோது அவர்கள் திரும்பத்திரும்ப மலைப்பிரசங்கத்தையும் யோவான் 14ம் அதிகாரத்தையும் இணைத்து வாசித்தார்கள்."அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதலாய் இருந்தது"என்று ஒருமுறை குறிப்பிட்டார்கள்
- அன்றன்றுள்ள அப்பம் சகோ.சாம் ஜெபத்துரை 2 அக்டோபர் 2006

ஏசா:26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

Isaiah 26:3
You will keep in perfect peace those whose minds are steadfast, because they trust in you.

முகவரிகள் Addresses

அன்றன்றுள்ள அப்பம் Antantulla Appam
சகோ.J.சாம் ஜெபத்துரை
J.SAM JEBADURAI,
50,RAILWAY STATION ROAD,
KODAMBAKKAM
CHENNAI 600 024
INDIA
EMAIL appam@appamonline.com
Web http://www.appamonline.com

Yesu viduvikkiraar
Jesus Redeems Ministries
இயேசு விடுவிக்கிறார்
சகோ.மோகன் சி.லாசரஸ்
நாலுமாவடி Naalumaavadi
628 211
தூத்துக்குடி மாவட்டம் Tuticorin District
24 மணிநேர ஜெப உதவிக்கு 04639-235315
Ph:(04639)-235 305,235 705
Fax:(04639)-235 415

EMAIL info@jesusredeems.com
Web http://www.jesusredeems.com

Monday, October 16, 2006

மாவோவும் கடவுளும்

மாவோ (Mao Zedong December 26, 1893 – September 9,1976)கடுமையான நாத்திகன்.1936-ல் மத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினராக இருந்தபோது நோயினால் பாதிக்கப்பட்டார்.அப்போது அவர் ஞானஸ்நானம் பெற விரும்பி ஒரு கன்னியாஸ்திரியின் மூலமாக ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.
மாவோவின் சியாங்கே ஷேக்கின் மனைவி படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போது "The Immortals" என்னும் மதக்கவிதையே மாவோ எழுதினார்.
"snow" என்னும் ஆங்கில பத்திரிகைக்கு மாவோ பேட்டியளித்தார்.அதில் "விரைவில் நானும் கடவுளுக்கு முன்பாக நிற்க வேண்டும்"என்று குறிப்பிட்டார்.

-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

வெளி :20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

Revelation 20
12 And I saw the dead, great and small, standing before the throne, and books were opened. Another book was opened, which is the book of life. The dead were judged according to what they had done as recorded in the books.

13 The sea gave up the dead that were in it, and death and Hades gave up the dead that were in them, and each person was judged according to what he had done.

Saturday, October 07, 2006

சங்கர்தயாள் சர்மாவும் வேதமும்

"பரிசுத்த வேதம் நம்மெல்லாருக்கும் தேவையான செய்தியைக் கொண்டுள்ளதென்பதை நினைவூட்டட்டும்.பரிசுத்த வேத புத்தகத்தை ஒருவன் படித்து புரிந்து கொண்டால்,தடுப்புச் சுவர்கள் பல தரை மட்டமாகும்."பகவத் கீதை மட்டும் தொலைந்து போனால் நான் இழந்து போனது ஒன்றுமில்லை.மலைப்பிரசங்கம் இருக்கிறதே"என்றார் காந்தியடிகள்.வில்லியம் கேரி பரிசுத்த வேதாகமத்தை படித்து அதன் படி நடந்தார்."
-முன்னாள் இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா (Shankar Dayal Sharma August 19, 1918 - December 26, 1999)
40 மொழிகளில் வேதத்தை மொழிபெயர்த்த வில்லியம் கேரியின் 100-ம் ஆண்டு நினைவு ஒட்டி தபால் தலை வெளியிட்டதை தொடர்ந்து பேசியது.

சங்கீதம் 119:72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.

Psalm 119:72 The law of thy mouth is better unto me Than thousands of gold and silver.

Wednesday, October 04, 2006

ஸ்டாலினும் கடவுளும்

நாஸிகளுக்கு எதிராக சர்ச்சில்-ரூஸ்வெல்ட்-ஸ்டாலின் மூவரும் யுத்தத்தை நடத்தினர்.முதல் இருவரும் கிறிஸ்தவர்கள்.சர்ச்சில் இந்த யுத்த நிகழ்ச்சிகளைக் குறித்து ஆறு புத்தகங்களைஎழுதினார்.கிறிஸ்தவ விசுவாசிகளான இருவரும் ஒருமுறை கூட தங்கள் உரையாடல்களில் "கடவுள்" என்ற வார்த்தையை உதட்டால் உச்சரிக்கவில்லை.
ஸ்டாலின் (ரஷ்ய சர்வாதிகாரி-Joseph Stalin-December 18 1878– March 5, 1953), மட்டும் "கடவுள் நமக்கு வட ஆப்ரிக்கா முற்றுகையில் வெற்றிதரட்டும்"-"நடந்தவைகளெல்லாம் கடவுளுக்கு சொந்தம்" முதலிய பல வார்த்தைகளைச் சொன்னதாக கூறப்பட்டுள்ளது.

-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

சங்கீதம் 107:6 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

Psalm 107:6
Then they cried out to the LORD in their trouble,
and he delivered them from their distress.

Tuesday, September 19, 2006

லெனினும் கடவுளும்

ரஷ்யாவின் புரட்சி, ஜெனரல் கோர்னிலோவ் (Kornilov)அவர்களின் படைகளால் எதிர்க்கப்பட்டு ஆபத்தான நிலையை அடைந்தது.அப்பொழுது லெனின் தான் ஆற்றிய உரையில் அடிக்கடி "கடவுள் நம்மை தப்புவிப்பாராக" என்று குறிப்பிட்டார்.இது துன்ப நேரத்தைத் தவிர வேறு எப்போதும் லெனின் (Vladimir Ilyich Ulyanov; April 22,1870 – January 24, 1924)பயன்படுத்தாத வார்த்தையாகும்.
-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

சங்கீதம் 14:1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

Psalm 14:1 The fool hath said in his heart, There is no God. They are corrupt, they have done abominable works, there is none that doeth good.

Tuesday, September 05, 2006

சார்லஸ் டார்வினும் கிறிஸ்துவும்

"கிறிஸ்துவின் உபதேசங்களாலும் அவர் ஏற்படுத்திய மார்க்கத்தினாலும் (நியூசிலாந்து) நரபலி ஒழிந்தது.சிலை வணக்கப் பூசாரிகளின் ஆற்றல் ஒடுங்கிற்று.ஒழுக்கக் கேடுகள் ஒழிந்தன.சிசுக் கொலை நின்றது.பொய்யும் குடிவெறியும் ஒழுக்கக் குறைவும் பெரிதும் குறைந்து விட்டன.கடல் கடந்து வரும் என்னைப் போன்ற ஒருவன் இவைகளையெல்லாம் மறைப்பது அல்லது மறுப்பது நன்றி கெட்டத்தனமாகும்.ஒருவன் ஏறி வந்த கப்பல் உடைந்து அவன் தான் அறியாத ஒரு கடற்கரையில் கரை சேர நேருமானால் அந்த கடற்ரைக்கும் கிறிஸ்தவ போதனை எட்ட வேண்டும் என்று பக்தியுடன் வேண்டிக் கொள்வான்." - சார்லஸ் டார்வின்

Charles Robert Darwin (12 February 1809 – 19 April 1882) in his book "Journal of researches"

மத்தேயு 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

Matthew:5:44
But I tell you: Love your enemies and pray for those who persecute you.

Tuesday, June 27, 2006

*பாவ மன்னிப்பு*

தீயணைக்கும் (இஞ்சின்) வண்டிவரும் மணியோசையைக் கேட்டு மகிழ்ச்சியுடன் தன் படுக்கையிலிருந்தது எழுந்தான் பென்னி! கால்களை இழந்து ஊன்றுகோலின் துணையுடன் நடந்துவந்த பென்னி,மகிழ்ச்சி உந்த,பக்கத்து ஜன்னலைத் திறந்து பார்வையை வீதியில் உலவ விட்டான்!

அவன் இருந்தது,அந்த வீட்டின் நான்காவது மாடி பகுதி!

ஜன்னலைத் திறந்தவன் திடுகிட்டான்.மூன்றாம் மாடி வரை தன் பசியைத் தீர்த்துவந்த தீப்பிழம்புகள்,நான்காம் மாடியையும் முற்றுகையிட வேகமாய் வந்து கொண்டிருந்தது.!
செய்வதறியாது திகைத்த பென்னி, கூக்குரலிட்டான்!புகைமண்டலம்,பின் புறச்சன்னல் வழியாக,அவன் அறைக்குள்ளும் நுழைந்தது.அவனால் கம்பு ஊன்றி கீழே இறங்கமுடியாத பரிதாப நிலை!

"உதவி செய்யுங்கள்" "காப்பாற்றுங்கள்" என்று அபயக்குரலிட்டான்.

கீழே,தீயணைக்கும் வண்டியிலிருந்து ஏணியொன்று,மேலுயர்த்தப்பட்டது.அதில் ஏறிசென்ற ஒருவன்,"தம்பி! உடனே கீழே குதித்துவிடு;கீழே சில வீரர்கள் உன்னை காப்பாற்ற தங்கள் கைகளில் அகன்ற வலையை விரித்து காத்து நிற்பதை பார்" என்றான்.

"ஐயோ,அவர்களால் என்னைப் பிடித்துக்கொள்ள முடியாது! வேறு வழியில் உதவுங்கள் என்று மேலும் கூக்குரலிட்டான் பென்னி.

அவனிருந்த அறையின் பின்புற சன்னல் தீக்கிரையானது!

"தம்பி!பயப்படாதே! வலையும் பெரிது,அதை பிடித்து நிற்கும் எம் வீரர்களின் ஊக்கமும் பெரிதே!ஆகவே,நம்பிக்கையுடன் கீழே குதி!என்று மீண்டும் ஏணியில் நிற்பவன் கூறினான்.

பென்னி பின்னால் பார்க்கிறான்! இன்னும் சிறிது நேரத்தில் அவன் தீயில் மடிவது உறுதி!ஆகவே அவன் தன் வலிமையெல்லாம் கூட்டி கீழே குதித்தான்!

இறுதியில் தீயணைக்கும் படையினரின் வலையில் அவன் விழுந்து காப்பாற்றப்பட்டான்!

நீங்களும் இன்னும் எவ்வளவு காலம் அபாயக் கட்டத்திலேயே தரித்திருக்கப் போகிறீர்கள்? படைத்த இறைவனுக்கு முன்பாக நாம் பாவம் செய்து மாமிசத்தில் பலவீனப்பட்டுள்ளோம்.நாம் பாவத் தீயிலிருந்து காப்பாற்றப்பட வேண்டாமா!?.....

உன்னால் உன்னைக் காப்பாற்றக் கூடுமா? நிச்சயமாக முடியாது! ஏனெனில் நீயும் பென்னியைப்போலவே காணப்படுகிறாய். ஆகவே உன்னை நீயே காப்பாற்ற முடியாது.இயேசு கிறிஸ்துவால் மட்டுமே உன்னைக் காப்பாற்ற முடியும்!

இயேசு கிறிஸ்து உனக்காக பாவநிவிர்த்திப் பலியானார்! அவர் முற்று முடிய உனக்காக தன்னையே அளித்து,உன் பாவக் கடனைத் தீர்த்தார்.

நீ செய்ய வேண்டியதென்ன? அவரை விசுவாசி.பென்னி செய்ததைப்போல்,எந்த வித துணையும் அற்ற நிலையில்,அவன் வலையில் குதித்து நிலையான வாழ்வினை மீண்டும் பெற்றது போல் நீயும் உன்னைக் காப்பாற்ற முயற்சி செய்.கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் உன்னைக் காப்பாற்ற முடியும் என நம்பி,அவரிடம் பாவ மன்னிப்பை வேண்டி பெற்றுக்கொள்.

அப்போஸ்தலர்:16:31
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்

Thursday, June 15, 2006

மோசஸ் மோசடி

கல்கரி சிவா சார்
"நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 3" என்ற தங்கள் பதிவுக்கு என் பின்னூட்டம் இது.

//மோசஸ்தான் முதன் முதலில் ஒரு தேவதூதர் வரப் போவதாக் அறிவித்தார். அந்த தூதர் வந்த மக்களின் பிரச்னைகளையும் துயரங்களையும் களையப் போவதாகச்சொன்னார்.இது ஒரு பெரிய அரசியல் மோசடி.//
இதில் என்ன மோசடி சார்...நல்ல செய்தி தானே.

//மோசஸ் மிக சாமர்த்தியமானவர்//
நீங்கள் சொல்வது போல் அவர் மிக சாமர்த்தியமானவராய் இருக்கவில்லை.பைபிளில் யாத்திராகமம் 4:10 சொல்கிறது அவர் வாக்குவல்லவன் அல்ல; திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்று.ஒரு வேளை கடவுள் அவரை மிக சாமர்த்தியமானவராக மாற்றியிருக்கலாம்.

//இவர்களின் புண்ணிய பூமியும் வரவில்லை இவர்களின் தேவதூதரும் வரவில்லை.//
இவர்கள் எதிர்பார்த்த தேவதூதரை பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.

//ஆனால் நம்பிக்கை மட்டும் கொழுந்துவிட்டு எரிகிறது.//
சரியாய் சொன்னீர்கள்.இன்றும் அந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு யூதரும்.

//அந்த நேரத்தில் மோசஸும் தன்னுடைய தோல்வியை உணர்ந்தார்.அவசர அவசரமாக இதுதான் நம்முடைய் இஸ்ரேல் என அந்த பாழாய் போன பாலைவனத்தை அறிவித்தார்.//
இதெல்லாம் ஓவர் கதை.இப்படியெல்லாம் வரலாறில் எங்குமே இல்லை சார்.Sorry for that.பட் நல்லாஎழுதுரீங்க.really.உங்கள் எழுத்து திறமை அபாரம்.

//உடனே மோசஸும் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கிறேன் எனக் கூறி அவர்களை அங்கே விட்டுவிட்டு கிளம்பி போய்விட்டார்.உண்மையில் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட்டார்.//
நல்ல கதை சார்.தப்பித்து ஓடிய மோசஸை தான் இன்றைக்கும் யூதர்கள் கொண்டாடுகிறாக்களா?.கோழை அல்லது ஏமாற்றியவர் என தூசிக்க மாட்டார்களா?சிந்திக்க வேண்டுகிறேன்.

//அப்படி ஓடியவர் காஷ்மீரில் தொலைந்தவர்களை கண்டுபிடித்தார். அங்கேயே உயிரையும் விட்டார்//
ஆனால் சார்,பைபிள் இப்படி சொல்கிறது.
உபாகமம்:34
5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.
6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.
7. மோசே மரிக்கிறபோது நூற்றிருபதுவயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
8. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்;


//காஷ்மீரிகள் உண்மையில் யூதர்களே. பிறகுதான் அவர்கள் முகமதியர்களாக மாற்றபட்டார்கள். மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் மூக்கைப் பாருங்கள் அவர் யூத வழித் தோன்றல் என நிச்சய்மாகத் தெரியும்.)//
உண்மையிருக்கலாம்.ஆராய வேண்டும்.aBraham-Brahmin..Sara-SaraSWATHY...போன்ற ஆய்வுகள். :)

Any way good stuff.தொடரட்டும் தங்கள் தேடல்கள்.வாழ்த்துக்கள்.

யேசுவும் கர்த்தரும் வேறா?

பகுத்தறிவாளன் சார்,
முதலாவதாக தங்கள் விவாதங்களுக்கு நடுவே நான் புகுவதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என நினைக்கிறேன்.என் சிறிய அறிவுக்கு எட்டிய வரையான
எனது பதில்கள் கீழே.

கேள்வி:யேசுவும் கர்த்தரும் வேறா?

பதில்:இக்கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை-இரண்டும் தான்.
யேசு பூமியில் மனிதனாய் வாழ்ந்திருந்த காலத்தில் மனிதனாகவே வாழ்ந்திருந்தார்.சராசரி மனிதனுக்கு இருந்த அன்றாட தேவைகள்,சம்பவங்கள்,பசி,வலி,கண்ணீர்,உணர்வுகள் அவர்க்கும் இருந்தது.அவரே கடவுள் என்றால் ஏன் அவரும் ஜெபம் செய்திருக்க வேண்டும்.பைபிளில் அவர் 40 நாள் உபவாசம் இருந்து ஜெபம் செய்தார் என்று பார்க்கிறோமே.ஆக அவர் பூமியில்இருந்த நாட்களில் "மனிதனாகவே" இருந்தார்.ஜெபம் செய்வது எப்படி என செய்து காட்டினார்.தன் கடைசி நொடிவரை மனித குணத்தை அவர் இழக்கவில்லை.ஆனால் he represented God.பொதுவாக இவ்வுலகில் power of attrony கொடுத்தவரும் கொடுக்கப்பட்டவரும் தனி மனிதர்கள். ஆனால் சட்டப்படி அவர்கள் இருவரும் ஒருவரே.கணவனும் மனைவியும் வேறா? இக்கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை இரண்டும் தானே.

ஆக ஒரு மனிதனான யேசுவும் கர்த்தரும் வேறு.
யோவான்:16:28. நான் (யேசு) பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு பிதா(கர்த்தர்)வினிடத்திற்குப் போகிறேன் என்றார்.

ஆனால் ஆவியில் யேசுவும் கர்த்தரும் ஒன்று
யோவான்:17:21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை (யேசு)
அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும்
(கர்த்தர்) இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்

கடவுள் தன்னை மனிதனாக தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:8 அவர் (யேசு) மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம்,
அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே
தாழ்த்தினார்.

யோவான்:14
8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே(யேசு), பிதாவை எங்களுக்குக் காண்பியும்,
அது எங்களுக்குப் போதும் என்றான்.9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?
நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை;
என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

கேள்வி:இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக உள்ளதே?
இயேசுவை கர்த்தர் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றினார்?


பதில்:யேசுவை கர்த்தர் காப்பாற்றியிருந்தால் யேசுவை யூதர்கள் கொன்றிருக்க முடியாதே.எப்படியாவது தப்பியிருப்பாரே.சிலுவை மரணம் நிகழ்ந்திருக்காதே.அதாவது யேசு உலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறாமலே போயிருக்கும்.

தொடரும் நம் தேடல்கள் ஆரொக்கியமாய் அமைய வாழ்த்துக்கள்.

Saturday, June 03, 2006

கண்ணதாசனும் கிறிஸ்துவும்

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவது
இதுதான் தத்துவமே!

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!

-கவிஞர் கண்ணதாசனின் (1927-1981) "இயேசு காவியம்" நூலிலிருந்து.(Kannadasan - “Yesu Kaviyam”)

திருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16-ல் அன்றைய தமிழக முதல்வர் டாக்டர்.எம்.ஜி.இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

அப்போஸ்தலர் 1:11
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

வெளி 5:10
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

Acts:1:11
"Men of Galilee," they said, "why do you stand here looking into the sky? This same Jesus, who has been taken from you into heaven, will come back in the same way you have seen him go into heaven."

Revelation:5:10
You have made them to be a kingdom and priests to serve our God,
and they will reign on the earth."

Wednesday, May 31, 2006

பரிபூரண சமாதானம் என்றால்...

அமைதியும் சமாதானமும் நிறைந்த சூழ்நிலையில் சலமற்றிருப்பது எளிது தான்.ஆனால் கொந்தளிக்கும் புயலின் நடுவேயும் அமைதியாக அமர்ந்திருப்பது தான் பரிபூரண சமாதானம்.

யோவான்:14:27.
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

John:14:27
Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your hearts be troubled and do not be afraid.

Sunday, May 28, 2006

Jesus Was Engaged, Not Married

இன்று, டான் பிரொவுனின் "டாவின்சி கோட்" கதை புத்தகமும்,சினிமாவும் யாவரும் அறிந்ததே.எதிர்பார்க்கப்பட்டபடி பணவசூலும் கொட்டிக் கொண்டிருக்கிறது.controversy = big bucks இதுதானே சமன்பாடு.ஏனோ சில கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் தேவையில்லாமல்.கிபி.1498-ல் லியோனர்டோ டாவின்சி என்ற மாபெரும் ஓவியர்,முதலாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தை படமாக வரைந்திருக்கிறார்-"யேசுவின் கடைசி இரவு
உணவு" என.ஏறக்குறைய 1400 ஆண்டுகால இடைவெளியை கவனிக்கவும்.அந்த படத்தில் அநேக ரகசியங்கள் புதைந்து கிடப்பதாகவும் சிலர் அதை டீகோட் (decode) செய்து யேசுவுக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் இருந்தது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.இப்படியாக அந்த கதை இன்டரஸ்டிங்காக செல்கிறது.மீதமுள்ள லியோனர்டோ டாவின்சியின் மற்ற ஓவியங்களையும் டீகோட் செய்து இன்னும் இன்டரஸ்டிங்கான கதைகள் திரையில் வந்தால் இன்னும் பணம் கொட்டும்.
யேசுவுக்கு திருமணமாகிவிட்டது என்பதை விட திருமண நிச்சயமாகிவிட்டது என்றிருந்தால் அந்த கதை கட்டுக்கதை இல்லாமல் உண்மையென்றே இருந்திருக்கும்.

மணப்பெண்ணாகிய திருச்சபையை மணமகனாகிய யேசு "திருமண நிச்சயம்" செய்தது தான் அந்த "The last supper" நிகழ்வு.அங்கே ஒரு திருமண உடன்படிக்கை நடந்தது.இஸ்ரேலிய வழக்கப்படி திராட்சரசமானது எதிர்கால கணவன் மனைவியிடையே பங்கிடப்பட்டு “This cup is a covenant between you and me." என உறுதி அளிக்கப்பட்டது அங்கே.இன்னும் இஸ்ரேலிய வழக்கப்படி மணவாளன் தனது இரத்தத்தை மணப்பெண்ணுக்கு தட்சணையாக தந்திருக்கிறார்.இஸ்ரேலிய வழக்கப்படி மணவாளன் ஒரு வீட்டை தயார் செய்த பின் மணவாளன் வந்து மணவாட்டியை திருமணம் செய்து கூட்டி செல்வார்.அது தான் யேசுவின் இரண்டாம் வருகை.

ஆக ஒரு சின்ன மாற்றம். திருமணம் அல்ல.அது ஒரு திருமண நிச்சயம்.

அப்போ கல்யாணம் எப்போ?

வெளி 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய (யேசுவின்)கலியாணம் வந்தது, அவருடைய மனைவி(திருச்சபை) தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

மத்தேயு:26:26.
அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
29. இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்

எபேசியர்:5::25.
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

வெளி:21::2.
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

வெளி 19:9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின்(யேசுவின்) கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்

யோவான்:14:3.
நான்(யேசு) போய் உங்களுக்காக(மணப்பெண்ணாகிய திருசபைக்காக) ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
-------------------------------------------------------------------------------------------------------

In Jesus time it was a custom for a groom to agree with his future father in law upon a dowry. He also often had to prepare a home for them to live in.Once these requirements had been met, the groom’s father would provide his son with a glass of wine. The son would then offer it to his bride and say, “This cup is a covenant between you and me.”
This cup symbolized his commitment to her. It was her choice to accept the cup that was offered, or to reject the cup. If she drank of the cup, she was publicly stating her trust and hope in her future husband. There are some interesting parallels between this custom and what we call communion. Jesus calls the church His bride (Ephesians 5:25); like a good groom, Jesus has paid the price for us to have a home (the home He offers is one that lasts forever); and in accepting this cup, we publicly state our trust and hope in Jesus. Some things to also note: unlike a groom of His day, Jesus offers forgiveness of sins through this cup; also different is that Jesus says that His body and blood are truly present in the bread and wine. We, the believers of Jesus are His bride.

So we must ask: When is the wedding?!?

We find out in Revelation 21:1-4:

Then I saw a new heaven and a new earth, for the first heaven and the first earth had passed away, and there was no longer any sea. I saw the Holy City, the
new Jerusalem, coming down out of heaven from God, prepared as a bride beautifully dressed for her husband. And I heard a loud voice from the throne saying,
"Now the dwelling of God is with men, and he will live with them. They will be his people, and God himself will be with them and be their God. He will wipe
every tear from their eyes. There will be no more death or mourning or crying or pain, for the old order of things has passed away."

This is one wedding we do not want to miss.

Saturday, May 27, 2006

ஜெருசலம் எனும் நகரம்

ஜெருசலம் கிறிஸ்தவர்களின்,யூதர்களின் புனித நகரம்.முகமதியரும் இதை புனித நகரமாக கருதுகிறார்கள்.யூதர்களின் பைபிளில் இப்பெயர் 669 முறையும் கிறிஸ்தவர்களின் பைபிளில் இப்பெயர் 154 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.முகமதியரின் புனித குரானில் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவில்லை.பரிசுத்த நகரமாகிய இது கடல் மட்டத்திலிருந்து 2600 அடி உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.இயேசு இதை மகாராஜாவின் நகரம் என்று கூறினார்.எருசலேமில் தான் உலக புகழ் பெற்ற எபிரேய பல்கலைக்கழகம் உள்ளது.இயேசு உலக இரட்சிப்புக்காக மரித்து உயிர்த்தது இந்நகரில் தான்.எருசலேம் என்பதற்கு சமாதானத்தின் நகரம் (Heritage of Peace) என்று பொருள்.ஆனால் கடந்த 3000 ஆண்டுகளில் 20 முறை முற்றுகை யிடப்பட்டும்,இடிக்கப்பட்டும்,திரும்பவும் கட்டப்பட்டும் இருக்கிறது.எனினும் கர்த்தர் இதனை தலைநகராக கொண்டுதான் உலகை ஆளுவார் என வேதம் கூறுகிறது.தலைநகரமாகிய எருசலேம் தான் இஸ்ரேலிலுள்ள மகாபெரிய நகரமாகும்.தற்போதைய மக்கள்தொகை 704,900 ஆகும்.72 சதவீதம் யூதர்கள் இங்குண்டு.

மத்தேயு:5:35.
பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம்.

ஏசாயா:66:20.
இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல,..., சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

வெளி:20:9.
அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

லூக்கா:21:24.
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.

Thursday, May 25, 2006

காற்றுக்கு கனம் உண்டா?

காற்றுக்கு கனம் உண்டு என்று கிபி 1630-ல் தான் கலிலியோ கண்டறிந்தார்.ஆனால் பைபிளில் கிமு 1500-லேயே யோபு:28:25-ல் இந்த உண்மை மிக அழகாக எடுத்து கூறப்பட்டுள்ளது.

யோபு 28 :25அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
Job:28:25
To establish a weight for the wind,And apportion the waters by measure.

Saturday, May 20, 2006

எப்படியாகிலும் வாழுங்கள்

மனம் தளரும் போது- பாடுங்கள்
சோகம் வரும் போது- சிரியுங்கள்
தாழ்வு எண்ணம் வந்தால்- பழைய வெற்றிகளை நினையுங்கள்
சோர்வாக இருக்கும் போது- இரட்டிப்பாக உழையுங்கள்
அச்சம் வரும்போது- முன்னே பாயுங்கள்
தலைக்கணம் ஏற்ப்படும் போது- பழைய தோல்விகளை நினையுங்கள்
விருந்து உண்ணும் போது- பட்டினியை நினையுங்கள்
சோம்பல் வரும்போது- போட்டிக்காரர்களை நினையுங்கள்
ப்ளீஸ் எப்படியாகிலும் வாழுங்கள்

பிரசங்கி:11:9.
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

Ecclesiastes 11:9
Be happy, young man, while you are young, and let your heart give you joy in the days of your youth. Follow the ways of your heart and whatever your eyes see, but know that for all these things God will bring you to judgment.

மேலும் சில விளக்கங்கள்

அப்படி நான் என்ன தவறாய் எழுதிவிட்டேனோ தெரியவில்லை.எனக்கு தெரிந்தபடி,அறிந்தபடி"உலகில் பிறந்தோர் எல்லாரும் ஒரு நாள் செத்துத்தான்
போனார்கள்.யேசுவை தவிர" இதுதான் அந்த பதிவின் சாரம்சம்.இதில் நான் யாரை மோசமாய் பேசினேன்.யாரை தவறாய் சொன்னேன்.எனக்கு தெரிந்த உண்மையை
சொன்னேன்.வேறு யாராவது மரணத்துக்கு தப்பியிருந்தால் நீங்கள் சொல்லலாமே.
உலக வரலாறும், இன்று திறந்த நிலையிலிருக்கும் யேசுவின் கல்லறையும் யேசு உயிர்த்தார் என உலகிற்கு சொல்கிறது.நானும் நம்புகிறேன்.என் நம்பிக்கையை எழுத்தாய் எழுதுவதில் என்ன தவறு."உலகில் பிறந்தோர் எல்லாரும் ஒரு நாள் செத்துப் போனார்கள்.யேசுவை தவிர" இதை தானே எழுதினேன்.இதில் எந்த மதத்தை குறை சொன்னேன்.

மனிதனின் வாழ்க்கையும் ஒரு மிருகம் போலவே மரணத்தோடு முடிந்துவிடுகிறது என்றும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை என்றும் நீங்கள் நினைப்பவரானால் என் நம்பிக்கை உங்களுக்கு வீணே.உலகியல் செழிப்புக்கு கடவுள் எதற்கு சொல்லுங்கள்.வாலிபத்தில் கடவுள் நம்பிக்கையின்றிகூட கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் தன் இறுதி காலத்தில் கோயிலையும் கடவுளையும் தேடுவதேன்?.அடுத்து என்ன என்ற நிச்சயமின்மை தானே?

//It is me, Nandhan, who asked the third question. Unfortunately I dont see your 'answer' has any real answer to that question.so let me repeat
1.Did you see that? What makes you accept it to be true?//
உலக வரலாறும், இன்று திறந்த நிலையிலிருக்கும் யேசுவின் கல்லறையும் யேசு உயிர்த்தார் என உலகிற்கு சொல்கிறது.நானும் நம்புகிறேன்.

//2.how did that improve lives of millions of people in the world?
3.Leave all of them how did it improve your living standard?//
மனிதனின் வாழ்க்கையும் ஒரு மிருகம் போலவே மரணத்தோடு முடிந்துவிடுகிறது என்றும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை என்றும் நீங்கள் நினைப்பவரானால் என் நம்பிக்கை உங்களுக்கு வீணே.உலகியல் செழிப்புக்கு (I mean living standard) கடவுள் எதற்கு சொல்லுங்கள்.வாலிபத்தில் கடவுள் நம்பிக்கையின்றிகூட கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் தன் இறுதி காலத்தில் கோயிலையும் கடவுளையும் தேடுவதேன்?.அடுத்து என்ன என்ற நிச்சயமின்மை தானே?

//Please dont quote bible, give me YOUR answers.
At the same time I feel bad about the kind of language that I see in some of the question. Friends, we can be bit more courteous and mannered.//
நந்தன்,நிதானமான உங்கள் அணுகுமுறை மகிழ்சியை தருகிறது.சிறப்புகள் மேலும் மேலும் பெற உங்களுக்கு வாழ்த்துக்கள்.Thanks for your comment.

//Since you are telling that this came from Dinamalar. Please provide the Screen Shot of that...//
I am really Sorry. I dont have the screen shot.But I am not sure,is it avail as a novel on store?.

//And Why are you publishing that without mentioning on the blog...//
I did.I mentioned as "- ஜ்வாலா மாலினியின் மனஸ்"

//It means that you want blame nayanmars and say jesus are best. Could you please explain me the reason of publishing this comparision of other religious to Christianity...//
Again I am saying those are not my lines.

//Can you publish Dravidar Kazhakam Questions/anwers against Jesus too..
I like to see your answer...//
என் கருத்தை என் நம்பிக்கையை தானே நான் கூற முடியும்.

//If you are a true christian never blame other Religion or Jesus never supported anywhere who blame/compares.If you donot have any hesitation please remove this and say good about Jesus (do not blame/say christianity is better than other religion). Everyone knows how many researchers spoiled by Christian missionary (Example Kalileo) //

I`ll do.Thanks for your comment.

Friday, May 19, 2006

மரணத்தை வென்றார் உண்டோ?-சில விளக்கங்கள்.

"மரணத்தை வென்றார் உண்டோ?" என்ற என் முந்தைய பதிவில் வந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் முன்பாக நண்பர்களுக்கு முக்கியமான ஒரு விடயம் ஒன்றை தெரிவிக்க வேண்டும்."மரணத்தை வென்றார் உண்டோ?"என்ற பதிவின் முழு அடக்கமும் (except bible verses) என் எழுத்து அல்ல.ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தின் புகழ் பெற்ற தினமலர் நாளிதழின் வார இணைப்பான வாரமலரில் ஜ்வாலா மாலினி என்ற எழுத்தாளர் மனஸ் என்ற தொடர்கதை எழதும் போது அதில் வந்த ஒரு பகுதி தான் நான் பதிப்பித்தது.அதாவது கணவனை இழந்த பெண்ணொருவள் அவ்வாறாக "மரணத்தை வென்றார் உண்டோ?" என
மனதிற்குள் நினைத்து தன்னை தானே தேற்றிக்கொள்வதாக வரும்.பைபிள் வசனம் மட்டும் நான் கூட்டி இருந்தேன்.அவ்வாறு அந்த எழுத்தாளர் (அவர் கிறிஸ்தவரா,இந்துவா முகமதியரா என..நான் அறியேன்)அன்று எழுதியதற்காக எத்தனை பேர் அவரிடம் கேள்வி கேட்டார்கள்,திட்டினார்கள் நான் அறியேன்.இப்போது எனக்கு வந்த கேள்விகளும் அதன்
பதில்களும்.(Thats a another tamil writers opinion.I just added bible verses.Thats all.Thanks for all who commented)
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:I cannot see Jesus, what is physical address. Jesus born 1 BC. When he died and when he came back to home ...How many years he is alive. Then why is so many groups in Christian. If Jesus talks about Peace and forgiveness then Why Christians are intollerable with other religion.
I know you cannot answer this so you won't publish my comments. Please use your brain to thing what you are writing. Since you have all the rights, donot blame other religion. Jesus never forgive and he thinks you are the fool

பதில்:நண்பரே நான் ஏற்கனவே சொன்னபடி அந்த பதிவு முழுவது என் கருத்து அல்ல.ஆனால் அதன் content முழு உண்மை அல்லவா?.அந்த content-ல் எதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள்.I respect other religions.I did not blame any religions.Did I?.That writer`s those lines are the facts.எனக்கு உங்கள் கமென்றை வெளியிடுவதில் என்ன தயக்கம் சொல்லுங்கள்.?
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:Where is jesus...Show me...
I cannot show Nayanmars but you cannot show Jesus too...Then why are you writing you mother fucker...

பதில்:ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டீர்கள் போலிருக்கிறது. :) உங்களை hurt பண்ணுவது என் நோக்கமில்லை நண்பரே.அப்படி பண்ணியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:Did you see that? What makes you accept it to be true?
Please dont reply saying 'It is my beleif' - The moment you posted this for public reading, you stand vulnerable to public opinion There are stories like this in all religions.Say for argument sake, we accept he came back to life...how did that improve lives of millions of people in the world? Leave all of them how did it improve your living standard?

பதில்:உங்கள் கருத்து மிகவும் சரியே.மரணமே அனைத்தின் முடிவு என நினைப்பவர்களுக்கு இவ்விவாதம் தேவைப்படாதிருக்கலாம்.
யோவான்:14:2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:he will come before the judgement day,it is in the holy quran.so dont think he has escaped from death, he will come by the wish of allah and he will die after completing his alloted responsibilty which was given by one and only allah
regards,
allah

பதில்:நீங்கள் சொல்லியிருக்கிற செய்தி எனக்கு புதிது. நன்றி அய்யா.
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி://அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.
இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.//தவறாக எண்ண வேண்டாம், ஆமா பைபில் என்ன என்சைகிலோபீடியா அஃப் எவெரிதிங்-ஆ. அது என்னங்க தொட்டத்திற்கெல்லாம் அதுல போயி தேடினா விடை எப்படிங்க கிடைக்கும், அதனை கம்போஸ் பண்ணினவரும் ஒரு மனிதர் தானே.அந்த காலக் கட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், சாந்தியங்களையும் அவருக்கு எட்டின வரைக்கும் மனத்தில் கொண்டு எழுதப் பட்டதுதானே. அதுல போயி அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு விடை தேடுறது எப்படிங்க சாத்தியமாகும் (வேண கருக்கலைப்பு சரிய தவறான்னு ஒரு நபர் அதில தேடி விடை காண முடியும்...அவ்ளொவே), இன்னொரு உலகப் போருக்கு வேண வழிவகுக்கலாம். இது தாங்க பிரச்சினை ஒரு புக்க கையில வச்சுகிட்டு அதுப்படிதான் நடக்கணும் அப்படின்னு தொங்கின ஒசமா மாதிரி எங்கப் பார்தாலுக் ஒசமா தான், தோன்றுவாங்க.கடவுள் எங்கே இருக்கிறார், உள்ள இடத்தை விட்டுவிட்டு நாம் எங்கெல்லாமோ அடித்து பிடித்து அவரை பிடித்து கீழே நான் ஏறி, அவர் என்னை பிடித்து கீழே தள்ளி அவர் ஏரி... என்னமோ நாம் எல்லாம் பண்றோம், உண்மையை விட்டுப் புட்டு எதுக்கோ திரியறமாதிரி எனக்குத் தோணுது.-TheKa.
பதில்:பைபிள் ஒரு என்சைளோபீடியா இல்லை என்பது உண்மை.காண்பவையெல்லாம் அதில் அட்டவணைபடுத்தப்படவில்லை என்பதும் உண்மை தான்.ஆனால் அதில் கண்ட சில நல்ல விசயங்களை எடுத்துரைத்து மகிழ்வது தவறில்லை என நினைக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, May 16, 2006

நதி...மேகம்...மழை

நதி நீர் ஆவியாகி நீராவியாக மேலே சென்று மேகமாகி அது மீண்டும் குளிர்ந்து மழையாக பெய்வதனை கிபி 1630-ல் தான் கலிலியோ கண்டுபிடித்தார்.
ஆனால் பைபிளில் பிரசங்கி:1:6,7-ல் கிமு 9-ம் நூற்றாண்டுக்கு முன்பே இது பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

பிரசங்கி:1:6. காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
7. எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

Ecclesiastes 1: 6 The wind goes toward the south, And turns around to the north;
The wind whirls about continually, And comes again on its circuit.
7 All the rivers run into the sea, Yet the sea is not full;
To the place from which the rivers come, There they return again.

மரணத்தை வென்றார் உண்டோ?

எமனிடமிருந்து மீண்டவர்கள் உண்டா? 100 வயது. அதிகம் போனால் சில ரஷ்ய கிழங்கள்,ஜப்பானிய முதுமைகளும் கின்னஸில் இடம் பெற 120 வருடம் வாழலாம்.தசர சக்கரவர்த்தி 10000 ஆண்டுகள் பரிபாலனம் செய்திருக்கலாம்.பத்தாயிரத்தொன்றில் அவரும் செத்துத்தான் போனார்.பிறந்தவன் செத்தே தீரவேண்டும்.

காலா வாடா, உன்னைக் காலால் உதைக்கிறேன் என்று பாடிய கவிச்சிங்கத்தை 39 வயதில் காலன் தன் காலின் கீழ் கொன்று விட்டான்.

பன்னிரண்டு ஆழ்வார்கள் எங்கே? 63 நாயன்மார்கள் எங்கே? 12 சீர்திருத்தவாதிகளின் முகவரிகள் எங்கே? போஸ்களும்,ஒளவையார்களும்,சங்கரர்களும்,ராம கிருஷ்ணர்களும்,விவேகானந்தர்களும்,பட்டிணத்தார்களும்,எங்கே? காந்திகளும் நேருகளும் எங்கே? எங்கே?
- ஜ்வாலா மாலினியின் மனஸ்

ஆனால் இங்கே ஒரு அற்புதம்.யேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார்.

மாற்கு 16:6 அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.

Mark:16:6 But he said to them, “Do not be alarmed. You seek Jesus of Nazareth, who was crucified. He is risen! He is not here. See the place where they laid Him.

பூமியின் வடிவம் உருண்டையா? - இயற்கை நேசிக்கு என் பதில்

கேள்வி://ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.//

அதெப்படி நன்கு பேசத் தெரிந்து தர்கத்திவிட்டால் இருக்கும் fact இல்லையென்று ஆகிவிட முடியுமா?

அது போல தெரிந்த pre-determined hypostheses-களுடன் எதற்கு ஒரு ஆராய்ச்சியை தொடங்க வேண்டும். எப்படி ஆராய்ச்சின் இருதியில் நடந்ததிற்காண அல்லது நிகழாமல் போனதிற்காண சான்றுகளை ஊர்ஜிதப் படுத்தாமல் டாக்டரேட் வாங்கிவிட முடியும்?

Again a thing to remember, religion is to shape a man and tie a society on the track from following animalistic instinct. The spirituality does not have(or know) any boundaries. When we are ready to evolve onto the next phase only all these regid fundamentalistic perceptual shift will shed off.

Until then there will be a BELIEF of someone will come from the sky to save us all.

பதில்: இயற்கை நேசி அவர்களே! உங்கள் பெயர் மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.உங்கள் பதிவுகள் தமிழ் வலையுலக அபூர்வங்களில் ஒன்று.உங்கள் பின்னூட்டம் மற்றும் கேள்விகளுக்கு மிகவும் நன்றி.

pre-determined hypostheses என்று ஒன்றில்லை என்கிறேன்.நாம் பார்ப்பதெல்லாம் determine-பண்ணியிருப்பதெல்லாம் எப்படி மெய்யாகவே இருக்க முடியும்.நம் கண் பெரும்பாலும் பொய் தானே சொல்கிறது.(For example colors).

அதற்காக பூமி தட்டையென நான் சொல்லவரவில்லை.எதற்கும் please see this link.http://www.alaska.net/~clund/e_djublonskopf/Flatearthsociety.htm

"The important thing is not to stop questioning." என்றார் Albert Einstein.May be it should be like this "The important thing is not to stop questioning, even if its a well known fact".

உங்களின் அறிவியல் ஆராய்ச்சி பெருமைக்குரியது.ஆனால்
வரலாறென்று வரும் போது கருத்து திணிப்புகள்,உத்தேச கணக்குகள்,சொந்த அபிப்ராயங்கள் பேசப்படுகின்றன.ஏனெனில் நீங்கள் கூறும் சான்றுகள் வரலாற்று ஆராய்ச்சிகளில் மிகவும் குறைவு.இல்லை மறைக்க அல்லது அழிக்கப்படுகின்றது.
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு வரலாறும் பிஜேபி ஆட்சியில் ஒரு வரலாறும் பாடபுத்தகங்களில் வருவதை நாம் கேள்விப் பட்டதில்லையா?

மற்றபடி religion பற்றிய உங்கள் கருத்துக்களை நான் மிகவும் மதிக்கிறேன்.நன்றி.
-----------------------------------------------------------------------------------
பூமியின் வடிவம் உருண்டை என விஞ்ஞானிகள் கிபி 1475-ல் தான் கண்டுபிடித்தார்கள்.ஆனால் கிமு 700-லேயே பைபிள் ஏசாயா:40:22-ல் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறியுள்ளது.

ஏசாயா:40 :22. அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்;
Isaiah 40: 22 It is He who sits above the circle of the earth
------------------------------------------------------------------------------------

Muse-ன் கேள்வி:அப்புறம் எதற்குத் தலைவரே கலிலியோ போன்றவர்களைக் கொன்றார்கள்?

பதில்:Muse-க்கு வாழ்த்துக்கள்.உங்கள் கேள்விக்கு மிகவும் நன்றி.நல்ல கூர்மையான கேள்வி.ஒரு விடயம் நினைவிருக்கட்டும்.கலிலியோ கொல்லப்பட்ட விவகாரம் வேறு .அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.பைபிளில் இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.கலிலியோ அதை மறுத்தார்.அதன் விளைவே பின் நிகழ்வு.(The Catholic church insisted the Earth was the center of the universe, and Galileo was killed for showing them otherwise. But of course, there is nothing in the bible about Earth being the center. This is just man-made doctrine.)

கிறிஸ்தவர்களின் புனிதப் புத்தகம்

BIBLE என்பதின் விரிவாக்கம் Behold I Bring Life Eternal எனலாம்.

கிறிஸ்தவர்களின் புனிதப் புத்தகமாகிய The Holy Bible-பரிசுத்த வேதாகமம்-விவிலியம்-புனித வேதம்-ன் Old testament-பழைய ஏற்பாடு எனும் பகுதி யூதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் யூத மதத்தையும் பற்றி கூறுகிறது.இதிலுள்ள New testament-புதிய ஏற்பாடு எனும் பகுதி யேசுவின் வாழ்க்கையையும் அவரது சீடர்களை பற்றியும் கூறுகிறது.

பைபிளின் Old testment யூதர்களின் புனிதநூலாகும்."டால்மட்"எனும் நூலும் யூதர்களின் புனித நூல்.

முதன்முதலில் 1785-ல் ஸீகன்பர்க் என்பவர் தமிழில் பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்த்தார்.

தற்போதைய ரோமன் கத்தோலிக்க தமிழ் பைபிள் 1857-ல் மொழிபெயர்க்கப்பட்டது.

நாம் இப்போது பயன்படுத்தும் தமிழ் பரிசுத்த வேதாகமம் 1871-ல் போவர் என்பவர் மொழிபெயர்த்தது.

முதன் முதலில் உலோக எழுத்துக்கள் (Metal types) மூலம் அச்சிடப்பட்ட நூல் பரிசுத்த வேதாகமமாகும்.அப்பொழுது காகிதத்திலல்ல,ஆட்டுத்தோலிலேயே அச்சிட்டனர்.ஜெர்மனியில் 1456-ல் பிரசுரமான இவ்வேதாகமம் பக்கத்துக்கு 42 வரிகள் வீதம் 1282 பக்கங்களைக் கொண்டிருந்தது.அச்சிடப்பட்ட மொத்த பிரதிகள் 300.பிரதியொன்றுக்கு சுமார் 300 ஆடுகளின் தோல் தேவையாயிருந்தது.

தமிழ்மொழிக்கு முதன்முதலில் அச்சு எழுத்துக்கள் 1577-ல் ஹென்ரிக் பாதிரியாரால் உருவாக்கப்பட்டது.

தருமியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்.

கேள்வி: "...மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; "//
மெஸையா (messiah) என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் உச்சரிப்பை மாற்றினால் நம்க்கு வசதி என்று மாற்றக்கூடாதல்லவா?

பதில்: தருமி அவர்களே! பெயர் திரிபு என்பது ஒரு பொதுவான நிகழ்வு என நினைக்கிறேன்.உதாரணமாக ஆங்கிலத்தில் David எனப்படுபவர்,தமிழில் டேவிட் அல்லது டாவிட் அல்லது தாவீது அல்லது தாவூத் எனப்படலாம்.இது பெயர் திரிபுதானே. எல்லாமே ஒன்றைத்தானே குறிக்கிறது.இல்லையா?.
இதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டு கூறலாம் என நினைக்கிறேன்..

கேள்வி:"...next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt."//
the same thing is being said by muslims replacing jesus with mohamed. do you accept the statement of muslims?

பதில்:ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை.I respect their belief.இன்னும் சான்றுகளோடு கூறினால் ஒருவேளை பிறரும் நம்புவார்கள் அல்லவா?.

கேள்வி:actually i visited your blog to clarify one point. in a post for one of my possitive comments on Mr.Teresa and st. thomas there were some adverse statements. i want to bring it to your notice for CLARIFICATION on the following:"இல்லை 2000 ஆண்டு பழமையானது. ஏனெனில் ஏசுவின் ஒரு சீடர் தோமையார்/thomas அப்போதே இந்தியாவிற்கு வந்துள்ளார்.புதைக்கப்பட்ட இடமே St.Thoma's Mount"

இது இன்னொரு மெகா மகா பொய்.
நீங்கள் நம்புவது உங்கள் உரிமை.
ஆனால் இதையும் படியுங்கள்.

The Myth of Saint Thomas and the Mylapore Shiva Temple

http://hamsa.org/

will be happy if you oblige.

பதில்:வாதங்கள் எதிர் வாதங்கள் உலகில் சகஜமே.இன்றும் உலகம் உருண்டையில்லை தட்டையானது என கூறுபவர் இல்லையா?.அவர்கள் வாதிட்டு சொல்வதை ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.எந்த டாபிக்கை கொடுத்தாலும் இன்று நம்மால் பக்கம் பக்கமாய் பேச முடியும்.அதுவும் வரலாறென்றால் அவரவர் யூகங்களே.டாக்டரேட் பண்ண ஒரு ஸ்டிரேஞ் டாபிக் கிடைத்தால் சும்மா பண்ணலாம் ஆர்வமாக.
ஆரியர் வந்தார்கள் எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.ஆரியர் வரவேயில்லை எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.அதுவும் ஒரே நபர்.அவரவர் நம்பிக்கையே இறுதி முடிவு.
In this matter I respect your belief too.

தருமி அவர்களே உங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி

பைபிளை அழிக்க நினைத்தவர் கதை

1788-ல் வியன்னா தலைவர் வால்டேர் பரிசுத்த வேதாகமத்தை அழிக்க உறுதிபூண்டார்."100 ஆண்டுகளுக்குள் வேதாகமத்தின் ஒரு தாள் கூட பூமியில் இல்லாமல் அழித்துப் போடுவேன்.அப்போஸ்தலர் கரங்களினால் எழுதப்பட்ட எழுத்துக்களை அழிக்க என் கரங்களே போதும்"என்றார்.அவர் முயற்சி தோல்வியில் முடிந்தது.இப்போது அவர் இருந்த வீட்டில் வேதாகம சங்க கிளை ஒன்று உள்ளது.

1984-ல் 1110 மொழிகளில் முழு பரிசுத்த வேதாகமமும் 132 மொழிகளில் திருக்குறளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.பரிசுத்த வேதாகமம் 162 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிக மக்கள் பின்பற்றுவது கிறிஸ்தவ சமயமாகும்.இன்றைய நிலையில் பைபிள் 1400 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

லூக்கா 21:33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ (பைபிள்) ஒழிந்து போவதில்லை.

Luke:21:33 Heaven and earth will pass away, but My words (Bible) will by no means pass away.

Saturday, May 13, 2006

கொளதம புத்தரும் கிறிஸ்துவும்

இன்று புத்தரின் 2550-வது பிறந்தநாள்.நேபாளத்தின் லும்பினி நகரில் பிறந்த இவர் பீகார் மாநிலத்தின் கயா நகரில் முக்தி அடைந்தார்.

கொளதம புத்தர் (கிமு563-483) தமது திக்க நிக்யா (The Dhigha Nikya) என்னும் நூலில் தமக்குப் பின் உலகில் மேற்றியா (Metteyya) என்பவர் தோன்றி ஜனங்களுக்கு வழிகாட்டுவார் என்று எழுதியிருக்கிறார்.-Mrs.Rhys David.,Buddhism Page 180,243

யோவான் 1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

In Buddhism Maitreya Buddha is the future Buddha.Maitreya is a bodhisattva who Buddhists believe will eventually appear on earth, achieve complete enlightenment, and teach the pure dharma.Maitreya , a bodhisattva, prophesied by Gautama Buddha to be the next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt.

John:141 He first found his own brother Simon, and said to him, “We have found the Messiah” (which is translated, the Christ).

Friday, May 12, 2006

மிகப்பெரிய கண்டுபிடிப்பு

குளோரோபாம் கண்டுபிடித்த சர்.ஜேம்ஸ் சிம்ஸன்(1811-1870)சொல்கிறார்

"என்னுடைய மிகப்பெரிய கண்டுபிடிப்பு 1861 டிசம்பர் 25-ம் தியதி கண்டுபிடிக்கப்பட்டது.அது என்னவென்றால் நான் ஒரு பாவியாக இருந்தேன் என்பதும்,இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் என்பதுமேயாகும்"

அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி (இயேசு) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

James Young Simpson (1811-1870), who championed anesthesia`s use in Britain was a professing Christian, an ardent New Presbyterian.

Asked by a reporter what was his greatest discovery, he replied, "When I learned Jesus Christ had died for my sins."

Act:4:12 Nor is there salvation in any other, for there is no other name under heaven given among men by which we must be saved.”

Wednesday, May 10, 2006

தாயுமானவரும் கிறிஸ்துவும்

"தன்னைத் தந்து என்னைத் தடுத்தாட் கொண்ட நின் கருணைக்கு
என்னைத் தந்து என்ன பயன் -எந்தாய் பராபரமே"
-தாயுமானவர் (கிபி 1706 - 1744)

உலகத்துக்காக தன்னைத்தந்தவர் யாரோ?.

யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை (யேசுவை)விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (யேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

Thou gave Thyself to me
And prevented me from going astray.
If for that act of mercy
What profiteth Thee that
Thou take me entire in return,
My Mother dear?
Oh Para Param!
-Hymns of Thayumanavar (AD 1706 - 1744)

Who gave thyself to us?

John:3:16
For God so loved the world that He gave His only begotten Son (Jesus), that whoever believes in Him (Jesus) should not perish but have everlasting life.

Tuesday, May 09, 2006

திரு.வி.க-வும் கிறிஸ்துவும்

"மாசு மிகுந்த மனித இருள் போக்க வந்த
இயேசு உனை மறவேன் இன்று"

" உன் குருதி மூழ்கினேன் உய்ந்தேன் திருக்குமரா"

"சிலுவையில் சிந்தை வைத்தால் தீமையெல்லாம் அகலும்"

"கிறிஸ்துவின் இரத்தம் பெரு மருந்து.கேடில் இன்பம் தரு விருந்து"

"தெய்வக் குமர குருபரனே சீவரைத் தாங்கும் செங்கரனே"

-திரு.வி.கல்யாண சுந்தரனார்.(1883-1953)

"கிறிஸ்துவினிடத்தில் எனக்கு அன்பு உண்டு.ஆனால் மதம் மாற என் மனம் ஒருப்படவில்லை" என்றார்.இவர் உலகிலுள்ள சமயங்களின் சாரமெல்லாம் கிறிஸ்து பெருமானின் மலைப்பொழிவில் திகழ்வதாக நம்பினார்.அதனால் தான் தன் மணவிழாவின் போது கிறிஸ்தவ ஜெபத்திற்கும் இடம் கொடுத்தார்."கிறிஸ்துவின் அருள் வேட்டல்" எனும் நூலை எழுதினார்.

I யோவான் 1:7 அவர் (யேசு) ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்

1 John 1:7 But if we walk in the light as He (Jesus) is in the light, we have fellowship with one another, and the blood of Jesus Christ His Son cleanses us from all sin.

Monday, May 08, 2006

வாழ்வின் சிறப்பு

நேற்றைய தினத்தின் நினைவு
மகிழ்ச்சி தர வேண்டும்
இன்றைய தினத்தின் வாய்ப்புகள்
உற்சாகம் தர வேண்டும்

பணம்,பதவி சிறப்பல்ல
புகழ்,அழகு சிறப்பல்ல
மனதின் நிம்மதியே
வாழ்வின் சிறப்பு

-சிந்தனைக்கு.விஷ்வவாணி சமர்ப்பண்

உண்மையிலும் உண்மையன்றோ?

யோவான் 14:27
(இயேசு சொல்கிறார்)
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

John:14:27
(Jesus says)
Peace I leave with you, My peace I give to you; not as the world gives do I give to you. Let not your heart be troubled, neither let it be afraid.

Sunday, May 07, 2006

சிரித்தால் வாழலாம்

இன்று உலக சிரிப்பு தினமாம்.மனிதன் மகிழும் போது சிரிக்கின்றான்.Laughter is the best
medicine என்பார்கள்.அது போல மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம் என்கிறது வேதம்.
சிரிக்கையில் நுரையீரலிலிருந்து அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடு வாயு வெளியேறுவதால் கண்களுக்கு கூர்மையும் பிரகாசமும் கிடைக்கிறதாம்.

நீதிமொழிகள் 17:22 மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்
Proverbs 17:22 A merry heart does good, like medicine

Saturday, May 06, 2006

கழுகுக் கண்

மனிதர்களை விட பறவைகளுக்கு பார்க்கும் சக்தி 10 மடங்கு அதிகம்.2 மைல்களுக்கு அப்பால் திரியும் 46 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு முயலை ஒரு கழுகு எளிதில் பார்த்துவிடும்.பைபிள் பறவைகளின் பார்க்கும் சக்தி பற்றி இவ்வாறு கூறுகிறது.

ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை.யோபு:28:7. அதாவது பட்சிகளின்,வல்லூறின் கண்கள் அத்தனை சக்தி வாய்ந்ததாம்.

Job:28:7 There is a path which no fowl knoweth, and which the vulture's eye hath not seen:

Friday, May 05, 2006

"கிறிஸ்துவோடிருப்பது எவ்வளவோ மேல்.........."

நான் எந்தப் பாதை வழி சென்றாலும் என் நேசர் எனக்கு முன்னதாக அப்பாதையில் சென்றிருக்கிறார்.அவர் அனுபவித்திராத வேதனையையோ அவர் பட்டிராத கஷ்டத்தையோ புதிதாக நான் ஒன்றும் அனுபவித்து விடப் போவதில்லை - எமி


பனிப்பாறைகள்
சமயத்துக்கு சமயம் மாறும்
மாய அன்பினில் மாய்ந்திடாதே(-அவை பனிப்பாறைகள்)
மனித அன்பினில் மயங்கிடாதே(-அவை பனிப்பாறைகள்)
மகிபன் யேசுவின் மாசற்ற அன்பை
மகிழ்வுடன் நீயும் பெற்றுக்கொள்வாய்
(19:8:93)

உலகம் முடியும் வரையும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா தேவனன்றோ
நம்பிடுவாய் துணை அவரே

இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.சங்கீதம்:48:14

Thursday, May 04, 2006

நோவாவும் ஆலிவ் இலையும்

ஒலிவ (Olive) இலையானது சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது.இதற்கான காரணம் நோவாகால வெள்ளப்பெருக்கின் போது ஒரு புறா ஆலிவ் இலை ஒன்றை சுமந்து சென்றதை நோவா கண்டார்.உடனே அவர் கடவுளின் கோபம் தணிந்து விட்டது என்பதை அறிந்தார்.இதனால் ஒலிவ இலை சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.அதாவது கடவுளின் கோபம் தணிந்து மழை நின்றிருந்தபடியால் தான் புறாவால் ஒரு ஆலிவ் இலையை கொத்தி பறந்து செல்ல முடிந்தது.

ஆதியாகமம்:8:11. அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

Tuesday, May 02, 2006

பழைய ஏற்ப்பாட்டு சம்பவங்கள் - கால வரிசைப்படி

· ஆதாம்-ஏவாள் காலம்...............................ஏறத்தாழ கிமு 4000.
· நோவா கால பெருவெள்ளம்.............................ஏறத்தாழ கிமு 2400.
· ஆபிரகாம்...............................ஏறத்தாழ கிமு 2000.
· யாக்கோபு.................................ஏறத்தாழ கிமு 1900.
· யோசேப்பு................................ஏறத்தாழ கிமு 1800.
· மோசே.................................ஏறத்தாழ கிமு 1400.
· எகிப்திலிருந்து இஸ்ரேல் ஜனங்கள் விடுவிக்கப்படல்............................ஏறத்தாழ கிமு 1400.
· ரூத்..................................ஏறத்தாழ கிமு 1150.
· சாமுவேல்................................ஏறத்தாழ கிமு 1100.
· சவுல் ராஜா காலம்..................................ஏறத்தாழ கிமு 1053.
· தாவீது ராஜா காலம்.................................ஏறத்தாழ கிமு 1013.
· சாலோமோன் ராஜா காலம்...............................ஏறத்தாழ கிமு 973.
· இஸ்ரேல் நாடு பிரிக்கப்பட்டது (1 இராஜாக்கள் 12)...ஏறத்தாழ கிமு 933.
· கலிலேயா சிறைபிடிக்கப்பட்டது.....................ஏறத்தாழ கிமு 734.
· இஸ்ரேல் நாடு சிறைபிடிக்கப்பட்டது...................ஏறத்தாழ கிமு 721.
· யூதேயா பாபிலோனிய அரசின் கீழ் வந்தது............ஏறத்தாழ கிமு 606.
. யோயாக்கீன் ராஜா சிறைபிடிக்கப்பட்டது................ஏறத்தாழ கிமு 597.
· எருசலேம் அழிக்கப்பட்டது.................ஏறத்தாழ கிமு 586.
· சிறையிருப்பிலிருந்து திரும்புதல்.................ஏறத்தாழ கிமு 536 .
· தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது........................ஏறத்தாழ கிமு 520.
· எஸ்தர் பெர்ஸியாவின் ராணி ஆன காலம்........ஏறத்தாழ கிமு 478.
· எஸ்றா எருசலேம் சென்றது................ஏறத்தாழ கிமு 457.
· நெகேமியா அரண் கட்டியது............ஏறத்தாழ கிமு 444.

பைபிள் உண்மைகள்

பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66
அதிகாரங்கள்-1,189
வசனங்கள்-31,101
வாக்குத்தத்தங்கள்-1,260
கட்டளைகள்-6,468
முன் கணிப்புகள்-8,000 க்கும் அதிகம்.
நிறைவேறிய முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,268 வசனங்கள்
இன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,140
மொத்த கேள்விகள்-3,294
நீளமான பெயர்-Mahershalalhashbaz-மகேர்-சாலால்-அஷ்-பாஸ்-(ஏசாயா:8:1)
நீளமான வசனம்-எஸ்தர்:8:9
சிறிய வசனம்-யோவான்:11:35 (இயேசு கண்ணீர் விட்டார்.)
நடுவான புஸ்தகம்-மீகா மற்றும் நாகூம்
நடுவான வசனம்-சங்கீதம் 118:8 "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."
நடுவான அதிகாரம்-சங்கீதம் 117
சிறிய அதிகாரம்-சங்கீதம் 117
பெரிய அதிகாரம்-சங்கீதம் 119 (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்-சங்கீதம் (மொத்தம் 150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்-3 யோவான்
எழுதியவர்கள்-40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்-1,200 க்கும் மேல்

பழைய ஏற்பாடு உண்மைகள்: மொத்த புஸ்தகங்கள்: 39
அதிகாரங்கள்: 929
வசனங்கள்: 23,114
நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள்
நடுவான அதிகாரம்: யோபு 20
நடுவான வசனம்: 2 நாளாகமம் 20:17,18
சிறிய புஸ்தகம்: ஒபதியா
சிறிய வசனம்: 1 நாளாகமம் 1:25
நீளமான வசனம்:எஸ்தர் 8:9
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119
பெரிய புஸ்தகம்: சங்கீதம்

புதிய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 27
அதிகாரங்கள்: 260
வசனங்கள்: 7,957
நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர்
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17
சிறிய புஸ்தகம்: 3 யோவான்
சிறிய வசனம்: யோவான் 11:35
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம் 20:4
பெரிய அதிகாரம்: லூக்கா 1
பெரிய புஸ்தகம்: லூக்கா.

பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ (Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி 1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus Stephanus) என்பவரால் கி.பி 1551-ல் வசனங்களாக பிரிக்கப்பட்டது.

காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை ஓலைகளில் எழதப்பட்டுள்ளது.

பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம்.

பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன.

பழையஏற்பாட்டில் 17 வரலாற்று புஸ்தகங்களும், 5 கவிநடை புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள் மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும் உள்ளன.

-தொகுக்கப்பட்டது

Thursday, March 23, 2006

மனிதனின் வயது என்ன?

மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகளாயிற்று என ஒரு சிலரும் சில லட்சம் ஆண்டுகளாயிற்று என வேறு சிலரும் ஏறக்குறைய 6000 ஆண்டுகளாயிற்று என மற்றும் சிலரும் கூறுகின்றனர்.

இதே வாக்குவாதம் திரு.மூத்துக்கு ஒரு மத போதகரிடம் ஒருமணி நேரமாய் ஏற்ப்பட்டுள்ளது.தன் வாதத்தை திரு.மூத்து அவர்கள் விளக்காவிட்டாலும் அவர்கள் வாதம் என்னமாய் இருந்திருக்கும என யூகிக்க முடிகிறது. இன்னொருவர் அப்படி பட்டவர்களை வீட்டில் ஏற்றாதே என அறிவுரைக்கிறார்.ஏன்? நான் கேட்பது என்னவென்றால் ....உங்கள் நியாயமான வாதங்களை அறிவியல்,சரித்திர பூர்வமாக வைக்கலாமே.

http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_16.html

இதுவரை உலக சரித்திரத்தில் beyond 6000 years-க்கு back போக முடிந்ததுண்டா.ஆறாயிரம் ஆண்டுவரைக்கும் நம்மால் back trace பண்ணமுடியும் போது ஏன் அதையும் தாண்டி செல்ல முடியவில்லை.ஏன் ஓர் வெற்றிடம்.

Indus Valley Civilization (3300–1500 கிமு) வரைக்கும் என சொல்கிறோமே.அதற்க்கு முன்னால் என்ன?....

கிறிஸ்தவர்கள் (மட்டுமல்ல முகமதியர்கள்,யூதர்கள் கூட )சொல்வது கிமு 4000 ஆண்டுகள்+கிபி 2000 ஆண்டுகள்- ஆகமொத்தம் ஏறத்தாழ 6000 ஆண்டுகள்.

சிலர் சொல்வது போல மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகளாயிற்று என்றால் மில்லியன் ஆண்டுகளாகியும் மக்கள் தொகை இப்படியா இருந்திருக்கும்.பூமி தாங்காமல் போயிருக்குமே.

பழங்காப்பியம் திருக்குறள் வெறும் 2000 ஆண்டு முந்தையது.தொல்காப்பியம் 5000 ஆண்டுகள் முந்தையது.எட்டுவதெல்லாம் ஏன் 6000 க்குள்ளாகவே இருக்கவேண்டும்.

மற்றபடி பெரிய நம்பர்கள் சொல்லுவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.சைபர் போட போட எண்கள் கூடும்.இந்த மாதிரி விசயங்களில் யாரும் எக்ஸ்ரா சைபர் போட தயங்குவதில்லை.

ஆரோக்கியமான விவாதம் நமக்கு நல்லதே..

Friday, March 17, 2006

மாதா வழிபாடு

கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் யேசுவின் தாயாகிய மரியாளை வழிபடுகிறவர்களாக உள்ளனர் (மேரி மாதா) .தங்கள் பிரார்த்தனைகளில் மரியாளை வாழ்த்துவதுடன் வணங்கவும் செய்கின்றனர்.இது தவறல்லவா என கேள்வி எழுப்பினால் நமக்கு கிடைக்கும் விடை "யேசுவை நேரடியாக வேண்டிக்கொள்வதற்கு பதிலாக அன்னை மேரி வழியாக யேசுவை வேண்டிக்கொள்கிறோம்.பொதுவாக எந்த தாய் பேச்சையாவது கேட்காத மகன் உண்டோ எனவே உடனே எங்கள் பிரார்த்தனை கேட்க்கப்படும்"என்கிற ரீதியில் பதில் கிடைக்கும்.

இதை சரியாக புரிந்து கொள்ள யேசு செய்த முதலாம் அற்புதமாகிய கானாவூர் கல்யாண வீட்டு சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அங்கே யேசுவும்,மேரியும் இருந்தார்கள்.

ரசம் குறைந்து போனபோது கல்யாண வீட்டுக் காரர்கள் மேற்க்கண்ட பிரிவினர் செய்யும் தவறு போன்றே யேசுவை வேண்டிக்கொள்ளாமல்,மேரியை வேண்டிக்கொண்டனர்.அதற்கு அந்த அம்மா அளித்த பதில் "அவர் (யேசு) உங்களுக்குஎன்ன சொல்கிறாரோ அதன் படி செய்யுங்கள்"என்பது தான்.

உண்மையில் மரியாள் இந்த பிரிவினர் நம்புவது போலவே யேசுவை கல்யாண வீட்டுக்காரர்களுக்காக வேண்டிக்கொண்டாள்.அதற்கு யேசுவின் பதில் " ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை" என்பதாக இருந்தது.

ஆக இந்த சம்பவம் சொல்வது போல மரியாள் யேசுவிடம் பிறருக்காக வேண்டிக்கொள்ள முடியாது என்பதுடன் மரியாள் சொல்லும் புத்திமதி "யேசுவின் வார்த்தை படி செய்யுங்கள்" என்பதே.அதை விட்டு விட்டு அந்த அம்மாவையே வாழ்த்துவது வழிபடுவது விக்கிரக வழிபாட்டுக்கு சமம்.

மேலும் ஒரு பைபிள் சம்பவம்.

(லூக்கா:11:27-28) யேசுவை பார்த்து ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு பெண் "உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகள்"என்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு யேசுவின் பதில்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

அதாவது சாதாரண மனிதனும் மேரியைவிட பாக்கியவான்கள் ஆகலாம் எப்படி என்றால் இறைவன் வார்த்தைபடி நடப்பதன் மூலம் என்பதே அவர் கருத்து.

யோவான் 14:13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

அதனால் யேசுவின் வழியாய் பிதாவை வேண்டிக்கொள்ளுங்கள்.அதுவே சரியான கிறிஸ்தவ வழிபாடு.இடையே எவரும் தேவையில்லை.

Thursday, March 16, 2006

தவமிருந்து

தவமாய் தவமிருந்து ஞானமாய், கடினமாய்,பொறுமையாய் உழைத்து ஒரு உல்லாசங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடங் கொடுக்காமல் சிறுக சிறுக சேமித்து, சொத்து சேர்த்து , பைக் வாங்க வசதி இருந்தும் வாங்காமல் நடையாய் நடந்து அப்பாமார்கள் ,தான் சேர்த்தவையெல்லாம் பிள்ளைகளுக்கு விட்டுவிட்டு போகின்றனர்.பிள்ளைகள் அதை அனுபவித்து களிப்பர்.இதுவும் ஒரு மாயை என்கிறது பைபிள்.

பிரசங்கி 2:21. ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.

Interesting Bible Words:
Ecclesiastes 2:21
For there is a man whose labor is with wisdom, knowledge, and skill; yet he must leave his heritage to a man who has not labored for it. This also is vanity and a great evil.

Tuesday, March 14, 2006

சத்திய ஆவி

பகுத்தறிவாளன் அவர்களே.. உங்கள் கேள்விகளுக்கு மிக்க நன்றி.

வழக்கம் போல எனக்கு தெரிந்த அளவில் நான் உங்களுக்கு பதிலளிக்க முற்சிக்கிறேன்.

கேள்வி 1. "அந்த தீர்க்கதரிசியைக்" குறித்து இயேசுவும் முன்னறிவித்திருக்கிறார். "நான் போய் அவரை அனுப்பி வைப்பேன். நான் போகவில்லையெனில் அவர் வர மாட்டார்" என புதிய ஏற்பாடு - யோவான் 16:7 -ல் இயேசு கூறியதாக வருகிறது. தன்னைப் பற்றி தானே இயேசு முன்னறிவித்தார் என்று நம்ப முடியுமா?

பதில்:எனது எண்ணப்படி யேசு இங்கு குறிப்பிடுவது தன்னை பற்றியோ அல்லது மோசே குறிப்பிட்ட தீர்க்கதரிசியை பற்றியோ அல்ல.இங்கு யேசு குறிப்பிடுவது பரிசுத்த ஆவியானவர் என கிறிஸ்தவர்களால் குறிப்பிடப்படுபவரை பற்றியதே.
நீங்கள் குறிப்பிட்ட அதே யோவான் 16:13-ல் அந்த நபரைப்பற்றி "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது,"என அவரை பற்றி சத்திய ஆவி என்கிறது பைபிள்.

இங்கே அவரின் குணாதிசயங்கள்

யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

யோவான் 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

யோவான் 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

(மேலும் யேசு அந்த சத்திய ஆவியானவ்ர் வரும் வரை எருசலேமை விட்டுப் போகாமல் இருக்க அவர் சீடர்களை கேட்டுக்கொண்டார்.அந்த சத்திய ஆவியானவர் வந்த சம்பவம் பற்றி கீழே)

அப்போஸ்தலர் 1:4 நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.5. ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் (அதாவது பரிசுத்த ஆவி வர)காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

(அடுத்த சில நாட்களில் நடந்தது கீழே)

அப்போஸ்தலர்:2:1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

ஆகையால் எனது முடிவு படி யேசு இங்கு குறிப்பிட்டது பரிசுத்த ஆவியானவரை பற்றி.

அது நடந்து முடிந்து விட்டது.


கேள்வி:2. இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் வந்தவர். நான் எடுத்துக்காட்டிய உபாகமம் கடைசி வசனத்தில், "மோசே போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமுதாயத்தில் பின்னர் எழும்பினதில்லை" என வருகிறது. இயேசு தான் அந்த தீர்க்கதரிசி எனில் இந்த வசனம் பொய்யாகிறது. பைபிளின் இவ்வசனம் உண்மையெனில் நிச்சயமாக "அந்த தீர்க்கதரிசி" இயேசுவாக இருக்க முடியாது. இந்த இரண்டில் எதை நீங்கள் சரி காண்கிறீர்கள். அல்லது இரண்டையும் சரி காண இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் பிறக்கவில்லை எனக் கூற வேன்டும். நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்களா?

பதில்:ஒரு வசனமானது "உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி"என சொல்ல இன்னொரு வசனம் "மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்."என சொல்வதால் இந்த குழப்பம்என நினைக்கிறேன்.

மோசேயைப் போல பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள், கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர்.போன்ற குணாதிசயமுள்ள ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்பது பைபிள் படி உண்மையே.

ஆனால் மோசேக்கு கடவுள் சொன்ன வாக்கியம் இது.

" உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."

அதாவது மோசேயைப்போல அற்புத அடையாளங்கள் செய்வார் என்றில்லை.
மோசே இஸ்ரேலருக்கு சட்ட திட்டங்கள் கொடுத்தது போல இந்த தீர்க்கதரிசியும் கடவுள் வார்த்தையை அருள்வார் என்பதே.

எடுத்துகாட்டாக
மத்தேயு:5:21. கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.(இது மோசே அருளியது)

22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
(இது யேசு அருளியது)


கேள்வி:3. "மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பைபிள் கூறும் அடையாளங்கள்: இ) பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள் - உபாகமம் (34:10,11)
ஈ) கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர். உபாகமம் (34:12)

இங்கு "மோசேயை போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பார்வோனுக்கு எதிராக செய்த கிரியைகளும், கர்த்தரை முகமுகமாய் அறிந்ததும் அடையாளங்களாக பைபிள் கூறுகிறது. இந்த இரண்டுமே இயேசுவுக்கு பொருந்தாத போது பைபிள் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி எப்படி இயேசுவாக முடியும்.


பதில்:மோசேக்கு கடவுள் சொன்ன வாக்கியம் இது.

" உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்."

அதாவது மோசேயைப்போல அற்புத அடையாளங்கள் செய்வார் என்றில்லை.

மோசே இஸ்ரேலருக்கு சட்ட திட்டங்கள் கொடுத்தது போல இந்த தீர்க்கதரிசியும் கடவுள் வார்த்தையை அருள்வார் என்பதே.

4. இனி நீங்கள் ஆதாரமாக கூறும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் கூட மோசே முதல் பல தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த அந்த தீர்க்கதரிசி இயேசு தான் என்பதற்கு ஆதாரமானவையாக இல்லை. மறித்து நீங்கள் காட்டியிருக்கும் வசனங்கள் இயேசுவின் பாடுகளும் அப்பாடுகளிலிருந்து அவரை கர்த்தர் (அவர் கொல்லப்படுவதிலிருந்து) காத்தருளியதற்கும் உள்ள ஆதாரங்களாகும். இதனைக்(இயேசுவின் சிலுவை மரணம்) குறித்து உங்களுக்கு விருப்பம் எனில் பின்னர் சர்ச்சை செய்வோம். அப்பொழுது இவ்வசனங்கள் எவ்வாறு அதற்கு ஆதாரமானவை என்று கூறுகிறேன்.

பதில்:நன்றி...விருப்பமே..காத்திருக்கிறேன்.

Thursday, March 09, 2006

வழக்குக்கு விலகு

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள்.எந்த அளவுக்கு நீதிமன்றங்களுக்கும் வழக்குகளுக்கும் தள்ளி இருக்கிறோமோ அந்த அளவுக்கு அது நமக்கு நல்லது.உடன்பிறந்தோர் அநேகர் சொத்துக்காக சண்டையிட்டு கடைசியில் அது யாருக்கும் இல்லாமல் வக்கீல் அந்த சொத்துக்களை சுட்டுக் கொண்டு போவதை இந்தகாலங்களில் பார்ப்பது சகஜம்.அது குறித்ததான ஒரு பைபிள் வாக்கியம் இதோ.

நீதிமொழிகள்:20:3.
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.

Interesting Bible Words
Proverbs 20:3 It makes you look good when you avoid a fight
only fools love to quarrel.

Wednesday, March 08, 2006

கருப்பு சூரியன்


உலகின் கடைசி நாட்களில் சூரியன் கருப்பாகி இருண்டுபோய் ஒளிகொடாதிருக்கும் என பைபிள் சொல்லுகிறது.நிகழ்காலங்களில் நடைபெறும் வான ஆராய்ச்சியானது அதையே தான் சொல்லிக்கொண்டிருக்கிறது.சூரியனில் உண்டாகி பெரிதாகிக் கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கிறார்கள்.அதனால் உண்டாகும் காந்த புயலால் உலகின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்கிறார்கள்.அது குறித்த செய்தி இங்கே.

http://epaper.tamilmurasu.in/
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பைபிள் வாக்கியங்கள் நடைபெற்று தான் கொண்டிருக்கின்றன அல்லது உலகம் பைபிள் வாக்கியங்கள் நிறைவேற தயாராகிக் கொண்டிருக்கிறது எனலாம்.


யோவேல் 2:31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

ஏசாயா 13:10 வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.

மத்தேயு 24:29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்,

மாற்கு 13:24 அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்

அப்போஸ்தலர் 2:20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

வெளி 6:12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.

வெளி 16:8 நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

Joel 2:31
The sun shall be turned into darkness,
And the moon into blood,
Before the coming of the great and awesome day of the LORD.

Isaiah 13:10
For the stars of heaven and their constellations
Will not give their light;
The sun will be darkened in its going forth,
And the moon will not cause its light to shine.

Matthew 24:29
“Immediately after the tribulation of those days the sun will be darkened, and the moon will not give its light; the stars will fall from heaven, and the powers of the heavens will be shaken.

Mark 13:24
“But in those days, after that tribulation, the sun will be darkened, and the moon will not give its light;

Acts 2:20
The sun shall be turned into darkness,
And the moon into blood,
Before the coming of the great and awesome day of the LORD.

Revelation 6:12
I looked when He opened the sixth seal, and behold,[e] there was a great earthquake; and the sun became black as sackcloth of hair, and the moon[f] became like blood.

Revelation 16:8
Then the fourth angel poured out his bowl on the sun, and power was given to him to scorch men with fire.

Tuesday, March 07, 2006

பணக்காரன்

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள்.அது சில சமயம் அந்த கூரையை சரி செய்யவே சரியாய் போய்விடும்.எவ்வளவு பணம் வருகின்றதோ அதற்கேற்றால் போல் செலவும் வந்து விடுகிறது என்பதை அவ்வாறு சொல்வார்கள்.விரலுக்கேற்ற வீக்கம்.
அளவுக்கு அதிகமாய் சொத்துடையதன் பலன் தன் சொத்தை பிறர் சாப்பிட அதை தாங்கள் பார்க்கலாம்.அது தான் அதிகம் பொருளுடையதன் பலன்.

இது பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது.

பிரசங்கி:5:11. பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதை காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?

Interesting Bible Words

Ecclesiastes 5:11
When goods increase,They increase who eat them;
So what profit have the owners Except to see them with their eyes?

மூஸாவின் (மோசே) முன்னறிவிப்பு

பகுத்தறிவாளன் Sir..எனது தாமதமான பதிலுக்கு மிகவும் வருந்துகிறேன்.சில அலுவல்களால் உடனடியாக என்னால் பதிலளிக்க இயலவில்லை.இனிமேல் முடிந்தவரை சீக்கிரம் பதிலளிக்க முயலுவேன்.என் நிலையை புரிந்துகொள்வீர்கள்என நம்புகிறேன்.இனி உங்கள் கேள்விகளுக்கான எனது பதில்கள்.

கேள்வி:அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. தற்போது கிறிஸ்த்தவ சமுதாயமும், முஸ்லிம் சமுதாயமும் இயேசுவின் வருகையை(அந்திம நாளின் அடையாளம்) எதிர் பார்த்து காத்திருப்பதிலிருந்து கர்த்தர் மோசேக்கு அறிவித்த அந்த மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி வந்து விட்டார் என்று தானே அர்த்தம். எனில் அந்த தீர்க்கதரிசி யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சற்று விளக்க முடியுமா?

பதில்:மோசே முன்னறிவித்த அந்த நபர் யேசு என்பது எனது நம்பிக்கை.அதற்கான ஆதார பைபிள் வசனங்கள் கீழே.
மோசே மட்டுமல்ல இன்னும் பிற தீர்க்கதரிசிகளும் யேசு பிறப்பை முன்னறிவித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன்.
----------------------------------------------------------------------
லூக்கா 24:27 மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மை(யேசு)க்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
----------------------------------------------------------------------
லூக்கா 24:44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்(யேசு) குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
---------------------------------------------------------------------
யோவான் 1:45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
---------------------------------------------------------------------
யோவான் 5:46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்(யேசு)குறித்து எழுதியிருக்கிறானே.
----------------------------------------------------------------------
அப்போஸ்தலர் 26:23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
----------------------------------------------------------------------
அப்போஸ்தலர் 3:22 மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.23. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.
24. சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
25. நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.
26. அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்
-----------------------------------------------------------------------------
உங்கள் கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேன்என நினைக்கிறேன்.இல்லையெனில்எனக்கு தெவிவியுங்கள்.நன்றி.

Thursday, March 02, 2006

மீண்டு வந்த மொழி

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் ஜனங்கள் சிதறடிக்கப் பட்டபோது அவர்கள் மொழியான எபிரேயு மொழியும் காணாமல் போயிருக்க வேண்டும்.நமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகள் சென்ற அனேகர் தம் தாய் மொழியை சீக்கிரமாகவே மறந்து விடுகின்றனர் என்பது மிக உண்மை.அமெரிக்காவில் வாழும்,அங்கு பிறந்த இந்திய வம்சா வழி குழந்தைகளிடம் அவர்கள் தாய்மொழியை சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.ஆனால் இஸ்ரேல் ஜனங்கள் ஆயிரம் ஆண்டுகளாக பிற நாடுகளில் சிதறடிக்கப்பட்டிருந்தும் மீண்டு வந்து பைபிள் முன்னறிவிப்பு படி தங்கள் மொழியையும் தக்க வைத்துள்ளனர் என்பது மிகவும் ஆச்சர்யம்.இன்று இஸ்ரேலின் official language Hebrew.

செப்பனியா 3:9. அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.

A pure language

With the return of the nation, the ancient Hebrew language has been revived and become the official language of the state. Prior to this happening, the Jews spoke an impure form of the language called Yiddish. The return to a pure common language was again predicted by the prophets.

Zephaniah 3:8-10 KJV - "For then will I turn to the people a pure language, that they may all call upon the name of the LORD, to serve him with one consent. From beyond the rivers of Ethiopia my suppliants, [even] the daughter of my dispersed, shall bring mine offering".

Wednesday, March 01, 2006

சண்டைக்கோழி

இது உண்மையா இல்லையா என கணவன்மார்கள் தான் சொல்லவேண்டும்.ஓயாமல் வழ வழ என சண்டையிடும் மனைவி, விடாத மாலை வேளை மழை போலவாம்...கணவன்மார்களுக்கு எங்காவது ஓடிவிடத்தோன்றும் போலும்....ஆபீஸிலிருந்து லேட்டாக வர அதுவும் ஒரு காரணம்.

சாக்ரடீஸ் வாழ்வில் நடந்தது என்பார்கள்.ஒருமுறை அவருக்கும் அவர் மனைவிக்கும் வீட்டில் பெரிய சண்டை.இவரோ தன் சீடர்களுக்கு போதித்து கொண்டிருந்தார்.வழ வழ என பேசி சண்டையிட்டுகொண்டிருந்த அவர் மனைவி ஒருகட்டத்தில் ஒரு பாத்திரம் முழுவதும் தண்ணீர் கொண்டுவந்து அவர் மேல் ஊற்றி விட்டார்.சாக்ரடீஸ் தன் சீடர்களை பார்த்து சொன்னாராம் "இவ்வளவு நேரமும் இடிஇடித்தது...இப்போது மழை பொழிகிறது"என்று.

இனிமேல் சில Interesting bible words உங்களுக்காக அவ்வப்போது...

நீதிமொழிகள்:25:24. சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.

நீதிமொழிகள்:27:15. அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.

Interesting bible words

Proverbs 25 : 24 It is better to dwell in the corner of the housetop, than with a brawling woman and in a wide house.

Proverbs 25 :15 A continual dropping in a very rainy day and a contentious woman are alike.

Tuesday, February 28, 2006

சிறையிலிருந்து கோட்டைநோக்கி

இன்றைய சூழலில் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மத்திய சிறையிலிருந்து விடுபட்டு ஜார்ஜ் கோட்டைக்கு அரசாள செல்பவரும் உண்டு.பாராளுமன்றத்தில் அமைச்சராய் இருந்து பின் நடுத்தெருவுக்கு அனாதையாய்ப் போனோரும் உண்டு.இதைப்பற்றிய பைபிள் பொன்மொழி இதோ..... இனிமேல் சில Interesting bible words-ம் உங்களுக்காக அவ்வப்போது...

பிரசங்கி:4:14. அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.

Interesting Bible words

Ecclesiastes:4:14 For out of prison he cometh to reign; whereas also he that is born in his kingdom becometh poor.

Monday, February 27, 2006

திரும்பி வந்த நாணயம்

சேக்கல் எனப்படும் நாணயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் புழக்கமாய் இருந்தது.இஸ்ரேல் நாட்டிலிருந்து யூதர்கள் சிதறடிக்கப்பட்டதை தொடர்ந்து சேக்கல் நாணயம் முற்றிலும் காணாமல் போய் இருந்தது.இப்போது பைபிள் வாக்கியப்படி மீண்டும் இஸ்ரேல் நாடு உருவானது மட்டுமல்லாமல் மீண்டும் பழைய பைபிள் கால இஸ்ரேல் நாட்டின் நாணயமான சேக்கல் உயிர்பெற்று வந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.The currency had been the Israeli pound until June 1980, when it was changed to the shekel.

எசேக்கியேல்:45:12. சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.

The shekel

After nearly 2,000 years the shekel has been reinstated as the common monetary unit in Israel, again, just as predicted.Since 1980, the sheqel has been the currency of the modern state of Israel, first the Israeli sheqel, then (since 1985) the Israeli new sheqel. As of January 16, 2006, 1 US Dollar equals approximately 4.60 NIS (New Israeli Shekel, also referred to as ILS), 1 Euro equals approximately 5.6 NIS, and 1 pound sterling equals approximately 8.16325 NIS. There are 100 agorot to a shekel.

Ezekiel 45:12-16 NIV - "The shekel is to consist of twenty gerahs. Twenty shekels plus twenty-five shekels plus fifteen shekels equal one mina.... All the people of the land will participate in this special gift for the use of the prince in Israel."

Sunday, February 26, 2006

யூப்ரடீஸ் நதி வற்றுமா?

வருங்காலத்தில் ஒரு சமயத்தில் பெரு நதியான யூப்ரடீஸ் நதி வற்றிப் போய்,அது வழியாக மிகப்பெரிய ராணுவம் ஒன்று கடந்து சென்று இஸ்ரேலுடன் போரிடும் என பைபிள் சொல்லுகிறது.இது சில வருடங்களுக்கு முன்பு வரை சாத்தியமில்லாதிருந்தது.அப்பெரு நதியாவது..வற்றுவதாவது..?..ஆனால் இன்று அது சாத்தியமாகிவிட்டது.துருக்கி நாடு கட்டியுள்ள சில அணைகளால் அந்த நதியின் ஓட்டத்தை இப்பொது தடுத்து நிறுத்த முடிகிறதாம்.யூப்ரடீஸ் நதி வற்றும் என்ற பைபிள் வாக்கியம் எப்படி நடக்கிறதென்று பாருங்கள்.

வெளி:16:12. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

Revelation:16:12 The sixth angel poured out his bowl on the great river Euphrates, and its water was dried up to prepare the way for the kings from the East.

Euphrates River to Be Dried Up
In Revelation 16:12, the Bible predicts that the Euphrates River
will be dried up to prepare the way for the kings of the east to invade Israel. This will happen at the time of the battle of
Armageddon according to verse 16 of the same chapter. The battle of Armageddon will be the final battle at which time Jesus
will return and fight on the side of the nation of Israel. Immediately thereafter He will establish His kingdom and usher in His
one thousand-year reign of peace. On January 13, 1990, the Indianapolis Star carried the headline “Turkey Will Cut Off Flow of
Euphrates for One Month.” The article stated that a huge reservoir had been built by Turkey. While filling up the reservoir, the
flow of the Euphrates would be stopped for one month and a concrete plug for a diversion channel built. These things have now
been done. With this newly built dam, Turkey has the ability to stop the Euphrates River at will. The conditions for fulfilling this
1,900 year-old prophecy are now in place.

Thursday, February 23, 2006

ஆடாத ஆட்டமெல்லாம்...போட்டவங்க மண்ணுக்குள்ளே

மனிதன் மண்ணிலே பிறக்கிறான்,மண்ணிலே சவமாகிறான்.இந்த இரண்டையும் இணைந்து தான் "பிரசவம்" என்கிறார்கள் போலும்.மண்ணிலிருந்து இரும்பை பிரித்தெடுத்து இரும்பு பொருட்கள் செய்வது போல,கீழ்கண்ட தனிம கலவையில் செய்த மண்பொம்மையானது அதில் உயிர் நுழைந்ததும் மனிதனாகிறான்.உயிர் போனதும் அவன் சவமாகி, பின் அத்தனிம கலவை மண்பொம்மை மண்ணோடு மண்ணாகிப்போகிறது.
அதைதான் "கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைத்தார்" என்கிறது பைபிள்.

Oxygen 65.0 %
Carbon 18.5 %
Hydrogen 9.5 %
Nitrogen 3.3 %
Calcium 1.5 %
Total 97.8 %

ஆதியாகமம்:2:7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆதியாகமம்:3:19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

Genesis:2:7 the LORD God formed the man from the dust of the ground and breathed into his nostrils the breath of life, and the man became a living being.

Genesis:3:19 By the sweat of your brow you will eat your food until you return to the ground, since from it you were taken; for dust you are and to dust you will return."

Origin of Man
According to the Bible, man was formed from the dust of the ground:

"And the Lord God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living being." Genesis 2:7

Over the years, scientists laughed at this passage, arguing that it would be foolish to actually believe that man could have been formed from the soil of the ground. Now, however, it is Christians who are laughing! A Reader's Digest article in November of 1982, reported the discovery made by NASA Arms Research Center, confirming the Biblical account of man's origin. These scientists discovered that every single element found in the human body exists in the soil covering our planet. The scientists concluded, "We are just beginning to learn. The Biblical scenario for the creation of life turns out to be not far off the mark."

Wednesday, February 22, 2006

பிரசவ வேதனை

மனித இனத்துக்கு மட்டுமே பிரசவவேதனை இத்தனை அதிகம் என "விகடன்,ஹாய் மதனில்" மதன் குறிப்பிடுகிறார்.பைபிளை புரட்டிய போது இதற்கு விடைகிடைத்தது.உலக துவக்கத்தில் கடவுள் மனிதனை படைத்த காலத்தில் ஏவாள் தடை செய்யப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்டு பாவம் செய்தபடியால் கடவுள் பெண்டிருக்கு கொடுத்த தீர்ப்பு-அந்த வேதனை என்கிறது பைபிள்.ஆச்சர்யம் தான்!!!!

-------------------------------------------------------------------------------------
ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.
முட்டையிடும் பிராணிகள் பிரசவ வேதனையில் இருந்து தப்பிவிட்டது பற்றி..?
முட்டையென்ன, குட்டி போடும் பிராணிகளுக்கும் பிரசவ வேதனை கிடையாது! பிரசவத்தின்போது ஏதோ வித்தியாசமாக உணருமே தவிர, மாடு, ஆடு, நாய்... ஏதாவது குட்டி போடும்போது, ‘அலறி’ப் பார்த்திருக் கிறீர்களா? மனித இனத்துக்கு மட்டுமே பிரசவ வேதனை உண்டு. காரணம், இந்தப் பாழாய்ப் போன தலை! மூளை வளர வளர, மண்டையும் பெரிசாகிவிட்டது. பெண்ணின் ‘பிரசவ வாயில்’ எதிர்பாராத, திடீர் பரிணாமப் பிரச்னை!
-------------------------------------------------------------------------------------
நன்றி:விகடன் ஹாய் மதன் கேள்வி&பதில்

ஆதியாகமம்:3:16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.

Genesis 3:16 To the woman he said,
"I will greatly increase your pains in childbearing;
with pain you will give birth to children.
Your desire will be for your husband,
and he will rule over you."

Tuesday, February 21, 2006

என்னாலேயல்லாமல்

உங்கள் comment-க்கு மிக்க நன்றி பகுத்தறிவாளன்.உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது.வியப்பைத்தருகிறது.உங்கள் கேள்விகளும் எனது பதில்களும் இங்கே...
நான் இதிலெல்லாம் பண்டிதன் இல்லை. எனினும் முயல்கிறேன் Mr.பகுத்தறிவாளன்.

பகுத்தறிவாளன்:"பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன்."

தோமா:உங்கள் கேள்வியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.


பகுத்தறிவாளன்://பைபிள் சொல்லுகிறது"இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று."// இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி.

தோமா:இங்கு மகாதேவன்என்பது ----தேவனாகிய கர்த்தர்
இங்கு ராஜா என்பது -அக்காலத்தில் பாபிலோனை ஆண்ட நேபுகாத்நேச்சார் ராஜா .தேவனாகிய கர்த்தர் இந்த ராஜாவுக்கு காண்பித்த சொப்பனத்திற்க்கு தானியேல் இங்கு அர்த்தம் சொல்கிறான்.இங்கு ராஜாஎன்பது யேசுவை குறிக்கவில்லை.

பகுத்தறிவாளன்://அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது

தோமா:சொப்பனத்தில் கண்ட அந்த கல் தான் யேசு.
வெளி:20:6. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

பகுத்தறிவாளன்:நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?

தோமா:எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.

யோவான் :12:44. அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
யோவான் :14:6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

உங்கள் ஆரோக்கியமான விவாதத்துக்கு மிக்க நன்றி.

John:12:44 Then Jesus cried out, "When a man believes in me, he does not believe in me only, but in the one who sent me. 45When he looks at me, he sees the one who sent me.

John:14:6 Jesus answered, "I am the way and the truth and the life. No one comes to the Father except through me

Monday, February 20, 2006

இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்

இருபதுகோடி பேர் கொணட ராணுவம் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் இஸ்ரேலை நோக்கி படையெடுத்து செல்லும் என்று பைபிள் சொல்லுகிறது.இது சில ஆண்டுகளுக்கு முன் வரை சாத்தியமே இல்லை.ஏனெனில் உலகில் மக்கள் தொகையே மிககுறைவாக இருந்தது.ஆனால் இன்று இது சாத்தியம்.கூட்டணி நாடுகளாகவோ இல்லை தனி நாடாகவோ இது இன்று சாத்தியம்.உதாரணமாக சீனா படை பலம் 375,520,255.பைபிள் வாக்கியங்கள எப்படி நிஜமாகுதென்று பாருங்களேன்.
(China has the largest armed army in the world. According to 2003 estimates, the manpower available for military service was 375,520,255 people, of which 206 million were fit for active duty.)

வெளிப்படுத்தின விசேஷம்:9:15. அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
16. குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.17. குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.(பாருங்கள்...தீயைகக்கும் நவீன ஆயுதங்கள் பற்றி அந்த காலமே பைபிள் கூறியிருக்கிறது.)

In Revelation 9:16, the Bible says that an army of 200 million will one day march toward Israel. Of course, this prophecy hasn't been fulfilled yet, at least not literally. But, as the world's population rises above 6 billion, it is increasingly possible for a coalition of countries to amass an army of 200 million, and this would have been have been unthinkable even 100 years ago.

Revelation 9:16 - The number of the mounted troops was two hundred million. I heard their number.

Thursday, February 16, 2006

பைபிளில் இந்தியா

எஸ்தர் 1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

எஸ்தர் 8:9 மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.

(இங்கே அகாஸ்வேரு-Xerxes என்பவர் பெர்ஸிய பேரரசின் மன்னர்,டேரியஸ்-Darius மன்னனின் மகன்)

மத்தேயு 2:1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

(இங்கே கிழக்குஎன்பது இந்தியாவை குறிக்கலாம்-அந்த காலங்களில் நமது தேசத்தில் அநேக ஞானபண்டிதர்கள்,வானசாஸ்திரிகள்,காலத்தை கணிப்பவர்கள் இருந்தார்கள் என எடுத்துக்கொண்டால்)

India in Bible
Esther 1:1 This is what happened during the time of Xerxes, the Xerxes who ruled over 127 provinces stretching from India to Cush

Esther 8:9 They wrote out all Mordecai's orders to the Jews, and to the satraps, governors and nobles of the 127 provinces stretching from India to Cush.

Matthew 2:1 After Jesus was born in Bethlehem in Judea, during the time of King Herod, Magi from the east came to Jerusalem

வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை -உள்ளே? வெளியே?

நன்றி ஜோ / Joe .பாருங்கள்.இந்த வாக்கியங்களை மறந்துவிட்டேன்.

"என்னை ஆண்டவனே ஆண்டவனே என்பன் விண்ணரசில் சேரமாட்டாம் .என் வார்த்தைகளின் படி நடப்பவன் எவனோ ,அவனே விண்ணரசில் சேருவான்"

"வெளிவேடக்காரர்களே! உங்களுக்கு ஐயோ கேடு"

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.22.அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்

மத்தேயு 23:27 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.28. அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.



Matthew:7:21 "Not everyone who says to me, 'Lord, Lord,' will enter the kingdom of heaven, but only he who does the will of my Father who is in heaven. 22Many will say to me on that day, 'Lord, Lord, did we not prophesy in your name, and in your name drive out demons and perform many miracles?' 23Then I will tell them plainly, 'I never knew you. Away from me, you evildoers!'

Matthew:23:27 "Woe to you, teachers of the law and Pharisees, you hypocrites! You are like whitewashed tombs, which look beautiful on the outside but on the inside are full of dead men's bones and everything unclean. 28In the same way, on the outside you appear to people as righteous but on the inside you are full of hypocrisy and wickedness.