Friday, September 30, 2011

இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டும்


ஆர அமர இருந்து இந்த அழகான அகாபே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நோட்டீசை உருவாக்கியவர்கள் மேலே ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”மோ அல்லது ”Praise the Lord”டோ அல்லது ஒரு வேத வசனமோ போட்டிருக்கலாம். தோதான வேத வசனம் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எட்டு பாஸ்டர்மார்களும் ஒரே மனதாக இந்த விசயத்திலாவது ஒன்று கூடுவது நல்ல விசயம். நல்ல நோக்கத்துக்காக நாலும் செய்யலாம் என்பார்கள். சிறார்களையும், இளைஞர்களையும் எளிதில் சென்றடைய இது ஒரு நல்ல வழி. ஆனாலும் அந்நோக்கம் இந்த கைப்பிரதியில் கூட தெரியவில்லை என்பது தான் சோகம். இளம் தலைமுறையினருக்கு அதுதான் பிடிக்கிறது வென இக்காலத்தில் பலதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ராப் இசையும் பாப் இசையும் கிறிஸ்தவத்தில் வலிய புகுத்துவது எந்த அளவுக்கு நல்லதோ தெரியவில்லை. ஏதோ கத்தி பாடுகிறார்கள் ஆடுகிறார்கள் ஆனால் வார்த்தைகள் ஒன்றும் கேட்பதுமில்லை புரிவதும் இல்லை.சில இசைகள் பிசாசுக்கே உரியது நாம் அதில் தெய்வீகத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் விளையாட்டு நல்லது. சரீரத்துக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது. ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கொள்வதை கற்றுக்கொள்வார்கள். அப்படியே இப்படி கிரிக்கட் ஆடியாவது திருச்சபைகள் இடையே சகோதரத்துவம் வளர்ந்தால் ரொம்ப நல்லது.
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.(I கொரிந்தியர் 10:31)
எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.(I கொரிந்தியர் 9:22 )
இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.(லூக்கா 11:42)

Tuesday, September 27, 2011

எனக்கு எல்லாம் இயேசுவே MP3 பாடல்கள்

Yenakku Ellaam Yesuve Audio CD from Yesu Viduvikiraar (Jesus Redeems) Ministries.

MP3 பாடல்கள்ஐ பதிவிறக்கம் செய்ய, மவுஸினால் இங்கு வலது சொடுக்கி, “save target as” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

[mp3] Athikalai Thuthi.mp3 0 days old 0 4.9 MB

[mp3] Elluppum Deva Elluppum.mp3 0 days old 0 3.7 MB

[mp3] Jeyam Undu .mp3 0 days old 0 3.9 MB

[mp3] Maghimaiyodu Yesu.mp3 0 days old 0 4.7 MB

[mp3] Naan Ummai Maranthalum.mp3 0 days old 0 4.5 MB

[mp3] Neerthan Ayaa.mp3 0 days old 0 4.8 MB

[mp3] Viduvikkirar Yesu.mp3 0 days old 0 4.2 MB

[mp3] Yen Intha Padukal.mp3 0 days old 0 5.6 MB


ENNAKKU ELLAM YESUVAE
ATHIKALAI THUTHIhi.mp3 HEMA JOHN - ENNAKKU ELLAM YESUVAE 5:24 · 128 Kbit/s · 4.94 MB · MP3
JEYAM UNNDUu .mp3 JOLLEE ABRAHAM - ENNAKKU ELLAM YESUVAE 3.91 MB · MP3
NEERTHAN AYAAaa.mp3 SINDHU - ENNAKKU ELLAM YESUVAE 4.78 MB · MP3
MAGHIMAIYODUdu Yesu.mp3 JOHN PANNEER SELVAM - ENNAKKU ELLAM YESUVAE 4.67 MB · MP3
VIDUVIKKIRARar Yesu.mp3 HEMA JOHN - ENNAKKU ELLAM YESUVAE 4.22 MB · MP3
ELLUPPUM THEVA ELLUPPUMm.mp3 M. K. PAUL - ENNAKKU ELLAM 3.72 MB · MP3
YEN ENTHA PADUGALal.mp3 SINDHU - ENNAKKU ELLAM YESUVAE 5.58 MB · MP3
NAAN UMMAI MARANTHALUMum.mp3 JOHN PANNEER SELVAM - ENNAKKU ELLAM YESUVAE 4.46 MB · MP3

Friday, September 23, 2011

இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்

1.இஸ்ரவேலின் வம்சத்தினர் தேசத்தை மீண்டும் ஆண்டுகொள்வர் என ஆமோஸ் கிமு 750 வாக்கில் முன்னுரைத்தது அப்படியே கிபி.1948-ல் நிறைவேறியது.ஆமோசின் இறுதி வார்த்தைகளை கவனியுங்கள் “நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” அப்படியே ஆகும்.ஆமேன்.
ஆமோஸ் 9
14. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.
15. அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.


2.மீண்டும் யூத இனம் புத்துயிர் பெற்றுவரும் என கிமு 593-571 இடையே எசேக்கியேல் உரைத்தது அப்படியே நடந்தது.நாசிக்களால் நடத்தப்பட்ட ஹோலோகோஸ்ட (Holocaust) எனப்படும் யூதப்படுகொலையின் போது ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது யாருமே யூதர்கள் இப்படி மீண்டும் புத்துயிர் பெற்று வருவார்கள் என நம்பவில்லை. இப்படி உலர்ந்து போன எலும்புகள் மீண்டும் உயிர் பெற்று வந்தது முழுக்க முழுக்க தெய்வச்செயலே.
எசேக்கியேல் 37
10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
11. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
12. ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.
13. என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
14. என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.


3.ஒரே நாளில் இஸ்ரேல் தேசம் உருவாகும் என ஏசாயா தீர்க்கதரிசி கிமு 701-681 வாக்கில் உரைத்தது 1948 மே-14ல் நிறைவேறியது.
ஏசாயா 66
7. பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
8. இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.


4.யூதா,இஸ்ரேல் என முன்பு இராஜாக்கள் காலத்தில் இரண்டாக பிரிந்திருந்த தேசங்கள் ஒருங்கிணைந்து ஒரே தேசமாகும் என எசேக்கியேல் கிமு593-571-களில் முன்னுரைத்திருந்தார். அது அப்படியே நிறைவேறியது.
எசேக்கியேல் 37
21. நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,
22. அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.


5.பல தேசங்களிலிருந்து யூதர்கள் திரும்பி தங்கள் சொந்த தேசத்துக்கு வருவார்கள் என எரேமியா கிமு626-586 வருடங்களுக்கு இடையே உரைத்தது அப்படியே நடந்தது.
எரேமியா 16
14. ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,
15. இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அதையே எசேக்கியேலும் 593-571 BC வாக்கில் தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார்.
எசேக்கியேல் 34
13. அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின் மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.


6.இஸ்ரேல் தேசத்தை தேவன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக் காப்பார் என எரேமியா முன்னுரைத்தது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது. சூழ்ந்திருக்கும் எல்லா தேசங்களும் அதற்கு எதிராக பல முறைவந்தும் அந்த சிறிய தேசத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆமேன். கர்த்தர் காக்கின்றார்.
எரேமியா 31
10. ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்


7.மீண்டும் இஸ்ரேல் தேசத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என ஏறத்தாழ கிமு 1400 -ல் எழுதப்பட்டது.அப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வறண்ட நிலமாக கிடந்த இந்நிலத்திலிருந்து பல நாடுகளுக்கும் இப்போது பல்வேறு பொருட்களும், தொழில்நுடபங்களும் ஏற்றுமதியாக்கிக்கொண்டிருக்கின்றது.
உபாகமம் 30
3. உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.
4. உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
5. உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.


இஸ்ரேலின் தேவன் இன்னும் ஜீவிக்கின்றார் என்பதற்கு இன்றைய இஸ்ரேல் தேசமே சாட்சி.

Wednesday, September 21, 2011

இஸ்ரவேலின் பேர் இனி...

கடந்த வருடம் ஏப்ரலில் பாலஸ்தீன பிரதமர் சலாம் பாயத் “கடவுளுக்கு சித்தமானால் அடுத்த வருடம் நாமெல்லாரும் பாலஸ்தீனத்தின் தலைநகரமாம் கிழக்கு ஜெருசலத்தில் தொழுகைக்காக ஒன்று கூடுவோம்” என அறைகூவல் விடுத்திருந்தார்.அவரது இந்த முழக்கம் உண்மையாவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிய தொடங்கிவிட்டன.இஸ்ரேல் நாடானது இரண்டாக பிரிக்கப்பட்டு பாலஸ்தீனம் உருவாகி, அதன் தலைநகரமாம் எருசலேமும் இரண்டாக்க பிரிக்கப்பட்டு கிழக்கு எருசலேமை பாலஸ்தீனாவுக்கு கொடுக்க உலகம் முழுவதிலிருமிருந்து இஸ்ரேலுக்கு அதிக பிரஷர். இது பற்றிய வாக்கெடுப்பு ஐநா சபையில் வரும் நாட்களில் நடக்கவிருக்கிறது.

வேதாகமம் இது பற்றி என்ன கூறுகிறது.
லூக்கா 24:21 புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
வெளி 11:2 ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
யோவேல் 3:2 என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,..அங்கே அவர்களோடு வழக்காடுவேன்.

எகிப்துக்கான ஈரானிய தூதர் மொஜ்டபா அமானி ஒரு அரேபிய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஐநாவில் அங்கத்தினராகும் பாலஸ்தீனம் இஸ்ரேலின் அழிவுக்கான ஒரு படிக்கட்டு என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இப்படி சங்கீதம் 83:4 வசனமும் நிறைவேறுகிறது. “அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.”

இஸ்ரேலுக்காக ஜெபிப்பீர்களா?

ரோமர் 10:1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.

PA Prime Minister Salam Fayyad: Next year J'lem will be our capital
"Next year, Inshallah (God willing), we shall celebrate in the Church of the Holy Sepulchre in east Jerusalem, the capital of the Palestinian state,"

Iranian Ambassador: U.N. Vote On Palestinian Statehood Is a ‘Step Towards Wiping Out Israel’
Mojtaba Amani, Iran’s ambassador to Egypt, openly conceded in an interview with Al-Watan al-Arabi, that the PA’s push for full membership as a UN member state “is a step towards wiping out Israel,“

Monday, September 19, 2011

செப்டம்பர் 28-க்கு பின்

இந்த செப்டம்பர் மாதம் குறித்து பல்வேறு செய்திகளும் ஊகங்களும் கிறிஸ்தவ உலகில் உலாவருகின்றன. அவற்றை இங்கே நாம் தொகுத்து கொடுக்க முயற்சித்துள்ளோம்.

1.வரும் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாட்டு சபையில் (UN) இஸ்ரேல் தேசத்தையும் எருசலேம் நகரத்தையும் இரண்டாக பிரிப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட முயற்சிக்கப்படுகின்றன. இஸ்ரேலிலிருந்து புதிதாக பாலஸ்தீன தேசத்தை உருவாக்க முயற்சி இது. புதிய தேசத்துக்கான கொடிகள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றன. என்ன நடக்கும்? இது சகரியா 12-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள விளைவுகளை உண்டாக்கும்.

2.எகிப்து தேசத்தில் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் இஸ்ரேலுக்கு எதிரான இன்னொரு பெரிய எதிரியை தெற்கில் உருவாக்கும்.(வடக்கில் ஏற்கனவே துருக்கி இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்துள்ளது).

3.பூமிக்கும் சூரியனுக்கும் இடையே “Comet Elenin" எனும் கோள் வருவதாகவும் இதனால் மூன்று நாட்கள் வரைக்கும் பூமியின் சில இடங்களில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் என்றும் செய்திகள் பரவியுள்ளன. இது செப்டம்பர் 28 வாக்கில் சம்பவிக்குமாம். காமெட் எலனின் வருவது உண்மைதானெனினும் மூன்று நாட்கள் காரிருள் என்பது இதுவரை உறுதிபடாத செய்தியாகும்.

4.இதில் இன்னொரு சுவாரசியம் செப்டம்பர் 28-ல் யூதர்களின் புதிய ஆண்டு தொடங்கவிருக்கிறது.இதனை ரோஷ் ஹஷன்னா (Rosh Hashanah) என்பார்கள். அதாவது வேதத்தில் இது யூதர்களின் ஐந்தாவது பண்டிகையான “எக்காளப் பண்டிகை” என குறிப்பிடப்படுகிறது. இந்த எக்காளம் ஊதும் சமயம் யாராலுமே முன்னறிவிக்க முடியாதாம். பூரண சந்திரனின் தோற்றத்துக்கு ஏற்ப அது மாறுபடுமாம்.(மேலே மூன்று நாள் காரிருள் நினைவில் கொள்க). அது போலவே முன்னறிவிக்க முடியாத கிறிஸ்துவின் இரகசிய வருகையும் இருக்கும் என்பது சிலரின் யூகம்.

5.ஏஞ்சல் டிவி புகழ் சகோ சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் தனக்கு ஆண்டவர் வெளிப்படுத்திய செய்தியாக செப்டம்பர் 28-ல் Church is going to enter into a new season - era என்கிறார். இது குறித்ததான அவரது செய்தியை ஆங்கிலத்தில் கீழே நீங்கள் mp3 டவுண்லோடு செய்துகொள்ள்லாம். செப்டம்பர் 28-ல் சபைகளுக்கான ஒரு புது/இறுதி யுகம் ஆரம்பிப்பதாகவும் இந்த புது யுகத்தில் இப்போது போல் விசேசித்த ஊழியர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் தீர்க்கதரிசனங்கள் சொல்வார்கள் எல்லோரும் தரிசனங்களையும் சொப்பனங்களையும் காண்பார்கள். இயேசுவின் சீசர்கள் காலத்தில் நடந்தது போல மனிதர்கள் பிரத்தட்சியமாக தேவதூதர்களை காண்பார்கள். அது மிக சாதாரண விசயமாக கருதப்படும். அற்புதங்கள், அதிசயங்கள் பயங்கரமாக நடக்கும். மரித்தோர்கள் உயிர்த்தெழுவார்கள். சபை முற்றிலும் மாறுபட்ட இன்னொரு லெலலுக்கு போய்விடும் என்கிறார்.
காத்திருப்போம்.

Download here

[mp3] A New Season_(Part 1)_Sadhu Sundar Selvaraj.mp3 0 days old


[mp3] A New Season_(Part 2)_Sadhu Sundar Selvaraj.mp3 0 days old

Wednesday, September 14, 2011

”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம் டவுன்லோட்

Title : விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு (தமிழில்)
Author : முனைவர் மு.தெய்வநாயகம்.

Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu -(in Tamil) Comparative Study of the Bible, Thirukkural and Saiva Siddhanta)

For the first time, the contributions of St. Thomas, who worked in India, to the Indian religions have been identified from the Dravidian point of view and the author establishes that Thirukkural is the first Christian ethical book in Tamil and that Saivism and Vaishnavism have evolved in Tamilnadu out of the ethics of Thirukkural.

Ph. D. Thesis by Dr.M.Deivanayagam
University of Madras-1985
The International Movement on the Soulogy of Tamils,
Dravidian Religion Trust,
278-Konnur High Road,
Ayanavaram Post,
Chennai 600023
Phone: 91-44-26743842
Email: tamilarsamayam2010@gmail.com
http://thamilarsamayam.wordpress.com

விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu in Tamil pdf book download link

Monday, September 12, 2011

செப்.11 கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2).என்ன அருமையான வேதவசனம். Our God is in control என்பதை நிரூபிக்கும் வகையில் தினம் தினம் ஆயிரம் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.நாம் விசுவாசத்தில் உறுதிபெற இங்கே அவற்றை அடிக்கடி கூற நாம் விழைகின்றோம். நேற்றைய தினம் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட தினத்தின் 10 ஆவது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் நாடு முழுவதுமிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் Ground Zero எனப்படும் அந்த குறிப்பிட்ட இடத்துக்கு வந்து தாங்கள் இழந்த தங்களுக்கு பிரியமானவர்களை நினைகூர்ந்தார்கள்.ஆகிலும் இங்கு எந்த விதமான ஆன்மீக சம்பந்தமான காரியங்களும் பிரயர்களும் நடக்கக்கூடாது என்பதில் மேயர் புளூம்பெர்க் என்பவர் மிகவும் கண்டிப்பாக இருந்தார்.எத்தனையோ வேண்டுகோள்களும் விண்ணப்பங்களும் பொதுமக்கள் விடுத்தும் கூட ”கூடவே கூடாது”வென சகலருக்கும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இதனால் அங்கு நடைபெற்ற விசேச நிகழ்ச்சியில் பங்குபெற எந்த ஒரு கிறிஸ்தவ ஊழியருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. மக்களின் ஆறுதலுக்காக நாலுவார்த்தை பேசவோ ஜெபிக்கவோ யாருமே அங்கு இல்லை.ஆனால் கர்த்தரோ இன்னொரு வகையில் தன் நாமத்தை அங்கே பிரஸ்தாபப்படுத்தினார்.அதை நியூயார்க் நகர மேயரோ அல்லது நியூயார்க் மாகாண கவர்னரோ தடைசெய்ய இயலவில்லை. ஏனென்றால் அதை செய்தது சாட்சாத் அமெரிக்க அதிபரே ஆவார்.யார் தடை செய்யக் கூடும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா மேடையேறி வழக்கமான தனது உரையை நிகழ்த்தாமல் வேதாகமத்தில் சங்கீதம் 46-ஐ எடுத்து வாசிக்கத்தொடங்கினார். ”தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்.” இவ்வாறாக வாசிக்க தொடங்கி முழு சங்கீதத்தையும் வாசித்து முடித்தார். ”யாக்கோபின் தேவன்” அங்கு அமெரிக்க அதிபராலேயே மகிமைப்படுத்தப்பட்டார். ஜனங்கள் இவ்வசனங்களை கேட்டு ஆறுதலும் தேறுதலும் அடைந்தார்கள்.கர்த்தருக்கே மகிமை. “Amazing Grace” பாடல் மூன்று இடங்களிலுமே பாடப்பட்டது.முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானி பிரசங்கியின் புத்தகம் மூன்றாம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களை வாசித்து பின் “நாம் இழந்த ஒவ்வொரு ஆத்துமாக்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. அவர்களை நாம் பரலோகத்தில் மீண்டும் சந்திக்க உதவுவாராக.நம் தேசத்தை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக." என உரையாற்றினார். கர்த்தருக்கு விரோதமாக பேசிய எழும்பிய சக்திகள் அங்கே முடக்கப்பட்டது. கர்த்தரே வெற்றி சிறந்தார். அவர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடைபடாது அன்றோ?

மேலே நாம் சொன்ன நியூயார்க் நகர மேயர் புளூம்பர்க் ஒரு யூதராவார்.அவரும் மேடையில் பேசினார்.அவர் பேச மேற்கோள் தேடியது பைபிளில் அல்ல. சேக்ஸ்பியரில்.அந்தோ பரிதாபம்.

Thursday, September 01, 2011

நீ சொல்லுவதும் தேவன் சொல்லுவதும்