Monday, December 31, 2007

புதுவருடம் - தேவரீர் என்னோடேகூட இருக்கின்றீர்

புதுவருடம் - தேவரீர் என்னோடேகூட இருக்கின்றீர்

புதுவருடத்தின் நுழைவு வாயிலில் நின்றுகொண்டிருந்தவனை பார்த்து நான் கேட்டேன்.
"எவையெல்லாம் காத்திருக்கின்றனவென அறியாமலேயே இங்கு நுழைகின்றேனே நான்.
பாதுகாப்பாய் நடந்து செல்ல விளக்கு எதாவது கொடேன்" என்றேன்.

அதற்கு அவன் பதிலுரைத்தான்.
"தேவனின் கரத்தை பிடித்துக்கொண்டு தைரியமாய் இந்த இருட்டில் நுழை.
உனக்கு விளக்கு ஒன்றும் தேவைப்படாது.
தேவனின் துணையின்றி அறிந்த பாதையில் செல்வதைவிட
தேவனின் துணையுடன் நீ கண்டிராத பாதைகளில் செலல் உனக்கு மிக்க பாதுகாப்பே" என்றான்.

முன்னே சென்று உள்ளே நுழைந்து
தேவனின் கரத்தை கெட்டியாய் பிடித்துக்கொண்டேன்.
இரவும் பகலும் மேடுகளிலும் பள்ளங்களிலுமாய் அவர் என்னை நடத்திச் சென்றார்.
என் மனமே திடமாயிரு.
தேவன் நம்மோடிருக்கும் போது நாம் வரப்போகின்ற எல்லாவற்றையும்
அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எதிர் வரும் எல்லா சூழல்களிலும் எல்லா நேரங்களிலும் அதற்கான
தேவனின் நோக்கத்தை நாம் முழுதாய் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்.
தேவரீர் என்னோடேகூட இருக்கின்றீர்.
அது ஒன்றே போதும்.

சங்கீதம் 23:4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

Wednesday, December 12, 2007

Mary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்

Tuesday, December 11, 2007

நமது குரு

இயேசு என்ற பெயரை கேட்டதும் பலர் வெறுப்பது உண்டு. இயேசு என்பது நம் நாட்டுப் பதம் இல்லையே என்கிறார்கள்.
கவனியுங்கள், இயேசு என்ற பதம் கிரேக்க பாஷையில் இருந்து வந்தது. அதற்கு "பாவத்திலிருந்து இரட்சிக்கிறவர்"என்று அர்த்தம்.அதையே தான் வேதமும் மத்தேயு 1:21-ல் சொல்கிறது "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்."

இந்திய நாட்டு தேவ பக்தர்கள் பலர் தங்கள் பாக்களில்"குரு"என கூறியிருக்கிறார்கள். "கு"என்பதற்கு இருள், அஞ்ஞானம், பாவம் என அர்த்தம். "ரு"என்பதற்கு ஒழித்தல் என அர்த்தம். இயேசு என்ற கிரேக்க பெயரும், குரு என்ற இந்திய மொழி பெயரும் ஒரே பொருள் உடையனவே.ஆகையால் தான் இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் நீங்கள் குருக்கள் என்று அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.(மத்தேயு 23:10)எனக் கூறியிருக்கிறார்.

இயேசுபிரானுடைய மார்க்கத்தை வெள்ளைக்காரர்கள்தானே இந்தியாவுக்கு கொண்டுவந்தார்கள். வெள்ளைக்காரர்கள் மார்க்கம் நமக்கு வேண்டாமே என்கிறார்கள். கிறிஸ்தவம் வெள்ளைக்காரர்கள் மார்க்கம் அல்ல.நம் ஆசியாக் கண்டத்திலேயே உள்ளது.
இயேசு நமது ஆசியாக் கண்டத்தில் இந்தியாவிற்கு வட மேற்கே அன்றைய பலஸ்தீனாவில் பிறந்து வளர்ந்தார்.

நம் இந்திய நாட்டு தபோதனர்கள், ரிஷிகள் ,பக்தர்கள் முதலியோர் தங்கள் தவத்தில் அறிந்த இலட்சணங்களை உடையவராய் அவதரித்தார் இயேசு.

சில உதாரணங்கள்

குருவுருவங் கொண்டிக் குவலயத்துள் தோன்றிப்
பருவரலை நீக்கும் பரன்.
-ஒழிவிலொடுக்கம்
(பொருள்: கடவுள் குரு உருவம் எடுத்து, இவ்வுலகில் வந்து பாவ துன்பத்தை நீக்குவார்)

வேதமும் அப்படியே சொல்கிறது.யோவான் 1:29-ல் யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

பந்தமெல்லாம் தீரப் பரஞ்சோதி நீ குருவாய்
வந்த வடிவை மறவேன் பராபரமே

-தாயுமானவர் பராபரக்கண்ணி
(பொருள்: மனிதரைப் பாவ கட்டிலிருந்து விடுதலையாக்க, ஜோதிக் கடவுளாகிய நீ குருவாக வந்த வடிவத்தை மறவேன்)

வேதமும் அப்படியே தான் சொல்கிறது.யோவான் 8:12-ல் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

Friday, November 23, 2007

கிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை

மகா வித்வான் H.A.கிருஷ்ண பிள்ளை அவர்கள் (H.A. Krishna Pillai 1827-1900) கிறிஸ்து குறித்து இரட்சன்ய யாத்திரிகம் (Iratcaniya Yattirikam ) எனும் நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து சில வரிகள்

கன்னி பாலனாய்க் காசினி தனில் அவதரித்து
மன்னு ஜீவகோ டிகளெலாம் வான்கதி மருவத்
தன்னு யிர்ப் பரித் தியாகமுஞ் சிலுவையிற் றந்த
என்னு பாசனா மூர்த்தியை அஞ்சலித் திடுவோம்.

முனைவனை அறிய வேண்டில் முற்றும் நீ இயற்றும் பாவ
வினையெலாம் தொலைய வேண்டில் வீட்டின்பம் அடையவேண்டில்
இனிவரும் தேவ கோபம் எரிந்திடா திருக்க வேண்டில்
மனுவுரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.

தனியிடத் திருந்து பாவச் சழக்கினைக் கருதி,ஆவி
அனுமதி பெற்றுத் தேவ அன்பினை இதயத் துன்னி
கனியும்உள் ளன்பி நோடு கண்கணீர் ததும்ப நின்று
மனுஉரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.

தனுகரணங்கள் ஓய்ந்து தளர்ந்து மூச் சொடுங்குங் காலை
மனைமகார் துணையா வாரோ மருங்கிருந் தழுவதல்லால்
அனவர தமும் உனக்கோர் ஆம் துணை விரும்பில் இன்னே
மனுஉரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.

உலகம் மகிழ்ந்தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற,
அலகை உளந் திகில் ஏற, அகண்டபரி பூரணனார் அருள் மெய்வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நர உருவாய் விளங்கி அன்பால்
சிலுவைமிசை ஏறிய மெய்ஞ் ஞான சூரியனடியைச் சிந்தை செய்வோம்.

மல்கியா 4:2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.

Malachi 4:2 But unto you that fear my name shall the Sun of righteousness arise with healing in his wings; and ye shall go forth, and grow up as calves of the stall.

Tuesday, November 20, 2007

மோட்ச பிரயாணம் in Tamil download PDF format

Using your mouse right click this link and click "Save Target as" to download Tamil Motcha Pirayaanam in PDF format John Bunyan`s The Pilgrim's Progress in Tamil
Click here to download

இதயங்கள் மகிழட்டும் Lyrics

இதயங்கள் மகிழட்டும்
Yidhayangal Magizhattum
முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
Muhangal Malarattum (Sirrikattum)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
Manammahilchi Nalla Marundhu

1. மன்னித்து அணைத்துக்கொண்டார்
Mannithu Anaithukondar
மகனாய் சேர்த்துக்கொண்டார்
Maganai Serthukondar
கிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்
Kirubayin Muthangalal Pudhu Vuyirtharukinrar
கோடி நன்றி பாடிக்கொண்டாடுவோம்
Kodi Nanri Padi Kondaduvome

2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
Avaradhu Makkal Nam Avar Meikkum Adukal Nam
தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே
Thalaimurai, Thalaimuraikum Nambathakkavarey

3. தாய்மறந்தாலும் மறக்கவே மாட்டார்
Thaimarandhalum Marakkavay Maattar
உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
Vulankaikaliley Poritthu Vaithular
இதயங்கள் மகிழட்டும்

4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
Dhandanai Neekivittar Sathanai Thurathivittar
நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
Naduvil Vandhuvittar Theenkai Kanamattome

5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்
Vundakkinar Nammai, Avaril Mazhilnthiruppome
ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்
Atchi Seikinrar Andha Rajavil Kalikooruvome

6. தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
Thamadhu Janathimale Piriyam Vaikinrar
அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்ன்றார்
Adhisaya Ratchippinal Alankarikkinrar

7. நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே
Nallavar Nallavarey (Avar) Kirubai Vullavarey
அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்
Avaradhu Peranbu Endrenrum Nilaitthirukkum

8. சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஒடியதே - அது
Sanchalamum Thavippum Paranthu Odiyathae - Athu
நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்
Nithiya Nithiyamai Mahilchi Nam Thalaimale

சப்தமாய் பாடி Lyrics

சப்தமாய் பாடி
Sapthamai Padi
சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம்
Sapthamai Padi Sathuruvai Sangiliyal Katuvome
நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம்
Nitham Nitham Karthar Namam Padi Uyarthiduvome
இராஜா யேசு ஜீவிக்கின்றார்
Raja Yesu Jeevikinrar
இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்
Ratham Sindhi Jeyam Thandhar

1. புதுப்பாடல் பாடி மகிழ்வோம் புனிதர்கள் சபையில்லே
Pudhupadal Padi Magizhlvome Punidharkal Sabayilae
துதிபலி எழும்பட்டும் ஜெயக்கொடி பறக்கட்டும்
Dhudhibali Ellumpattum Jeyakodi Parakkattum
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது
Ellupudhal Desathil Pozhudhupole Vudhithathu

2. உண்டாக்கினாரே நம்மை உள்ளம் மகிழட்டும்
Vundakinarey Nammai Vullam Magizhattum
ஆளுநர் அவர்தனே இதயம் துள்ளட்டும் - நம்
Alunar Avardhaney Ethayam Thullattum
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது
Ellupudhal Desathil Pozhudhupole Vudhithathu

சப்தமாய் பாடி
Sapthamai Padi
சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம்
Sapthamai Padi Sathuruvai Sangiliyal Katuvome
நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம்
Nitham Nitham Karthar Namam Padi Uyarthiduvome
இராஜா யேசு ஜீவிக்கின்றார்
Raja Yesu Jeevikinrar
இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்
Ratham Sindhi Jeyam Thandhar

3. தமது ஜனத்தின்மேலே பிரியம் வைக்கின்றார் வெற்றி
Thamadhu Janathinmelay Avar Priyam Vaikinrar
தருகிறார் மேன்மைப்படுத்துவார் - இன்று
Vetri Tharukirar Menmaipaduthuvar – Indru
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது
Ellupudhal Desathil Pozhudhupole Vudhithathu

4. கர்த்தரை உயர்த்தும் பாடல் வாயில் இருக்கட்டும்
Kartharai Vuyarthum Paadal Vayil Irukkattum
வசனம் என்ற போர்வாள் கையிலே இருக்கட்டும் - இறை
Vasanam Enra Poreval Nam Kaiyelay Irukkattum – Irai
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது
Ellupudhal Desathil Pozhudhupole Vudhithathu

உந்தன் நாமத்தில் Lyrics

உந்தன் நாமத்தில்
Vundhan Namathil
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
Vundhan Namathil Yellam Koodum Yellam Koodumey
உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
Vundhan Samookathil Yellam Koodum Yellam Koodumey
உம்மால் கூடும் எல்லாம் கூடும் (2)
Ummaal Koodum Ellaam Koodum (2)
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal

1. உந்தன் வார்த்தையால், புயல் காற்று ஒய்ந்தது
Vundhan Varthayal, Puyal Kattru Oindhadhu
உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு
Vundhan Parvayal, Thirundhinar Pedhuru
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal
உம்மால் கூடும் எல்லாம் கூடும் (2)
Ummaal Koodum Ellaam Koodum (2)
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal

2. தபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்
Thabithal Marithal Jebatthal Vuyirthal
திமிர்வாத ஐநேயா, சுகமாகி நடந்தான்
Thimirvadha Ineya, Sukamaki Naddandhan
உந்தன் நாமத்தில்
Vundhan Namathil

3. மீனின் வாயிலே, காசுவந்ததே
Meenin Vayelay, Kasu Vandhathey
கழுதையின் வாயிலே, பேச்சி வந்ததே
Kalludhayin Vayelay, Pechu Vandhathey
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal
உம்மால் கூடும் எல்லாம் கூடும் (2)
Ummaal Koodum Ellaam Koodum (2)
கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்
Koodaathathu Ondrumillaiyea - Ummaal

4. வாலிபன் ஐதீகு தூக்கத்தல் விழுந்தான்
Valiban Idheeku Thookathal Villundhan
இறந்தும் எழுந்தன், பவுல் அன்று ஜெபித்ததால்
Irandhum Yellundhan, Paul Anrru Jebithathal

5. காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று
Kaloonri Nillenru Kathinar Paul Anrru
முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே
Mudavan Nadanthan Listhira Nakarilay

உந்தன் வல்லமையால் Lyrics

உந்தன் வல்லமையால்
Vundhan Vallamaiyal
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
Vundhan Vallamaiyal Mazhilnthirukirane
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
Vundhan Dhayavinal Asaivuradhiruppane
நீர் போதுமே என் நேசரே
Neer Podhumay Yen Nesaray
உம்மால் தானே மேன்மை வந்தது
Vummal Dhaney Menmai Vandhathu

1. கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
Kettane Vaivittu Neer Marukkavillayae
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே - என்
Vullam Virumbinadhai Ennaku Dhantharae - Yen

2. வெற்றி தந்ததல் பெரியவனானேன் – நீர்
Vettri Thandhathal Periyavananen - Neer
மேன்மை வந்த்தால் என் எழ்மை மாறியது
Menmai Vandhathal Yen Eazhmai Mariyathu

3. வாழ ஒடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
Vazha Odi Vandhen Sugam Thedi Vandhen
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
Neenda Vaazhvodu Nithiya Jeevan Thantheer

உந்தன் வல்லமையால்
Vundhan Vallamaiyal
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
Vundhan Vallamaiyal Mazhilnthirukirane
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
Vundhan Dhayavinal Asaivuradhiruppane
நீர் போதுமே என் நேசரே
Neer Podhumay Yen Nesaray
உம்மால் தானே மேன்மை வந்தது
Vummal Dhaney Menmai Vandhathu

4. பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
Pooripadaikiraen Vundhan Peranbal
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் - நான்
Belan Perukinraen Vummai Nambuvadhal - Naan

5. என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
Enrrum Nilaithirukkum Asirtharukinreer
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்
Vum Samugathin Mazhilchiyenal Thirupthiyakukireer

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து Lyrics

வாழ்நாளெல்லாம் (காலைதோறும) களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும்

நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்

2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே

3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும்

4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து
வாழ்நாளெல்லாம் (காலைதோறும) களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்

5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்

நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்

6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும்

7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான்

8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல

Vaalnaalellam (Kaalaidhorum) Kalikoorndhu Makilumbadi
Thirupthiyaakkum um kirubaiyinaal

1. Pukalidam Neerey Boomiyilay
Adaikkalam Neerey Thalaimuraidhorum

Nallavarey Vallavarey
Nandriyaiya Naalmuludhum

2. Ulakamum Boomiyum Thondrumunney
Enrendrum Irukindra En Dheivamey

3.Thunbathai Kanda Natkalukku
Eedaga Ennai Makilach Cheyyum

4. Arbutha Cheyalkalai Kaana Cheyyum
Makimai Maatchimai Vilanka Cheyyum

Vaalnaalellam (Kaalaidhorum) Kalikoorndhu Makilumbadi
Thirupthiyaakkum Um Kirubaiyinaal

5. Cheyyum Cheyalkalai Chemmaipaduthum
Cheyalkal Anaithilum Vetrithaarum

Nallavarey Vallavarey
Nandriyaiya Naalmuludhum

6. Naatkalai Ennum Arivai Thaarum
Gnanam Niraindha Ithayam Thaarum

7. Aayul Naatkal Elubathuthaan
Valimai Mikunthorku Enpathuthan

8. Aayirum Aandukal Um Paarvayil
Kadandhupona Or Naalpola

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் Lyrics

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
Jeevanulla Devan Thangkum Paraloga Erussalem
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
Zione Malaikku Vandhu Serndhuvittome
பரலோகம் (நம்) தாயகம்
Paralogam (Nam) Thayagam
விண்ணகம் (நம்) தகப்பன் விடு
Vinnagam (Nam) Thagappan Veedu

1. கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர்
Kodaana Kodi Thudhar Koodi Ankay Thuthikinranar
பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர்
Parisutharey Enrru Padi (Ippadi) Mazhilkinrarar
பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக தேவன் பரிசுத்தர்
Parisuthar Parisuthar Paraloka Devan Parisuthar

2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கல்
Peyargal Elludhapatta Thalaipperanavargal
திருவிழாக் கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்
Thiruvilla Kootamaka Kondadi Mazhilkinranar
அல்லேலூயா, ஒசன்னா
Hallelujah, Osaanaa
கொண்டாட்டம் கொண்டாட்டம் தகப்பன் வீட்டில்
Kondattam Kondattam Thagappan Veetil

ஜீவனுள்ள தேவன்
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
Jeevanulla Devan Thangkum Paraloga Erussalem
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
Zione Malaikku Vandhu Serndhuvittome
பரலோகம் (நம்) தாயகம்
Paralogam (Nam) Thayagam
விண்ணகம் (நம்) தகப்பன் விடு
Vinnagam (Nam) Thagappan Veedu

3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே
Pooranamakapata Neethimangal Avi Ankay
எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதி அங்கே
Ellaraiyum Niyayum Theerkkum Niyayadhibathi Ankay
நீதிபதி கர்த்தரே எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி
புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே
Pudhiya Vudanpattin Enaippalar Yesu Ankay
நன்மை தரும் ஆசிர்வாதம் பேசும் இரத்தம் அங்கே
Nanmai Tharum Asirvadham Pesum Ratham Ankay
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
Ratham Jeyam Ratham Jeyam
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
Yesu Christhuvin Ratham Jeyam

Monday, November 19, 2007

எஜமானனே என் இயேசு Lyrics


எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா

2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன்;
அழைத்தீரே உம் சேவைக்கு - என்னை
அதை நான் மறப்பேனோ

எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

3. அப்பா உம் சந்திதியில்தான்
அகமகிழ்ந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் - நான்
ஏங்குதய்யா என் இதயம்

4. என்தேச எல்லையெங்கும்
அப்பா நீர் ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் - தேசத்தின்
வன்முறை எல்லாம் ஓழியணும்

Yejamaananae Yen Yesu Raajanae

Yennamellam Yaekkamellam
Umm Sittham Seivadhuthaanae - Yen
Yejamaananae Yejamaananae
Yen Yesu Raajanae

1. Umakkaagathaan Vaazhgiraen
Ummaithaan Naesikkiraen
Baliyaagi Yennai Meettirae
Paralogamn Thirandheeraiyaa

2. Uyir Vaazhum Naatkalellam
Odi Odi Uzhaitthiduvaen
Azhaitheerae Umm Saevaiku - Yennai
Adhai Naan Marappaeno

Yejamaananae Yen Yesu Raajanae
Yennamellam Yaekkamellam
Umm Sittham Seivadhuthaanae - Yen
Yejamaananae Yejamaananae
Yen Yesu Raajanae

3. Appa Umm Sannidhiyil Thaan
Agamagizhndhu Kalikooruvaen
Yeppodhu Ummai Kaanbaen - Naan
Yengudhaiyaa Yen Yidhayam

4. Yen Dhesa Yellaiyengum
Appa Nee Aala Vaendum
Varumai Yellam Maaranum - Dhesathin
Vanmurai Yellam Ozhiyanum

Ejamaanane En esu Raajane Fr Berhmans Song Lyrics

Sunday, November 18, 2007

கருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்


karunayin naathaa Rev. Paul Thangiah tamil song

நீரே என் தஞ்சம் Rev. Paul Thangiah Song


neerey en thanjam tamil song

ஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song


Rev. Paul Thangiah aaraathanaikkul vaasam seyyum tamil song

மகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song


makilnthu kalikoorungkal fmpb kids christmas tamil song

Saturday, November 17, 2007

வாசல்களே உங்கள் தலைகளை பாடல்


VaasalkaLee ungkaL thalaikaLai sarah navroj tamil song

மனுகுல தேவன் யேசு பாடல்


Manukula theevan yesu Sara Navroji Tamil Song

மகிழ்சியோடு துதிக்கிறேன் பாடல்


Makilchiyoodu Thuthikireen

மார்க்ஸூம் மாற்கும்

பொது உடைமைத் தத்துவத்தைத் தோற்றுவித்தவர் காரல் மார்க்ஸ்,(Karl Heinrich Marx அவரை மார்க்ஸ் என்று அவரது தோழர்கள் அன்பாய் அழைப்பார்கள்.அவருடைய காலம் கி.பி.1818-1883.

"ஏழை-பணக்காரன் என்ற வேறுபாடு கூடாது;சமூகச் சொத்துக்கள் சகலருக்கும் பொது"என்ற பொது உடைமைத் தத்துவத்தை உள்ளடக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளார்.

மார்க்ஸ் எழுதிய நூலைப்படித்து சோல்ஜர் ஒருவன் ஒரு குருவானவரிடம் வந்து "கள், சாராயம் ,கஞ்சா, அபின் போன்று போதை தரும் மதம் மக்களைக் கெடுக்கிறது.எனவே மதத்தைக் குழிதோண்டி புதைக்க வேண்டும்"என்றான்.

"முரட்டு வார்த்தைகளை உபயோகிக்கிறாயே,நீ நாத்திகனோ?"என்று கேட்டார் பாதிரியார்.

"மதம் என்ற குப்பையைப் புதைக்கவேண்டும் அல்லது சுட்டெரிக்கவேண்டும்"என்றான் பதிலுக்கு.

பாதிரியார் நிதானமாகப் பேசினார்:

"மார்க்ஸ் எழுதிய நூலையும் வாசித்திருக்கிறாய்,இதோ இந்த மாற்கு சுவிசேஷத்தையும் படித்துப் பாரேன்"என்று சொல்லி மாற்கு என்னும் நற்செய்தி நூலைக் கொடுத்தனுப்பிவிட்டார்.

ஒரு வாரம் கழித்து அந்த போர் வீரன் சொன்னான்."சுட்ட செங்கல் தண்ணீரை ஜிவ் என்று இழுப்பதுபோல மாற்கு சுவிசேஷகனின் வார்த்தைகள் என் உள்ளத்தை இழுத்து என்னை மாற்றிவிட்டது"என்றான்

அவன் கையில் மாற்கு சுவிஷேசம் மட்டும் உள்ளது. நம் கையில் அதைப்போல பெரிதும் சிறிதுமான 66 புத்தகங்கள் கொண்ட திருமறை இருக்கிறதே.அது நம்மை மாற்றி இருக்கிறதா?

சங்கீதம்:41:11
என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

யாக்கோபு:5:20
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

இங்கர்சாலும் கிறிஸ்தவமும்

கிரியையில்லாத கிறிஸ்தவம்...

நாத்திகன்

நாத்திகன் யார்? என்ற கேள்விக்கு பெரியார் ஒருவரின் பதில்:
"சரீரக்கண்ணால் பார்க்கக்கூடாத ஒருவருடைய உதவி யாருக்கு இல்லையோ அவன் நாத்திகன்"என்பதாகும்.கடவுள் இல்லை என்கிற ஒருவனுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிற இறைவனின் பங்கு எவ்வாறு கிடைக்கும்?

ராபர்ட் இங்கர்சால் (Robert G. Ingersoll)(காலம்:1833–1899) என்ற நாடறிந்த நாஸ்திகன் ஒருவன் வேதாகமத்தைக் குறைகூறி பல நூல்களை எழுதினான். தான் எழுதிய நாத்திகப் புத்தகமொன்றை தெய்வபக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான்.அந்நூலின் முதல் பக்கத்தில் அவன் கையால் எழுதி இருந்ததைக் கவனியுங்கள்:

"கிறிஸ்தவர்கள் எல்லோரும் என் அத்தை சாராளைப்போல் ஜீவித்தால் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கமாட்டாது"

இதை வாசிக்கிறவர்களின் கவனம் இங்கர்சாலின் கையெழுத்தில் செல்லட்டும்.

மத்தேயு 7:16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

Thursday, November 15, 2007

வேதாகமத்தில் வரும் மயில்கள்

I இராஜாக்கள்:10:22.
(சாலோமான்) ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

II நாளாகமம்:9:21.
(சாலோமான்) ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

இந்திய தேசிய பறவையான மயில் பற்றிய குறிப்புகள் புனித வேதாகமத்தில் காணக்கிடைக்கின்றன. அவை சில ஆச்சர்யமான உண்மைகளை வெளிகொணர்கின்றன. மேற்கண்ட பைபிள் வாக்கியங்கள் கிமு 990 வாக்கில் இஸ்ரேலின் ராஜாவாயிருந்த சாலோமோனின் காலத்தில் நடந்தவை. இங்கு தர்ஷீஸ் என குறிப்பிடப்படுவது கேரள மலபார் துறையாகவோ அல்லது இலங்கையின் இன்றைய ஈழப் பகுதியாகவோ இருக்கலாம் என கணிக்கிறார்கள். இது அந்தகால இஸ்ரேலர்களுக்கு தமிழர்களோடு இருந்த கப்பல்கள் வழி வியாபாரத்தொடர்பை குறிப்பதாக கருதலாம். ஏனெனில் எபிரேய மொழியில் மயிலை "Tuki" என்கிறார்கள். அது தமிழ் வார்த்தை "தோகை" யிலிருந்து வந்ததாகும். தமிழ் இலக்கியங்களான மலைபடுகடாமும் குறிஞ்சிபாட்டும் மயில்களை தோகை எனும் வார்த்தையாலே குறிப்பிடுகின்றன என்பது இங்கு குறிப்பிடதக்கது.

1492-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸோடு பயணம் போன லுயிஸ் டெ டாரெஸ் (Luis de Torres) எனும் யூதர் மேல்நாடுகளில் கால்வைக்கும் போது அங்கு வான்கோழிகளை கண்டு அவற்றை மயிலென நம்பி "Tuki" என அழைத்தாராம். அது பிற்பாடு Turkey என ஆனது. இன்றைக்கும் அமெரிக்காவில் இந்த டர்கி வான்கோழி நன்றிதெரிவித்தல் (Thanksgiving) நாளின் ஸ்பெஷல் மீல்.

Wednesday, November 14, 2007

Tamil Bible download in PDF format -New Testment

Using your mouse right click this link and click "Save Target as" to download Tamil Bible in PDF format -New Testment
Click here to download

Tamil Bible download in PDF format -Old Testment

Click here to download Tamil Bible in PDF format -Old Testment

Wednesday, October 24, 2007

திருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்


Thiru Karathaal Thaangi Ennai tamil song

யேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்


Yesu Entra Thiru Naamathirku

மகிழ்வோம் மகிழ்வோம் பாடல்


mahilvom makilvoom tamil song

சந்தோசம் பொங்குதே பாடல்


santhosam pongkuthey

நன்றியால் துதிபாடு பாடல்


Nantriyal thuthi paadu

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்


ethai ninaithum nee kalangathey mahane berhmens song

என் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song


en kirubai unakku poothuம் father berhmens

போஷிப்பவர் நீரே Rev Paul Thangaiah Video Song


pooshippavar neerey Rev.paul thangaiah song

Monday, October 22, 2007

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ருசித்துப் பார்...
ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் - குணப்பட்டு கிறிஸ்தவனானவன் - மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.

பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.

"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.

நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

1பேதுரு 2:17
தேவனுக்குப் பயந்திருங்கள்

Psalm 34:8
Taste and see that the LORD is good;

1 Peter 2:17
fear God

Tuesday, October 09, 2007

கடவுளைக் காட்டு...

கடவுளைக் காட்டு...
சூரியனின் சூட்சமம்

"கடவுள் நம்மைப் பார்க்கிறவர் என்று சொல்லுகிறீரே,அந்த கடவுளை எனக்கு காட்டும்" என்றார் திரேஜன் சக்கரவர்த்தி யூதரபியிடம்.

"கடவுள் ஆவியாய் இருக்கிறாரே,அவரைக் கண்ணால் பார்க்க முடியாதே" என்றார் யூதரபி."நாம் பார்க்கமுடியாத கடவுள் நம்மை எப்படிப் பார்ப்பார்,இது பித்தலாட்டம்;மேலும் நீர் சொல்வதை நான் நம்பமுடியாது;கடவுளை இப்பொழுது எனக்கு காட்டத்தான் வேண்டும்" என்று வற்புறுத்தி கட்டாயப்படுத்தினார் சக்கரவர்த்தி.

மத்தியானம் 12 மணிக்கு சக்கரவர்த்தியை அழைத்துக்கொண்டு வெளியே போய் "இப்பொழுது சூரியனைப்பாரும்" என்றார் யூதரபி.

"கண் கூசுகிறதே,சூரியனை என்னால் எப்படிப் பார்க்கமுடியும்?" என்றார் சக்கரவர்த்தி.

"கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவைகளில் ஒன்றாகிய சூரியனையே உம்மால் பார்க்க முடியவில்லையே,சிருஷ்டிகராகிய கடவுளை எப்படிப் பார்க்கமுடியும்" எனச் சொல்லிச் சென்றார் யூதரபி.

சக்கரவர்த்திக்கு பேச நாவெழவில்லை.

சங்கீதம் 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

வெளி 4:11
கர்த்தாவே, தேவரீர்,...நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்,

Psalm 14: 1
The fool hath said in his heart, There is no God.

Revelation 4:11
Thou art worthy, O Lord,...for thou hast created all things,

Monday, October 08, 2007

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை பாடல் வரிகள்

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)

உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா

கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும்

என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும்

-பாஸ்டர்.வெஸ்லி (அரியலூர்)

Friday, October 05, 2007

கிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்

தமிழ் மகா கவி சி.சுப்பிரமணிய பாரதியார் கிறிஸ்துவை பற்றி இவ்வாறு பாடுகிறார்.Subramaniya Bharathiyar(1882-1921)

சி.சுப்பிரமணிய பாரதியார் பாடிய சுதேச கீதங்கள்.
(2-ம் பாகம் 153-ம் பக்கம்)

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தம் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

அன்பு காண் மரியாள் மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்,
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலேனா
ஆஹா!சாலப் பெருங்களி யிஃதே.

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்,
வண்மைப் பேருயிர்- யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியாள் மக்தலேனா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.

Translation:
The Lord descended and died on the Cross;
Rose up on the third day.
Mary Magdalene witnessed in person.
People of all nations!
Listen to the implication thereof.
The Lord enters our selves
To protect us for ever from the doom,
If only we kill our ego.

Mary Magdalene is but love;
Jesus Christ is but the soul.
When first the evil is dispensed with,
Resurrection occurs on day three.
Looking at the resurrected,
On the face bright as gold,
Mary Magdalene praised the Lord.
Aha! Great indeed is the delight!

Crucify the senses on the cross of Truth
With nails of tapas.
Thence revealed is the heavenly form
Of Jesus Christ thereon.
Mary Magdalene is but womanhood.
Jesus Christ is but virtue preserved.
Such is the subtlety of the episode
As can be understood in a moment.


மாற்கு 16:6
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.

Mark 16:6
And he saith unto them, Be not affrighted: Ye seek Jesus of Nazareth, which was crucified: he is risen; he is not here: behold the place where they laid him.

Thursday, October 04, 2007

சுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது

பிரபல தமிழ் கவிஞர் சுத்தானந்த பாரதி அவர்கள் (Shuddhanadha Bharati 1897-1990) கிறிஸ்துவைப்பற்றி இவ்வாறு பாடினார்.
Tamil poet Shuddhanadha Bharati wrote about Jesus Christ as follows.

மரணத்தை வென்றவனே! மன்னவனே அன்புருவே!
தரணி உய்யப் பிறந்தவனே! தாவீதரசன் குலக் கொளுந்தே
கருணையுடன் அவதரித்தாய்! காத்திடவே மெய்யறத்தை
அரண் எமக்குன் திருவருளே அறிவெல்லாம் அமர்ந்தவனே!

நலத்தினைப் பழகிக் காட்டி நன்னெறித் தவத்தில் ஓங்கி
நலத்தினை மாந்தர் உய்ய நவின்றனை அன்பினாலே,
நலத்தினை அறியா மாக்கள் நவிலருங் கொடுமை செய்ய.
நலத்தினை அறியக் காட்ட நல்கினை பலியாய் உன்னை.

உன் பெயராலே இந்த உலகினில் உயிர்ப்போம்!நாங்கள்
உன் பெயராலே உண்போம்,உன் அருள் சிறக்க வாழ்வோம்
உன் பெயராலே எங்கும் உத்தமத் தொண்டு செய்வோம்.
உன் பணித் திறத்திற்கெங்கள் உழைப்பெலாம் ஈந்து வாழ்வோம்.


II தீமோத்தேயு 1:10
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்

2 Timothy 1:10
But is now made manifest by the appearing of our Saviour Jesus Christ, who hath abolished death, and hath brought life and immortality to light through the gospel:

Wednesday, October 03, 2007

666 SixSixSix Mark வலதுகை முத்திரை


சீக்கிரத்தில் மனிதனின் நடமாட்டத்தை கண்காணிக்க அவன் வலது கையில் ஒரு சிலிகன் சிப்பை (Verichip அல்லது xmark) பொருத்த போகின்றார்கள்.இந்த சிப் இரு அரிசி அளவே இருக்கும். செருகப்பட்ட பின் அது செருகப்பட்டது சுத்தமாய் எவருக்கும் தெரியாது. அந்த சிப்பிலுள்ள 16 டிஜிட் எண்வழி அவன் கணிணியால் கண்காணிக்கப்படுவான் அடையாளம் காணப்படுவான். இதை radio-frequency identification (RFID) என்கின்றார்கள்.அப்புறமென்ன? மொத்த ஜாதகத்தையும் அது காட்டிவிடும்.

அமெரிக்க நிறுவனங்களான Wal-Mart, Procter & Gamble, மற்றும் அரசு தபால் நிறுவனமான United States Postal Service போன்றவை இவற்றை தங்கள் பணியார்களிடையே அமுல்படுத்த போவதாக பேசிக்கொள்கின்றார்கள்.

இச்சிப்களை தயாரிக்கும் Verichip எனும் நிறுவனம் சமீபத்தில் இந்த நுட்பத்தின் பெயரை xmark என மாற்றியது.பொதுவாக x எனும் எழுத்து கிறிஸ்துவை குறிக்கும் சொல்.உதாரணமாய் Christmas-ஐ xmas என்பர்.இங்கே அது xmark அதாவது கிறிஸ்துவின் முத்திரை அதாவது அந்திகிறிஸ்துவின் முத்திரை என வருவதாக பலர் பயப்படுகிறார்கள்.

அதன் வெப்சைட் http://www.xmark.com/ இப்படியாக கூறுகிறது

Welcome to Xmark, the new corporate identity for our healthcare security products. Our new name emphasizes our focus on healthcare security. You may have known us under the eXI or VeriChip brand, but we are now bringing all our products under the Xmark name

இந்த மாதிரி சிப் வைக்கமாட்டோம் என குரலெழுப்பி ஒரு சாரார் கிளம்பியிருக்கிறார்கள்.
http://www.wethepeoplewillnotbechipped.com

காலம் சமீபமாயிருக்கிறது.


வெளி:13:16,17,18
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.


Revelation:13:16-18
And he causeth all, both small and great, rich and poor, free and bond, to receive a mark in their right hand, or in their foreheads: And that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name. Here is wisdom. Let him that hath understanding reckon the number of the beast: for it is the number of a man; and his number is Six hundred and sixty six.

Monday, October 01, 2007

பெரிய கடவுளா,சின்னக் கடவுளா?

கேள்வியும் பதிலும்...
பெரிய கடவுளா,சின்னக் கடவுளா?

கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு சாதாரண சமுசாரியை இடைமறித்து - அயர்லாந்து ராஜ தந்திரி காலின்ஸ் என்பவர் கீழ்க்கண்டவாறு உரையாடினார்.

"எங்கே போகிறாய்?"

"கடவுளைத் தொழுதுகொள்ள"

"அந்தக் கடவுள் பெரிய கடவுளா,சின்னக் கடவுளா?"

"வானங்களும், வானாதி வானங்களும் கொள்ளாத அவ்வளவு பெரிய கடவுளாகவும்,என் இருதயத்தில் தங்கும்படியான அவ்வளவு சின்னக் கடவுளாகவும் இருக்கிறார்" என்றான் சமுசாரி.

"கடவுளைப் பற்றி எத்தனையோ புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் இந்த சாதாரண விவசாயி கொடுத்த உத்தரவு தான் என்னை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது" என்றார் காலின்ஸ்

சங்கீதம்:111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

வெளி 22:13
நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

Psalm 111:10
The fear of the LORD is the beginning of wisdom

Revelation 22:13
I am Alpha and Omega, the beginning and the end, the first and the last.

Friday, September 28, 2007

தேவாலய திரைச்சீலை ரகசியம்

மோசே காலத்து ஆசரிப்பு கூடாரத்தில் தொங்க விடப்பட்ட திரைசீலையானது பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்க தொங்கவிடப்பட்டது.(யாத்திராகமம் 26:33 ) அந்த திரைசீலையை கடந்து பிரதான ஆசாரியன் மட்டுமே செல்ல முடியும்.பிரதான ஆசாரியர்கள் முன்பு தங்கள் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடுவர்.(எபிரெயர் 7:27)
அதற்கெல்லாம் தேவையில்லாமல் ஒரே முறை நமது பிரதான ஆசாரியனாகிய யேசுகிறிஸ்து பலியாகி அந்த திரைச்சீலையை இரண்டாக கிழித்து சென்று விட்டார். உலக வரலாறும் கிபி,கிமு வென இரண்டாக கிழிந்து விட்டது.(எபிரெயர் 6:20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.)

அதில் ஆசர்யம் என்னவென்றால் தேவாலயத்தின் திரைச்சீலை கீழ்தொடங்கிக் மேல்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது என்றிருந்தால் மனிதன் கிழித்திருப்பானோ என சந்தேகிக்திருக்கலாம்.அதற்க்கு மாறாக மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்து அது தேவனின் செயலேயென நிரூபித்தது.

(மத்தேயு 27:51,மாற்கு 15:38,லூக்கா 23:45) அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.

எபிரெயர் 8:2 பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.

எபிரெயர் 9:11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு,

எபிரெயர் 9:25 பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.

எபிரெயர் 7:27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.

தமிழ் சினிமா நடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை


Real Player media audio file
பகுதி 1


பகுதி 2


tamil cinema actor a.vm.rajan story testimony

ஆதாரம் நீர் தான் ஐயா பாடல்


aathaaram neer thaan aiyaa song

ஆமென் அல்லெலுயா பாடல்


amen alleluiah song

கேளுங்கள் தரப்படும் பாடல்


kelungkaL tharappadum tamil song

தேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்


thean inimayilum yesuvin naamam paadal

கலங்காதே நெஞ்சமே பாடல்


kalangathey nenjame tamil christian video song

கானா பேட்டை கானா பாடல்


Ghana petai Kaanaa Tamil Song

ஆசீர்வாதமான தமிழ்நாடு பாடல்





aasirvathamaana tamilnadu christian song

Thursday, September 27, 2007

உலக சரித்திரத்தையே இரண்டாக பிரித்த கிறிஸ்து

உலக வரலாற்றை இரண்டாக பிரித்தவர் இயேசு கிறிஸ்து. வரலாற்று புத்தகங்களில் வருடங்களை குறிப்பிட அதிகமாக பயன்படுத்தப்படும் கி.பி என்பது "கிறிஸ்துவுக்கு பின்" எனவும், கி.மு என்பது "கிறிஸ்துவுக்கு முன்" எனவும் பொருள்படும். இதுவே கிறிஸ்துவின் பிறப்புக்கும் அவர் உலகில் வாழ்ந்ததற்கும் அசைக்க முடியாத அத்தாட்சி

BC - Before Christ

AD - Anno Domini (Latin : "In the year of (Our) Lord")(சிலர் After Death என்பர்).C.E அதாவது Christian Era என்பதுவும் இக்காலத்தையே குறிக்கும்.

ஜெயேந்திர சுவாமிகள் சங்கராச்சாரியார் ஒரு முறை இவ்வாறு கூறினார்கள்
"பிரிட்டீஷ்காரர்கள் இந்திய சரித்திரத்தை கி.பி, கி.மு என பிரித்துள்ளார்கள். ஆனால் அது எவ்வளவு சரியோ தவறோ தெரியவில்லை.இந்தியாவில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை வைத்து சரித்திரம் மாற்றி எழுதுவது நல்லது"
-20-11-1993 மாலைமலர் தேன்மலர்

மாற்கு 15:38 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.

Mark 15:38 And the veil of the temple was rent in twain from the top to the bottom.

Wednesday, September 26, 2007

கிறிஸ்தவர்கள் பற்றி நேரு

"கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களை விட காந்தியடிகள் ஏசுவுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை அறிதல் வேண்டும்.ஏசுவின் கொள்கைகளைப் பெரும்பாலும் கடைப்பிடித்து நடக்கின்றவர் காந்தியடிகள்"
-நேரு (Jawaharlal Nehru in 1934,Glimpses of world history-Page:89)

மத்தேயு:5:16
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

Matthew 5:16
Let your light so shine before men, that they may see your good works, and glorify your Father which is in heaven.

Tuesday, September 25, 2007

சிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்

"கிறிஸ்து சுவிசேஷத்தின் உள்ளடக்கமான கொள்கைகள் இந்து ஜன சமூகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் செறிந்து இந்தியருடைய எண்ணங்களை எல்லா விதத்திலும் மாற்றி வேற்று உருப்படுத்திக்கொண்டு வருகின்றன"
- நாராயண் சுந்தர வர்க்கர் (Narayan Sundara Varkar)


வெளி 1:3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள

Revelation 1:3 Blessed is the one who reads the words of this prophecy, and blessed are those who hear it and take to heart what is written in it, because the time is near.

Monday, September 24, 2007

Todays inventions and The bible

இன்றைய கண்டுபிடிப்புகளும் வேதாகமமும்

விமானங்கள்
ஆபகூக் 1:8 அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.
ஏசாயா:31:5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்;
சகரியா:14:17 அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

வாகனங்கள்,ஏவுகணைகள்
நாகூம்:2:4 இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்;அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.

பீரங்கிகள்
நாகூம்:2:3 இரதங்கள் ஜுவாலிக்கிற கடகங்களை உடையதாயிருக்கும்;

இயந்திரதுப்பாகிகள்
நாகூம்:2:3 ஈட்டிகள் குலுங்கும்.

அணுகுண்டுகள்
வெளி:13:13 மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
லூக்கா:21:26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்;
எசேக்கியேல்:39:4,5,6 நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்;..விசாலமான வெளியில் விழுவாய்;...
நான் மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன்;

தொலைக்காட்சி
வெளி:11:9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள்,

வயர்லெஸ் போன்கள் மற்றும் வானொலி
யோபு:38:35 நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: அங்கேயிருக்கிறோம் என்று உனக்கு சொல்லும்படி செய்வாயோ?


Todays inventions and The bible

Aeroplanes
Habakkuk 1:8 their horsemen shall come from far; they shall fly as the eagle that hasteth to eat.
Isaiah 31:5 As birds flying, so will the LORD of hosts defend Jerusalem;
Zechariah 14:17 And it shall be, that whoso will not come up of all the families of the earth unto Jerusalem to worship the King, the LORD of hosts, even upon them shall be no rain.


Motor Cars and Missiles
Nahum 2:4 The chariots shall rage in the streets, they shall justle one against another in the broad ways: they shall seem like torches, they shall run like the lightnings.

War Tanks
Nahum 2:3 the chariots shall be with flaming torches

Machine Guns
Nahum 2:4 the fir trees shall be terribly shaken

Nuclear Weapons
Revelation 13:13 he maketh fire come down from heaven on the earth in the sight of men
Luke 21:26 the powers of heaven shall be shaken.
Ezekiel 39:4,5,6 Thou shalt fall upon the mountains of Israel,...Thou shalt fall upon the open field:...And I will send a fire on Magog, and among them that dwell carelessly in the isles:

Television
Revelation 11:9 And they of the people and kindreds and tongues and nations shall see their dead bodies three days and an half

Cellphones and Radio
Job 38:35 Canst thou send lightnings, that they may go and say unto thee, Here we are?

Saturday, September 22, 2007

யேசு காவியம் இசை ஓவியமாய்

பாகம் 1


பாகம் 2

Tamil Christian kannadasan Yesu kaaviyam song with video and music

கர்த்தாவே எங்கள் ஆண்டவரே பாடல்


karthaavee engkal aandavaree paadal

அன்பர் யேசுவின் அன்பு பாடல்


anbar yesuvin anbu song

நடந்ததெல்லாம் நன்மைக்கே பாடல்


nadanthathellaam nanmaikke thanthai bergmans prayer garden tamil song

என் ஜனமே மனம் திரும்பு பாடல்


en janamee manam thirumbu Father S. J. Berchmans jeba thoottam

தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்


thalarnthu poona kaikalai thidappaduththungal father berhmens paadal

இயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்


yesuvin naaman inithaana naaman tamil christian video song

Friday, September 21, 2007

தேவன் தள்ளுகிறார் - மார்ட்டின் லூதர்

பழமைகளிலும், தவறுகளில் மூழ்கி கிடந்த கிறிஸ்தவ சபைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மார்ட்டின் லூதர் அவர்கள்.Martin Luther (1483 – 1546).ரோமன் கத்தோலிக்கம்,புராட்டஸ்டன்ட் எனப்படும் பிரிவுகள் இவர் காலத்திலிருந்தே உருவானது.ஆனால் இப்படி ஒரு பிரிவையோ பிளவையோ ஏற்படுத்த அவர்கு அவா துளியும் இருக்கவில்லை.ஆனாலும் அவருக்கு வேறு வழியும் தெரியவில்லை.இப்படியாய் கூறுகிறார் அவர்.

"தேவன் என்னை வழி நடத்தவில்லை;அவர் என்னைப் பிடித்து முன்னால் தள்ளுகிறார்.அவர் என்னைக்கொண்டு செல்கிறார்.நான் எனது எஜமானனல்ல. நான் அமைதியாக வாழவே விரும்புகிறேன்.ஆனால் புரட்சிகளின் நடுவிலும்,எதிர்ப்புகளின் நடுவிலும் தள்ளப்படுகிறேன்"
-லுத்தர் D'Aubigne b5 ch2

"பூமியின் அரசர்களும் முழு உலகமுமே அஞ்சி நடுங்குகிற போப்பானவரை எதிர்க்க நான் யார்?....
இந்த முதல் இரு ஆண்டுகளில் என் இதயம் எவ்வாறு துன்பமடைந்தது என்பதை ஒருவராலும் அறியமுடியாது.எப்படிப்பட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்தேன் என்று சொல்வேன்? எப்படிப்பட்ட அவலத்தில் மூழ்கினேன் என்பதே...."
-லுத்தர் ibid b3 ch6


லூக்கா 21:12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13. ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14. ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15. உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

Luke 21:12. But before all these, they shall lay their hands on you, and persecute you, delivering you up to the synagogues, and into prisons, being brought before kings and rulers for my name's sake.
13.And it shall turn to you for a testimony.
14.Settle it therefore in your hearts, not to meditate before what ye shall answer:
15.For I will give you a mouth and wisdom, which all your adversaries shall not be able to gainsay nor resist.

Thursday, September 20, 2007

கிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்

சத்யேந்திர நாத் தத்தா (Satyendra Nath Dutta 1882-1922) வங்காளத்தை சேர்ந்த ஒரு மாபெரும் கவிஞர்.அவர் இவ்வாறு கூறினார்

"என்னைக் கிறிஸ்தவனென மற்றவர்கள் அழையாவிடினும் நினது பிறப்புவிழாவாம் இன்று ஓ கிறிஸ்துவே! தெய்வத்தின் பேரன்புப் புதல்வ தூய்மையாளருள் பெருந்தூய்மையாளா! நின்னை நான் பணிகின்றேன்"


The Hindu poet, Satyendranath Datta, felt Jesus himself belonged in India:

We love and revere you, though not called Christians. . . . Bring your message to this ancient home of idealism. Reign supreme in Hind and be the brightest jewel in her diadem. Our heavy-laden hearts will find comfort in you. Teach us the lesson of humility, service and truth. . . . Teach us sympathy, O Teacher of love. Come and fill our hearts. Give us the love that fulfills itself in service among the poor, the lowly and lost.

-Vishal Mangalwadi, Missionary Conspiracy (OM Publishing, 1996), pp. 96–97

Source

யோவான் 13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

John 13:35 By this shall all men know that ye are my disciples, if ye have love one to another.

Wednesday, September 19, 2007

கிறிஸ்து பற்றி தாசித்துஸ்

கிறிஸ்து பற்றி முதலாம் நூற்றாண்டு ரோம வரலாற்று மேதை தாசித்துஸ் (Cornelius Tacitus) இவ்வாறு கூறுகிறார்.

"கீழ்த் திசை மேம்பாடு அடையப்போகிறது.உலக முழுவதையும் ஆளுகை செய்கிறவர் யூதெயாவினின்றும் புறப்படுவார்"
-தாசித்துஸ் ரோமை சரித்திராசிரியர்

மத்தேயு 2:2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.

Tacitus (historian of the Roman Empire) tells that

"there was a firm persuasion … that at this very time the East was to grow powerful, and rulers coming from Judea were to acquire universal empire"

(Tacitus: Histories, 5:13).

Matthew 2:2 Saying, Where is he that is born King of the Jews? for we have seen his star in the east, and are come to worship him.

Source

Tuesday, September 18, 2007

கிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்

வங்காளத்தை சேர்ந்த, பிரம்ம சமாஜ தலைவர்களில் ஒருவர் கேஷப சந்திர சென். Keshub Chunder Sen (1838-1884)
அவர் 1879-ஆம் ஆண்டு மே மாதம் இவ்வாறாய் கூறினார்.

"இந்தியா என்னும் சோபிதமான விலைமதித்தற்கரிய கிரீடத்தைச் சூடப் பாத்திரமானவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.இயேசு கிறிஸ்து ஒருவரே என்று அழுத்திச் சொல்கிறேன்.இந்தியாவாகிய மணிமகுடம் ஒருநாள் அவருடையதாகிவிடும்"

Kesab Chandra Sen had said in May, 1879,"None but Jesus, none but Jesus, none but Jesus ever deserved this precious diadem, India; and Jesus shall have it."

சங்கீதம் 60:7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது

எசேக்கியேல் 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது

Psalm 60:7 Gilead is mine, and Manasseh is mine;

Ezekiel 18:4 Behold, all souls are mine; as the soul of the father, so also the soul of the son is mine:

Source

Sunday, September 16, 2007

கிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்(Dr. Sarvepalli Radhakrishnan (1888-1975)) ஒரு மிகப்பெரிய மேதை.அவர் பிறந்த தினம் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.அவர் இவ்வாறு சொன்னதாக கூறப்படுகிறது. "If you want to be a real man,you follow Jesus Of Nazareth"

(டிசம்பர் 1993 "வருகையின் தூதன்" பத்திரிகை)

யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

John 8:12 Then spake Jesus again unto them, saying, I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life.

Friday, September 14, 2007

கிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்

இந்து குலத்தில் பிறந்து பின் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாராயண் வாமன் திலகர் (Narayan Vaman Tilak) மாகாராஷ்டிராவில் (1862-1919) வாழ்ந்த ஒரு மாபெரும் மராட்டிய மகாகவியாவார்.அநேக புகழ்பெற்ற கிறிஸ்தவ கீர்த்தணைகளையும்,பஜனை பாடல்களையும் எழுதியுள்ளார்.
அவர் இவ்வாறு கூறினார்.

"உம்மைப்போல கிறிஸ்துவே நானும் ஏழையாய் இருக்கத் தேடுவேன்.உம்மைபோல நானும் சிலுவையில் அறையப்பட ஆயத்தமாய் வாழ்வேன்.உம்மைப்போல நடந்து உம் சாயலை அடைய என்றும் முயலுவேன்"

யோவான்:15:4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

John:15:4
Abide in me, and I in you. As the branch cannot bear fruit of itself, except it abide in the vine; no more can ye, except ye abide in me.

Wednesday, September 05, 2007

சவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா

சவக்கடல் எனப்படும் Dead sea இஸ்ரேலின் ஒரு உப்புக்கடல் salt lake.உப்பால் நிறைந்தது.பிற கடல்களை விட ஒன்பது சதவீதம் உப்பு அதிகம்.இதனால் யார் வேண்டுமானாலும் இக்கடலில் மிதக்கலாம்,நடக்கலாம்.அவ்வளவு அடர்த்தியாய் உப்பு.

வேதாகம ஆபிரகாமின் காலத்தில் Sodom,Gomorrah பட்டணங்கள் அக்கிரம மிகுதியால் கடவுளின் பார்வையில் கோபத்துக்குள்ளாயின.
அந்நகரங்கள் முற்றிலும் நெருப்பால் அழிக்கப்பட்டன.கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின் மேலும்,வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.

அவ்விடம் இப்போது சவக்கடலாக மாறி கிடக்கிறதாக எனது நம்பிக்கை.இந்த வசனமும் அதை ஆமோதிப்பது போல் வருகிறது. ஆதியாகமம் 19:26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

சவமாய் போன சோதோம்கொமாரா மக்களுக்கும் சவக்கடலுக்கும் ஒரு முடிச்சு. உப்புத்தூணாய்போன லோத்தின் மனைவிக்கும் உப்புக்கடலுக்கும் ஒரு முடிச்சு.

Thursday, August 30, 2007

பூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்


poorana azakullavaree en yesuve tamil song

எந்தன் வாழ்விலே யேசுவே பாடல்


enthan vaazviley yesuvee tamil song Bro. Athisayam

உம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்



உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)

உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா

கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும்

என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும்

-பாஸ்டர்.வெஸ்லி (அரியலூர்)

ஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்


Aaviyaanavare um vallamai koorave tamil song

யேசுவே என்னோடிருப்பவர் பாடல்


yeesuvee ennoodiruppavar song

உம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்


Ummoodu selavidum ovvoru nimidamum song

கர்த்தர் தாமே நம்முன்னே பாடல்


karthar thaamee nammunnee poovaar song

யேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்


Yeesuvee theevan Rev. Paul Thangaiah tamil christian song

Sunday, August 26, 2007

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே-பாடல்


enkum engum pukal yesu raajanukke old christian tamil song

எந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்


enthan ullam puthu kaviyaalee tamil song

எந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்


Enthan yesaiyah Tamil christian Song from yesu vidivikkiraar naalumaavadi Mohan C Lazarus Ministry

Saturday, August 25, 2007

இராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்

பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் இராஜாராம் மோகன் ராய்(May 22, 1772 – September 27, 1833). அவர் கிறிஸ்துவின் போதகத்தை பற்றி இவ்வாறு கூறுகிறார்.

"நான் அறிந்த சகல போதகங்களுக்குள்ளும் கிறிஸ்துவின் போதகமே மனுஷ வர்க்கத்துக்குள் அனந்தம் பேருக்கு நன்மை விளைவிக்கக் கூடியது.அது ஒன்றே அதிக நற்பலனைத் தருவது"

கிறிஸ்துவின் போதகம் என்ன?
யோவான்:15:12.
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

John:15:12
This is my commandment, That ye love one another, as I have loved you.

Friday, August 17, 2007

அல்லாவும் யாவேயும் தேவனும் ஒன்றா?

நெதர்லாந்தை சேர்ந்த ரோமன் கத்தோலிக்க பிஷப் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.

"Allah is a very beautiful word for God. Shouldn't we all say that from now on we will name God Allah? ... What does God care what we call him? It is our problem,"

- Roman Catholic bishop Tiny Muskens, from Netherlands (Southern diocese of Breda) on Dutch television

அது நல்ல விஷயமே என பல இஸ்லாமிய நண்பர்களும் ஒத்துகொள்கின்றனர்.

"It reinforces the fact that Muslims, Christians and Jews all worship the same God,I don't think the name is as important as the belief in God and following God's moral principles. I think that's true for all faiths."

-Ibrahim Hooper the Council on American-Islamic Relations, Washington, D.C.

பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை ரோஜாவென அழைக்காவிட்டாலும் அது மணக்கவே செய்யும் என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கியம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு பொருந்துவதில்லை.ஏனெனில் பெயரில் என்னமோ இருக்கிறது.ஆதனாலேயே கடவுள் ஆபிராமின் பெயரை ஆபிரகாமென மாற்றி மகிழ்ந்தார்.(ஆதியாகமம் 17:5)யாக்கோபின் பெயரை இஸ்ரவேலென கூப்பிட்டு மகிழ்ந்தார்.(ஆதியாகமம் 32:28).சீமோனை பேதுரு என பெயர் மாற்றி மகிழ்ந்தார்.(மாற்கு 3:16)

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.(யாத்திராகமம் 20:7.)

Exodus 20:7
Thou shalt not take the name of the LORD thy God in vain; for the LORD will not hold him guiltless that taketh his name in vain.

Tuesday, August 07, 2007

குயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்


Kuyavane Kuyavaney Padaippin Kaarananee Tamil video Song

குயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே

வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே

இறைவனே இறைவனே இணையில்லாதவனே
குறை நிறைந்த என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே

விலைபோகாத பாத்திரம் நான்
விரும்புவார் இல்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே

தடைகள் யாவும் நீக்கி என்னைத்தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடமையாக்கிடுமே

மேய்ப்பனே மேய்ப்பனே மந்தையை காப்பவனே
மார்க்கம் அகன்ற என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே

மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றியே
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னைத்
தேடிவந்த தெய்வமே

வாழ்நாளெல்லாம் உம் பாதம்
செல்லும் பாதையில் நடத்திடுமே

யேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song


Yesuvin Pillaikal Naangaal Father Berhmans Jeba Thottam christian video Song

Monday, August 06, 2007

யேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்


Yesu ennoodu iruppathai ninachidda Father Berhmens video Song

என்ன என் ஆனந்தம் பாடல்


Enna en aanantham sollakoodaathey video Song

Saturday, August 04, 2007

தேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்


Theevaa Saranam Karthaa Saranam Rev. Paul Thangiah Song

உந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்


Unthanukkaakavee Uyirvaaza Thudikkireen Maaranaathaa Song

காத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்


Kaaththidum Kaadhidum Rev. Paul Thangiah Tamil Video Song

ஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்


Aaraathanai Theevanee Rev. Paul Thangiah video song

ஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்


FMPB Seyal Veerar Tamil Christian Song Aazakadaliley

Thursday, August 02, 2007

லேசான காரியம் உமக்கது லேசான காரியம்



Lesaana Kaariyam Umakkathu Leysaana Kariyam Tamil Christian Song

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]

என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans



Ennai Nadaththum Yesu Naathaa Umakku Nantri Ayya - Tamil Video Song By Father S. J. Berchmans