Thursday, February 16, 2006

பைபிளில் இந்தியா

எஸ்தர் 1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

எஸ்தர் 8:9 மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.

(இங்கே அகாஸ்வேரு-Xerxes என்பவர் பெர்ஸிய பேரரசின் மன்னர்,டேரியஸ்-Darius மன்னனின் மகன்)

மத்தேயு 2:1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

(இங்கே கிழக்குஎன்பது இந்தியாவை குறிக்கலாம்-அந்த காலங்களில் நமது தேசத்தில் அநேக ஞானபண்டிதர்கள்,வானசாஸ்திரிகள்,காலத்தை கணிப்பவர்கள் இருந்தார்கள் என எடுத்துக்கொண்டால்)

India in Bible
Esther 1:1 This is what happened during the time of Xerxes, the Xerxes who ruled over 127 provinces stretching from India to Cush

Esther 8:9 They wrote out all Mordecai's orders to the Jews, and to the satraps, governors and nobles of the 127 provinces stretching from India to Cush.

Matthew 2:1 After Jesus was born in Bethlehem in Judea, during the time of King Herod, Magi from the east came to Jerusalem

1 comment:

  1. தாங்கள் கூறும் பல விஷயங்கள் "மறுக்க முடியாத நிஜங்களே". நான் ஒரு முஸ்லிம் என்ற நிலையில் மாற்றப்படாத பைபிளை இறை வேதம் என நம்புகிறேன். உங்கள் கூற்றுபடியே இறைவேதத்தில் முன்னறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இன்று நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதை அனைத்தையும் முழுமையாக நம்புபவனே முழுமையான இறை விசுவாசி ஆக முடியும். ஆனால் இன்று பலர் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட பல விஷயங்களில் முக்கியமானதை விட்டுவிட்டு ஒரு சிலவற்றை மட்டுமே நம்புகின்றனர். பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன்.

    தற்போது நீங்கள் எழுதியிருக்கும் பதிவுகளிலிருந்து ஓர் சந்தேகம்.

    //அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//

    இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது.

    //பைபிள் சொல்லுகிறது“இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று.”//

    இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி.

    நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?

    ReplyDelete