Wednesday, June 29, 2011

ஆசீர்வாதம் ஜூலை 2011 பத்திரிகை டவுண்லோட்

உள்ளடக்க கட்டுரைகள்

* எப்படி ஜெபிக்கக்கூடாது?
-R. ஸ்டான்லி

கட்டுரையிலிருந்து சில வரிகள் கீழே. மேலும் படிக்க பத்திரிகையை டவுண்லோடு செய்யவும்.

1. கடவுளைக் கட்டாயப்படுத்தக்கூடாது.

”சில சமயங்களில் பதிலானது “சரி” என்றிருக்கும்; பல தடவைகள் “கிடையாது” என்றிருக்கும்; அடிக்கடி, “காத்திரு” என்றிருக்கும்; இன்னும் பல சமயங்களில் ஆண்டவர் “மவுனம்” சாதித்து விடுவார்! இவைகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை அறிவோர் பாக்கியவான்கள்!”
2. பிசாசைப் பழிசாட்டக்கூடாது.
”நமது தோல்விகளுக்கான தார்மீகப் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ள வேண்டுமென்று திருமறை போதிக்கிறது.”
3. பிதாவானவரை மறந்துவிடக்கூடாது.
”ஆண்டவராகிய இயேசுவை நோக்கி ஜெபிப்பதே இன்று வழக்கமாகிவிட்டது. ஆனால் திருமறை நெடுகவே போதிப்பது அதுவல்ல. எல்லாரும் செய்வது என்ன என்பதைவிட வேதம் போதிப்பது என்ன என்பதே முக்கியம்.”
4. மத்தியஸ்தர்களைத் தேடக்கூடாது.
”இயேசுவை நமக்குக் கொண்டுவந்த மரியாளை ரோமன் கத்தோலிக்கர் வணங்குகிறார்கள்; இயேசுவிடம் நம்மைக் கொண்டுவரும் பிரசங்கிமாரைப் புராட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள் கதாநாயகராய் வணங்குகிறார்கள். இருதிறத்தாரும் முழுக்க முழுக்க மனந்திரும்பி வேதத்திற்குத் திரும்பிவரவேண்டும். ஆண்டவர் “உங்கள்” ஜெபங்களுக்குப் பதில் தராவிட்டால், யாரும் உங்களுக்காய் அவரிடம் சிபாரிசு செய்யமுடியாது! “எந்தப் பிரச்னையானாலும் உடனே எங்களுக்கு எழுதுங்கள்; நாங்கள் உங்களுக்காய் ஜெபிப்போம்!”— இதெல்லாம் மேய்ப்பனின் குரல் அல்ல, அந்நியரின் சத்தம்! (யோ 10:5)”
5. பகையைப் பேணிவைக்கக்கூடாது.
”விசுவாசத்தோடும் மனவுறுதியோடும் ஜெபத்தில் ஆண்டவரைக் கிட்டிச்சேர சுத்த மனச்சாட்சி இன்றியமையாதது (1 யோ 3:20-22).”
6. தன்னலமாய் இருக்கக்கூடாது.
”ஏழை எளியவர், நெருக்கப்பட்டோர், திக்கற்றோர், விதவைகள் போன்றோர்மீது இறைமக்களுக்குக் கரிசனையில்லாதிருக்கும்போது அவர்கள் எவ்வளவுதான் ஜெபித்தாலும் அது ஆண்டவருக்கு உகந்ததல்ல (ஏசா1:15,16). துதிப்பதற்காகத் தங்கள் கைகளை ஆண் டவருக்கு நேராக மக்கள் எளிதாய் உயர்த்திவிடுகிறார்கள்; ஆனால் தங்களது உடைமைகளை இல்லாதோராடு பகிர்ந்து கொள்ளும்படித் தங்கள் கைகளை நீட்டவோ “மறந்து” விடுகிறார்கள் (எபி 13:15,16). இரண்டையுமே தமக்குப் பிரியமான பலிகள் என்றழைக்கிறார்
தேவன்.”
7. உலகச் சிந்தையாய் இருக்கக்கூடாது.
”கர்த்தருடைய ஜெபத்தைக் கவனிப்போம். அதிலுள்ள ஏழு விண்ணப்பங்களில் ஒன்றேயொன்றுதான் உடலுக்கானது: “அன்றன்றுள்ள ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.” இந்த ஜெபத்திலுள்ள முதல் மூன்று விண்ணப்பங்களும் தேவனுடைய காரியங்களுக்கு அடுத்தவை; இறுதியான மூன்றும் நமது “ஆன்மீகத்”தேவைகளுக்கடுத்தவை. இந்த விகிதம் நமது ஜெபத்தில் காக்கப்படவேண்டும். நாமோ நமது பொருளாதார மற்றும் உடல் ரீதியான தேவைகளுக்கே அதிகக் கவனம் செலுத்துகிறோம் என்பதை மறுக்கமுடியாது.”
8. அதிகமாய்ப் பேசக்கூடாது.
”ஜெபத்தில் ஆண்டவருக்குப் பிரசங்கம்பண்ணக் கூடாது! “கர்த்தாவே, சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” என்றான் சின்ன சாமுவேல் (1 சாமு 3:9). நாமோ,“கர்த்தாவே, கேளும்; அடியேன் பேசுகிறேன்” என்கிறோம்.”
9. இயல்பற்ற விதத்தில் செயல்படக்கூடாது.
”ஜெபத்தில் அதிக சத்தம் அதிக வல்லமை என்று தவறாய் எண்ணியுள்ளோம். சொல்லப்போனால், சரக்கு இல்லையென்றால்தான் சத்தம் அதிகமாயிருக்கும்! ஆவியில் ஜெபிப்பதென்றால் கத்தி ஜெபிப்பது என்ற பொய்யை நாம் நம்பி விடக்கூடாது. நாம் “ஆவியோடு” மட்டுமல்ல, “கருத்தோடும்” (உண்மையோடும்) கர்த்தரைத் தொழுதுகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம்.”
10. ஜெபிப்பதைக் குறித்துப் பெருமையடையக்கூடாது.
”ஜெபத்தைப்பற்றி உபதேசிக்கும்போது ஆண்டவர் கொடுத்த முதல் எச்சரிப்பே ஜெபிப்பதைத் தம்பட்டம் அடிக்கக்கூடாது என்பதே (மத் 6:5,6). “ஜெபத்தின் இரகசியமே இரகசிய ஜெபம்தான்” என்றார் ஜெபவீரன் E.M பவுண்ட்ஸ் (1835-1913).”
* ஹென்றி நாட் - நன்றி, பில்கிரிம்ஸ் ஜேர்னல்
* விண்ணொளி முகாம், ஹைதராபாத் 2011 -(சரோஜ், மிஷனரி, வாரங்கல், ஆந்திரா)
* சத்தியத்தின் குரல்! - பெர்சியா கிரேஸ்
* நண்பனா நீ? - டி. ஜெ. ஹிக்கின்ஸ்
* ஆத்துமாதாயம் - உயிர் காப்பான் தோழன்! பாண்டோ பொம்ஜன், நாரி பாப்திஸ்து சபை, அருணாசல் பிரதேசம்

மேலும் படிக்க பத்திரிகையை டவுண்லோடு செய்யவும்
Blessing Tamil Magazine July 2011 PDF Download Link டவுண்லோட் லிங்க்

பிளசிங் புத்தகங்கள்/CD/DVD-க்கள் கிடைக்குமிடம்:
Blessing Literature Centre
21/ 11 West Coovam River Road
Chintadripet, Chennai 600002, India
Tel: 00 91 44 28450411
blc@bym-india.org

Tuesday, June 28, 2011

இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா


  • முஸ்லீம்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதாலும்,அதிக அளவில் நாடு விட்டு நாடு குடிபெயர்வதாலும் அநேக ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய மயமாகி வருகின்றன.
  • பிரான்சில் 20-வயது மற்றும் அதற்கு கீழானவர்களில் 30 சதவீதம் பேர் முஸ்லீம்களாகும்.
  • பாரீசிலும் மார்செலியிலும் 20-வயது மற்றும் அதற்கு கீழானவர்களில் 45 சதவீதம் பேர் முஸ்லீம்களாம்.
  • தெற்கு பிரான்சில் எண்ணிக்கையில் சர்ச்சுகளை விட அதிக அளவில் இஸ்லாமிய மசூதிகளே உள்ளன.
  • பிரான்சில் ஒரு முஸ்லீம் குடும்பத்துக்கு 8.1 குழந்தைகள் வீதம் உள்ளனர்.
  • இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 82,000-யிலிருந்து 2.5 மில்லியன்களாகியுள்ளது.
  • இங்கிலாந்தில் இப்பொழுது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளன. இதில் அநேகம் முன்பு சர்ச்சுகளாக இருந்தவை.
  • பெல்ஜியமில் ஏறத்தாழ 25% மக்கள் இஸ்லாமியர்கள்.
  • பெல்ஜியமில் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் இஸ்லாமியராக பிறக்கின்றன.
  • இதே போன்ற நிலை தான் நெதர்லாந்திலும்.இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் நெதர்லாந்தில் பாதி மக்கள் இஸ்லாமியராக இருப்பர்.
  • ஜெர்மனியில் 4 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம்கள் உள்ளனர்.
  • ரஷ்யாவிலும் இதே கதை தான்.அங்கே ஐந்தில் ஒருவர் முஸ்லீமாக உள்ளார். சராசரியாக ஒரு இஸ்லாமிய குடும்பத்துக்கு 10 குழந்தைகள்.
  • இன்னும் ஐந்தாண்டுகளில் ரஷ்ய ராணுவத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முஸ்லீமாக இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.
  • கடந்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்காவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 9 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • இது 2040-ல் 50 மில்லியனை எட்டவேண்டும் என்பது அமெரிக்க இஸ்லாமியர்களின் விருப்பம்.

லிபிய அதிபர் முகமது கடாபி சொன்னதில் வியப்பேதும் இல்லை.
“கத்தியின்றி,துப்பாக்கியின்றி,ஒரு படையெடுப்புமின்றி இஸ்லாமுக்கு அல்லா, ஐரோப்பாவில் வெற்றியை கொடுப்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன.நமக்கு தீவிரவாதிகள் தேவையில்லை;குண்டு போடுவோரும் தேவையில்லை.(ஐரோப்பாவிலுள்ள) ஐம்பது மில்லியன் முஸ்லீமகளும் அந்த கண்டத்தை இன்னும் சில ஆண்டுகளில் ஒரு இஸ்லாமிய கண்டமாக்கி விடுவார்கள்"
புள்ளிவிவரங்களும் அவர் கூற்றையே ஆமோதிக்கின்றன.

Monday, June 27, 2011

முடிவு என்னமாயிருக்குமோ?.



அளவுக்கு அதிகமான சுதந்திரம் கிடைத்தால் இப்படித்தான் ஆகும் என்று ஓரு நணபர் சொன்னார் . அவர் சுட்டிக்காட்டியது அமெரிக்காவில் வளர்ந்து வரும் ஓரினச் சேர்க்கை திருமணங்களைப் பற்றி.போன வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம் இது போலஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கி சட்டம் நிறைவேற்றியது. மாபெரும் முழக்கங்களும் சந்தோசக் கூக்குரலும் நகரிலே காணப்பட்டது. வெற்றி பரேடுகள் பல நடத்தப்பட்டன.நியூயார் மாகாண கவர்னரை கொண்டாடினார்கள்.”Jesus forgives sin" என்ற வாசகம் அடங்கிய போர்டும் கும்பலின் இடையே காணப்பட்டது. வேதமோ "தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்" என்கிறது. "அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல்,ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்" என்கிறது (ரோமர்:1:26,27). கிறிஸ்து பாவங்களை மன்னிக்கிறார் என்று சாக்கு சொல்லிக் கொண்டு இதுபோன்ற துணிகரங்களை செய்கிறார்கள்.ஆனால் மன்னிப்பே வழங்கப்படாத, சட்டத்தை மீறுபவர்களுக்கு சிரச்சேதமே தண்டனையாக வழங்கப்படும் இன்ன்னொரு ஆட்சி வந்து கொண்டிருப்பதை இவர்கள் அறியார்கள்.அவர்கள் பூமியை நிறைக்க ஐந்தும் பத்துமாக பிள்ளைகளைப் பெற்று பலுகிபெருகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோ கருக்கலைப்பு தொடங்கி ஓரினச்சேர்க்கை வரை ஆண்டவருக்கு எதிராக துணிந்திருக்கிறார்கள்.சாதிக்க வேண்டியது எத்தனையோ இருக்கின்றது. அமெரிக்காவின் கடன் சுமை மட்டும் 62 டிரில்லியன் டாலர்கள் எனச்சொல்லி USA Today பத்திரிகை சமீபத்தில் தலைப்புச்செய்தி வெளியிட்டது.இதெல்லாம் இத்தலைமுறையினருக்கு முக்கியமில்லை. பதிலாக ரெயின்போ கொடியை ஏந்திக்கொண்டு அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் சொன்னார் ”அமெரிக்காவை ஆண்டவர் தண்டியாமல் விட்டால், அவர் சோதோம் கொமாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும்” என்று. இதன் முடிவு என்னமாயிருக்குமோ?.

Friday, June 24, 2011

எமி கார்மிக்கேல் அம்மையார்

அன்புகூராமல் கொடுக்க முடியும்.ஆனால் கொடுக்காமல் அன்பு கூர முடியாது - எமி கார்மிக்கேல் அம்மையார் (1867–1951)

”One can give without loving, but one cannot love without giving” - AMY WILSON CARMICHAEL (1867–1951)





http://www.dohnavurfellowship.org/ Founded in 1901 by Amy Carmichael


எமி கார்மிக்கேல் அம்மையார் குழந்தைகளோடு

எமி கார்மிக்கேல் அம்மையார்

பாறையிலிருந்து டோனாவூர்

நர்சரி கூடம்

டோனாவூர் பெல்லோசிப் (நட்சத்திரக்கூட்டம்)

டோனாவூர் சர்ச்

டோனாவூர் பெல்லோசிப்
The Amy Carmichael Commemorative Plaque

Thursday, June 23, 2011

சங்கீதம் 56:11 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper
சங்கீதம் 56:11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

Thursday, June 16, 2011

ஐபேடில் தமிழ் வேதாகமம் புத்தக வடிவத்தில்

தமிழ் பரிசுத்த வேதாக‌ம‌ம் ஐபேட்டில் பயன்படுத்தும் வகையில் புத்தக வடிவத்தில் ஒரு அப்ளிகேஸனாக ஆப்பிள் AppStore-ல் வ‌ந்துள்ள‌து. தேவையுள்ள‌வ‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து நிறுவிக் கொள்ள‌லாம். உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கும் இதை அறிமுகம் செய்யலாம்.
The Holy Tamil Bible made for iPad; It creates a real Holy Book experience.
This contains both New and Old testaments and created in a sepia colored pages.(Screen shots below)
Features are Pinch Zoom, Double tab to normal view, Images, maps added.
AppStore link to download Tamil Bible - for iPad App by Moses Rajan




Wednesday, June 15, 2011

அந்திக்கிறிஸ்து - சரியான பதமா?

Antichrist என்ற ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் அன்றிகிறைஸ்ட் அல்லது அந்திகிறிஸ்து என மொழி பெயர்த்திருக்கிறார்கள். ஆனால் அந்தி எனும் பதம் தமிழில் வேறு அர்த்தத்தை தருவதால் Antichrist-ஐ அந்திக்கிறிஸ்து என அழைப்பது சரியா என இந்த இமெயில் ஒரு சர்ச்சையை ஏற்ப்படுத்துகிறது. யோசித்துப்பார்த்தால் இந்த வாதம் சரியாகவே படுகிறது. இங்கே அந்த இமெயில்.

அந்திக்கிறிஸ்து எனும் பதம் வேதத்தில் வரும் நான்கு இடங்கள்:

I யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

I யோவான் 2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

I யோவான் 4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

II யோவான் 1:7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்

Tuesday, June 14, 2011

ஜாமக்காரன் ஜீன் 2011 பதிப்பு

(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15


முன்னுரை

”ஒருவேளை உங்களுக்கு இஷ்டமில்லாத கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நம் கடமை. காரணம், அதிகாரங்கள் எல்லாம் தேவனால் அனுமதிக்கப்படுவது ஆகும். கர்த்தருக்கு தெரியாமல் எந்த ஆட்சியும் வருவதில்லை.”

”நம் பிள்ளைகளை ஆரம்பத்திலேயே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் - கட்டுப்பாடு விட்டுப்போனால் பிறகு அவர்களை சரிப்படுத்துவது மிகக்கடினம். ஆண்களுக்கு சமமாக இப்போது பெண் பிள்ளைகளும் பெற்றோருக்கு கீழ்ப்படிவதில்லை. சுதந்திரத்துக்கும் - பாசத்துக்;கும் எல்லை அவசியம். ஆரம்ப நிலையிலேயே பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்துக்கொள்ளுங்கள்.”

வேதவசனம் கூறுகிறது.
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான். நீதி 13:24.
பிள்ளையானவன் நடத்த வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22:6

குற்றம் சாட்டப்பட்ட CSI பிஷப்மார்களுக்கும் - ஆயர்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு
CSI பிஷப்- ஆயர்கள் எந்தெந்த காரணங்களுக்காக தண்டிக்கப்படமுடியும். CSI சட்டம் (CONSTITUITION) கூறுவது என்ன?
தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களின் பட்டியல்

CSI சபைகள் கம்பெனியாக பதிவு செய்யப்பட்டதா? சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டதா? டிரஸ்ட்டாக பதிவு செய்யப்பட்டதா?

மாடரேட்டர் & பிஷப் சொத்து விவரம் சமர்ப்பிக்கவேண்டும்
திருட்டுத் தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும். நீதி 9:17.
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம். நீதி 16:8

பெந்தேகோஸ்தே சபைகளின் பின்மாற்றம்


"இந்த நோட்டீஸ்சில் கிறிஸ்தவர்களின் கூட்டம் என்பதற்கு அடையாளமாக ஏதாவது காணப்படுகிறதா? என்பதை உற்று கவனித்துசொல்லுங்கள்! குறைந்த பட்சம் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகள் என்பதற்காகவாவது வேத புத்தகத்திலிருந்து ஒரே ஒரு வசனமாவது அல்லது இயேசுகிறிஸ்து என்ற பெயராவது எங்காவது காணப்படுகிறதா? இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம்காட்ட நோட்டீஸ்ஸின் எந்த ஒரத்திலாவது சிலுவை போன்ற எந்த ஒரு அடையாளமாவது காணப்படுகிறதா? என்று பூதக்கண்ணாடியிலாவது பார்த்து சொல்லுங்களேன். என்ன ஒரு வெட்கம் கெட்ட அறிவிப்பு இது!"

"கடையில் ஊறுகாய் தயாரித்து விற்பவர், மசாலாபொடி, இட்லிபொடி இப்படி விற்கும் பேக்கட்டுகளில், பாட்டில்களில் வசனத்தை எழுதிவிற்கும் சில கிறிஸ்தவ வியாபாரிகளின் பொருள்களை இவர்கள் யாரும் பார்த்ததில்லையா? அதை வாங்கும் நபர் ஒரு வசனமாவது வாசிக்கமாட்டாரா? அந்த பாட்டில் டேபிளில் வைக்கப்படும்போது ஒரு புறமதஸ்தராவது அந்த வசனத்தை தினம்தினம் வாசிப்பாரே! என்ற வாஞ்சையிலும், எதிர்பார்ப்பிலும் வசனத்தை அச்சடித்து ஒட்டி விற்கும் அந்த கிறிஸ்தவ வியாபாரிக்குள் ஏற்பட்ட அந்த ஆவிக்குரிய வாஞ்சைகூட, இத்தனை பெரிய பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் ஒருவருக்காவது தோன்றவில்லையே!"

மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். எபே 6:6.

அசம்பளீஸ் ஆஃப் காட் (AOG) சபைகளிலும் ஊழல்
"அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபை உலகளவில் சட்டத்திட்டங்களுடன் கூடிய நல்ல அமைப்பு (Structure) கொண்ட சபையாகும்."
"TPM சபைகளுக்கு அடுத்ததாக நான் மதிக்கும் பெந்தேகோஸ்தே சபையான அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபைகளில் சில வருடங்களாக புகைந்துக் கொண்டிருந்த பண ஊழல்கள் இப்போது உலகம் அறிய தொடங்கிவிட்டன."
"அரசாங்க அங்கீகாரத்தை AOG சபை இழந்து நிற்கிறது."

கேரளா A.G சபை பாஸ்டரின் நவீன உபதேச வாழ்த்து அட்டை
"மஹாவீராவை தெய்வமாக வணங்குகிறவர்களுக்கு வருடாவருடம் இந்த AG சபை பாஸ்டர் அனுப்பும் வாழ்த்து அட்டை ஆகும். இதில் எழுதப்பட்ட வார்த்தை கடவுளாகிய மகாவீர் உங்கள் யாவரையும் இவ்வருட முழுவதும் ஆசீர்வதித்து காப்பராக."


ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது PRAISE THE LORD, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று கூறலாமா?
"அதற்கு பதில் அவரவர் கலாச்சாரத்தில் ஒருவரை ஒருவர் வாழ்த்த அல்லது மரியாதை செலுத்த என்ன வார்த்தைகளை உபயோகிப்பீர்களோ அதை அர்த்தத்துடன் உபயோகியுங்கள். பிரைஸ் தி லார்ட் என்றுதான் நாங்கள் கூறுவோம் என்றால் தாராளமாக கூறுங்கள், கர்த்தரை துதிப்பது பாவமல்ல. ஆனால் அந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கு அது பொருத்தமான வார்த்தை அல்ல என்று கூறுகிறேன்."

விவாகரத்து DIVORCE
"குடும்பத்தில் உண்டாகும் பிரிவினையின் பாதிப்பு சபையையும், நாட்டிலும் பிரதிபலிக்கும். இது நாட்டுக்கும் ஆபத்து. முழு உலகத்துக்கும் பாதிப்பை உண்டாக்கும்."

"விட்டுக்கொடுப்பவர்கள் ஒருநாளும் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை."

"குடும்பத்தில் தோற்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்! என்று நம் தமிழ் இலக்கியம் கூறுகிறது!"

"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1 தீமோ 6:6 என்று வேதவசனம் கூறுகிறது. எனவே அதிக எதிர்பார்ப்பு சில சமயம் ஆபத்தை கொண்டுவரும்."

மேலும் படிக்க http://jamakaran.com

Monday, June 13, 2011

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்


Jebathai Ketkum Engal Theva Jebame Jeevan Jebam Jeyam Tamil Song written by Bro.DGS.Dinakaran

1.ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம் - 2

2.ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படிக்கு கிருபை செய்யும் - ஜெபமே

3.ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக் கொள்வோம் - ஜெபமே

4.இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கி விடும்
களைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் - ஜெபமே

பாடலை இயற்றியவர்- சகோ.டி.ஜி.எஸ்.தினகரன்

Saturday, June 11, 2011

உயிர் எங்கு இருக்கின்றது?

"உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?" என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசே வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. "மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது'' என்பதை மோசே ஆதியாகமம் 9:4, லேவி 17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார்.

ஆனால் உலகிலிருந்து அறிவியல் வல்லுநர்கள் யாவரும், "மனிதனின் உயிர் அவன் இருதயத்தில் உள்ளது'' என்று கூறி வந்தனர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக (மரணமடைந்த) ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்கு பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவர் யார்? இருதயத்தை கொடுத்தவரா அல்லது இருதயத்தை பெற்று கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது. எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி, ""மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது'' என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுபோன பின்பும் மக்கள் நினைவாற்றல் இன்றி உயிருடன் இருப்பதைக் கண்டு பிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்ப்பட்டது உலகில் பல அறிவியல் வல்லுனர்கள் கூடி "உயிர் இரத்தத்தில் உள்ளது" என்ற கொள்கையைக் கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது.

Thursday, June 09, 2011

கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...

அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகைகளின் வரலாற்றை இப்படியாக வேடிக்கையாக கூறுவார்கள்.

  • ஆரம்பத்தில் 1960,70-களில் லைப் (Life) எனப்படும் பத்திரிகை மிகவும் புகழ்பெற்றிருந்தது.லைப் என்றால் அதின் அர்த்தம் சகல உயிரினங்களும் அதில் அடங்கும் என்பதாகும்.
  • 1980-களில் பீப்புள் (People) எனப்படும் பத்திரிகை மிகவும் பாப்புலர் அடையத் தொடங்கியது. பீப்புள் என்றால் மக்கள் என்று பொருள்.மேலே சொல்லப்பட்ட சகல உயிரினங்களும் போய் மக்கள் மட்டும் என்றானது.
  • 1990-களில் (US) எனும் பத்திரிகை முன்ணனிக்கு வந்தது. அஸ் என்றால் நமது என்று அர்த்தம்.சகல உயிரினங்களும் போய், மக்களும் போய், நமது மட்டும் என்றானது.
  • 2000-த்தில் (Self) எனும் பத்திரிகை திடீரென பிரபலமாகி முன்னுக்கு வந்தது.செல்ப் என்றால் எனது என்று பொருள்.சகல உயிரினங்களும் போய், மக்களும் போய், நமதும் போய் இப்போது எனது மட்டும் என்றாகிவிட்டது.
இது ஒரு வேடிக்கையான ஒப்பீடேயானாலும் இது ஒரு முக்கியமான இன்றைய மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவரவர் அவரவர் தொழிலை மட்டும் பார்த்துக்கொண்டு செல்லும், வேறு யாரையும் பற்றி கவலைப்படாத இன்றையமக்களின் சுயநலம் அதாவது selfish எனும் நிலையைக் காட்டுகிறது.பரிசுத்த வேதாகமும் இதைத்தான் II தீமோத்தேயு 3-ம் அதிகாரத்தில் இப்படியாக சொல்கிறது. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும்,வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும்,.....இருப்பார்கள்; என்கிறது.

Wednesday, June 08, 2011

முடிவுக்கு முன்...




"...சீஷர்கள் அவரிடத்தில் (இயேசுவினிடத்தில்) தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.''
மத்தேயு 24:3.
ஒரு நாவலோ, அல்லது ஒரு திரைப் படமோ முடிவதற்கு முன்பாக நிகழும் காட்சிகளுக்கு, ""கிளைமேக்ஸ்'' என்று பெயர். கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு எப்போதுமே வேகமும்,விவேகமும், விறுவிறுப்பும் அதிகம். கொட்டாவி விட வைக்கும் கதைகள்கூட, முடிவை நெருங்கும்போது, தன் வேகத்தைக் கூட்டிக் கொள்ளும்!காட்சிகள் ஒவ்வொன்றும் பரபரப்பாக நகரும்! தற்சமயம் உலகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்ப்பீர்களேயானால், ""அவைகள் கிளைமேக்ஸ் காட்சிகளுக்குக் கொஞ்சமும் சளைத்தவைகளல்ல...'' என்பீர்கள். சொல்லப் போனால்,கிளைமேக்ஸ் காட்சிகளெல்லாம் இப்போது நடைபெறும் சம்பவங்களுக்கு முன்னால் பிச்சையெடுக்க வேண்டும். அத்தனை பரபரப்பு! அத்தனை பயங்கரம்! "சீறிப் பாயும் எரிமலைகள், கொந்தளிக்கும் கடலலைகள், சுழன்றடிக்கும் சூறாவளிகள், ஊரையே விழுங்கும் நில நடுக்கங்கள்...' என்று, இயற்கை சார்ந்த பயங்கரங்கள் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில், "பஞ்சம், கொள்ளை நோய்கள், விபத்துகள்...' என்று, ஆட் கொல்லிப் பயங்கரங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

சாத்தான் ஒரு புறமும், கர்த்தர் மறு புறமும் தங்கள் முழு பெலத்தோடு காரியங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்க...உலகம் தழுவிய கிளைமேக்ஸ் காட்சிகள் அங்கிங்கெனாதபடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்ததுதான்; கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு அடுத்து,கதை முடிந்து விடும். ""உலகில் அரங்கேறும் இத்தனை பயங்கரங்களை அடுத்து, எந்தக் கதை முடியப் போகிறது?'' என்பீர்கள். ஒரு கதை முடியப் போவதற்கு முன்பாக வரும் காட்சிகளை வைத்தே, ""கதை முடியப் போகிறது...'' என்பது நமக்குத் தெரிந்து விடும். ஆனால், உலகம் முடியப் போவதற்கு முன்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கோ; உடனடியாக அப்படித் தீர்மானிக்க முடிவதில்லை. காரணம், கதையை நாம் வெளியிலிருந்து பார்க்கிறோம்.உலகத்தின் கடைசிக் கால நிகழ்வுகளிலோ நாமும் சம்பந்தப்பட்டிருக்கிறோம்! நாமே சம்பந்தப்பட்ட காரியங்களில்கூட, நல்லது,கெட்டது, துவக்கம்,முடிவு போன்றவையயல்லாம் நமக்குச் சட்டென்று புலப்படுவதில்லை. சதுரங்கம் (CHESS) விளையாடுகிறவர்களைக் கவனித்திருக்கிறீர்களா? சுற்றி நின்று அந்த விளையாட்டை வேடிக்கை பார்க்கிறவர்களுக்குத் தெரிகிற அளவுக்குக்கூட, விளையாடுகிறவர்களுக்கு, தாங்கள் பிடிபடப் போவது தெரிவதில்லை. உலகத்தின் முந்தைய நிகழ்ச்சிகளில் நாமும் பங்கு பெற்றிருப்பதால், உலகத்தின் முடிவு பற்றி நமக்குச் சட்டென்று விளங்குவதில்லை. இதன் காரணமாகத்தான், உலகம் முடியப் போவதற்கு முன்பாக நிகழப் போகும் கிளைமேக்ஸ் நிகழ்ச்சிகளைப் பற்றி, இயேசு நமக்கு விலாவாரியாக விளக்கிச் சொல்லியிருக்கிறார். தான் உலகத்திலிருந்தபோது சொன்னது போதாதென்று, தன் தாசனாகிய யோவான் வழியாகவும், கடைசிக் கால நிகழ்வுகள் பற்றி விளக்கிச் சொல்லியிருக்கிறார். நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளில், முடிவுக்கு முந்தைய கிளைமேக்ஸ் காட்சிகள் என்னென்ன? என்பது பற்றி, உங்களுக்குக் கோடிட்டுக் காட்டுவதுதான், இந்தக் கட்டுரைகளின் நோக்கம்.வெளியே பார்க்க சாதாரணமாகத்தான் இருக்கும். கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்தான்,""அது கிளைமேக்ஸ் காட்சி!'' என்று தெரியும்.

அப்படி ஒரு கூர்மையான பார்வையில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளை, உங்களைப் பார்க்க வைக்கத்தான் இந்தக் கட்டுரை முயற்சி. முடியப் போகும் உலகத்தின் முடிவுக்கு முன்னால் நடைபெறும் நிகழ்ச்சிகளை, இயேசு, தம்முடைய சீடர்களுக்குப் பல இடங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார். என்றாலும், அவர் அதிகமாகச் சொன்னது, மத்தேயு 24ம் அதிகாரத்திலும், லூக்கா 21ம் அதிகாரத்திலும்தான் காணப்படுகிறது. இவ்விரண்டு அதிகாரங்களிலும், அவர், முடிவுக்கு முன்னால் நடைபெறப் போகும் காட்சிகளை வரிசைப்படுத்தி, மிகவும் நேர்த்தியாகக் குறிப்பிட்டிருக்கிறார். இயேசு மாத்திரமல்ல,இயேசுவுக்கு முன்னும், பின்னும் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளும்கூட,உலகத்தின் முடிவுக்கு முந்தி நிகழப் போகும் காரியங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஏன்? தாவீதுகூட, தன் சங்கீதத்தில் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார் என்றால்; பார்த்துக் கொள்ளுங்களேன்! இப்படியாக, எல்லோருமே உலகத்தின் முடிவு பற்றிப் பேசியிருக்க, அல்லது தீர்க்கதரிசனம் உரைத்திருக்க, இவர்களுக்கு நடுவில், அதிகமாக இவைகளைப் பற்றிப் பேசும் சில தீர்க்கதரிசிகளை மாத்திரம், நீங்கள் குறிப்பாக நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. அப்படிச் சொல்ல வேண்டுமானால், "தானியேல்', "எசேக்கியேல்', "சகரியா' என்று, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளையும், "பவுல்', "யோவான்', "பேதுரு' என்று, புதிய ஏற்பாட்டு ஊழியர்களையும் குறிப்பிடலாம். முடிவுக்கு முந்தைய காரியங்களை, அல்லது வருகையின் காரியங்களைப் பற்றி அதிகம் அறிய வேண்டுமானால், இவர்களிலும்,குறிப்பாக, "தானியேல்',"எசேக்கியேல்', "சகரியா', "யோவான்' போன்றவர்களின் புத்தகங்களைத்தான் நீங்கள் அதிகம் நாட வேண்டியிருக்கும். பரிசுத்த வேதாகமம் முழுக்கச் சொல்லப்பட்டிருக்கும் கடைசிக் கால அடையாளங்களை ஆராய்ந்து பார்த்தால், அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று தெரியும்.

1. தேவனுடைய கிரியைகளில் காணப்படும் அடையாளங்கள்.
2. சாத்தானுடைய கிரியைகளில் காணப்படும் அடையாளங்கள்.
3. மனிதர்களில் காணப்படும் அடையாளங்கள்.
4. இயற்கையில் காணப்படும் அடையாளங்கள்.
5. சமுதாயத்தில் காணப்படும் அடையாளங்கள்.


""அடையாளங்கள்'' என்று நான் குறிப்பிட்டிருப்பது முழுவதும் கிளைமேக்ஸ் காட்சிகள். அதாவது, முடிவுக்கு முன்னால் நடைபெறப் போகும் நிகழ்வுகள். முடிவுக்கு முன்னால் நடைபெறப் போகும் நிகழ்வுகளை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலாவது நீங்கள், பரிசுத்த வேதாகமத்தையும், உங்களைச் சுற்றிலும் நடைபெறும் நிகழ்வுகளையும் உற்றுப் பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும்.இரண்டாவது, நீங்கள் உற்றுப் பார்த்த இவ்விரண்டு நிகழ்வுகளையும் ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்க்க
வேண்டும். இது இரண்டுமே இருந்தாலும்கூட, அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்ப்பதில், அநேகர் கவனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். இதுதான் குறையே! இந்த மூன்றையும் நீங்கள் சம அளவில் பாவித்தால், நம்மைச் சுற்றிலும் நடைபெற்று வருவது, கடைசிக் காலநிகழ்வுகள் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். ஏன் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்?காரணம் இருக்கிறது! ஒவ்வொரு முடிவுக்குப் பின்னும் ஒவ்வொரு ஆரம்பம் இருக்கிறது. உலகத்தின் முடிவுக்குப் பிறகும் ஒரு
ஆரம்பம் இருக்கிறது. உலக ராஜ்ஜியம் முடிகிறது! தேவனுடைய ராஜ்ஜியம் துவங்குகிறது! உங்கள் புரிந்து கொள்ளுதல், இனி வரப் போகும் புதிய ஆரம்பத்திற்கு நீங்கள் ஆயத்தப்பட,உங்களைத் துரிதப்படுத்துகிறது.முடிவுக்கு முன்னால் நடைபெறப் போகும் நிகழ்வுகளில் நீங்கள் சேதமடையாதபடி உங்களைக் காத்துக் கொள்ள உதவுகிறது."உலகம் முடியப் போகிறது!' என்பதே, பலருக்கு சிரிப்பான செய்தியாக இருக்கிறது. விஞ்ஞானிகள்கூட, "உலகம் முடிவுக்குட்பட்டது!' என்பதை நம்புவதில்லை. சில விஞ்ஞானிகள் மாத்திரம், ""உலகம் முடியலாம்! ஆனால், இப்போதைக்கு இல்லை. இன்னும் ஐம்பதாயிரம் கோடி வருடங்கள் ஆகும்!'' என்கிறார்கள்.

இதற்கு ஆதாரம் கேட்டீர்களானால், சுமார் நானூறு பக்கத்துக்கு கட்டுரை சமர்ப்பிப்பார்கள். எது எப்படியோ! ""உலகம் அழிவுக்குட்பட்டது என்பதை விஞ்ஞானிகள் சொல்வதைவிட, அதை உருவாக்கியவர் சொல்வதுதான் உசிதமானது'' என்பேன். உலகத்தை உருவாக்கியவர் இயேசுதான் என்று நீங்கள் நம்பினால், உலகத்தின் முடிவு பற்றி அவர் சொல்வதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். உலகத்தின் முடிவு பற்றி இயேசு சொல்லும்போது, இரண்டு நிகழ்வுகளைச் சம்மந்தப்படுத்திச் சொல்கிறார். ஒன்று, அவருடைய வருகை! மற்றொன்று, உலகத்தின் முடிவு!

இயேசுவிடம் அவருடைய சீடர்கள் உலகத்தின் முடிவு பற்றி விசாரிக்கும்போது, அவருடைய வருகையையும் சேர்த்தே விசாரித்தார்கள். ""பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீ­ஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.'' மத்தேயு 24:3.

இயேசு வரட்டும். நல்லது. ஆனால், உலகம் ஏன் அழிய வேண்டும்?

உலகம் அழியக் காரணம் இருக்கிறது. கர்த்தர் உலகத்தைப் படைத்தபோது எல்லாவற்றையும், "நல்லது...நல்லது' என்று பார்த்துப் பார்த்துப் படைத்தார். தான் நல்லதாகவே உண்டாக்கிய உலகத்தை மனிதர்களின் கையில் கொடுத்தார். மனிதர்களோ, தேவனை விட்டு விலகி, சாத்தானுக்குக் கீழ்படிந்ததால், உலகம் முழுவதும் சாத்தானின் ஆளுகையின் கீழ் வந்து விட்டது. தன் ஆளுகையின் கீழ் வந்து விட்ட உலகத்தை, சாத்தான் தனக்கு ஏற்ற விதங்களில் மாற்றியமைத்துக் கொண்டான். தேவன் ஏற்படுத்தி வைத்த பல காரியங்களை பாவ காரியங்களாக மாற்றிக் கொண்டான். மனிதர்களை, தான் மாற்றியமைத்த இந்தப் பாவக் காரியங்கள் மூலம் அடிமைப்படுத்தி, தொடர்ந்து அவர்கள் தனக்கே அடிமைகளாக இருக்கும்படிபார்த்துக் கொண்டான்.

மனிதர்கள், தன் பிடியை விட்டு விலக நேரிடும் போதெல்லாம் அவர்களை பயமுறுத்தியோ, அல்லது, தான் மாற்றி வைத்திருக்கும் பாவக் காரியங்களைக் காட்டி மயக்கியோ,அவர்களை தன் பிடியிலிருந்து விலகாமல் பார்த்துக் கொண்டான். நான் நேசித்த மனிதனுக்காக, பார்த்துப் பார்த்து படைத்த பூமி, இப்போது சாத்தானின் கைகளில் சிக்கி அசுத்தமாக்கப் பட்டிருப்பதைக் கண்டு, கர்த்தர் வேதனைப்பட்டார். அது மாத்திரமல்ல, தன் சாயலாக உருவாக்கிய மனிதன், தன் சத்துருவாகிய சாத்தானுக்கு அடிமையாகி, கை கட்டி, வாய் பொத்தி, சேவகம் செய்வதைப் பார்த்து இன்னும் துக்கப்பட்டார். இதனால்,சாத்தானை அழித்து, உலகத்தை மீண்டும் மனிதர்களின் கையில் கொடுக்கக் கர்த்தர் சித்தமானார். ஆனால், அவருடைய நீதியின்படி இப்போது சாத்தானை அழிக்க வேண்டுமானால், அவனுக்குக் கீழ்பட்டிருக்கும் மனிதனையும் சேர்த்தேதான் அழிக்க வேண்டி வரும். ஒட்டு மொத்த மனிதர்களும் அழிந்து போனால், தான் உலகத்தை மீட்டுக் கொண்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். எனவே, தேவன் இதற்கும் ஒரு திட்டம் செய்தார்.

சாத்தான் கையிலிருக்கும் உலகத்திலிருந்து ஒரு கூட்டம் மனிதர்களை விடுவித்து, அவர்களை பரிசுத்த சந்ததியாகப் பாதுகாத்து, அவர்களைக் கொண்டு, இனி, தான் உருவாக்கப் போகும் புதிய வானத்தையும், புதிய பூமியையும் நிரப்ப விரும்பினார். மனிதர்களை விடுவிக்கவும், பரிசுத்தமாக்கவும் அவருக்குப் பரிசுத்தமான ஒரு இரத்தம் தேவைப்பட்டது. அதற்காக, தாமே மனித அவதாரமெடுத்து தன்னுடைய இரத்தத்தைச் சிந்தினார்.தம் இரத்தத்தை விசுவாசித்து ஏற்றுக் கொண்டவர்களை, தமது இரத்தத்தால் கழுவி சுத்திகரித்து, நாம் விரும்பும் பரிசுத்த சந்ததியாக்கினார். இனி அவர், உலகத்தை சாத்தானின்
கையிலிருந்து கைப்பற்ற வேண்டும். தாம் கைப்பற்றின பூமியை அப்படியே மனிதர்களின் கையில் கொடுத்துவிட முடியாது. காரணம், அதில் முழுவதும் சாத்தானின் அசுத்தங்கள் நிரம்பியுள்ளன. எனவே, அதை நெருப்பினால் சுட்டெரித்து விட்டு, அதிலிருந்து ஒரு புதிய வானத்தையும், புதிய பூமியையும் உண்டாக்க வேண்டும். அப்படி உண்டாக்கின பூமியில் தன் ஜனங்களைக் குடியமர்த்த வேண்டும். அவரே அதன் மேல் ராஜாவாக ஆளுகை செய்ய வேண்டும். பூமியை கர்த்தர் மனிதர்களுக்குக் கொடுத்து விட்டதால், அதன் மேல் ராஜாவாக ஆளுகை செய்யப் போகிறவரும், மனுஷகுமாரனாகத்தான் இருக்க வேண்டும். எனவேதான் இயேசு, மனித அவதாரமாக வெளிப்பட்டார். இயேசு, மனுஷ குமாரனாக வெளிப்பட்டதற்குப் பல நோக்கங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.

""ஏன் மனிதர்களில் ஒருவரையே தெர்ந்தெடுத்து, அவரை ராஜாவாக்கக் கூடாதா?'' என்பீர்கள். ஒருமுறை மனிதர்களின் கையில் ஆளுகையைக் கொடுத்ததால், பூமியைப் பறி கொடுத்து, ஒட்டு மொத்த மனுக் குலமுமே பட்ட பாடு போதாதா? அதனால்தான் மனுஷ குமாரனாக வெளிப்பட்ட இயேசுவே உலகத்தை ஆளுகை செய்யும் ராஜாவாக வெளிப்படப் போகிறார். திட்டம் மிகவும் பெரியது. மனிதன் செய்த பாவத்தினால் உண்டான விளைவை சரி செய்ய,கர்த்தர் என்னவெல்லாம் பாடுபட வேண்டியிருக்கிறது பாருங்கள்!

சரி, சொல்ல வந்த விஷயத்தை விட்டு டிராக் மாறுகிறேன்; பாருங்கள். என்ன சொல்ல வந்தேன்? சாத்தானால் தீட்டுப்படுத்தப்பட்ட பூமியைக் கர்த்தர் நெருப்பினால் சுத்திகரித்து, அழிக்க வேண்டும். இதைக் குறித்து பரிசுத்த வேதாகமம், பூமியானது நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது (2 பேதுரு 3:7). இப்பொழுது இருக்கிற வானமும், பூமியும் தீக்கிரையாகி ஒழிந்து போவதே முடிவு. கறை திரையற்ற புதிய வானமும், புதிய பூமியும் தோன்றுவதே முடிவுக்குப் பின்வரும் ஆரம்பம். முடிவுக்கு முன்னால் வரும் கிளைமாக்ஸ் காட்சிகளை இனித் தொடர்ச்சியாக ஆராயலாம். கிளைமாக்ஸ் காட்சிகள் ஒவ்வொன்றின் வேகத்தையும், பயங்கரத்தையும் பார்த்தால், முடிவு வெகு சமீபம் என்று உணர்வீர்கள். இனி காட்சிகளுக்குள் போகலாமா?

கிளைமாக்ஸ்-1 துளிர் விடும் அத்திமரம்
உலகத்தின் முடிவுக்கு முன்பாக நடைபெறும் கிளைமாக்ஸ் காட்சிகளில் முக்கியமானது, அத்தி மரம் துளிர்ப்பது! ""அத்தி மரம் துளிர்ப்பதில் அப்படி என்ன அதிசயம்? அதுதான் வருஷா வருஷம் துளிர்க்கிறதே!'' என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், ""நீங்கள் இன்னும் கொஞ்சம் பரிசுத்த வேதாகமத்தை ஆழமாகப் படிக்க வேண்டும்'' என்பேன். காரணம், குறிப்பிடப்பட்டிருக்கும், ""அத்தி மரம்'' என்பது, பூப்பூத்து, காய் காய்க்கும் ஒரு சாதாரண மரமல்ல. - அது ஒரு தேசம்! ""இஸ்ரேல்'' என்பது, அந்த தேசத்தின் பெயர். அது, பூர்வ காலத்தில் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காகத் தேர்ந்தெடுத்த தேசம். அந்த தேசம்தான், ""அத்தி மரம்'' என்று, பரிசுத்த வேதாகமத்தில் உவமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

உவமைக் காரியங்களைக் கொண்டு தேசங்களை அடையாளப்படுத்துவது, இன்றைக்கும் நாடுகளிடையில் இருக்கும் நடைமுறைதான். "கழுகு' அமெரிக்காவையும், "கரடி' ரஷ்யாவையும், "மயில்' இந்தியாவையும், "டிராகன்' சீனாவையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.அதே போலத்தான், யூதர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அத்தி மரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அத்தி மரம் மாத்திரமல்ல, யூதர்களை அடையாளப்படுத்த ஒலிவ மரமும், திராட்சைச் செடியும்கூட உவமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அத்தி மரத்தை யூதர்களின் அரசியல் வாழ்க்கைக்கும், ஒலிவ மரத்தை யூதர்களின் சமுதாய வாழ்க்கைக்கும், திராட்சைச் செடியை யூதர்களின் மத சம்மந்தமான வாழ்க்கைக்கும் அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இயேசு, தன்னுடைய வருகை எப்போது இருக்கும் என்பதைப் பற்றித் தெரிவிக்கும்போது, பல அடையாளங்களை முன்னறிவிக்கிறார். அதில் ஒன்றுதான், இந்த அத்தி மரம் துளிர்க்கும் அடையாளம். இதைக் குறித்து, பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா 29:29-31 வரை உள்ள வேத வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ""அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரத்தையும் பாருங்கள். அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். '' லூக்கா 21:29-31.
""அத்தி மரமும், மற்றெல்லா மரங்களும் துளிர்க்கிறதைப் பார்க்கும்போது, தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்றென்று அறிவீர்கள்'' என்று சொல்லப் பட்டிருப்பதிலிருந்து, இந்த இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மரங்களும், அத்தி மரமும் நிச்சயமாக எழுத்தின்படியே நாம் காணும் அத்தி மரமோ, அல்லது மற்ற மரங்களோ அல்ல என்று தெரிகிறது. இங்கே சொல்லப்பட்டிருக்கும் அத்தி மரமும், மற்றெல்லா மரங்களும் யூத தேசத்தையும், மற்ற தேசங்களையும் குறிக்கிறது.

நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை நுணுக்கமாக வாசித்துப் பார்த்தால், யூதர்களின் வரலாற்றுக்கும், தேவனுடைய திட்டங்களுக்கும் ஒரு கிரமமான சம்மந்தம் இருப்பதை உங்களால் காண முடியும். இந்த தேசத்து வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும், தேவனுடைய திட்டங்களுக்கும் இருக்கும் சம்மந்தம் மிகவும் ஆச்சரியமானது. எனவேதான், யூதர்களின் வரலாற்றை நாம் மிக நுணுக்கமாகக் கவனிக்க வேண்டியதிருக்கிறது.

""யூதா துளிர்க்கும்...'' என்று எழுதியிருப்பதிலிருந்து அதுவரை அது இலையற்று , காய்ந்து போய் இருந்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. யூதர்களின் வரலாற்றை நாம் ஆராய்ந்து பார்த்தால் இதுவரைக்கும் மூன்று முறைகள் அவர்கள் பட்டுப் போய், பின்னர் துளிர்த்திருக்கிறதைத் தெரிந்து கொள்ள முடியும்.

யூதர்கள் மூன்று முறை தங்கள் தேசத்திலிருந்து வெளியேறி, அல்லது வெளியேற்றப்பட்டு, அடிமைகளாக இருந்து, பின்னர் தங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறை தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பி வரும்போதும், தேவாதி தேவனுடைய முக்கியமான திட்டங்களில் ஒவ்வொன்று நிறைவேறியிருக்கிறது! அவர்கள் ஒவ்வொரு முறை தங்கள் தேசத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் ஏதோ ஒரு எதேச்சையாக நடந்ததாயிராமல், தேவனால் முன்னறிவிக்கப்பட்டே நடந்திருக்கிறது. அதன் ஒவ்வொரு சம்பவங்களிலும் தேவனுடைய தீர்மானமும், திட்டமும் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. யூதர்கள் இதுவரை மூன்று முறை தங்கள் தேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். மூன்று முறை திரும்பி வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்களின் முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு, தேவன் இந்த தேசத்தை வாக்களித்தார். கர்த்தருடைய வழிநடத்துதலின்படி, ஆபிரகாம், தன்னுடைய, "ஆரான்' என்கிற தேசத்திலிருந்து புறப்பட்டு, "கானான்' என்கிற இந்த தேசத்தில் குடியேறினார். அப்போதிலிருந்து யோசேப்பின் காலம் வரைக்கும் இவர்கள் இங்கேதான் இருந்தார்கள்.

பின்னர், யோசேப்பின் காலத்தில்தான் இவர்களுடைய முதல் பெயர்ச்சி நடைபெற்றது. யோசேப்பின் உடன் பிறந்த சகோதரர்களான யாக்கோபின் புத்திரர்கள், யோசேப்பின் மேல் பொறாமை கொண்டு, அவரை மீதியான் தேசத்து வியாபாரிகளின் கைகளில் விற்றுப்போட, அவர்கள் யோசேப்பை எகிப்தில் விற்று விட்டார்கள். எகிப்தில் யோசேப்பு சில காலம் அடிமையாக வேலை செய்து, கடைசியில் எகிப்திலும், சுற்றிலுமுள்ள நாடுகளிலும் தோன்றப் போகும் பஞ்சத்தைக் குறித்து பார்வோன் கண்ட சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்னதின் மூலம், எகிப்திய ராஜாவால் உயர்த்தப்பட்டு, தேசத்தின் உணவு நிலையைக் கண்காணித்துக் கொள்ளும் அதிகாரியாக யோசேப்பு நியமிக்கப்பட்டார். யோசேப்பினுடைய புத்திசாலித்தனமான திட்டங்களால், பின்னர் வந்த ஏழு வருடப் பஞ்சம் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் எதிர்கொள்ளப்பட்டது. பஞ்சக் காலத்தில் உணவுப் பொருட்களை முறைப்படுத்தி விநியோகம் செய்யும் அதிகாரியாக யோசேப்பு நியமிக்கப்பட்டு, அரசாங்கத்தின் முக்கியமான ஒரு மனிதரானார். இந்நிலையில் தோன்றிய அந்தப் பஞ்சம் இஸ்ரவேல் தேசத்தையும் விட்டு வைக்கவில்லை. ""பஞ்சக் காலத்தில் சுற்றுப் புறத்திலிருக்கும் எல்லா தேசங்களிலும் உணவுப் பற்றாக் குறை இருக்க, எகிப்தில் மாத்திரம் தானியங்கள் தடையில்லாமல் விநியோகம் செய்யப்படுகின்றன'' என்பதைக் கேள்விப்பட்டு, யோசேப்பின் சகோதரர்கள் எகிப்திற்கு வர, அங்கே தங்கள் சகோதரனான யோசேப்புதான் மன்னருக்கு அடுத்த ஸ்தானத்தில், உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்பதை அறிந்து, தாங்களும் எகிப்திலே தங்கி விட உத்தேசித்து, எகிப்துக்குப் புறப்படுகிறார்கள். தங்கள் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக் கொண்டு, தங்கள் உடமைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு எகிப்தில் குடியேறினார்கள். இதுதான் இஸ்ரவேலர்கள் தங்கள் சொந்த தேசத்தை விட்டு வெளியேறிய முதல் சம்பவம்.

வெளிப் பார்வைக்கு இது எதேச்சையாக நடந்த ஒரு சம்பவத்தைப் போலக் காணப்பட்டாலும், உண்மையில் இது ஏற்கனவே ஆபிரகாமுக்கு தேவனால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு தேவத் திட்டம்தான்! ஆதியாகமம் 15ம் அதிகாரத்தில் நீங்கள் இதைக் குறித்து வாசிக்கலாம். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: ""உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அந்த தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும் நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.'' இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.'' (ஆதி. 15:13,14) என்றார். இந்த வேத வசனங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தியிருக்கும் காரியங்களைப் பார்க்கும்போது, இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்துக்குப் போனதும், பின்னர் மோசேயின் மூலம் மீட்கப்பட்டு, திரும்ப வந்ததும், தற்செயலான செயல் அல்ல என்பது நன்கு புலப்படும். கர்த்தர் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்திய மாதிரியே, இஸ்ரவேலர்கள் எகிப்துக்குப் போய் தங்கி விடுகிறார்கள். யோசேப்பு இருந்த காலம்வரை அவர்களுக்கு அங்கே ராஜ மரியாதை இருந்தது. ஆனால், காலம் செல்லச் செல்ல, யோசேப்பின் மறைவிற்குப் பிறகு, யோசேப்பை அறியாத மன்னர்கள் எகிப்தில் எழும்ப, இஸ்ரவேலர்கள் அந்த தேசத்தில் அடிமைகளாக நடத்தப்பட்டனர். கர்த்தர் சொன்னபடியே நானூறு வருடங்கள் வரை அவர்கள் அங்கே கடுமையாக உழைத்து, கடினமாக நடத்தப்பட்டு, அடிமைகளாக ஜீவித்தார்கள்.

அதன் பின்பு அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட, கர்த்தர் அவர்களை மீட்கும்படி மோசேயை எழுப்பினார். மோசேயின் வழி நடத்துதலாலும், அவருடைய உதவியாளரான யோசுவாவைக் கொண்டும் கர்த்தர் இஸ்ரவேலர்களை வழி நடத்தி, மீண்டும் அவர்களுடைய சொந்த தேசத்திற்கே கொண்டு வருகிறார். இது கானான் தேசத்திற்கு இஸ்ரவேலர்களின் முதலாம் வருகை! கானானில் மீண்டும் இஸ்ரவேலர்கள் குடியேறிய பின்பு, அவர்களை நியாயாதிபதிகள் ஆண்டார்கள். பின்னர் அவர்கள் கர்த்தரிடம் வேண்டிக் கொள்ள, இஸ்ரவேலில் கர்த்தர் மன்னர் ஆட்சி முறையை ஏற்படுத்த, பிற்பாடு மன்னர்களின் ஆட்சி மலர்ந்தது.

----------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------



---------------------------------------------------------------------------------------------------



---------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------



---------------------------------------------------------------------------------------------------



---------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
-இக்கட்டுரையை எழுதியவர் ”இயேசுவின் தொனி” ஆசிரியர் சகோ. வின்சென்ட் செல்வக்குமார், ராமநாதபுரம். இக்கட்டுரை ஒரு தொடராக வெளியாகிறதினால் அவ்வப்போது புதிப்பிக்கப்படும்.

"Before the end" article in tamil by Yesuvin thoni editor Bro.Vincent Selvakumar, Ramanathapuram. This is an ongoing article.Please visit this page
frequently to get the latest updates.