Monday, August 25, 2014

இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள் எத்தனை எத்தனை?

இயேசுவிடம் ஒரு கேள்வி: உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?
இயேசுவின் பதில்: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நீங்கள் தயாரா நண்பரே? (லூக்கா 21:28)

                                                      இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள்

Monday, August 18, 2014

கைவிரல் வைத்தால் தான் வாங்க முடியும் - ‍சீக்கிரம் தமிழகத்தில்

Slowly we are kind of getting there. "அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கு செய்தது" என்கிறது வேதாகமம்.செய்திதாள் செய்திய‌ பாருங்க. கூடிய சீக்கிரத்தில் அந்த நாளும் வந்துடும்ங்க. நாம பெற்ற சுதந்திரம் இன்னும் இருக்குதா? இல்ல இருந்த சுதந்திரமும் போயிட்டிருக்குதான்னு தெரியலைங்க. எல்லாம் நம்ம நன்மைக்கு தான்னு சொல்லி கொஞ்சம் கொஞ்சமா இருந்த‌ சுதந்திரமும் போயிட்டு தான் இருக்குதுனு தோணுது (வெளி:13:16,17). No one can buy or sell unless he has the mark, that is, the name of the beast or the number of its name.Revelation 13:17

Thursday, August 14, 2014

தப்பிய‌ பூமி - இம்மட்டும் வா, மிஞ்சி வராதே

ஒரு மயிரிழையில் தப்பிய‌து பூமி என இப்போது சொல்லுகிறார்கள். 2012‍ல் உண்டான சூரியப்புயல் கொஞ்சம் அவசரப்பட்டு ஒரு வாரம் முன்பே மட்டும் நடந்திருந்தால் பூமியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்து போயிருக்கும் என்கிறார்கள். எலக்ட்ரானிக் கருவிகளெல்லாம் கருகிப்போயிருக்குமாம். இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என கட்டளையிடுவது நம் கர்த்தரன்றோ?. காலத்துக்கு முன்னே ஒன்றும் நடக்காது. எல்லாம் அதின் அதின் காலத்திலே நேர்த்தியாக நடக்கும். ஏனெனில் பூமி உண்டானதல்ல. உண்டாக்கப்பட்டது. இங்கு உண்டாக்கினவர் அறியாமல் ஒரு அணுவும் அசையாது.(யோபு 38:11)