Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

Friday, January 27, 2023

"ஆதியிலே தேவன்" தபால் தலை.

 "In the beginning God" - Postal stamp.



Sunday, November 13, 2022

பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.

 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். சங்கீதம் 139:14



Thursday, January 21, 2021

அதிக ஞானத்திலே அதிக சலிப்புணடு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.

அதிக ஞானத்திலே அதிக சலிப்புணடு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன். பிரசங்கி 1:18 . Good to be innocent. More knowlwdge more stress.



Thursday, August 01, 2019

விரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு

விரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு

October 19, 2016
விரதம், உபவாசம் மற்றும் நோன்பு என்று பல மதத்தினராலும் அழைக்கப்படும் உண்ணாவிரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு மிகவும் நல்லது என்று இவ்வாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யோஷினோரி ஒசுமி தெரிவித்துள்ளார்.
autophagy
பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத்தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும் , ஆட்டோஃபஜி. என்றழைக்கப்படும் ‘ சுய துப்பரவு’ செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆட்டோஃபஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பொருள். இச்செயல் மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. இதன்மூலம்தான் நம் உடற்செல்கள் மறுசுழற்சி செய்துகொள்கின்றன.
நமது உடல் உணவை தவிர்த்து விரதம் இருக்கும் காலங்களில் ஆட்டோஃபஜி எனப்படும் இச்சுழற்சி தீவிரமடைவதால் நமது உடல் நன்கு சுத்தமடைகிறது. எனவே அவ்வப்போது விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்ற நமது முன்னோர்களின் கூற்றை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஆட்டோஃபஜி நாம் சீக்கிரமே முதுமை அடைவதிலிருந்து நம்மை காக்கிறது. உடலில் புது செல்கள் உருவாக்கப்பட்டு பழுதடைந்த செல்களும், சேதமடைந்த புரோட்டீனும் வெளியே தள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆட்டோஃபஜி நமது உடல் நலத்தை நன்கு பேணி காக்கிறது.

Tuesday, May 01, 2018

மேகம் சுமக்கும் தண்ணீர் - பைபிளில் விஞ்ஞானம்


Friday, April 27, 2018

மழை உருவாகும் விஞ்ஞானம் வேதாகமத்தில்


Thursday, April 19, 2018

அணுஆயுதத்தை முன்னுரைத்த வேதாகமம்


Wednesday, April 18, 2018

வாரத்துக்கு ஏழுநாட்கள் என வகுத்தது வேதாகமம்


Monday, April 16, 2018

ஸ்மார்ட் துப்பாக்கி குண்டுகள் பற்றி வேதாகமம்

Smart bullets

"வானிலை முன்னறிவிப்பு" குறித்து வேதாகமத்தில்

Weather prediction in the bible.

பிராணவாயு நாசியில் ஊதி நமக்கு பிராணன் தந்தவர்

Oxygen base for life

இன்றைய கனரக எந்திரங்கள் குறித்து அன்றே கூறிய பைபிள்

About heavy construction vehicles bible.

Thursday, April 12, 2018

நம் சரீர திசுக்களை ஒருங்கிணைக்கும் சிலுவை வடிவ மூலக்கூறு


Wednesday, November 19, 2014

பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்

உங்களுக்கு ஒன்று தெரியுமோ?

நிலவில் ஒரு பகல் பொழுது 
327 மணிநேரங்கள் நீட்டிக்குமாம்.
அடுத்து தூங்கப்போனாலும் 
327 மணிநேரங்கள் தொடர்ச்சியாக‌ தூங்க வேண்டுமாம்.
என்னவாவது.

ஆனால்
புவியில் இறைவன் அருமையாக தந்திருக்கின்றான்.
8 மணி நேரம் தூங்க
8 மணிநேரம் உழைக்க
8 மணிநேரம் களிக்க என
24 மணிநேரங்கள்.
இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே
இறைவனின் கைவண்ணமும் அவன் மாட்சியும்.

மனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை
அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என
அக்கரை அக்கரையாக
பார்த்து பார்த்து படைக்கப்பட்டது தான் இப்பூமி.
அது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது.

அதனாலேயே வேதம் சொல்லுகிறது
வானங்கள் கர்த்தருடையவைகள்;
பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று.
சங்கீதம்:115:16

நன்றி தகப்பனே!
நீர் தந்த இந்த அழகிய பூமிக்காக‌!!

Saturday, September 20, 2014

கொள்ளவும் விற்கவும் ‍வலதுகைகளிலும் நெற்றிகளிலும்

ஐபோன் 6 ல் முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும். இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் தெரிவித்தார். மணிபர்சுகளையே இல்லாமல் செய்வதே அவர் குறிக்கோளாம். கரன்சிகளே இல்லாமல் போனது. இப்போது கிரெடிட் டெபிட் கார்டுகளும் இல்லாமல் போகிறது. சீக்கிரம் முத்திரை மட்டுமே போதும் வாங்கவும் விற்கவும் என்றாகிவிடும். வேதாகமம் சொல்லுகிறது "முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது" வெளி:13:17. கடைசிகாலத்தில் இருக்கிறோம் நண்பர்களே. சிலர் கிண்டலாக ஐபோன் 666 என சொல்வதின் அர்த்தம் புரிகிறதா? "Our vision is to replace the wallet" said Apple CEO Tim Cook.  Yes,he is right on track. Bible says, at one time of a age "No one could buy or sell anything without that mark".Revelation:13:17 That too is coming soon. Friends please read the bible to know what is coming.

Thursday, August 14, 2014

தப்பிய‌ பூமி - இம்மட்டும் வா, மிஞ்சி வராதே

ஒரு மயிரிழையில் தப்பிய‌து பூமி என இப்போது சொல்லுகிறார்கள். 2012‍ல் உண்டான சூரியப்புயல் கொஞ்சம் அவசரப்பட்டு ஒரு வாரம் முன்பே மட்டும் நடந்திருந்தால் பூமியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்து போயிருக்கும் என்கிறார்கள். எலக்ட்ரானிக் கருவிகளெல்லாம் கருகிப்போயிருக்குமாம். இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என கட்டளையிடுவது நம் கர்த்தரன்றோ?. காலத்துக்கு முன்னே ஒன்றும் நடக்காது. எல்லாம் அதின் அதின் காலத்திலே நேர்த்தியாக நடக்கும். ஏனெனில் பூமி உண்டானதல்ல. உண்டாக்கப்பட்டது. இங்கு உண்டாக்கினவர் அறியாமல் ஒரு அணுவும் அசையாது.(யோபு 38:11)

Tuesday, June 10, 2014

அந்தரங்கத்தில் தொங்கும் பூமி

20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நன்கறியப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான 'பெர்ட்ரான்ட் ரஸ்ஸெல்' என்பவர் பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போது பூமி சூரியனைச் சுற்றி வருகிறதெனவும் சூரியன் அது அமைந்துள்ள பால்வெளி அண்டத்தின் மையத்தை அதிலுள்ள ஏனைய பல மில்லியன் நட்சத்திரங்களுடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் விளக்கினார். இவர் தனது விரிவுரையை முடித்த போது கூட்டத்தின் ஒரு மூலையில் இருந்த பெண்மணி ஒருவர் எழும்பி பின்வருமாறு கூறினார். 'நீங்கள் இதுவரை சொன்னதெல்லாம் வெறும் குப்பை. உண்மை என்னவெனில் உலகம் ஒரு மிகப் பெரிய ஆமையின் ஓட்டில் அமைந்துள்ள ஒரு வட்டமான தட்டு.'விஞ்ஞானி உடனே அந்தப் பெண்மணியைப் பார்த்து விநோதமாகப் புன்னகைத்த பின் ஒரு கேள்வியை எழுப்பினார். 'நீங்கள் கூறும் ஆமை எதன்மேல் அமர்ந்துள்ளது?' அந்தப் பெண்மணி ஒரு கணம் திகைத்துப் போய் விட்டார். மேலும் விஞ்ஞானியைப் பார்த்து நீங்கள் மிகவும் புத்திசாலி என்று வாழ்த்தினார். இப்படி பூமியின் அமைப்பு குறித்து தவறான‌ பல்வேறு மூடநம்பிக்கைகள் முன்பு உலக முழுவதும் இருந்தன. ஆனால் வேதாகமம் 3500 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது 
தேவன் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார் என்று (யோபு 26:7).
He stretches out the north over empty space And hangs the earth on nothing. Job 26:7

Thursday, June 05, 2014

எத்தனை நட்சத்திரங்கள்?

வெறும் கண்ணால் நமக்கு பார்க்கத் தெரியும் நட்சத்திரங்கள் 9,000
அதுவே நல்லதொரு பைனாகுலரால் பார்வையிட்டால் 200,000
கொஞ்சம் ரிஸ்க் எடுத்து டெலஸ்கோப் வாங்கி நோக்கினால் 15,000,000 (15 மில்லியன்)
பெரிய வான்வெளி ஆய்வுகூடங்களில் போய் ஆய்ந்து நோக்கினால் இதன் எண்ணிக்கை பில்லியன்கள் போகும்.
உண்மையிலேயே எத்தனை நட்சத்திரங்கள் உள்ளதாம்?
நாம் இருக்கும் பால்வெளியில் மட்டும் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளனவாம்.
இது போல எத்தனை பால்வெளிகள் உள்ளனவாம்?
170 பில்லியன் பால்வெளிகள்.
அப்போ எல்லா பால்வெளிகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளனவாம்?
24 செப்டில்லியன்கள் என்கிறார்கள்.
அதாவது 1000000000000000000000000 நட்சத்திரங்கள்.
இதெல்லாம் நம் மூளைக்கு எட்டியவரையே.
ஆனால் உண்மையில் நாம் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை எண்ணியே முடியாது என முடிக்கிறார்கள்.
வேதாகம‌ம் சொல்லுகிறது கர்த்தர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார் என்று (சங்கீதம் 147:4).
என்ன மகத்துவமான தேவன் அவர்.
http://www.universetoday.com/102630/how-many-stars-are-there-in-the-universe/

Thursday, May 29, 2014

அயர்ந்த நித்திரை - அறுவை சிகிட்சை

விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சன் முதன்முதலில் குளோரோபாமை கண்டுபிடித்தபோது பிரசவ வலியை தடுக்க நாம் இதை மயக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையை வைத்தார்.அப்போது அக்கால மத‌போதகர்கள் இல்லை இல்லை இது இயற்கைக்கு எதிரானது பிரசவ வலியை தடுத்தல் வேதாகமத்துக்கு எதிரானது என்றனர். விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சனோ உடனே ஆதியாகமம் 2:21‍‍ ஐ எடுத்துக் காட்டி கர்த்தர் ஆதாமுக்கு "அயர்ந்த நித்திரையை" வரப்பண்ணி அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து கர்த்தர் ஏவாளை உருவாக்கினதை சுட்டிக்காண்பித்தார்.கடவுள் ஆதாமை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். இது இப்படியிருக்க ஏவாளோ கடவுளால் வேறு விதமாக உண்டாக்கப்பட்டாள். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என எண்ணிய கடவுள் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அப்போது அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.கடவுள் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
ஆமேன்.
முதல் மயக்கமருந்து நிபுணரும் நம் கர்த்தரே!
முதல் அறுவை சிகிட்சை நிபுணரும் நம் கர்த்தரே!!