Thursday, February 20, 2014

ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை

வரப்போகிற உலகளாவிய சர்வாதிகாரியான அந்திக்கிறிஸ்து சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் என பூமியில் எல்லோரையும் ஆட்டிப்படைப்பான் என்கிறது வேதாகமம் (வெளி:13.16). வசதியுள்ளோர்க்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கும் இன்டர்நெட் சீக்கிரத்தில் உலகமுழுவதும் எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கவிருக்கிறதாம். அதற்கான வேலைகளில் முழுமூச்சில் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். அதை அவுட்டெர்நெட் என்கிறார்கள். இப்படியாக ஒருநாள் உலக மக்கள் அனைவர் கையிலும் இன்டர்நெட் உலகம் இலவசமாக‌ வந்துவிடும். அப்படியே உலகத்தின் மீது அதிகாரம் செய்யவும் அந்திகிறிஸ்துவுக்கு எளிதாய் போய்விடும். அதன் வழி ஜனங்களை அவன் அதிகாரம் பண்ணலாம் ஆட்டிப்படைக்கலாம். அப்புறம் வேதம் சொல்லுவது போல கொள்ளவும் விற்கவும் அவனறியாமல் முடியாது ஆகிவிடும். வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா? ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை என்று (மத்தேயு 24:22). அன்பு சகோதர சகோதரிகளே அதற்கு முன்பாகவே இப்பூவியிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவதுதான் புத்திசாலித்தனம். மணவாட்டியாய் கிறிஸ்துவோடு கூட எடுத்துக்கொள்ளப்பட நீங்கள் தயாரா? இல்லை அந்திகிறிஸ்துவிடம் மாட்டிக்கொண்டு விழிக்கப்போகிறீர்களா? இயேசு கிறிஸ்து சொன்ன புத்தியுள்ள கன்னிகைகள் போல‌ நாம் எல்லோரும் எப்போதும் கிறிஸ்துவின் வருகைக்கு தயாராக இருக்க வேண்டும்.