Friday, August 22, 2008

அவர்களுடைய தேசத்துக்கு திரும்பிவரப்பண்ணுவேன்

எரேமியா 16:15இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இந்த வேதவசனம் எப்படி நிறைவேறுகிறதென பாருங்கள்.


இந்திய யூத பழங்குடியினருக்கு இஸ்ரேல் அடைக்கலம்

டெல்அவிவ்: யூதர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் பினேய் மெனேஷெ (Bnei Menashe) இனத்தைச் சேர்ந்த 7,232 இந்தியர்களை தனது நாட்டில் குடியேறச் செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் இந்த சமூகத்தினர் இந்தியாவில் பழங்குடி அந்தஸ்து பெற்றவர்கள் ஆவர்.

யூதர்களான இவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு குடிபெயர்ந்தனர். இஸ்ரேலில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளதால், இந்தியாவில் வசிக்கும் இவர்களை மீண்டும் இஸ்ரேலிலேயே குடியமர்த்த வேண்டும் என அந் நாட்டில் கோரிக்கை எழுந்தது.

இது குறித்து அந் நாட்டு பிரதமர் எகுட் ஓல்மெர்ட் விவாதித்து வருகிறார். விரைவில் இவர்கள் இஸ்ரேலில் குடியேற்றப்படுவார்கள் என அந் நாட்டின் முன்னணி நாளிதழளான ஹார்ரேட்ஸ் கூறியுள்ளது.

ஏற்கனவே இந்த இனத்தைச் சேர்ந்த 1,400 பேர் இந்தியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2008/08/22/world-israel-likely-to-admit-over-7000-indian-jews-from-mizo.html

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment