Monday, February 27, 2006

திரும்பி வந்த நாணயம்

சேக்கல் எனப்படும் நாணயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் புழக்கமாய் இருந்தது.இஸ்ரேல் நாட்டிலிருந்து யூதர்கள் சிதறடிக்கப்பட்டதை தொடர்ந்து சேக்கல் நாணயம் முற்றிலும் காணாமல் போய் இருந்தது.இப்போது பைபிள் வாக்கியப்படி மீண்டும் இஸ்ரேல் நாடு உருவானது மட்டுமல்லாமல் மீண்டும் பழைய பைபிள் கால இஸ்ரேல் நாட்டின் நாணயமான சேக்கல் உயிர்பெற்று வந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.The currency had been the Israeli pound until June 1980, when it was changed to the shekel.

எசேக்கியேல்:45:12. சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.

The shekel

After nearly 2,000 years the shekel has been reinstated as the common monetary unit in Israel, again, just as predicted.Since 1980, the sheqel has been the currency of the modern state of Israel, first the Israeli sheqel, then (since 1985) the Israeli new sheqel. As of January 16, 2006, 1 US Dollar equals approximately 4.60 NIS (New Israeli Shekel, also referred to as ILS), 1 Euro equals approximately 5.6 NIS, and 1 pound sterling equals approximately 8.16325 NIS. There are 100 agorot to a shekel.

Ezekiel 45:12-16 NIV - "The shekel is to consist of twenty gerahs. Twenty shekels plus twenty-five shekels plus fifteen shekels equal one mina.... All the people of the land will participate in this special gift for the use of the prince in Israel."

2 comments:

  1. அன்புள்ள தோமா அவர்களுக்கு,

    பொறுமையாக ஒரு பதிவாகவே என்னுடைய கேள்விக்கு பதிலளித்ததற்கு மிக்க நன்றி. மிகத் தெளிவாக கர்த்தர் வேறு இயேசு வேறு என்று பைபிளின் கருத்தினை சார்ந்து பதிலளித்துள்ளீர்கள்.

    //எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.//

    இதனை அப்படியே நம்புகிறவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன். அதாவது இயேசுவின் போதனைகளை அவரின் வார்த்தைகளை, கட்டளைகளை நம்பாதவன் ஒருவனும் உண்மையான முஸ்லிமாக முடியாது. அந்த அடிப்படையில் நானும் அவரின் வார்த்தைகளை முழுமையாக நம்புகிறேன். இதனைக் குறித்து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனெனில் ஒரு சில விஷயங்களில் தவறான புரிந்துணர்வினால் பிரிந்திருந்தாலும் அடிப்படையில் யூத, கிறிஸ்த்தவ, முஸ்லிம் சமுதாயம் ஒரே கொள்கையுடையது தான் என்பது என் அபிப்பிராயம். அந்த ஒரு சில தவறான புரிந்துணர்வுகளை சரியாக புரிந்து கொண்டால் இவை ஒரே வழியில் போவதற்கு சாத்திய கூறு நிறைய உண்டு. அதனால் இந்த இரு சமுதாயங்களின் அடிப்படை வேறு பாடுகளைக் குறித்து நம்மிடையே ஓர் ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவதில் தவறில்லை என நினைக்கிறேன். அதனால் ஓர் நன்மை விளையுமெனில் அது நியாய தீர்ப்பு நாளை நம்பும் நம் இருவருக்கும் பயன் விளைவிக்கும் அல்லவா?

    இனி நான் உங்களிடம் கேட்க விரும்பியதாக கூறிய அந்த முன்னறிவிப்பினைக் குறித்து:

    பழைய ஏற்பாடு - மோசேவைக் குறித்து கூறப்படும் உபாகமம் என்ற புத்தகத்தில் மோசேக்குப் பின் வரும் ஓர் தீர்க்கதரிசியைக் குறித்து ஒரு முன்னறிவிப்பு உண்டு. அது இவ்வாறு கூறுகிறது:
    15. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்@ அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
    16. ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
    17. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே.
    18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.
    19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
    20. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
    21. கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில்,
    22. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை@ அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்@ அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

    உபாகமம் (18:15-22)

    அதாவது மோசேயைப் போன்ற ஓர் தீர்க்கதரிசி வருவார் என்று மோசே இஸ்ரவேலர்களைப் பார்த்தும், கர்த்தர் மோசேயைப் பார்த்தும் கூறுவதாக வருகிறது. அதே உபாகமம் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில்,

    10. மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,
    11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,
    12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
    உபாகமம் (34:10-12)

    அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. தற்போது கிறிஸ்த்தவ சமுதாயமும், முஸ்லிம் சமுதாயமும் இயேசுவின் வருகையை(அந்திம நாளின் அடையாளம்) எதிர் பார்த்து காத்திருப்பதிலிருந்து கர்த்தர் மோசேக்கு அறிவித்த அந்த மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி வந்து விட்டார் என்று தானே அர்த்தம். எனில் அந்த தீர்க்கதரிசி யார் என்று நீங்கள் கருதுகிறீர்கள். சற்று விளக்க முடியுமா?

    ReplyDelete
  2. திரு பகுத்தறிவாளன் அவர்களுக்கு.,
    வேத வாக்கியங்களெல்லாம் ஒரு நாளும் ஒளிந்து போகாது.
    நீங்கள் கூறியபடி "அதாவது இஸ்ரவேல் சமுதாயத்தில் மோசேக்குப் பின் மோசே போன்ற ஓர் தீர்க்கதரிசி வரவில்லை என்று பைபிள் தெளிவாக கூறுகிறது"
    உண்மைதான் .ஆனால் மோசே யை விட பெரிய தீர்க்கதரிசியாகிய இயேசு கிறிஸ்து வந்தாரே. அதைதான் மோசே அன்று கூறினார் .

    ReplyDelete