Showing posts with label Jerusalem. Show all posts
Showing posts with label Jerusalem. Show all posts

Sunday, September 01, 2013

கண்டுபிடிக்கப்பட்ட தாவீது மன்னர் அரண்மனை

பைபிள் கட்டுக்கதைகளின் தொகுப்பு அல்ல. அது ஒரு சரித்திர புஸ்தகம். அதில் எழுதப்பட்டுள்ளது சரித்திரம் எனில் அது சான்றுகளையும் விட்டு சென்றிருக்க வேண்டும். இதோ வேதாகமத்தை நிரூபிக்கும் இன்னும் ஒரு சான்று. பைபிள் சொல்லுகிறது தாவீது இஸ்ரவேலின் மேல் ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான். தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் (அரண்மனையை) கட்டினார்கள்.தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.(II சாமுவேல் 5).இந்த தாவீதின் அரண்மனையை தான் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். வேதாகமம் இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜீவனுள்ள தேவனுக்கே மகிமை.


Saturday, July 20, 2013

தமிழில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்



Church of the Pater Noster என்பது எருசலேம் நகரில் ஒலிவமலையின் மேல் அமைந்துள்ள ஓர் ஆலயம். இவ்விடத்தில் தான் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பரமண்டல ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தார் என வேத ஆராய்சியாளர்கள் நம்புகிறார்கள் (மத்:6 9 13).இந்த ஆலயத்தின் சுவர்களில் உலகின் பல்வேறு மொழிகளில்  பரமண்டல ஜெபம் பொறிக்கப்பட்டுள்ளது.மேலே நீங்கள் படத்தில் காண்பது அங்கே நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்.
என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.சங் 5:2

Tuesday, December 11, 2012

த‌லாய் லாமாவுக்கு கூட‌ தெரியாத‌ இர‌க‌சிய‌ம்.


இன்றைக்கும் யூத‌ ச‌முதாய‌ம் பூமியில் பிழைத்திருப்ப‌து வ‌ர‌லாற்று அறிஞர்க‌ள் ப‌ல‌ருக்கும் ஆச்ச‌ரிய‌மான‌ ஒரு விச‌ய‌ம்.ப‌ல்வேறு போராட்ட‌ங்க‌ள் க‌ல‌க‌ங்க‌ள் எதிர்ப்புக‌ள் சிறைபிடிப்புக‌ள் சித‌ற‌டித்த‌ல்க‌ள் ப‌டுகொலைக‌ள் ம‌த்தியிலும் இன்னும் அந்த‌ ச‌முதாய‌ம் த‌னி க‌லாச்சார‌ம் ப‌ண்பாடு ம‌த‌ம் மொழியென‌ வாழ்ந்து கொண்டிருப்ப‌து விய‌க்க‌ த‌கு காரிய‌ம்.ஆனால் அவ‌ர்க‌ளின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இர‌க‌சிய‌ம் ப‌ல‌ருக்கும் தெரியாது. 1986ம் வ‌ருட‌த்திய‌ ச‌மாதான‌த்துக்கான‌ நோப‌ல் ப‌ரிசை பெற்ற‌வ‌ர் எலியேச‌ர் வீச‌ல் (Eliezer Wiesel) .இவ‌ர் ஒரு யூத‌ர். நாசி‌க்க‌ளின் யூத‌ ப‌டுகொலையிலிருந்து (Holocaust) த‌ப்பிய‌‌ரும் பிர‌ப‌ல‌ விரியுரையாளரும் ஆவார். ஒரு முறை திப‌த்திய‌ ம‌த‌ த‌லைவ‌ரான‌ த‌லாய்லாமா வீச‌லை ச‌ந்திக்க‌ ஆர்வ‌ம் தெரிவித்தார். விய‌ந்து போன‌ வீச‌ல் கார‌ண‌ம் அறிய‌ முற்ப‌ட்ட‌போது, த‌லாய் லாமா சொன்ன‌ ப‌தில் இது தான்."உங்க‌ள் இன‌த்தார் ப‌டாத‌ பாடுக‌ள் இல்லை இன்ன‌ல்க‌ள் இல்லை.2000 ஆண்டுக‌ளுக்கு முன் சிறைபிடிக்க‌ப‌ட்டு போனார்க‌ள். ஆனாலும் இன்றைக்கு பிழைத்திருக்கிறார்க‌ள். நாங்க‌ள் எங்க‌ள் தேச‌த்தை விட்டு வெளியே வ‌ந்தோம். ஆனால் இன்றும் அக‌திக‌ளாக‌வே இருக்கிறோம்.க‌ற்றுத்தாருங்க‌ள் நீங்க‌ள் எப்ப‌டி பிழைத்தீர்க‌ளென". (Spector,S.A;2011)


யூத‌ குல‌ம் இன்னும் வாழ்வ‌தின் இர‌க‌சிய‌ம் இது தான். அது த‌லாய் லாமாவுக்கு கூட‌ தெரியாத‌ இர‌க‌சிய‌ம்.


"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே." யாத் 20:2.

"நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்." எசேக்கியேல் 36:24

"அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." சகரியா 8 :8

இந்த ஜீவ‌னுள்ள‌ தேவ‌னை நீயும் அண்டிக் கொள்வாயா?

Reference: Romanticism/Judaica: A Convergence of Cultures.By Sheila A. Spector (2011) Pg 13

Friday, September 21, 2012

காத்துக்கிடக்கும் கிழக்கு வாசல்

இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களோ இல்லையோ, ஆனால் இந்த கிழக்கு வாசல் ரொம்பநாட்களாக காத்து கிடக்கிற கதை தெரியுமோ உங்களுக்கு. இந்த வாசல் வழியாகத் தான் யூதருக்கு ராஜாவாக அந்த முதல் குருத்தோலை திருநாளில் கடைசியாக எருசலேமுக்குள் இயேசுகிறிஸ்து நுழைந்தார். இப்போது மீண்டும் அவர் மட்டுமே இந்த வாசல் வழியாக ராஜாவாக நுழையவேண்டும் என்பதற்காக இந்த வாசல் இன்னும் பூட்டப்பட்டிருக்கிறது ஒரு அதிசயகரமான சம்பவம்.அதை பூட்டி வைத்தது ஒரு முகமதிய மன்னனான சுல்தான் சுலைமான் மன்னன்.

வேதம் சொல்லுகிறது”இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.” எசேக்கியேல்:44:2 அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.

கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப் பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.

அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்? மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். ”இது அதிபதிக்கே உரியது,  அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப்  பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.” எசேக்கியேல் 44:3.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.(சங்கீதம் 24:9,10)

Thursday, August 16, 2012

வெளிப்படுத்தின விஷேசத்தின் ஆழ்ந்த சத்தியங்கள்

அன்றன்றுள்ள அப்பம் ஊழியங்கள் வழங்கும் வெளிப்படுத்தின விஷேசத்தின் ஆழ்ந்த சத்தியங்கள்-வீடியோ செய்திகள் தொகுப்பு.தேவ செய்திகள் வழங்குபவர்: சகோ.J.சாம் ஜெபத்துரை
Antantulla Appam Ministries, Elim Glorious Revival Church - Revelation bible study by Bro.J.Sam Jebadurai


Revelation BIBLE STUDY - Part - 1



Revelation Bible Study Part- 2



Revelation BIBLE STUDY - Part - 3



Revelation Bible Study Part- 4



Revelation Bible Study Part-5



Revelation Bible Study Part-6



Revelation Bible Study Part- 7



Revelation BIBLE STUDY - Part - 8



Revelation BIBLE STUDY - Part - 9



Revelation BIBLE STUDY - Part - 10



Revelation BIBLE STUDY - Part - 11



Revelation BIBLE STUDY Part-12



Revelation BIBLE STUDY - Part - 13



Revelation BIBLE STUDY - Part - 14



Revelation BIBLE STUDY - Part - 15



Revelation BIBLE STUDY - Part - 16



Revelation BIBLE STUDY - Part - 17



Revelation BIBLE STUDY - Part - 18



Revelation BIBLE STUDY - Part - 19



Revelation BIBLE STUDY - Part - 20



Revelation BIBLE STUDY - Part - 21



Revelation BIBLE STUDY - Part - 22



Revelation BIBLE STUDY - Part - 23



Revelation BIBLE STUDY - Part - 24



Revelation BIBLE STUDY - Part - 25



Revelation BIBLE STUDY - Part - 26



Revelation BIBLE STUDY - Part - 27



Revelation BIBLE STUDY - Part - 28



Revelation BIBLE STUDY - Part - 29



Revelation BIBLE STUDY - Part - 30



Revelation BIBLE STUDY - Part - 31



Wednesday, August 08, 2012

எருசலேம் - The Ultra-Holy City

யூத குல ஆச்சாரங்களை மிகச் சிரத்தையாக கடைபிடிக்கின்றன அல்ட்ரா ஆர்தோடாக்ஸ் யூதர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் பெருகியிருக்கின்ற படியால் அது ஒரு "புதிய எருசலேமாக" அல்ட்ரா-ஹோலி சிட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது என டைம் பத்திரிகை (13Aug2012) அச்சம் வெளியிட்டிருக்கின்றது. இதில் ஆச்சரிய பட என்ன இருக்கின்றது? சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்: அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(சகரியா:8:6) எருசலேம் முழுவதும் ஆரம்பக் கல்விக் கூடங்களின் 65 சதவீத பிள்ளைகள் இந்த யூதர்களின் பிள்ளைகள் தானாம். இப்படி இஸ்ரேலில் சமீபகாலமாக இந்த அல்ட்ரா ஆர்தோடாக்ஸ் யூதர்களின் எண்ணிக்கை மிக வேகமாக பெருகிவருகின்றது. இவர்கள் தோராவை படிப்பவர்கள். ரபி எனப்படும் போதகமார்கள் சொல்லும் பிரமாணங்களை வரி பிசகாமல் பின் பற்றுபவர்கள். அவர்கள் அணியும் கருப்பு ஆடை, தோற்றம், முடி அமைப்பு எல்லாமே ஒரு சீருடை போலவே இருக்கும். எருசலேமை மொய்த்திருக்கும் இவர்களை பற்றி வேதம் தீர்க்கதரிசனமாக முன்பே கூறியிருக்கின்றது. இவர்களின் ஆதிக்கம் வேதாகமத்தை நிரூபிப்பதோடு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் சமீபித்திருக்கிறது என கூறுகின்றது.

சகரியா 8:4-8
திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும். இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tuesday, May 01, 2012

வேதாகம இரண்டு சாட்சிகளுக்காக மில்லியன் டாலர் வீடு ரெடி

                    வெளிப்படுத்தின விசேசம் 11-ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சாட்சிகளை பற்றி நாம் முன்பே இங்கு பலமுறை பேசியிருக்கிறோம். உபத்திரவகாலத்தின் ஆரம்ப கட்டமான முதல் மூன்றரை வருட காலங்களில் இவர்கள் இருவரும் தேவ ஊழியத்தை எருசலேமை மையமாக கொண்டு செய்வார்கள். அநேக அற்புத அடையாளங்களை செய்யும் இவர்கள் அந்திகிறிஸ்துவுக்கும் உலகத்துக்கும் சிம்மசொப்பனமாக திகழ்வார்கள். இறுதியில் அவனாலேயே இவர்கள் இருவரும் இரத்தசாட்சியாக கொல்லப்படுவார்கள். தெருவில் இவர்கள் உடல்கள் கிடக்க உலகம் அதைப் பார்த்து கொண்டாடும்.

                   இப்போது அந்த இரண்டு சாட்சிகளுக்காக வீடு வாங்கும் / கட்டும் பணியில் நம் ஊர் ஊழியக்காரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக ஆகும் செலவு 1.3 மில்லியன் டாலர்கள் எனவும் அதில் ஏற்கனவே 900,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது என்ற மகிழ்சியான செய்தியையும் ஏஞ்சல் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்து தான் அந்த இரண்டு இரத்த சாட்சிகளும் வெற்றிகரமாக இயங்குவார்களாம். வானலோக சேனைகள் இங்கே தான் முகாமிட்டு பரத்துக்கு ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள் என்கிறது அந்த செய்தி குறிப்பு.”This will be their Command Center to coordinate their worldwide prophetic ministry. This House will also function as a gateway to the heavenly realm, a supernatural portal not opened to mortals but used by heavenly beings who will be ascending and descending through it with scrolls from the Council of the Prophets in heaven.” இன்னும் 400,000 டாலர்கள் தேவையிருக்க நாமும் நம் பணங்களை இந்த வீடு வாங்க கொடுத்து அதன் மூலம் கடவுளின் சுதந்திரவாளியாக மாற இது ஒரு அபூர்வமான வாய்ப்பு என்கிறது ஏஞ்சல் டிவி.

                 இந்த இரண்டு இரத்த சாட்சிகளும் குழந்தைகளாக பிறந்து வளர்ந்து இயேசு நாதரைப் போலவே வேதத்தை கற்று ஞானத்திலும் புத்தியிலும் தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகம் அதிகமாக விருத்தியாகி வளர்ந்து வந்தால் அவர்களே அவர்கள் தேவைகளை தேவனிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்வார்களாக இருக்கலாம். அதன் மூலமாக வெளிப்படுத்தின விசேச தேவ வாக்கியங்கள் நிறைவேறும். ஒருவேளை வானத்திலிருந்து திடீரென இளைஞர்களாகவே இவர்கள் குதித்து வந்தால் இந்த வீடு கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த வீடு பற்றிய செய்தி நமது பைபிளில் இல்லை. ஒரு வேளை தள்ளுபடியாகமங்களில் இருக்கலாம் அல்லது இது ”அவர்கள் தேவனின்“ ஒரு திடீர் திட்டமாக இருக்கலாம்.

               இயேசு கிறிஸ்துவானவர் பூமிக்கு வருமுன் வழியை ஆயத்தம் பண்ண வந்த தீர்க்கதரிசியான யோவான் ஸ்நாபகனும் இதே அட்டகாசமான பணியை செய்திருந்தால் மாட்டுக்கொட்டிலில் இயேசு பிறந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பிறகும் இயங்கும் ஒரே கிறிஸ்தவ டிவி சேனல் ஏஞ்சல் டிவியாக இருப்பதால் இவர்கள் இருவரின் உடல்கள் தெருவில் கிடக்கும் போது அதை உலகமெல்லாம் ஒளிபரப்ப வசதியாக ஏஞ்சல் டிவியானது எருசலேமில் சேட்டலைட் வசதிகளை கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகிறது. ”இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள் இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்: தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்” அப்போஸ்தலர் 5:38,39

ஏஞ்சல் டிவியின் House Of The Prophets(Two Witnesses),Jerusalem திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.jesusministries.org/Newsletter%202012%20English%20(web).pdf

மத்தேயு 24:4 ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

Saturday, April 28, 2012

துளிர்க்கும் அத்திமரம்

துளிர்க்கும் அத்தி மரம் - சகோ.வின்சென்ட் செல்வகுமார்

Friday, August 07, 2009

எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?


எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
அவரவர் தொழுகைகளுக்கென வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களும், சனிக்கிழமை யூதர்களும், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களும் என கூடும் படுபிசியான நகரம் ஜெருசலேம். வார இறுதிகளில் ஜனக்கூட்டம் நிரம்பிவழியும். மூன்று மதத்தவரும் இந்நகரத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தரோ ”என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமை... தெரிந்துகொண்டேன் (II நாளா:6:6) என கர்த்தர் அக்காலத்திலேயே அந்நகரத்தை சொந்தம் கொண்டாடிவிட்டார். யாரும் அவரிடமிருந்து அதை பிடுங்கமுடியாது. அது அவருக்கு பிடித்தமானதொரு piece of real estate on planet earth.வேதத்தில் மட்டும் 811 முறை இந்த எருசலேம் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் இது சாலேம் எனவும் (சங்:76:2) 152 இடங்களில் இது சீயோன் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. பரிசுத்த நகரம், தேவனுடைய நகரம், மகாராஜாவின் நகரம் என இன்னும் பிற பெயர்களிலும் இது பல இடங்களில் அறியப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ராஜாவாயிருந்த சாலோமான் எருசலேமிலே தேவாலயம் கட்டி முடித்த உடன் கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி “என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் அதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.” என்றார். (II நாளா:7:16) இப்படியாக இருக்கும் தேவனுடைய பரிசுத்த நகரத்தை துண்டாடும் முயற்சியில் மனிதர்கள் இன்றைக்கு ஈடுபட்டுள்ளார்கள். தனது தலைநகராக இஸ்ரேல் வைத்திருக்கும் அதேவேளையில் பாலஸ்தீனர்களும் two-state solution-ல் தங்கள் தலைநகராக அதை கேட்கிறார்கள். உலகின் பெரும்தலைகள் எருசலேமை இரண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அல்லது அதுதான் தான் சரியான தீர்வாக கருதுகின்றனர்.

இன்றைக்கு ஜெருசலேமில் இருக்கும் இஸ்லாமியரின் தங்கமசூதி (Dome of the Rock) தொடப்படாமல் பக்கத்திலேயே யூதர்களில் தேவாலயம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தங்க மசூதியின் வடமேற்கே 330 அடி தள்ளியே பழைய தேவாலயம் இருந்ததாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது புதிதாக கட்டப்படவிருக்கும் தேவாலயத்தின் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். பாருங்கள் வெளி:11:1,2 சொல்வதை கவனியுங்கள். "பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி:நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுது கொள்ளுகிறவர்களையும் அளந்துபார். ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்."

இந்த வசனத்தின் படி எருசலேம் நகரம் இரண்டாக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. குறைந்தது மூன்றரை ஆண்டுகள் இந்நகரம் துண்டாடப்பட்டிருக்கும். அதற்கு வரப்போகும் கள்ளத்தீக்கதரிசி கள்ளதீர்க்கதரிசனங்களை சொல்லி யூதர்களை மனம் மாற்றுவான். அந்திகிறிஸ்து அச்செயலுக்கு தலைவனாய் இருந்து சமாதான பிரபு போல தோன்றுவான். எருசலேமிலே யூதர்களும் புறஜாதியாரும் சேர்ந்து ஒன்றாக இருப்பார்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டாயிருக்கும்.

அப்புறம் என்னவாகும்? I தெசலோ 5:3 சொல்லுகிறது. சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

ஜெருசலேமை இரண்டாக்க முயல்பவர்களின் கதி என்னவாகும்? கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 12 9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

கட்டப்படும் பலிபீடம்

வெளி:11:1-ல் சொல்லப்பட்டுள்ள பலிபீடத்தைக் கட்டும் பணி கடந்த ஜூலை 9-ம் தியதி தொடக்கப்பட்டுள்ளது. தானியேல் 11:31-ல் சொல்லப்பட்டுள்ள அன்றாட பலியும் இங்கே தான் நடைபெறும். இதை Temple Institute எனும் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதே நாள்தான் (Tisha B’av) சரியாக 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த தேவாலயம் இடிக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பலிபீடம் 3 அடி நீளமும் 3 அடி உயரமும் 2 அடி அகலமுமாயிருக்கும். இதற்கான கற்கள் மனிதரால் தொடப்படாதவையாய் இருக்க வேண்டு மென்பதற்காக சவக்கடலின் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்டதாம். மேலும் தேவாலயத்துக்கு தேவையான பாத்திரங்கள், பேழை ,குத்துவிளக்குகள் எல்லாம் ஏற்கனவே இவர்கள் தயார் செய்து ரெடியாக வைத்துள்ளார்கள்.

Monday, February 16, 2009

புனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ



Watch on iPod/iPhone/PSP

Saturday, May 27, 2006

ஜெருசலம் எனும் நகரம்

ஜெருசலம் கிறிஸ்தவர்களின்,யூதர்களின் புனித நகரம்.முகமதியரும் இதை புனித நகரமாக கருதுகிறார்கள்.யூதர்களின் பைபிளில் இப்பெயர் 669 முறையும் கிறிஸ்தவர்களின் பைபிளில் இப்பெயர் 154 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.முகமதியரின் புனித குரானில் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவில்லை.பரிசுத்த நகரமாகிய இது கடல் மட்டத்திலிருந்து 2600 அடி உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.இயேசு இதை மகாராஜாவின் நகரம் என்று கூறினார்.எருசலேமில் தான் உலக புகழ் பெற்ற எபிரேய பல்கலைக்கழகம் உள்ளது.இயேசு உலக இரட்சிப்புக்காக மரித்து உயிர்த்தது இந்நகரில் தான்.எருசலேம் என்பதற்கு சமாதானத்தின் நகரம் (Heritage of Peace) என்று பொருள்.ஆனால் கடந்த 3000 ஆண்டுகளில் 20 முறை முற்றுகை யிடப்பட்டும்,இடிக்கப்பட்டும்,திரும்பவும் கட்டப்பட்டும் இருக்கிறது.எனினும் கர்த்தர் இதனை தலைநகராக கொண்டுதான் உலகை ஆளுவார் என வேதம் கூறுகிறது.தலைநகரமாகிய எருசலேம் தான் இஸ்ரேலிலுள்ள மகாபெரிய நகரமாகும்.தற்போதைய மக்கள்தொகை 704,900 ஆகும்.72 சதவீதம் யூதர்கள் இங்குண்டு.

மத்தேயு:5:35.
பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம்.

ஏசாயா:66:20.
இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல,..., சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

வெளி:20:9.
அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

லூக்கா:21:24.
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.