Monday, January 28, 2008

பைபிளும் இவர்களும்

நான் ஒரு வேளை சிறைசாலையில் அடைக்கப்படும் போது,என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரம் கொண்டு போகலாம் எனக் கூறினால், நான் பைபிளை (வேதாகமத்தை) மாத்திரமே தெரிந்தெடுப்பேன் - கோதே (Goethe)

வேதாகமம் ஒரு பழமையான புத்தகமோ, அல்லது புதுமையான புத்தகமோ அல்ல. அது நித்திய நித்திய காலமாக உள்ள ஓர் அழிவற்ற நூலாகும்- மார்ட்டின் லுத்தர் (Martin Luther)

ஒரு சிறு பிள்ளையின் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு இவ்வுலக ஞானிகளின் அறிவைப் பரிகாசம் செய்யும் ஓர் புத்தகமே வேதாகமம்.- பேராசிரியர் பீட்டெக்ஸ்

நூறு முறை வேதாகமத்தை வாசித்து முடித்த பின் ஸ்பர்ஜன் (Charles Haddon Spurgeon) கூறினார், "நான் நூறாவது முறை வேதத்தை வாசித்தபோது, முதல்முறை வாசித்ததை விட அதை மிகவும் அழகுள்ளதாகக் கண்டேன்."

உலக புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதிய ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) தனது மரணப்படுக்கையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது தனது மூத்த மகனிடம், "அந்தப் புத்தகத்தை எனக்குத் தா" என்றாராம்.மகன் அவரிடம், "எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்?"என்று கேட்டார். அப்பொழுது ஸ்காட் பதிலுரைத்தார், "இவ்வுலகில் 'புத்தகம்'என அழைக்கப்படக்கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே".

பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin) இவ்வாறாக கூறினார்."A Bible and a newspaper in every house, a good school in every district--all studied and appreciated as they merit--are the principal support of virtue, morality and civil liberty."

நம் தேச தந்தை மகாத்மா காந்தி இவ்வாறாக கூறினார்."The Bible is as much a book of religion with me as the Gita and the Koran."
- "Mahatma" Mohandas Karamchand Gandhi,in The Words of Gandhi by Richard Attenborough

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment