Tuesday, May 01, 2018
தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய கற்கோவில் நாகர்கோவில் கல்லுகோவில் கஸ்பாசபை
Friday, April 27, 2018
செயின்ட் தாமஸ் மவுண்ட் சாலை எனும் "மவுண்ட் ரோடு" பெயர் "அண்ணா சாலை"யாக பெயர்மாற்றம் செய்யப்பட்டு சென்னையின் வரலாறு மறைக்கப்படுகிறது.
Thursday, April 12, 2018
பண்டைய தமிழகத்திலிருந்து இஸ்ரேல் சென்ற யானை தந்தங்கள் கண்டுபிடிப்பு
தமிழில் முதல் சிறுகதை
Wednesday, April 11, 2018
அன்பு தணிந்துபோம் - கடைசிகால அடையாளங்கள்
Monday, August 18, 2014
கைவிரல் வைத்தால் தான் வாங்க முடியும் - சீக்கிரம் தமிழகத்தில்
Sunday, November 10, 2013
தமிழகம் வரும் இஸ்ரேலின் விவசாயப் புரட்சி
இஸ்ரேல் நாட்டில் ஒரே ஒரு நீர்த்தேக்கம் மட்டுமே உள்ளது. அந்த நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால், அங்குள்ள விவசாயிகள் தோட்ட பயிற்சி மற்றும் விவசாய பயிர்களை பயிரிடுவதில் பெரும் சாதனை படைத்து, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகள் உயர் தொழில்நுட்ப நவீன கருவிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதுதான் என்கிறார்கள். இருக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு நீரைக்கூட வீணடிக்காமல், பயிர்களுக்கு பயன்படுத்தி இப்புரட்சியை செய்துள்ளனராம். தமிழகத்திலும் இதுபோன்ற விவசாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இங்குள்ளோரின் விருப்பமும். ஆனால் அதற்கும் மேலான ஒரு பிரதான இரகசியம் இருக்கிறது. அது தான் கடவுளின் ஆசீர்வாதம். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 30-ம் வசனம் இப்படியாக சொல்கிறது ”நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்” என்று. இதுதான் உண்மையான இரகசியம். நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் அல்லவா? (Iகொரி:3:7
Monday, September 02, 2013
கிறிஸ்துவை நேசிக்கும் இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் சாட்சி
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.வெளி 3:8
Tamil Cinema Director Mr.Prabhu Solomon Testimony.
Friday, August 02, 2013
கிறிஸ்துவை கண்டு கொண்ட நடிகர் ஜூனியர் பாலையா அவர்களின் சாட்சி
பீட்டர் என்கிற நடிகர் ஜூனியர் பாலையா கிறிஸ்துவை கண்டு கொண்ட சாட்சி
Part 1
Part 2
Part 3
Part 4
”காதலிக்க நேரமில்லை” புகழ் பிரபல நடிகர் திரு.T.S பாலையா அவர்களின் புதல்வனான திரு.ஜூனியர் பாலையா அவர்களின் குடும்பத்தில் ஒரு காலத்தில் பணத்திற்கு பஞ்சமில்லாதிருந்தது. T.S பாலையா அவர்களின் சொத்து ஒரு காலத்தில் 240 ஏக்கர் தேரும். இது சென்னையில் மட்டும். இவர் வீட்டின் பிறந்த நாள் விழாக்களில் ஓர் பெரிய கூடை நிறைய பணத்தை போட்டு இவர்களில் தலையில் கொட்டுவார்களாம். இன்றைக்கும் இவரது தாயார், சகோதரர் மற்றும் ஜூனியர் பாலையா அவர்களின் பெயர்களை பல தெருக்களுக்கு வைத்திருக்கிறார்கள். இவரின் தந்தையார் பெயரில் ஓர் காலனியே உள்ளது. மிகபெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த இவர், மனம் போன போக்கில் தன்னுடைய நண்பர்களுடன் தன் வாலிப வயதில் பாவமான வாழ்க்கையை பாவம் என்றே தெரியாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் இவை அனைத்தும் நிரந்தரம் இல்லை. இயேசு கிறிஸ்துவே நிரந்தரம் என்று புரிந்து கொள்ளக்கூடிய நேரம் இவர் வாழ்க்கையிலும் வந்தது.
இவர் நடித்த முதல் படத்திற்கு பிறகு 3-ம் நாளில் இவரின் தந்தை இறந்து விட்டார். வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அதன் பிறகு இவரின் தாயார் சுகவீனமாய் படுத்து விட்டார்கள். இந்த நேரத்தில் நிலம் விற்பது தொடர்பாக ஓர் பிரச்சினை ஆரம்பித்து தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம் இவரை ஆட்டிபடைக்க ஆரம்பித்தது. யோபு 3:25 ல் "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று சொல்லப்பட்டது போல் இவரின் வாழ்க்கையிலும் ஆனது. விக்கிரகங்களை வணங்கினால் பயம் நீங்கும் என்று பலரும் சொன்னதால் பல இந்து கோவில்களுக்கு சென்று வழிபடுவார். போகாத இடம் இல்லை. ஆனாலும் பயத்தில் தூக்கம் இல்லாமல் போனது. பயங்கர குடிகாரனார். குடும்பத்தில் சேமிப்பு எதுவும் கிடையாததால் தந்தை இறந்த பிறகு இவரின் தாயாருக்கு நெருக்கமானவர்கள் அவரை ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டனர். இதன் மூலம் பல துயரங்களுக்கு இவர் ஆளாகிப்போனார். அதுவரை பணத்தின் பெருமையில் உல்லாசமாக இருந்த இவரின் வாழ்க்கையில் சோகம், ஏமாற்றம், வெறுப்பு, துன்பம் என்று பல புயல்களில் அகப்பட்டு இருள் என்னும் ஓர் மாயைக்குள் திணிக்கப்பட்டார். சினிமா உலகில் ஸ்ட்ரைக் நடந்த போது இவருக்கு வேலை இல்லாமல் போனது. வருமானமும் நின்று விட்டது. சேமிப்பு இல்லாததினால் கடன் வாங்க ஆரம்பித்தார். நாளடைவில் கடன் அடைக்க முடியாமல் கடனாளியானார்.
நண்பர்கள் மாயமாகிப் போனார்கள். ஒரு முறை ஒரு நண்பன் வீட்டிற்கு சென்ற போது அவர் இவரின் வருகையை தெரிந்து கொண்டு "என்ன செக் bounce ஆகிவிட்டதா என்று சத்தம் போட்டு அவமானப்படுத்தினதாக மனவருத்தத்துடன் குறிப்பிடுகிறார். இதன் மத்தியில் இவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் சகோதரி தனக்கிருந்த கிழிந்த ஓர் வேதாகமத்தை இவர் மனைவியிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதை படித்த மாத்திரத்தில் தேவன் அவரிடம் பேசுவதை உணர்ந்த அவர் மனைவி இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சராக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ஓர் ஆலயத்தில் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார். இதை ஜூனியர் பாலையாவிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் இவரோ அதை கண்டுகொள்ளவில்லை. ஓர் நாள் கடன் கொடுத்த நண்பர் வீட்டிற்கு வந்து ஜூனியர் பாலையா தற்கொலை செய்து கொண்டால் கடனை திருப்பி தர வேண்டாம் என்று கூறினார். இதைக் கேள்விப்பட்ட ஜூனியர் பாலையா தற்கொலை செய்துகொள்ளலாமென எண்ணி நன்றாக குடித்துக்கொண்டு காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். சென்ற வேகத்திலேயே மீண்டும் கடவுள் கிருபையால் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.
அதன் பிறகு இவர் மனைவி இவரை ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். ஆலயத்தில் அழுகையோடு "ஏசுவே, ஏசுவே" என்று வேதனையில் கதறின போது தன் கைப்பேசி அழைக்கவே எடுத்து பேசியிருக்கிறார். அதில் இவரை ஏமாற்றி சொத்தை, பணத்தை அபகரித்தவர் மீண்டும் பணத்தை கொடுப்பதாக சொன்னார். இவரால் நம்பவே முடியவில்லை. தேவன் அங்கேயே ஓர் அற்புதத்தை செய்தார். ஜூனியர் பாலையா அவர்கள் இரட்சிக்கப்பட்டு 10-4-2013 அன்று ஞானஸ்நானம் எடுத்து கொண்டார். இன்று தேவனை அறியாத மக்களுக்கு இயேசுவை பற்றி சொல்ல தன்னை அர்ப்பணித்து ஊழியம் செய்து வருகிறார். அல்லேலூயா. ஆமென்.
இந்த சாட்சியை படித்த எனக்கன்பான கிறிஸ்தவ பெயரை வைத்துகொண்டு உலகபிரகாரமாய் வாழும் கிறிஸ்தவ நண்பர்களே, மற்ற மதங்களை சேர்ந்த சகோதர சகோதரிகளே "இயேசு உங்களை நேசிக்கிறார்" வேதாகமத்தில் ஓர் வசனம் உண்டு "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்". இது தேவன் கொடுக்கும் ஓர் அன்பான அழைப்பு. நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி. இருக்கிற வண்ணமாகவே இயேசுவினிடத்தில் வாருங்கள். உங்கள் வாழ்க்கையும் மாறும். பரிசுத்த வேதாகமம் எங்காவது கிடைத்தால் தவறாது வாசியுங்கள். தேவன் உங்களோடு பேசுவார். உங்கள் காதுகள் நிச்சயம் கேட்கும்.
எனக்கு அன்பானவர்களே... ஜூனியர் பாலையா சொல்வதெல்லாம் தான் கஷ்டப்பட்ட போது யாரும் வந்து இந்த இயேசுவை தனக்கு சொல்லவில்லை என்பது தான். அன்பு நண்பர்களே, இந்த சாட்சியையாவது உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் தேவனை அறிந்து கொள்ளட்டும். தொடர்ந்து அவர்களுக்காக ஜெபியுங்கள். என்றாவது ஓர் நாள் அவர்கள் தேவனுக்குள்ளாக வருவார்கள். உங்கள் நண்பர்களுக்காக, அண்டை வீட்டாருக்காக, கூட வேலை செய்பவர்களுக்காக ஜெபம் செய்ய ஆரம்பிக்கலாமே. தேவன் உங்களை ஆசீர்வதிபாராக.
Credit goes to www.healingstripesministry.org
G-5, Ist Floor,
II Block,
Malligai Street,
Brindavan Nagar,
Koyambedu,
Chennai-600 092,
Tamil Nadu,
South India.
healingstripesministry@gmail.com
Contact Numbers
+91-9884428222
+91-9840454423
Video testimony of Bro. Junior Balaiah - An actor turned Evangelist, proclaiming Jesus Christ as the only true God and Savior of man kind.
Saturday, July 20, 2013
தமிழில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்
Church of the Pater Noster என்பது எருசலேம் நகரில் ஒலிவமலையின் மேல் அமைந்துள்ள ஓர் ஆலயம். இவ்விடத்தில் தான் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பரமண்டல ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தார் என வேத ஆராய்சியாளர்கள் நம்புகிறார்கள் (மத்:6 9 13).இந்த ஆலயத்தின் சுவர்களில் உலகின் பல்வேறு மொழிகளில் பரமண்டல ஜெபம் பொறிக்கப்பட்டுள்ளது.மேலே நீங்கள் படத்தில் காண்பது அங்கே நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்.
Friday, March 01, 2013
சகோதரி ஆர்த்தி கணேஷ் (சினிமா நடிகை)யின் சாட்சி.
உயிருள்ள தெய்வம்.இயேசு விடுவிக்கிறார்.
கிறிஸ்து இயேசுவில் இவர்கள் இறுதிவரை நிலைத்திருக்க நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.
Thanks:இயேசு விடுவிக்கிறார் Magazine March 2013
Thursday, September 13, 2012
கிறிஸ்து பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை (1888-1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, ”தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டு' 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' போன்ற இவரது மேற்கோள்கள் பிரபலமானவை.
இவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடிய பாடல்
துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.
நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.
ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!
யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
Reference:
Namakkal kavinjar V. Ramalingam Pillai about Jesus Christ
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0079.html
Monday, September 10, 2012
கிறிஸ்துவுக்கு ஒரு இரத்த சாட்சி
கிறிஸ்து முன்னுரைத்த வாக்கியங்கள் அப்படியே நூற்றுக்கு நூறு நிறை வேறிவருவதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு வருகிறோம். நம் இயேசு சொல்லி சென்றிருக்கிறார் ”அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” என்று (மத்தேயு 24:9).
கிறிஸ்தவர்கள் அதிக சதவீதம் உள்ள, பெரும்பாலான சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கிறிஸ்தவர்களாக கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்திலேயே ஒரு 29 வயது இளைஞர் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். 15 பேர் மட்டுமே கூடிய ஒரு வீட்டு ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு கும்பல் அங்கு நின்றிருந்த வாகனங்களையும், சொத்துக்களையும் சேதப்படுத்திவிட்டு இந்த இளைஞரையும் அடித்து கொன்று போட்டு விட்டு சென்றுவிட்டது. அதை தொடர்ந்து குற்றவாளிகளை அரசு பிடிப்பதை விட்டு விட்டு, அமைதியாக இரங்கல் பேரணி சென்ற 13,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. என்ன கொடுமை.கர்த்தர் தாமே இரத்தசாட்சியாக மரித்துப்போன சகோதரன் எட்வின் ராஜ் குடும்பத்துக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பாராக.
I தெசலோனிக்கேயர் 4:16,17,18 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
Wednesday, August 01, 2012
தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
இந்த கடைசி காலத்தில் தமிழ் திரைப்பட உலகின் மத்தியிலும் கர்த்தர் பெரிதான காரியங்களை செய்துவருகிறார். கர்த்தருக்கே மகிமை. கிறிஸ்துவின் வல்லமையை தமிழ் திரைஉலகினர் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு அனைவரும் அவர் அன்பிற்குள் வர நாமெல்லாரும் ஜெபிக்க வேண்டும். ஒருவரையும் புறம்பே தள்ளுகிற தேவன் நம் தேவன் அல்லவே.
http://www.youtube.com/watch?v=o7wS85Fp_to
http://www.youtube.com/watch?v=VODfw5RB1lA
http://www.youtube.com/watch?v=oPJtfu9U_1I
மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா.
யோவான் 6:37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
Tuesday, July 03, 2012
எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி
கர்த்தருக்குள் மிகவும் பிரியமானவர்களே!
ஆண்டவருக்காக மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை கீழே விழத்தள்ள சாத்தான் நடாத்தும் மிகப்பெரிய போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும் காலத்துக்கும் எழும்பாதபடி அடிக்க அவன் வாய்ப்பு பார்த்துக்கொண்டிருக்கிறான். விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இச்செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். நக்கீரன் போன்ற பொது ஊடகங்களில் இவ்விடயம் வெகுவாக விவாதிக்கப்படுகிறபடியால் இனியும் நாம் இதுபற்றி பேசாமல் இருப்பது நல்லதுவல்லவே என எண்ணி இங்கே பகருகிறோம். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரித்தலே மெய்.சம்பந்தப்பட்ட நபர்கள் கூடிய சீக்கிரத்தில் சரியான விளக்கங்களை அளிப்பார்கள் என நம்புவோம்.
சீரழிக்கப்பட்ட இளம்பெண்கள்! அடுத்த நித்தி! - பதறவைக்கும் வாக்குமூலம்! - என நக்கீரன் பத்திரிகை இட்ட கட்டுரை.
முழுகட்டுரை இங்கே
பிரபல கிறிஸ்தவ போதகர் மீது பரபரப்பு செக்ஸ் புகார்!
தேவ ஊழியர்களுக்கு எதிரான எல்லா சாத்தானின் தந்திரங்களும் முறியடிக்கப்பட நாம் ஜெபிப்போம்.
I பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
மத்தேயு 6:13 எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்
இதில் சில சம்பவங்கள் தொடர்பாக கடந்த 2010 நவம்பர் மாத அற்புத ”இயேசுவின் தொனி” பத்திரிகையில் சகோ.வின்செண்ட் செல்வகுமார் அவர்கள் எழுதியுள்ள விளக்கம் இங்கே.
சமீபத்தில் வெளியான நக்கீரன் கட்டுரைக்கு பின் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் கரூரில் அளித்த விளக்கம்.
http://www.youtube.com/watch?v=ShxYjiEch9k
சகோ.வின்சென்ட் செல்வகுமார் குறித்து சகோ.மோகன் சி லாசரஸ்
http://www.youtube.com/watch?v=8HzoWQD4ETc
ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
Tuesday, May 01, 2012
வேதாகம இரண்டு சாட்சிகளுக்காக மில்லியன் டாலர் வீடு ரெடி
வெளிப்படுத்தின விசேசம் 11-ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சாட்சிகளை பற்றி நாம் முன்பே இங்கு பலமுறை பேசியிருக்கிறோம். உபத்திரவகாலத்தின் ஆரம்ப கட்டமான முதல் மூன்றரை வருட காலங்களில் இவர்கள் இருவரும் தேவ ஊழியத்தை எருசலேமை மையமாக கொண்டு செய்வார்கள். அநேக அற்புத அடையாளங்களை செய்யும் இவர்கள் அந்திகிறிஸ்துவுக்கும் உலகத்துக்கும் சிம்மசொப்பனமாக திகழ்வார்கள். இறுதியில் அவனாலேயே இவர்கள் இருவரும் இரத்தசாட்சியாக கொல்லப்படுவார்கள். தெருவில் இவர்கள் உடல்கள் கிடக்க உலகம் அதைப் பார்த்து கொண்டாடும்.
இப்போது அந்த இரண்டு சாட்சிகளுக்காக வீடு வாங்கும் / கட்டும் பணியில் நம் ஊர் ஊழியக்காரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக ஆகும் செலவு 1.3 மில்லியன் டாலர்கள் எனவும் அதில் ஏற்கனவே 900,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது என்ற மகிழ்சியான செய்தியையும் ஏஞ்சல் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்து தான் அந்த இரண்டு இரத்த சாட்சிகளும் வெற்றிகரமாக இயங்குவார்களாம். வானலோக சேனைகள் இங்கே தான் முகாமிட்டு பரத்துக்கு ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள் என்கிறது அந்த செய்தி குறிப்பு.”This will be their Command Center to coordinate their worldwide prophetic ministry. This House will also function as a gateway to the heavenly realm, a supernatural portal not opened to mortals but used by heavenly beings who will be ascending and descending through it with scrolls from the Council of the Prophets in heaven.” இன்னும் 400,000 டாலர்கள் தேவையிருக்க நாமும் நம் பணங்களை இந்த வீடு வாங்க கொடுத்து அதன் மூலம் கடவுளின் சுதந்திரவாளியாக மாற இது ஒரு அபூர்வமான வாய்ப்பு என்கிறது ஏஞ்சல் டிவி.
இந்த இரண்டு இரத்த சாட்சிகளும் குழந்தைகளாக பிறந்து வளர்ந்து இயேசு நாதரைப் போலவே வேதத்தை கற்று ஞானத்திலும் புத்தியிலும் தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகம் அதிகமாக விருத்தியாகி வளர்ந்து வந்தால் அவர்களே அவர்கள் தேவைகளை தேவனிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்வார்களாக இருக்கலாம். அதன் மூலமாக வெளிப்படுத்தின விசேச தேவ வாக்கியங்கள் நிறைவேறும். ஒருவேளை வானத்திலிருந்து திடீரென இளைஞர்களாகவே இவர்கள் குதித்து வந்தால் இந்த வீடு கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த வீடு பற்றிய செய்தி நமது பைபிளில் இல்லை.
ஒரு வேளை தள்ளுபடியாகமங்களில் இருக்கலாம் அல்லது இது ”அவர்கள் தேவனின்“ ஒரு திடீர் திட்டமாக இருக்கலாம்.
இயேசு கிறிஸ்துவானவர் பூமிக்கு வருமுன் வழியை ஆயத்தம் பண்ண வந்த தீர்க்கதரிசியான யோவான் ஸ்நாபகனும் இதே அட்டகாசமான பணியை செய்திருந்தால் மாட்டுக்கொட்டிலில் இயேசு பிறந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பிறகும் இயங்கும் ஒரே கிறிஸ்தவ டிவி சேனல் ஏஞ்சல் டிவியாக இருப்பதால் இவர்கள் இருவரின் உடல்கள் தெருவில் கிடக்கும் போது அதை உலகமெல்லாம் ஒளிபரப்ப வசதியாக ஏஞ்சல் டிவியானது எருசலேமில் சேட்டலைட் வசதிகளை கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகிறது. ”இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள் இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்: தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்”
அப்போஸ்தலர் 5:38,39
ஏஞ்சல் டிவியின் House Of The Prophets(Two Witnesses),Jerusalem திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள
http://www.jesusministries.org/Newsletter%202012%20English%20(web).pdf
மத்தேயு 24:4 ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
Tuesday, March 20, 2012
கடவுள் காமெடி
சாதி மத இன பேதமின்றி உலகெங்கிலுமிருந்து அனைத்து தரப்பிலும் கடவுளை வம்புக்கிழுத்து காமெடியாய் பேசுகிறவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அதில் சமீபத்தில் ஜிம்பாவே அதிபர் ராபட் மொகாபேயும் அடக்கம். பல்வேறு சுகவீனங்கள் மத்தியிலும் தப்பி பிழைத்து தனது 88-ஆவது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த முகாபே, “பல முறை நான் செத்திருக்கிறேன். அதனால் நான் கிறிஸ்துவையும் மிஞ்சிவிட்டேன்” என்று ஜோக்கடித்திருக்கின்றார். நல்ல காமெடி சார்.
“கடவுள் மனிதனாக பிறந்து திருவள்ளுவர் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும்” என்று ஒரு மிமிக்ரி பாடகர் காமெடியாக பாடியது நினைவுக்கு வருகின்றது. இது தான் அவர் தன் மனிதப்பிறவியில் கண்ட மாபெரும் பாடு போல. மேற்கண்ட இருவரின் புரிதலும் நல்ல ரசனை. நல்ல காமெடி.
அதையும் மிஞ்சியது இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் அவர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு “அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுத்து வந்தது கிருஸ்தவ சர்ச் மிஷனரிகள்” என்பதாம்.
எல்லா காமெடியிலும் கடைசி காமெடி தான் சூப்பரோ சூப்பர்.
I கொரிந்தியர் 14:20 சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.
Ref: Time March 5,2012 ”I have died many times.That`s where I have beaten Christ"- Zimbabwe President Robert Mugabe.
http://tamil.oneindia.in/news/2012/03/20/tamilnadu-rama-gopal-sees-christian-churches-behind-koodankulam-aid0090.html
Friday, March 16, 2012
முன்னாள் திரைப்பட நடிகை மகாலட்சுமியின் சாட்சி
1980-களில் ராணிதேனி, நன்றி முதலான பல தமிழ் திரைப்படங்களில் மகாலட்சுமி என்ற பெயரிலும், பின்பு கர்நாடக திரை உலகில் ஸ்ரீ என்ற பெயரிலும் நுழைந்து பிரபல நடிகையாக வாழ்ந்த முன்னாள் நடிகர் ஏ.வி.எம் ராஜன் அவர்களின் மகள் ரேச்சல் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருக்கு சாட்சியாக வாழும் அனுபவ சாட்சி. நீங்கள் விசுவாசத்தில் வளரவும் உறுதிப்படவும் இங்கே வழங்குகிறோம். இந்த சாட்சிகளை உங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள்.
Testimony of old Kannada actress Mahalakshmi Shree daughter of AVM Rajan.
Part:1
Part:2
Download as MP3
AVM Rajan daughter Mahalakshmi Testimony 01
AVM Rajan daughter Mahalakshmi Testimony 02
எபிரெயர் 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
Tuesday, January 17, 2012
இந்தியா கிறிஸ்துவுக்கு சொந்தமாகுமா?
Credit goes to ஜீவஊற்று-சகோ.D.விமலன்.
Friday, February 27, 2009
இந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்
St Thomas the apostle of india
Watch on iPod/iPhone/PSP
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்