Friday, May 24, 2013

காற்றின்வழி

என்ன‌வெல்லாமோ தொழில்நுட்ப‌ங்க‌ள் வ‌ந்திருக்கிற‌தென்று சொல்லுகிறார்க‌ள். ஆனால் இந்த‌ காற்று போகும் பாதையை முன்கூட்டியே க‌ண்ட‌றிந்து அங்கிருக்கும் ம‌க்க‌ளை வெளியேற்றுகிறார்க‌ளா பாருங்க‌ள்? இத‌ற்கிடையே "க‌ட‌வுள் துக‌ளை" க‌ண்டுபிடிக்க‌ப்போகிறார்க‌ளாம். வேதாக‌ம‌ம் என்ன‌ சொல்லுகிற‌து."காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது." (யோவான்:3:8)என்கிற‌து. மேலும் "காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது...இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்" (பிர‌ச‌ங்கி:11:5) என்கிறது வேத‌ம்.காற்றின் வ‌ழிக‌ளை க‌ண்டுபிடிக்க‌ முடியாது தான் போலிருக்கிற‌து.