Showing posts with label Genesis. Show all posts
Showing posts with label Genesis. Show all posts

Friday, January 27, 2023

அது ஒரு இனிய கனா காலம்.

 ஆரம்ப காலங்களில் சகல‌ மிருகங்களும், பறவைகளும் மனிதர்களோடு ஒன்றியே இருந்துள்ளன. எந்த மிருகமும் பறவையும் மனிதர்களை கண்டு பயந்தோடியதில்லை. இதெல்லாம் ஆதியாகமத்தின் ஒரு வசனத்திலிருந்து எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அது எந்த வசனம் சொல்ல முடியுமா ? பதில் கீழே.

ஆதியாகமம் 9 : 2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

"ஆதியிலே தேவன்" தபால் தலை.

 "In the beginning God" - Postal stamp.



Saturday, November 19, 2022

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்.

 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். ஆதியாகமம் 6:4



ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம்.

 

ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம் இந்த “ஒரே” எல்லாம் யெகோவா தேவனுக்கு பிடிக்காத விஷயம். மனிதர்கள் இப்படி ஒன்று கூடும் போதெல்லாம் உற்றுபார்க்க வந்துவிடுகிறார் இறைவன் (ஆதியாகமம் 11). ஆபத்து மக்களே. இதுவும் "புதிய உலக ஒழுங்கு - NWO New World Order"க்கு இட்டுசெல்லும் பாதையே.

Sunday, November 13, 2022

நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

 "நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள்" (ஆதியாகமம் 9:7) என்பதே இந்த பூமியை படைத்தவரின் விருப்பம். பூமியின் மக்கள் தொகையை பல்வேறு விதங்களில் குறைக்க திட்டமிடும் "புதிய உலக ஒழுங்கு -New World Order" எல்லாம் இறைவனின் விருப்பத்துக்கு எதிரானவையே. New world order likes to "Maintain humanity under 500,000,000 in perpetual balance with nature.".


Saturday, September 25, 2021

துருக்கியில் நோவாவின் பேழை கண்டுபிடிக்கபட்ட இடம்.

 துருக்கியில் நோவாவின் பேழை கண்டுபிடிக்கபட்ட இடம்.



ஆதியாகமம் ஆபிரகாம் கால ஒட்டகங்கள்.

ஆதியாகமம் ஆபிரகாம் காலத்திலேயே ஒட்டகங்கள் வீட்டு உபயோகத்தில் இருந்திருக்கின்றன.ஆபிரகாமின் வாரிசான இஸ்மவேலும், இஸ்மவேலின் தாயான ஆகாரும் அவர் சந்ததிகளும் குடியேறிய இடம் இன்னாள் சவுதி அரேபியா.

https://www.bbc.com/tamil/global-58577309



நவீன‌ விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள் கால‌ சோதோம் கொமாரோ நகர அழிவு

மீண்டும் நவீன‌ விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது பைபிள். சோதோம் கொமாரோ நகர அழிவுக்கு ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணிலிருந்து வீழ்ந்த அக்கினி காரணம். பல நூறு அணு குண்டுகளுக்கு சமானமான அழிவு நிரூபணம். 2000 டிகிரி செல்சியஸ் வரையான‌ வெப்பம் பதிவான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு. மீண்டும் பைபிள் சம்பவங்கள் உண்மை என நிரூபணம் ஆகிறது. https://www.nature.com/articles/s41598-021-97778-3



Thursday, April 19, 2018

வாரத்துக்கு ஒருநாள் லீவு விட‌ சொன்னதும் நம்ம பரிசுத்த வேதாகமம் தான்


Wednesday, April 18, 2018

வாரத்துக்கு ஏழுநாட்கள் என வகுத்தது வேதாகமம்


Monday, April 16, 2018

பிராணவாயு நாசியில் ஊதி நமக்கு பிராணன் தந்தவர்

Oxygen base for life

Thursday, April 12, 2018

நம் சரீர திசுக்களை ஒருங்கிணைக்கும் சிலுவை வடிவ மூலக்கூறு


Wednesday, November 19, 2014

பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்

உங்களுக்கு ஒன்று தெரியுமோ?

நிலவில் ஒரு பகல் பொழுது 
327 மணிநேரங்கள் நீட்டிக்குமாம்.
அடுத்து தூங்கப்போனாலும் 
327 மணிநேரங்கள் தொடர்ச்சியாக‌ தூங்க வேண்டுமாம்.
என்னவாவது.

ஆனால்
புவியில் இறைவன் அருமையாக தந்திருக்கின்றான்.
8 மணி நேரம் தூங்க
8 மணிநேரம் உழைக்க
8 மணிநேரம் களிக்க என
24 மணிநேரங்கள்.
இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே
இறைவனின் கைவண்ணமும் அவன் மாட்சியும்.

மனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை
அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என
அக்கரை அக்கரையாக
பார்த்து பார்த்து படைக்கப்பட்டது தான் இப்பூமி.
அது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது.

அதனாலேயே வேதம் சொல்லுகிறது
வானங்கள் கர்த்தருடையவைகள்;
பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று.
சங்கீதம்:115:16

நன்றி தகப்பனே!
நீர் தந்த இந்த அழகிய பூமிக்காக‌!!

Thursday, May 29, 2014

அயர்ந்த நித்திரை - அறுவை சிகிட்சை

விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சன் முதன்முதலில் குளோரோபாமை கண்டுபிடித்தபோது பிரசவ வலியை தடுக்க நாம் இதை மயக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையை வைத்தார்.அப்போது அக்கால மத‌போதகர்கள் இல்லை இல்லை இது இயற்கைக்கு எதிரானது பிரசவ வலியை தடுத்தல் வேதாகமத்துக்கு எதிரானது என்றனர். விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சனோ உடனே ஆதியாகமம் 2:21‍‍ ஐ எடுத்துக் காட்டி கர்த்தர் ஆதாமுக்கு "அயர்ந்த நித்திரையை" வரப்பண்ணி அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து கர்த்தர் ஏவாளை உருவாக்கினதை சுட்டிக்காண்பித்தார்.கடவுள் ஆதாமை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். இது இப்படியிருக்க ஏவாளோ கடவுளால் வேறு விதமாக உண்டாக்கப்பட்டாள். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என எண்ணிய கடவுள் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அப்போது அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.கடவுள் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
ஆமேன்.
முதல் மயக்கமருந்து நிபுணரும் நம் கர்த்தரே!
முதல் அறுவை சிகிட்சை நிபுணரும் நம் கர்த்தரே!!

Tuesday, November 19, 2013

ஏதேனைச் சேர்ந்த மனித குலம்


பூமியில் வேறெந்த உயிரினங்களுக்கும் இல்லாத, ஆனால் மனிதன் மட்டுமே படும் சில அவஸ்தைகளை, வேதனைகளை சுட்டிகாட்டி ஒரு விஞ்ஞானி ஒரு வேளை மனிதன் இந்த பூமியைச் சேர்ந்தவன் அல்ல, அவன் வேறெங்காவதிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற‌ முடிவுக்கு வந்திருக்கின்றார். கடுமையான‌ பிரசவ வேதனை பூமியில் மனிதன் மட்டுமே படும் வேதனைகளில் ஒன்று. வேறெந்த உயிரினங்களிலும் இல்லாதது. அது போலவே சூரிய வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத மென்மையான‌ தோல், முதுகு வலி இப்படியாகப் பல. 

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த வேதனைகளெல்லாம் கடவுள் ஆரம்பத்தில் மனிதனுக்காக படைத்த‌ ஏதேன் தோட்டத்தில் இருந்ததில்லை. எப்போது மனிதன் பாவம் செய்து ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டானோ அப்போது வந்தவைகள் தான் இந்த வலிகளும் வேதனைகளும். ஆதியாகமம் 3:16 சொல்லுகிறது கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியா யிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்று.இப்படியாக பிரசவ வேதனை வந்தது.அது போலவே சும்மா சொகுசாக‌ இருந்து சாப்பிட்ட ஆதாம் பாவம் செய்த பின் "நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்" என்ற சாபம் வந்தது. முதுகு வலியும் கூடவே வந்தது. சரியாய் தான் சொன்னார் இந்த விஞ்ஞானி. நாம் பூமியில் வாழ‌ படைக்கப்பட்டவர்களல்ல.ஏதேன் தோட்டத்தில் வாழவே படைக்கப்பட்டோம். மனிதன் செய்த‌ பாவத்தால் இந்த பூமி சபிக்கப்பட்டதாயிற்று. மேற்சொன்ன சாபங்களும் வேதனைகளும் வந்தது. இன்னும் சில காலம் தான்.புதிய வானமும் புதிய பூமியும் தோன்றும். மனுஷர்களிடத்திலே நம் தேவன் வாசமாயிருப்பார்.அப்போது மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் எல்லாம் ஒழிந்துபோகும்.எல்லாம் புதிதாகும். ஆமேன். அல்லேலூயா. (வெளி:21:1-4)