Thursday, June 10, 2021

மோசே பாலம்.நெதர்லாந்து.

 மோசே பாலம்.நெதர்லாந்து.



இஸ்ரேல் பேரீச்ச மரம்.

 இஸ்ரேல் பேரீச்ச மரம்.



சிலர் பொறாமையினாலும்......

 சிலர் பொறாமையினாலும்......



ஆகாய மார்க்கமாக வந்த‌ யூதர்கள்.

 ஆகாய மார்க்கமாக யூதர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு பல நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்படுவார்களென்று

ஆண்டவர் முன்னுரைத்திருக்கிறார்.
முன்னுரைப்பு:
ஏசாயா 60:8 (கிமு 698)
"மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?"


ரஷ்யாவிலிருந்து இஸ்ரேல் வந்த ‘யூதர்’களின் கதை

 இஸ்ரேல் ஜனங்கள் திரும்பவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிலே வட தேசங்களாகிய‌ ரஷ்யாவிலிருந்து குடியேற்றப்படுவார்கள் என்ற‌ பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

முன்னுரைப்பு:
எரேமியா 3:18 (கிமு 629)
அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.


Friday, June 04, 2021

இஸ்ரேலின் பழமை.

 


நிலங்கள் வாங்கப்பட்டு இஸ்ரேல் தேசம் உருவாகும் என்ற பைபிள்.

இஸ்ரேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப்பற்றிய தீர்க்கதரிசன நிறைவேறுதல். எரேமியா 32 :43,44 (கிமு 590)

மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக் கொடுக்கப்பட்டுப் போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்திலே நிலங்கள் 📜கொள்ளப்படும். பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென் திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் ⛳️விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் ✍️ கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சிவைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.


இஸ்ரேல் மனுஷ சஞ்சாரமில்லாமல் பாழாய் கிடக்கும் என்ற பைபிள்.

 இஸ்ரேல் மனுஷ சஞ்சாரமில்லாமல் பாழாய் கிடக்கும், யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்படுவார்கள் என பைபிள் முன்னுரைத்த படி நடந்தது. லேவியராகமம் 26:31-33 (கிமு 1491)

நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன். நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்.
ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.




எத்தியோப்பிய யூதர் இஸ்ரேல் திரும்புதல் பைபிள் நிறைவேறல்.

எத்தியோப்பியாவிலிருந்து யூதர்கள் இஸ்ரேல் திரும்புவார்கள் என்ற பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்.ஏசாயா 11:11,12 (கிமு 713)

அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி, ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.



இந்தியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பும் மனாசேயின் வம்சத்தார்கள்.

இந்தியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பும் பைபிள் கால மனாசேயின் வம்சத்தார்கள். இவர்கள் 2700 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலிலிருந்து சிதறடிக்கப்பட்டு இந்தியா வந்தவர்கள். மீண்டும் இப்போது பைபிள் வாக்கு படி இஸ்ரேல் செல்கிறார்கள். பைபிள் சொல்லுகிறது "இதோ, நான் அவர்களை அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன். இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார்". எரேமியா 31:8,10



வெளியேறும் கடைசி யூதர்.

 பைபிளில் முன்குறிப்பிட்டது போல, ஒரு நாட்டின் கடைசி யூதரும் அந்த நாட்டிலிருந்து வெளியேறி இஸ்ரேல் செல்லுகிறார். பைபிள் சொல்லுகிறது "என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்.இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை" ஆமோஸ் 9:9,14 (கிமு 787).