Showing posts with label Revelation. Show all posts
Showing posts with label Revelation. Show all posts

Friday, January 27, 2023

ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே.

 எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். வெளி 9:14



"இயேசுவின் இரத்தம் ஜெயம்"

 "இயேசுவின் இரத்தம் ஜெயம்" எனும் சொற்றொடர் நாம் எப்போதும் பயன்படுத்தும் ஜெப வாக்கியம். ஆனால் இதற்கு ஆதாரமான வேதாகம வசனத்தை உங்களால் சொல்ல முடியுமா (வெளி)?  பதில் கீழே.

மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
வெளிப்படுத்தல் - 12:11


Saturday, November 19, 2022

உடன்படிக்கைப் பெட்டி கண்டுபிடிக்கப்படுமா?

உடன்படிக்கைப் பெட்டி கண்டுபிடிக்கப்படுமா? எரேமியா 3:16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உடன்படிக்கைப் பெட்டி அது இப்போது எங்கிருக்கிறது?வெளி 11:19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. 



ஐப்பிராத்தென்னும் நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற தூதர்.

 எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். வெளி 9:14


"டிஜிட்டல் கரன்சி" வருகிறது.

 

கரன்சி ரூபாய் நோட்டுகள் போய் முழுக்க முழுக்க "டிஜிட்டல் கரன்சி" சீக்கிரத்தில் உலகமெங்கும் வருகிறது. இதனை "மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்" (CBDC) என்கிறார்கள். அரசுகளின் முழு கம்ப்யூட்டர் கட்டுபாட்டில் இந்த டிஜிட்டல் கரன்சி இருப்பதால் அது புழக்கத்துக்கு வரும் போது, மக்கள் தங்கள் டிஜிட்டல் பணத்தை செலவிடும் முழு சுதந்திரம் மக்களிடமிருந்து எளிதில் பறிக்கப்படலாம். உதாரணமாக எவ்வளவு பணம் எதற்கெல்லாம் செலவழிக்கலாம், யாராருக்கெல்லாம் நன்கொடை கொடுக்கலாம், தடுக்கலாம் என கட்டுபாடுகள் எளிதாக மக்கள் மீது போடலாம். இஷ்டத்துக்கும் செலவு பண்ணமுடியாதவாறு வரைமுறைகள் கொண்டுவரலாம். ஒரே சொடுக்கில் உங்கள் பணம் அனைத்தையும் பிடிங்கியும் விடலாம். சர்வாதிகாரி ஒருவனிடம் இந்நிலையில் உலகம் சிக்கினால் என்ன ஆகும்? அவ்வளவு தான். வெளி 13:17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.

Saturday, September 25, 2021

வற்றிப்போய்க் கொண்டிருக்கும் யூப்ரடீஸ் நதி.

பைபிளில் முன்னறிவித்தது போல தற்போது வற்றிப்போய்க் கொண்டிருக்கும் யூப்ரடீஸ் நதி. வீடியோ https://www.youtube.com/watch?v=Sok8bAcuuYk ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. வெளி 16:12



Tuesday, September 03, 2019

யூரோ கொடியின் பின்புலத்திலுள்ள‌ ரோமன் கத்தோலிக்கம்


Thursday, April 26, 2018

சொரூபத்தை வணங்க கட்டாயப்படுத்தும் அரசாங்கம்


மனிதன் வெறும் எண் இலக்கம் ஆகும் காலம் வருகிறது


Thursday, April 19, 2018

அணுஆயுதத்தை முன்னுரைத்த வேதாகமம்


Thursday, April 12, 2018

ஊழியர்களின் உடலில் சிப் பொருத்தும் அமெரிக்க நிறுவனம் ‍ அந்திகிறிஸ்துவின் தொழில்நுட்பம்


பிறப்பு முதல் இறப்புவரை ஆதார்

அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளி 13:16,17

Saturday, September 20, 2014

கொள்ளவும் விற்கவும் ‍வலதுகைகளிலும் நெற்றிகளிலும்

ஐபோன் 6 ல் முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும். இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் தெரிவித்தார். மணிபர்சுகளையே இல்லாமல் செய்வதே அவர் குறிக்கோளாம். கரன்சிகளே இல்லாமல் போனது. இப்போது கிரெடிட் டெபிட் கார்டுகளும் இல்லாமல் போகிறது. சீக்கிரம் முத்திரை மட்டுமே போதும் வாங்கவும் விற்கவும் என்றாகிவிடும். வேதாகமம் சொல்லுகிறது "முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது" வெளி:13:17. கடைசிகாலத்தில் இருக்கிறோம் நண்பர்களே. சிலர் கிண்டலாக ஐபோன் 666 என சொல்வதின் அர்த்தம் புரிகிறதா? "Our vision is to replace the wallet" said Apple CEO Tim Cook.  Yes,he is right on track. Bible says, at one time of a age "No one could buy or sell anything without that mark".Revelation:13:17 That too is coming soon. Friends please read the bible to know what is coming.

Monday, August 18, 2014

கைவிரல் வைத்தால் தான் வாங்க முடியும் - ‍சீக்கிரம் தமிழகத்தில்

Slowly we are kind of getting there. "அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கு செய்தது" என்கிறது வேதாகமம்.செய்திதாள் செய்திய‌ பாருங்க. கூடிய சீக்கிரத்தில் அந்த நாளும் வந்துடும்ங்க. நாம பெற்ற சுதந்திரம் இன்னும் இருக்குதா? இல்ல இருந்த சுதந்திரமும் போயிட்டிருக்குதான்னு தெரியலைங்க. எல்லாம் நம்ம நன்மைக்கு தான்னு சொல்லி கொஞ்சம் கொஞ்சமா இருந்த‌ சுதந்திரமும் போயிட்டு தான் இருக்குதுனு தோணுது (வெளி:13:16,17). No one can buy or sell unless he has the mark, that is, the name of the beast or the number of its name.Revelation 13:17

Wednesday, June 11, 2014

என் ஜனங்களே! அவளைவிட்டு வெளியே வாருங்கள்

எல்லாமே வெகு வேகமாக நடக்கின்றன. வெகுஜன ஊடகங்களெல்லாம் இதைப் பற்றி பேசுவதே இல்லை. திடீரென ஒருநாள் எல்லாமே முடிந்திருக்கும். எம்மதமும் சம்மதமென நீங்கள் ஒத்துக்கொள்ள தயாரா? ஒன்று கூடி சமாதான சின்னமாக ஒலிவமரத்தை நட்டிருக்கிறார்கள். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்கிறதே வேதாகமம் (II கொரி 6:14 16). கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவு ஒரு மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் உள்ள புனிதமான‌ உறவு. இதில் மூன்றாம் நபர் நுழையும் போது சபையாகிய மணவாட்டி களங்கப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தல் 18ம் அதிகாரத்திலுள்ளது போல சபையானது வேசியாகிறாள். அதின் முடிவை நீங்கள் 17,18,19 அதிகாரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். பூமியின் ராஜாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒன்றாக இது போல ஆனந்தமாக‌ கூடுவார்கள் அந்திக்கிறிஸ்துவை வெளிக்கொணர வேண்டி(வெளி 18:3). ஆனால் இறுதியில் அந்திக்கிறிஸ்து வெளிப்பட்டதும் அவளைப் பகைத்து, பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள் என்கிறது வேதாகமம் (வெளி 17:16). ரோமாபுரி முடிவில் அழிக்க‌ப்பட்டு போகும் " when these things are finished, the city of seven hills [i.e. Rome] will be destroyed" என முடியும் Prophecy of the Popes நினைவுக்கு வருகிறது. 
"என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்" ( வெளி 18:4)

Thursday, February 20, 2014

ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை

வரப்போகிற உலகளாவிய சர்வாதிகாரியான அந்திக்கிறிஸ்து சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் என பூமியில் எல்லோரையும் ஆட்டிப்படைப்பான் என்கிறது வேதாகமம் (வெளி:13.16). வசதியுள்ளோர்க்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கும் இன்டர்நெட் சீக்கிரத்தில் உலகமுழுவதும் எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கவிருக்கிறதாம். அதற்கான வேலைகளில் முழுமூச்சில் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். அதை அவுட்டெர்நெட் என்கிறார்கள். இப்படியாக ஒருநாள் உலக மக்கள் அனைவர் கையிலும் இன்டர்நெட் உலகம் இலவசமாக‌ வந்துவிடும். அப்படியே உலகத்தின் மீது அதிகாரம் செய்யவும் அந்திகிறிஸ்துவுக்கு எளிதாய் போய்விடும். அதன் வழி ஜனங்களை அவன் அதிகாரம் பண்ணலாம் ஆட்டிப்படைக்கலாம். அப்புறம் வேதம் சொல்லுவது போல கொள்ளவும் விற்கவும் அவனறியாமல் முடியாது ஆகிவிடும். வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா? ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை என்று (மத்தேயு 24:22). அன்பு சகோதர சகோதரிகளே அதற்கு முன்பாகவே இப்பூவியிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவதுதான் புத்திசாலித்தனம். மணவாட்டியாய் கிறிஸ்துவோடு கூட எடுத்துக்கொள்ளப்பட நீங்கள் தயாரா? இல்லை அந்திகிறிஸ்துவிடம் மாட்டிக்கொண்டு விழிக்கப்போகிறீர்களா? இயேசு கிறிஸ்து சொன்ன புத்தியுள்ள கன்னிகைகள் போல‌ நாம் எல்லோரும் எப்போதும் கிறிஸ்துவின் வருகைக்கு தயாராக இருக்க வேண்டும்.

Friday, February 22, 2013

விண்ணில் தோன்றிய‌ மின்ன‌ல்


போப் பென‌டிக்ட் அவ‌ர்க‌ள் த‌ன‌து ராஜினாமாவை அறிவித்த‌ சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளிலேயே ரோமாபுரி வானில் தோன்றிய‌ ஒரு அற்புத‌மான‌ மின்ன‌ல் இ‌து. அதை அப்ப‌டியே த‌‌ன‌து கேம‌ராவில் சிறைபிடித்துள்ளார் ஒரு இத்தாலிய‌ போட்டோகிராப‌ர். மின்ன‌ல் சொல்ல‌ வ‌ருவ‌து என்ன‌மோ?

சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். லூக்கா 10:18

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய (இயேசு கிறிஸ்துவினுடைய‌) வருகையும் இருக்கும். மத்தேயு 24:27
இதோ, சீக்கிரமாய் வருகிறேன் - இயேசு கிறிஸ்து

Friday, February 15, 2013

நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, 1,400 கி.மீ., தொலைவில், கஜகஸ்தான் எல்லைக்கு அருகில், யூரல் மலை அமைந்த, செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில், காலை, விண்ணில் இருந்து பறந்து வந்த, விண்கற்கள் விழுந்தன. இந்த கற்கள் விழுந்த சத்தம், வெடி சத்தத்தை போன்று கேட்டது. இதனால், மக்கள் பீதியடைந்தனர்." இந்த சம்பவங்களில், 84 சிறுவர்கள் உள்பட, 900 பேர் காயமடைந்தனர்' என, ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இன்று, "2012 டிஏ 14' என்ற, பெயர் கொண்ட ஆஸ்ட்ராய்டு(சிறுகோள்) ஒன்று, வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ரஷ்யாவில், விழுந்த விண்கற்களுக்கும், இன்று பூமிக்கு அருகே வரும், 2012 டிஏ 14 க்கும் தொடர்பில்லை' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

வேதாக‌ம‌ம் சொல்லுகிற‌து. அந்நாட்களில் சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, இயேசு கிறிஸ்து வ‌ருகிறார்.மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அப்படியே ஆகும் ஆமென்.(மத்:24:29 மத்:24:6 வெளி1:7)
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=40617

Tuesday, February 12, 2013

அடுத்த‌ போப்,உல‌கின் இறுதி போப்?


12-ம் நூற்றாண்டை சேர்ந்த‌ செயின்ட் மாலாக்கி (Saint Malachy) எனும் ஐரிஷ் பிஷ‌ப், வ‌ர‌ப்போகும் 112 போப்க‌ளை குறித்து தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் (Prophecy of the Popes) சொல்லியிருக்கிறார். இப்போது ப‌த‌வி வில‌க‌ல் தெரிவித்துள்ள‌ போப் பென‌டிக்ட் (Benedict XVI) 111-வ‌து போப் ஆவார். அதாவ‌து அடுத்து வ‌ர‌ப்போகும் 112-வ‌து புதிய‌‌ போப் உல‌கின் க‌டைசி போப் என்றும் அவ‌ரை Peter the Roman என‌வும் அவ‌ர் குறிப்பி‌டுகிறார். பின்பு ரோம் ந‌க‌ர‌ம் அழிக்க‌ப்ப‌ட்டு போகும் என்று முன்னுரைத்துள்ளார். வேதாக‌மும் ஏழு ம‌லை ந‌க‌ர‌மாம் ரோமாபுரி ந‌க‌ர‌ம் அழிக்க‌ப்ப‌ட்டு போகும் என்றே முன்னுரைக்கிற‌து. அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிற மகா நகரமேயாம். அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள். வெளி:17:9,18,16

Wednesday, December 19, 2012

வேத‌த்தை நிரூபிக்கும் சிக‌ப்பு ம‌ழை

ந‌ண்ப‌னே!
புனித‌ வேத‌ம் சொல்வ‌தெல்லாம் ச‌த்திய‌ம்.
உன் நித்திய‌த்தை எங்கே க‌ழிக்க‌ப்போகிறாய்?
Ref: http://sinhalaya.com/news/eng/2012/sri-lanka-red-rain-is-having-a-cosmic-connection/