Tuesday, December 30, 2008

ஒரு முன்னாள் நடிகையின் சாட்சி

Tamil cinema ex-actress Nagma`s testimony in Bro.Mohan C Lazarus meeting who she accepted Jesus Christ as her personal savior.



Watch on iPod/iPhone/PSP

Thursday, November 20, 2008

ஆமேன் கர்த்தாவே வாரும்

பிரசவ வேதனையில் துடிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையில் இருக்கிறது பூமி . எப்போது குழந்தை பிறக்கும் எப்போது நான் கையிலெடுத்து அதை கொஞ்சுவேன் என அவள் மனம் துடித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு கிறிஸ்துவின் பிள்ளையின் மனநிலையும் அப்படியே. இவ்வுலக பாடுகளெல்லாம் வரப்போகும் மகிமைமுன் தூசியும் குப்பையுமே.

வெளிப்படுத்தல் 21-ம் அதிகாரம் நாம் ஒவ்வொருவரும் பெறப்போகும் ஒரு புதிய அனுபவத்தைப்பற்றி பேசுகிறது.
இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. மனுஷர்களிடத்திலே தேவன் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின;

என்ன ஒரு அனுபவம்! ஆமேன் கர்த்தாவே சீக்கிரமாய் வாரும்

Tuesday, November 18, 2008

காலம் குறுகியது

நாம் ஒரு அற்புதமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனித குல வரலாற்றில் வேறெந்த காலத்திலும் இல்லாதவாறு இக்குறுகிய காலத்தில் பல்வேறு வேதாகம தீர்க்கதரிசன வசனங்கள் நம் கண்முன்னே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவின் வருகைக்குமுன்னால் உலகத்தின் நிலை எப்படி இருக்கும் என அவ்வசனங்கள் சொல்லியுள்ளனவோ அப்படியே உலகத்தில் காரியங்கள் நடந்துவருகின்றன.கடந்த நூறு வருடங்களில் உலகம் கடந்து வந்த பாதையை இக்குறுகிய வீடியோவில் நீங்கள் காணலாம்.
மனிதன் விமானத்தில் பறக்க தொடங்கினான்.இரு உலகப் போர்கள், பஞ்சங்கள், வறுமைகள், மனிதனிடையே போட்டி பொறாமைகள், புயல், சூறாவளி ,பல அந்திகிறிஸ்துகள், சீறி பாய்ந்த எரிமலைகள், அறிவு பெருத்து போகுதல், இஸ்ரேல் ராஜ்யத்தின் உதயம், கணிப்பொறி கண்டுபிடிப்பு, உலகின் பலபகுதிகளில் குழப்பங்கள் , கொலைகள், வெறிகள், விண்வெளி பயணங்கள், பல சர்வாதிகாரிகள், வெடிக்கும் பீரங்க்கிகள், தொடரும் குண்டு வெடிப்புகள் இப்படி 100 ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் பல. உங்களுக்கு தெரியுமா? 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட மனிதனின் முக்கிய போக்குவரத்து வாகனமாய் இருந்தது குதிரைகள் மட்டுமே. இப்போது வாகனங்களும் விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று மனிதன் விண்வெளிக்கும் சுற்றுலா போகிறான்.இவையெல்லாம் கடந்த 110 ஆண்டுகளுக்குள் நடந்து முடிந்தன.

தானியேல் 12:
4.அப்பொழுது (இறுதிகாலத்தில்) அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்

மத்தேயு 24:
6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.
7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

Monday, November 10, 2008

கண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா

அடிமையாய் எகிப்திலிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் மீட்கப்பட்டு மோசஸ் தலைமையில் பாலைவனவெளியில் வழிநடத்தப்பட்டு வந்தார்கள். அப்போது ஜனங்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்ததாகவும் அவ்விடத்தில் தண்ணீர் இல்லாததால் ஜனங்களெல்லாரும் மோசேயை பார்த்து முறுமுறுத்ததாகவும் பைபிளில் படிக்கிறோம். அப்போது மோசே கடவுள் கட்டளையிட்டபடியே அங்கிருந்த ஒரு கற்பாறையை அடிக்க அது இரண்டாக பிளந்து அதிலிருந்து தண்ணீர் புறப்பட்டது. ஜனங்களின் தாகத்தை தீர்த்தது. அந்த இடத்துக்கு மோசே மேரிபா என பேரிட்டதாக பைபிளில் படிக்கிறோம். இந்த இடம் இப்போது வேத ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் சவுதி அரேபியா நாட்டின் வடமேற்கு பகுதியில் Jebel el Lawz எனும் மலைப்பகுதியில் உள்ளது.இந்த மலையே அந்த கால சீனாய் மலை (ஓரேப்) எனவும் இங்கு தான் முட்செடியினோடே தேவன் மோசேக்கு தோன்றினார் எனவும் நம்பப்படுகிறது.

Google earth location


சில படங்கள்




யாத்திராகமம் 17 அதிகாரம்

1. பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.

2. அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

3. ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.

4. மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

5. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.

6. அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

7. இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.

Friday, August 22, 2008

அவர்களுடைய தேசத்துக்கு திரும்பிவரப்பண்ணுவேன்

எரேமியா 16:15இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இந்த வேதவசனம் எப்படி நிறைவேறுகிறதென பாருங்கள்.


இந்திய யூத பழங்குடியினருக்கு இஸ்ரேல் அடைக்கலம்

டெல்அவிவ்: யூதர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் பினேய் மெனேஷெ (Bnei Menashe) இனத்தைச் சேர்ந்த 7,232 இந்தியர்களை தனது நாட்டில் குடியேறச் செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் இந்த சமூகத்தினர் இந்தியாவில் பழங்குடி அந்தஸ்து பெற்றவர்கள் ஆவர்.

யூதர்களான இவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு குடிபெயர்ந்தனர். இஸ்ரேலில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளதால், இந்தியாவில் வசிக்கும் இவர்களை மீண்டும் இஸ்ரேலிலேயே குடியமர்த்த வேண்டும் என அந் நாட்டில் கோரிக்கை எழுந்தது.

இது குறித்து அந் நாட்டு பிரதமர் எகுட் ஓல்மெர்ட் விவாதித்து வருகிறார். விரைவில் இவர்கள் இஸ்ரேலில் குடியேற்றப்படுவார்கள் என அந் நாட்டின் முன்னணி நாளிதழளான ஹார்ரேட்ஸ் கூறியுள்ளது.

ஏற்கனவே இந்த இனத்தைச் சேர்ந்த 1,400 பேர் இந்தியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2008/08/22/world-israel-likely-to-admit-over-7000-indian-jews-from-mizo.html

Saturday, August 16, 2008

பாதி இரும்பும் பாதி களிமண்ணும்

இன்றைய ஐரோப்பிய யூனியன் குறித்து தானியேல் இவ்வாறு கூறுகிறான்.

தானியேல் 2-ம் அதிகாரம் 41. பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.42. கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும். 43. நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.

மேதிய பெர்சிய அரசுக்குப் பிறகு, நேபுகாத்நேச்சார் கண்ட சிலையின் வெண்கலதினாலான வயிறு தொடை இவற்றிற்கு ஒப்பான இன்னொரு வல்லரசு எழும்பும் என்ற தானியேலின் கூற்றின்படி கிரேக்க சாம்ராஜ்யம் உலகில் ஸ்தாபிக்கபடுகிறது. அதற்கு பிறகு சிலையின் இரும்பிலான கால்களுக்கு ஒப்பாக நான்காவதாய் ஒரு வல்லரசு எழும்பும், என்று தானியேல் முன்னறிவித்தபடி ரோமப்பேரரசு கிரேக்க சாம்ராஜ்யத்தின் முடிவில் எழும்புகிறது.இரும்பைப்போல உரம் வாய்ந்ததாய் எழும்பின ரோமப்பேரரசு , சிலையின் இரு கால்களுக்கு ஏற்ப கிழக்கு,மேற்கு என்று இரண்டாக பிரிகிறது. இவையாவும் சரித்திரமாகும். இவ்வாறு தீர்க்கதரிசனங்கள் சரித்திரப்பூர்வமாய் நிறைவேறுவது கிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகளில் முக்கியமானதாகும்.

நேபுகாத்நேச்சார் கண்ட சிலையின் பத்துவிரல்கள் இரும்பும் களிமண்ணுமாய் இருந்தன என்று வேதத்தில் வாசிக்கிறோம். இந்த பத்துவிரல்களும் ஒரு புதிய சாம்ராஜ்யம் என்று தானியேல் கூறவில்லை.அவை ரோம சாம்ராஜ்யத்திலிருந்து எழும்பும் பல நாடுகளின் ஒரு கூட்டமைப்பையே குறிக்கின்றன என்று நாம் நிதானிக்கலாம். தானியேலின் தீர்க்கதரிசனத்தின் படி பாபிலோனிய, மேதிய பெர்சிய, கிரேக்க, ரோமப் பேரரசுகள் உலகின் வல்லரசுகளாய் இருந்து முடிந்துவிட்டன. சிலையின் பத்து விரல்களுக்கு ஒப்பான ரோமப்பேரரசிலிருந்து எழும்பும் சில நாடுகள் சேர்ந்த அமைப்பின் காலத்திற்கு இப்போது உலகம் வந்துள்ளது. அதன்படி 1957 ஆம் ஆண்டு பழைய ரோம சாம்ராஜ்யம் எந்தெந்த நாடுகளில் வியாபித்திருந்ததோ அந்தந்த இடங்களைச் சேர்ந்த ஆறு ஐரோப்பிய நாடுகள் ரோமில் கூடி ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு "European Economic Community"என்ற அமைப்பை ஏற்படுத்தின. இது "ஐரோப்பிய பொதுச்சந்தை" (European Common Market) என்று அழைக்கப்படுகிறது. இது 1958ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி செயல்படத் துவங்கியது. இந்த ஒப்பந்தம் "Treaty of Rome"என்று அழைக்கப்பட்டது. இதனுடைய ஆரம்ப விழா பெல்ஜியத்திலுள்ள பிரசல்சில் கொண்டாடப்பட்டது. ஆறு நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்திருந்தும் பத்து கொடிக்கம்பங்களுடன் இந்த ஆரம்பவிழா நடந்தது.(இப்போது இதில் 27 ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன) இந்த E.E.C தான் நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தில் தோன்றிய சிலையின் பத்துவிரல்களுக்கு ஒப்பான வல்லரசாகும். இந்த E.E.C ஓரு பொருளாதார அல்லது வாணிப அமைப்புத்தானே. அது எவ்வாறு ஒரு வல்லரசாகலாம் என்ற கேள்வி எழலாம்.இந்த E.E.C நிறைவேற்றிவருகிற தீர்மானங்கள் E.E.C ஒரு வல்லரசாக மாறிவருகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.கீழ்கண்டவை E.E.C யின் தீர்மானங்களில் ஒரு சிலவாகும்:

ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் (United states of Europe) என்ற அமைப்பை ஏற்படுத்துதல்.(இது இன்று EU அதாவது European Union என்று ஆகியிருக்கின்றது.)

E.E.C யில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே பாஸ்போர்ட் முறையை நீக்கிவிடுதல் (ஏற்கனவே European standard passport என்ற பெயரில் அனைத்து அங்கத்தின நாட்டு குடிமக்களுக்கும் burgundy நிறத்தில் பொது பாஸ்போர்ட் இப்போது வழங்கப்படுகிறது.இவர்கள் அங்கத்தின நாடுகளிடையே விசா இன்றி சென்றுவரலாம்)

E.E.C நாடுகளுக்கு ஒரு பொது நாணய முறையைக் கொண்டு வருதல் (Common currency) (ஏற்கனவே வந்தாயிற்று. இன்றைக்கு இதன் 15 அங்கத்தினர்களிடையே யூரோ(Euro)எனும் பொது கரன்சி புழக்கத்திலுள்ளது)

E.E.C நாடுகளுக்கென்று ஒரு தனி பொது ராணுவத்தை நிறுவுதல் (European Union battlegroups (EU BGs) என்ற பெயரில் ஒரு கூட்டுப்படை 2007 முதல் செயல்படத்துவங்கியுள்ளது)

இத்தீர்மானங்கள் E.E.C அதாவது ஐரோப்பிய யூனியன் ஒரு வல்லரசாக மாறிவருகிறது என்பதை உணர்த்துகின்றன.இப்போது European Union-ல் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா,நெதர்லாந்து, போலந்து, போர்சுகல், ரொமானியா, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து என்னும் இருபத்தேழு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. மேலும் இந்த அமைப்பு தனக்கென்று ஒரு European Parliament என்ற பாராளுமன்றத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு 1979-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தேர்தலும் நடத்திவருகின்றது. இந்த பாராளுமன்றத்தில் இன்றைக்கு 785 பேர் உறுப்பினர்கள். தற்போதைய ஜனாதிபதி José Manuel Barroso ஆவார். இந்தியாவிலும் Delegation of the European Commission to India, Bhutan and Nepal தலைநகர் டில்லியில் இயங்கிவருகின்றது. இந்த ஐரோப்பிய கமிஷனின் தலைமையகம் இப்போது பெல்ஜியத்திலுள்ள பிரசல்சில் உள்ளது. பெரிய உலக பாங்குகளின் இணைப்பு சங்கிலி இப்போது பிரசல்சோடு இணைக்கப்பட்டுள்ளது. உலகமன்றத்திலுள்ள 160 கம்புயூட்டர் மையங்களும் பிரசல்சோடு இணைக்கப்படுள்ளன. European Union-னின் தலைமையகத்தில் மூன்று அடுக்குமாடி உயரமுள்ள ஒரு கம்புயூட்டர் உள்ளது. அதன் பெயர் Beast (மிருகம்) என்பதாகும். அந்திகிறிஸ்துவை வேதம் மிருகம் என்று குறிக்கிறது. இந்த Beast என்ற கம்ப்யூட்டர் உலகில் உள்ள அத்தனை பில்லியன் மக்களின் தகவல்களையும் கணக்கிடும் ஆற்றல் வாய்ந்ததாகும். European Union-ன் தலைமையக கட்டிடமான Berlaymont building ஒரு கவிழ்த்துவைக்கப்பட்ட சிலுவையின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து அந்திகிறிஸ்து செயல்படுவான் என்று தீர்க்கதரிசன ஆராய்சியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

(தொடரும்)

Friday, August 15, 2008

காலம் கடத்தாதே...

சாத்தான்களின் மாநாடு

மானுடவர்க்கத்தை நாசமாக்க சாத்தான்களெல்லாம் கூடி ஒரு மாநாடு நடத்தின.
ஞானிகளான சில பிசாசுகள் தங்கள் ஆலோசனைகளைக் கூறின:

முதற்பிசாசு:

தலைவரவர்களே! கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று நாம் பிரச்சாரம் செய்யவேண்டும். கடவுளுக்குப் பயப்படுகிற பயம்மட்டும் இல்லாதுபோனால் மக்களை பம்பரம் போன்று ஆட்டிப் புடைக்கலாம்.

மாநாட்டுத் தலைவர்:
கூடவேகூடாது மிகச்சிலர்தான் இவ்யோசனையை அங்கீகரிப்பார்களே ஒழிய எல்லோரும் அங்கீகரிக்க மாட்டார்கள். வானம் , சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைக் கண்டு கடவுள் ஒருவர் இருக்கவேண்டும் என்று நிச்சயம் சொல்வார்கள் ஆகவே உன் ஆலோசனை எடுபடாது.

இரண்டாவது பிசாசு:

எஜமானனே! பைபிள் தேவனுடைய வார்த்தை அல்லவென்று பிரச்சாரம் செய்வோம். மக்களின் மனதில் இந்த எண்ணத்தை விதைத்துவிட்டால் விசுவாசமே எடுபட்டுப்போம். அப்படியானால் எல்லோரும் நரகத்துக்கே போய் விடுவார்கள்.

தலைமைச் சாத்தான்:
இல்லவே இல்லை வெகு சிலரே இதனை நம்புவர். வேதம் தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறது என்பதை மற்றும் அநேகர் நம்புகிறார்கள். ஆகவே அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உன் யோசனையும் உருப்படியாக இல்லை.

மூன்றாவது பிசாசு:
பேய்களின் பிரபுவே! இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் அல்லவென்று பிரச்சாரம் செய்வோமே! இவ்வெண்ணத்தை வேரூன்றச் செய்துவிட்டால் அவர்களுக்கு இரட்சகர் கிடைக்காது போய்விடும். யாவரும் வெகு எளிதாக நரகத்திற்குப் போய்விடுவர்.

பிசாசுகளின் பிரசிடெண்ட்:
தப்பு தப்பு! உன் யோசனையும் தகாது. பாலில் ஊறிய பழம் போலும், உப்பில் ஊறிய ஊறுகாய் போன்றும் "கிறிஸ்துவே இரட்சகர்" என்று ஊறிப்போயிருக்கிற கிறிஸ்தவர்களை ஏமாற்றமுடியாது. ஒரு சிலரே இதனை ஏற்றுக்கொள்வார்களே தவிர எல்லோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உன் யோசனையும் உபயோகமற்றது.

மேலும் பல பேய்கள் வேறு வேறு ஆலோசனைகளைக் கூறின. தலைமைச் சாத்தான் அங்கீகரிக்கவில்லை. இறுதியாய்ப் பெரிய பேய் ஒன்று அடக்கத்துடன் எழும்பி மிக அமைதலுடன் பேசியது:

"எஜமானே! தெய்வம் உண்டு; பைபிள் உண்மை; இயேசு தெய்வ குமாரன்; அவரே இரட்சகர் என்று தெளிவாய் சொல்வோம். ஆனால் இரட்சிக்கப்படுவதற்கு இன்னும் போதுமான காலம் இருக்கிறது. அதற்காக இப்போதே ஆத்திரப்பட
வேண்டாம் என்று பிரசங்கம் செய்வோம்."

முதன்மைச் சாத்தான்:
பேஷ்! சரியான யோசனை! இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என்று கோரவே எல்லாப் பிசாசுகளும் கரகோசம் செய்தன.

சாத்தான் இக்காலம் அனுஷ்டிக்கும் முறை இது தான். நாளை நாளை என்று காலம் கடத்தவே பிரயாசப் பட்டு வருகிறான். வீணாகக் காலத்தைக் கடத்தாது விழிப்பாய் இருப்போம். இங்கிலாந்தில் வேல்ஸ் நகரில் சூரிய கடிகாரம் ஒன்று இருக்கிறது. அதில் "நீங்கள் என்னை வீணாகச் செலவழிக்கலாம், ஆனால் என்னை நீங்கள் நிறுத்திவிட முடியாது" என்று எழுதியிருக்கிறது.

"நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" - சங்கீதம் 90:12

"இதோ, இப்பொழுதே அனுக்கிரக காலம்; இப்பொழுதே இரட்சண்ய நாள்" - IIகொரிந்தியர் 6:2

Thursday, August 14, 2008

பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்

இதை படிக்கும் முன்பு இத்தொடரின் முதல் அத்தியாயத்தை படித்துக்கொள்ளவும்.
முதல் அத்தியாயம்

அந்திகிறிஸ்துவைக் குறித்து தானியேல் கூறுகிறார்:-

பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன் ஆட்சி காலத்தில் ஒரு சொப்பனம் காண்கிறான். இவன் கி.மு 606ல், பாபிலோலோனிய சாம்ராஜ்யத்தை ஆண்டவன். சொப்பனத்தை மறந்து போன நேபுகாத்நேச்சார் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் அறிய விரும்புகிறான். பாபிலோனிய ஞானிகளால் அது முடியாமற்போக தானியேல், ராஜாவிற்கு சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் கூற முன்வருகிறான். இச்சம்பவம் தானியேல் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நேபுகாத்நேச்சார் தன் கனவில் ஒரு சிலையை கண்டதாகவும், அச்சிலையின் தலை பசும்பொன்னும், அதன் மார்பும் புயங்களும் வெள்ளியும், அதன் வயிறும் அதன் தொடையும் வெண்கலமும், அதன் கால்கள் இரும்பும் அதன் பாதங்கள் பாதி களிமண்ணும் பாதி இரும்புமாய் இருந்தது,என்றும் ராஜா அச்சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே கைகளினால் பெயர்க்கப்படாத கல் ஒன்று பெயர்ந்து வந்து அச்சிலையின் இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களில் மோதி அதை நொறுக்கிப் போட அந்த சிலை தூளாகி பதரைபோலாக, அந்த கல்லோ பெரிய பாறையாகி பூமியை நிரப்பிற்று என்றும் தானியேல் சொப்பனத்தைக் கூறி பின் அதன் விளக்கத்தையும் கூறுகிறான்.

நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலையின் தலை பசும் பொன்னாய் இருப்பது பாபிலோனிய சாம்ராஜ்யத்தை குறிப்பதாகவும் அதற்கு பிறகு சிலையின் வெள்ளியினாலான மார்பு, புயங்களும் இவற்றிற்கு ஒப்பான இன்னொரு சாம்ராஜ்யம் பாபிலோனிய சாம்ராஜியத்தை விட வலிமை குறைந்ததாய் எழும்புமென்றும் தானியேல் தெரிவிக்கிறான். தானியேலின் தீர்க்கதரிசனத்தில் படி பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்கு பிறகு மேதிய பெர்சிய வல்லரசு எழும்புகிறது. நேபுகாத்நேச்சாரின் மகனான பெல்ஷாத்ஷார் ஒரு நாள் இரவு பெரிய விருந்து பண்ணி தன் மறுமனையாட்டிகளுடனும், பிரபுக்களுடனும் குடித்து வெறித்திருக்கிறான். அன்றிரவில் ஒரு கை சுவற்றில் தோன்றி "மெனெ, மெனெ தெக்கேல் உப்பார்சின்" என்ற வார்த்தைகளை எழுத அதைப்பார்த்த ராஜாவின் முகம் வேறுபட்டது. அவனுடைய நினைவுகள் அவனை கலங்கப்பண்ணினது.அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது. அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகளின் அர்த்தத்தை அறிய ராஜா விரும்புகிறான். பாபிலோனின் ஞானிகளால் அது முடியாமற்போக தானியேல் அவ்வார்த்தைகளுக்கான விளக்கத்தை கூற அழைக்கப்படுகிறான்.தானியேல் ராஜாவைப் பார்த்து தேவன் உன் ராஜ்ஜியத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார். நீ தராசிலே நிறுத்தப்பட்டு குறையக் காணப்பட்டாய். உன் ராஜ்யம் பிரிக்கப்ப்ட்டு மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது." என்று அவ்வார்த்தைகளுக்கான விளக்கத்தைக் கூற, அன்றிரவே பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட மேதியனாகிய தரியு ராஜ்யத்தைக் கட்டிக் கொண்டான். அச்சம்பவம் தானியேலின் ஐந்தாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு கொடுத்த விளக்கத்தின்படி மேதிய பெர்சிய அரசு உலக வல்லரசாக ஆள ஆரம்பிக்கிறது.

-தொடரும்.

டாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் "666- அந்திக் கிறிஸ்து யார்?" என்ற புத்தகத்திலிருந்து.

Sunday, August 10, 2008

666- அந்திக் கிறிஸ்து யார்?

தன்னைத் தீர்க்கத்தரிசி என்று அழைத்துக் கொள்ளும் ஜீன் டிக்சன் (Jeane Dixon) என்னும் அமெரிக்கப் பெண்மணி 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி இரவு தன் ஹொட்டல் அறையிலிருந்து ஜன்னலின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டாளாம். அத்தரிசனத்தில் ஒரு கரிய நிற உருவம் ஒரு கரிய நிற குழந்தையை மத்திய ஆசியாவில் உள்ள ஒரு குடியானவப் பெண்ணிடம் ஒப்படைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் அத்தரிசனத்தின் விளக்கத்தை அறிய தன் உதவியாளர்களைக் கலந்தாலோசிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறினர். கடைசியில் ஒரு உதவியாளன் பரிசுத்த வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆராய்ந்து விட்டு இத்தரிசனம் "அந்திக் கிறிஸ்துவின்" பிறப்பை எச்சரிக்கிறது என்ற விளக்கத்தைக் கொடுத்தான். இதன் அடிப்படையில் ஜீன் டிக்சன் 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு அந்திக்கிறிஸ்து உலகில் பிறந்து விட்டான் என்ற தீர்க்கதரிசன அறிக்கையை வெளியிட்டாள். இத் தீர்க்கதரிசன அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜீன் டிசனுடைய அனேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போயிருந்தாலும் அவள் கூறின சில தீர்க்க தரிசனங்கள் அப்படியே நிறைவேறியிருந்தன. உதாரணமாய் ராபர்ட் F.கென்னடி, ஜான் F. கென்னடி ஆகிய இருவரும் எங்கு எப்போது மரிப்பார்கள் என்று அவள் கூறினாள். அது அப்படியே நடந்தது. அந்திக்கிறிஸ்துவை குறித்து ஜீன்டிக்சன் அறிவித்த தீர்க்கதரிசனம் அநேக சினிமா படத்தயாளிப்பாளர்களுக்கு விறு விறுப்பான "Subject" ஆக அமைந்தது. இதன் அடிப்படையில் ரோஸ் மேரி பேபி (Rose Mary Baby), ஹோலோகாஸ்ட-2000 (Holocaust-2000), அப்போகாலிப்ஸ் (Apocalypse), ஓமன் I, ஓமன் II (Ommen I, Ommen II) என்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக ஓமன் I-ம், II-ம் அந்திக்கிறிஸ்துவைக் குறித்த எச்சரிப்பை உலக மக்களுக்கு கொடுக்க எடுக்கபட்டதாக அதன் தயாரிப்பாளர் "பாப் மங்கர்" (Bob Munger) தெரிவித்துள்ளார். வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆதாரமாக திரையில் காண்பித்து இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படங்கள் உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டன.

இவ்வாறு திரைப்படங்கள் மூலம் பிரபலமாக்கப்பட்ட அந்திக்கிறிஸ்துவைக் குறித்து தெளிவாய் எச்சரிக்கிற புத்தகம் பரிசுத்த வேதாகமமே. இந்த அந்திக்கிறிஸ்து உலகை ஆளும்போது உலகில் உண்டாகப்போகிற மகா உபத்திரவ காலத்திற்கு காத்துக்கொள்ளக்கூடிய வழியையும் பரிசுத்த வேதாகமம்தான் கூறுகிறது. இப்படிப்பட்ட ஒரு உலக சர்வாதிகாரி உலகை ஆளக்கூடிய சூழ்நிலைகள் இப்போது உலகில் உருவாகிக்கொண்டுள்ளன. வெகு சீக்கிரத்தில் அது சம்பவிக்கவும் போகிறது.

இப்படிப் பட்ட ஒரு உலக அரசு (World Govt.) ஏற்படக்கூடிய அவசியம் உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இப்போது உலகில் உள்ள கோர்ட் (World Court), உலக பாங்கு (World Bank) இவையெல்லாம் வரப்போகிற உலக அரசின் முன்னோடிகள். இதல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட உலக அளவில் ஆன அமைப்புகள் இன்று உலகில் செயல்பட்டு வருகின்றன, இப்படிப்பட்ட ஒரு உலக அரசு ஏற்பட வேண்டும் என்ற ஒரு மசோதா நமது பாராளுமன்றத்தில் Dr.H.V.காமத் அவர்களால் கொண்டு வரப்பட்டதாக 8-5-78 ஹிந்து பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. உருவாகப்போகிற உலக அரசு வரப்போகிற அந்திக் கிறிஸ்துவின் ஆட்சிக்கு வழி வகுக்கும்.

அந்திகிறிஸ்துவை குறித்த திரைப்படங்களுக்கு ஆதாரமான தீர்க்கதரிசனத்தை வெளியிட்ட "ஜீன் டிக்சன்", தான் பரிசுத்த ஆவியினால் தான் தீர்க்கதரிசனம் சொல்வதாக தெரிவித்தாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. சுருங்கச் சொன்னால் அவள் ஒரு பிசாசினுடைய "மீடியம்" கிறிஸ்தவ விசுவாசிகள் ஜீன் டிக்சனுடைய தீர்க்கதரிசனத்துக்காய் காத்திருக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனத்திற்காய் விசுவாசிகள் காத்திருக்கவும் கூடாது என்று வேதம் உபாகமம் பதின்மூன்றாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களில் தெரிவிக்கிறது. அப்படியென்றால் அந்திக்கிறிஸ்துவைக் குறித்து வேதம் என்ன தெரிவிக்கிறது என்று இனி பார்ப்போம்.

-தொடரும்.

டாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் "666- அந்திக் கிறிஸ்து யார்?" என்ற புத்தகத்திலிருந்து.

Sunday, May 11, 2008

லியோ டால்ஸ்டாய்-"குற்றமும் தண்டனையும்"

"குற்றமும் தண்டனையும்"(War and Peace) என்பது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy 1828-1910) எழுதியதொரு புகழ்மிக்க நாவல்.

அதில் றோஸ்கோலவ் என்னும் கொலைகாரனும் சோன்யா (Sonya Rostova) என்னும் விபச்சாரியும் உரையாடும் காட்சி.

தந்தை குடிவெறியால் நிறைந்திருக்க தனது இளைய சகோதரர்கள் பசியால் வாடும் சூழ்நிலையின் காரணமாகவே தான் விபச்சாரியாக மாறினதாக சோன்யா கூறுகிறாள்.

"நீ ஆண்டவரிடம் தினந்தோறும் ஜெபிப்பாயா?" என்று சோன்யாவைக் கேட்டபோது; "ஆண்டவரில்லாவிட்டால் நான் எப்படி இருக்க முடியும்?"என்று மெல்லிய குரலில் திருப்பிக்கேட்டாள்.

ஆண்டவர் உனக்கு ஜெபத்துக்கு பதிலாக என்ன தருகிறார் என்று கேட்டபோது "அதனை கேட்கவேண்டாம்-அவரே எனக்கு எல்லாவற்றையும் செய்கிறார்" என்றாள்.

றோஸ்கோலவ் சோன்யாவின் இளைய தங்கை போலென்காவிடம் "ஜெபம் பண்ணத் தெரியுமா?"என்று கேட்கிறான்.

உடனே அவள் தெரியும்- பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் தனியாக பிரார்த்தனை செய்வேன்.மரியாளே வாழ்க-எங்கள் அக்கா சோனியாவை ஆசீர்வதியும்-மன்னியும்-எங்கள் தந்தையை ஆசீர்வதியும் என்று ஜெபிப்போம் என்றாள்.

சோன்யாவும், போலென்காவும் ஆண்டவரிடம் எப்படி அன்புகூருகிறார்கள்? அவர்களுக்கு மதம் என்பது வலியைப்போக்கும் மருந்து போன்றதா? மதுவைப்போன்றதா?

கொலைகாரன் மாறினான்!

மதுவும் ,மருந்தும் மனித இதயங்களை அழிக்கிறது. சோன்யா ஆண்டவரிடம் கொண்டுள்ள அன்பு வலுவானது.எனவே அவளது வார்த்தைகள் கொலைகாரனான றோஸ்கோலவ் மனதை மாற்றிவிடுகிறது.

எனவே அவளது நம்பிக்கையின் பின்னணியாக ஒரு உண்மை இருக்கவேண்டும்!

சோன்யா றோஸ்கோலவிடம் ஒரு சிலுவையை தந்து பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறாள்.

இதனால் இதுவரை மறைந்து வாழ்ந்துகொண்டிருந்த கொலைகாரனான றோஸ்கோலவ் சைபீரியாவுக்கு சென்று போலீசாரிடம் சரணடைந்து புதுவாழ்வு ஆரம்பிக்கிறான்.

சோன்யா அரிவாள் சுத்தியலை அவனிடம் தந்து ஸ்டாலினின் "சொற்பொழிவு சுருக்கத்தையோ", "டாஸ்காபிட்டல்" என்னும் புத்தகத்தையோ அவனிடம் தந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

சிலருக்கு மதம் என்பது வாழ்வின் அனேக சந்தோசங்களுள் ஒன்று-கலைகளில் ஒன்று.

ஆனால் சிலருக்கு எல்லாம் மதம் தான்.ஆண்டவரை அனைத்திலும் காண்கின்றனர்.ஆண்டவர் நேசிக்கத்தக்கவர்- நம்புவதற்கு தகுதியானவர். அவரது வழிகள் மறைமுகமாயினும் அது ஏற்கத்தக்கது என்று நம்புகின்றனர். இவர்கள் நாத்திகரது வாதங்களை புரிந்து கொள்கின்றனர். ஆனால் நாத்திகர்கள் இவர்களது வாதங்களை எப்படி புரிந்துகொள்ள போகின்றனர்?

-The answer to Moscow`s bible-ரிச்சர்ட் உம்பிராண்ட்

"கடவுள் இல்லாமல் எந்த எழுத்தாளனும் இருந்தது இல்லை. "கடவுள் உண்டா இல்லையா? வாழ்நாள் முழுவதும் என்னை வதைத்துக் கொண்டிருந்த பிரச்சினை இது. இதை வைத்துத்தான் முட்டாள் என்ற நாவலை எழுதினேன்" என்கிறார் தாஸ்தாவஸ்கி. அவருடைய பாத்திரங்கள் எல்லாமே இந்தப் பிரச்சினைக்குள்தான் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை தாஸ்தாவஸ்கி எழுதினார்: "உண்மைக்கும் கிறிஸ்துவுக்கும் சம்பந்தமில்லை என்று யாராவது நிரூபித்து விட்டால் கூட நான் அந்த உண்மையின் பக்கம் செல்லாயேமல் கிறிஸ்துவின் பக்கமே நிற்பேன்." அவருடைய கரமஸோவ் சகோதரர்கள், முட்டாள், குற்றமும் தண்டனையும் என்று எல்லா நாவல்களிலும் இதே பிரச்சினைதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. இவான் கரமஸோவ் சொல்லுவான் "நான் ஒத்துக் கொள்ளாதது கடவுளை அல்ல; இந்த உலகத்தையும், இங்கே உள்ள இத்தனை ஆயிரம் கடவுள்களையும் கடவுள்தான் படைத்தார் எனபதைத்தான் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறேன்." வேறொரு இடத்தில் ஸொஸிமா சொல்லுவான், "இந்த ரஷ்ய தேசத்தின் எல்லாத் தீமைகளையும் போக்கக் கூடிய வல்லமை படைத்த ஒன்றே ஒன்று கிறித்தவம்தான்" என்று. இப்படி தாஸ்தாவஸ்கி நம்பினார்.

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான போராட்டம் இது.

நம்பிக்கையின் பக்கம் கவிஞனும், நம்பிக்கையின்மையின் பக்கம் தத்துவவாதியும் நின்று கொண்டிருக்கிறான்."

-CN

Monday, April 21, 2008

காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்

பரிசுத்த வேதாகமத்தில் இப்படியாக ஒரு வாக்கியம் வரும். அதாவது உலகின் இறுதிகாலங்களில் தனது வலதுகையிலோ அல்லது நெற்றியிலோ ஒரு குறிப்பிட்ட முத்திரையில்லாதவன் வாங்கவும் விற்கவும் இயலாது என்பதாகும்.இன்றைக்கு உங்களிடம் கைநிறைய கரன்சிநோட்டுகள் இருக்கிறது.அதை யாரிடமும் கொடுத்து பொருள் வாங்கலாம், விற்கலாம். ஆனால் மேலைநாடுகளில் பெரும்பாலான வாங்கல்கள் விற்கல்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலமாகவே நடக்கின்றன.அதாவது அங்கே கரன்சிநோட்டுகளுக்கு வேலையில்லை. அந்த கிரெடிட் கார்டையே ஒரு சிப் வடிவில் உங்கள் வலதுகையிலோ அல்லது நெற்றியிலோ செருகிவிட்டு விட்டால் அப்புறம் கைவீசிக்கொண்டு கடைவீதி போகலாமே. அது தான் நடக்கப்போகின்றது.

இது சாத்தியமா என்றால் இன்றைய விஞ்ஞானம் அது சாத்தியமே என்கிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.நாம் ஏற்கனவே இங்கு கூறியுள்ளபடி Radio-frequency identification (RFID) எனப்படும் மைக்ரோசிப்கள் இதற்காக பயன்படுத்தப்படும்.

டாலரை வீழ்த்திவிட்டு வீறுகொண்டெழுந்து கொண்டிருக்கும் யூரோ கரன்சியை அதிவிரைவில் அதாவது 2010-க்குள் "Cashless"-ஆக்க EAPS (Euro Alliance of Payment Schemes) மற்றும் SEPA (Single Euro Payment Area) எனும் ஐரோப்பிய ஸ்தாபனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அதாவது கூடிய விரைவில் காகித யூரோ கரன்சிகள் முற்றிலுமாக பயன்படுத்தப்படமாட்டாது.அதற்கு பதில் கிரெடிட்கார்டு போன்ற ஒரு கார்டு தான் பயன்படுத்தப்படும். அது அந்திகிறிஸ்துவின் காலத்தில் வலதுகை முத்திரையாகவோ அல்லது நெற்றியில் முத்திரையாகவோ மாறி விடும்.அது இருந்தால் தான் வாங்கவோ விற்கவோ முடியும் என்றாகிவிடும்.

ஏற்கனவே நாம் சொல்லியிருக்கிறபடி படிப்படியாக யூரோ நாணயம் ஒழிந்து உலக அளவில் ஒரே நாணயம் வந்துவிடும். அப்போது உலக அளவில் எல்லோருமே வாங்கவும் விற்கவும் இதுமாதிரி வலதுகை அல்லது நெற்றி முத்திரை அணிந்திருக்கவேண்டிவரும்.

மாரநாதா.

வெளி:13:16,17,18
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய
இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

Thursday, March 27, 2008

சண்டையிட்ட சூரியனும் சந்திரனும்

ஒரு முறை சூரியனும் சந்திரனும் சண்டையிட்டுக் கொண்டன. மரத்தின் இலைகள் பச்சை நிறமானவை என சூரியன் சொல்ல, இலைகள் வெள்ளி நிறமானவை என சூரியன் சாதித்தது.

பூமியின் மனிதர்கள் தூங்குகிறார்கள் என்று சந்திரன் சொல்ல,எல்லாரும் மிகவும் சுறுசுறுப்பாய் இருப்பதாக சூரியன் சாதித்தது.

பூமி அமைதியாக இருப்பதாக சந்திரன் சொல்ல,"ஒரே இரைச்சலாக இருக்கிறது" என்று சண்டைக்கே வந்து விட்டது சூரியன்.

சூரியனும் சந்திரனும் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை காற்று கவனித்துக்கொண்டிருந்தது.

காற்று சொல்லியது "உங்கள் சண்டை பயனற்றது.நான் சூரியன் பிரகாசிக்கும் போதும்,சந்திரன் பிரகாசிக்கும் போதும் இருக்கிறவன். பகலில் சூரியன் பிரகாசிக்கும் போது சகலமும் அது சொன்னபடியே இருக்கிறது.இரவில் சந்திரன் பிரகாசிக்கும்போது அனைத்தும் அது சொன்ன படியே இருக்கிறது.

ஆனால்,இரவில் உலகம் எப்படி இருக்கும் என்பது சூரியனுக்குத் தெரியாது.பகலில் உலகம் எப்படி இருக்கும் என்பது சந்திரனுக்குத் தெரியாது.ஆகவே உங்கள் இருவருக்குமே முழுமையான உண்மை தெரியாது" என்றது காற்று.

நாத்திகர்கள் உலகின் சடப்பொருள் தன்னையைக் கண்ணுற்று அவைகள் தான் உண்மை என்று வாதிடுகின்றனர்.

புத்த மதத்தவர் "மனம்" ஒன்று தான் உண்மையானது, மற்ற அனைத்துமே மாயையின் தோற்றங்கள் என்று கூறுகின்றனர்.

ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்கள் மட்டுமே முழுமையான உண்மையை உணரக் கூடியவர்கள்.அவர்கள் உலோகாயுத கொள்கைக்கோ,சிந்தனையாளர்களின் கொள்கைக்கோ கட்டுப்படமாட்டார்கள்.

நீதிமொழிகள் 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

Wednesday, March 26, 2008

இரட்சிப்பு...இலவசம்

பேர்பெற்ற மிஷனரியாகிய ஆதாம் ஸ்மித் சுவிசேஷப்படை முயற்சிக் கூட்டமொன்றில் பிரசங்கம் செய்துமுடித்தபின் "இப்பொழுது அந்நிய நாடுகளில் நடந்தேறும் மிஷனரி ஊழியத்திற்காக காணிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் எழுந்து நின்று,"ஐயா,இரட்சிப்பு இலவசம் என்று இவ்வளவு நேரமும் பிரசங்கம் கேட்டோம்.அப்படியானால் காணிக்கை எதற்காக எடுக்கவேண்டும்?" என்றாள்.

இருவருக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது:-

"அம்மா,நீங்கள் தண்ணீர் கிரையம் கொடுத்து வாங்குகிறீர்களா?"

"இல்லை,இலவசம்"

"இலவசமாக தண்ணீர் உங்கள் வீட்டண்டை வர,இரண்டு மைல் தூரத்தில் பம்பில் ஸ்டேஷன் கட்டி யந்திரங்கள் வைத்து,பூமியில் குழாய்கள் பதித்து,தண்ணீரை உங்கள் வீட்டுக்கு முன் கொண்டு வந்து இலவசமாய்க் கொடுக்கிறார்கள்.எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்."

"ஐயா நான் புத்தியீனமாய்க் கேட்டுவிட்டேன்.தயவு செய்து மன்னியுங்கள்."

இரட்சிப்பு இலவசம் தான்.அதை அறிவிக்க ஆட்கள் வேண்டாமா? கர்த்தருடைய நாம மகிமைக்கென்றுதான் காணிக்கை.

"என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை"
-ஏசாயா:46:13

"கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன்"
-ரோமர்:15:21

Wednesday, February 27, 2008

சிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்

சிரிக்க அல்ல,சிந்திக்க சில மொழிகள் தமிழகத்திலிருந்து

"இயேசுவினிடம் கேட்டால்தான் கிடைக்கும். புரட்சித்தலைவியிடம் கேட்காமலே கிடைக்கும்"
-முன்னாள் தமிழக அமைச்சர் ஜனார்த்தனன்.

"ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நான் கூறமாட்டேன்.ஆத்மாவில் எனக்கு நம்பிக்கை கிடையாது"
-தமிழக முதல்வர் கருணாநிதி 28-11-1993 தினகரன்

"ஆண்டவன் இருப்பது உண்மையாக இருந்தால், எனக்கு நீண்ட ஆயுளை தரட்டும். எனக்காக அல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்காக, அதற்காக மற்றவர்களை போல் நான் கோவில் கோவிலாக சென்று பூஜை செய்து ஆயுளை நீட்டிக்க விரும்ப மாட்டேன். தியாகங்கள் மூலம், மக்கள் பணி செய்து வருகிறோம்."
-தர்மபுரியில் முதல்வர் கருணாநிதி 27/2/2008 தினமலர்

"தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்"
-"பாப்பா"க்கான அறிவுரையில் பாரதியார்

"பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்த கிருஷ்ணன் கடவுளா? உலக பாவங்களுக்காக பலியான கிறிஸ்து கடவுளா?"
-சென்னை மெரினா பீச்சில் அறிஞர் அண்ணா

"மெஜாரிட்டி தமிழர்கள் வாழும் இடம் வந்த மைனாரிட்டி ஆங்கிலேயர்கள் தான் தமிழ் கற்றிருக்க வேண்டும்.ஆனால் நடந்தது வேறு.இது ஓர் அதிசயம்"
-நாகர்கோவிலில் தமிழக அமைச்சர் துரைமுருகன்

"இந்தியாவின் தலைநகரம் மாஸ்கோ"
-தமிழ் துக்ளக் ஏடு ஆசிரியர் சோ

"அரபு நாடுகளுக்குச் சென்றால் நமது சமய புத்தகங்களைக் கூட எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது நாட்டில் நமது மதத்திற்குப் பாதுகாப்பில்லாதது கண்டுவருந்துகிறேன்.இந்த அவல நிலைக்கு மாற்றம் காண வேண்டும்"
-கோவை நா.மகாலிங்கம்

"LTTE தலைவர் பிரபாகரனை இலங்கை அரசால் பிடிக்க முடியாவிடில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் உதவியை மத்திய அரசு நாடலாம்"
-முன்னாள் அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி ஜூனியர் போஸ்டில் 13/3/1992

"புதுவை கிறிஸ்தவர்கள் மாநிலமாக மாறுகிறது. அதை தடுக்க கிளர்ச்சி நடத்துகிறோம்"
-RSS தலைவர் இராமகோபாலன் 13/3/1994 தினகரன்

"இந்து சமுதாயம் பலமுனை தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.நமது நாட்டில் இந்து எழுச்சி ஏற்ப்பட்டுள்ளது.நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும்.இதன் மூலம் இந்தியாவில் இந்து சாம்ராஜ்யம் உருவாகும்"
-தமிழக இந்து முண்ணணி அமைப்பாளர் ராம கோபாலன் 2/11/1995 தினமலர்

"பிரிட்டீஷ்காரர்கள் இந்திய சரித்திரத்தை கி.பி, கி.மு என பிரித்துள்ளார்கள். ஆனால் அது எவ்வளவு சரியோ தவறோ தெரியவில்லை.இந்தியாவில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை வைத்து சரித்திரம் மாற்றி எழுதுவது நல்லது"
-ஜெயேந்திர சுவாமிகள் சங்கராச்சாரியார் 20-11-1993 மாலைமலர் தேன்மலர்

"விலங்குகள் கோவிலுக்குள்ளே செல்லலாம்.மனிதர்கள் மட்டும் கூடாது.அதனால் மனிதர்களை மனிதர்களாக மதிக்கற மதத்துக்கு செல்கிறோம் என்கிறார்கள். அதில் என்ன தவறு? அது அவர்கள் விருப்பம்.யாருக்கு எந்த மதம் விருப்பமோ அதை அவர்கள் பின்பற்றலாம். அனைத்துக்கும் அனுமதி கொடுப்பதே மதசார்பற்ற தன்மை. மத சார்புள்ள இஸ்ரேலில் கூட ஜெருசலேம் மசூதியை இடிக்க விடாது ராணுவம் 3 முறை விரட்டியடித்தது"
-வை.கோ 9-1-1994 தினகரன்

"நீங்கள் இன்று என்னை கொன்று போட்டாலும் நான் மோட்சத்துக்கு தான் போவேன்"
-இந்து முண்ணணி அலுவலகம் குண்டு வைத்து தகர்கப்பட்டதில் கைதான இமாம் அலி(27)

சங்கீதம்:2:1,4
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

Psalm 2:1,4
Why do the nations conspire
and the peoples plot in vain?
The One enthroned in heaven laughs;
the Lord scoffs at them.

Tuesday, February 26, 2008

தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message

தூதர்களின் காலம்
கடைசிகால தேவ தரிசன செய்திகள். End time Christian Message in Tamil Audio mp3 format download here.

Thootharkalin kaalam (Angels Period) Tamil Endtime message

Contact Address
God`s Vision Message
Pastor.YKP.Hentry
14,Agasthiar Street,
Palayamkottai,
Thirunelveli District
Tamilnadu India
Ph:0462-2560124
Cell:94434-46460

Friday, February 22, 2008

கலிலேயனே,நீயே ஜெயித்தாய்

இயேசுவின் நாமம் உலகில் இல்லாதபடி அழித்து விட சபதம் செய்த ரோம அரசன் ஜூலியன் போரில் காயமடைந்து உயிர் பிரியும் நேரம் தன் இரத்தத்தை கையில் அள்ளி வானத்துக்கு நேராக எறிந்து "கலிலேயனே,நீயே ஜெயித்தாய்" என்று கூறி மரித்தான்.
இங்கு கலிலேயனே என்று அவன் குறிப்பிட்டது இயேசுகிறிஸ்துவையேயாகும்.

மத்தேயு 21:10,11
இயேசு எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.அதற்கு ஜனங்கள்: கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.


Flavius Claudius Julianus (331–363 AD) was a Roman Emperor.He is known as Julian the Apostate, because of his rejection of Christianity, and attempt to rid the empire of Christianity.
On the Battle of Ctesiphon, Julian was mortally wounded .The same night he died in his tent.The well-known statement, first found in Theodoret (fl. 5th century), that Julian threw his blood towards heaven, exclaiming, "Thou hast conquered, O Galilean?".

His dying words were Vicisti, Galilaee (means "You have won, Galilean")
Here "Galilean" refer to Jesus Christ.

Matthew 21:10,11
And when Jesus was come into Jerusalem, all the city was moved, saying, Who is this?
And the multitude said, This is Jesus the prophet of Nazareth of Galilee.

Wednesday, February 20, 2008

டி.ஜி.எஸ் தினகரன் மரணம்: முதல்வர் அஞ்சலி






இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும், இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ போதகருமான டி.ஜி.எஸ். தினகரன் சென்னையில் இன்று காலமானார். அவரது வயது 73.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த டி.ஜி.எஸ். தினகரன், கடந்த சில நாட்களாக உடல்நலமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவு குறித்த செய்தியை அறிந்த தமிழக முதல்வர் கருணாநிதி, தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஏசாயா 57:1,2 நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
நேர்மையாய் நடந்தார்கள், சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.


Evangelist Dinakaran dies in Chennai

Well-known evangelist D G S Dinakaran died at a private hospital in Chennai on Wednesday following a brief illness, family sources said.

He was 74 and is survived by wife, a son and three grand children.

Dinakaran was admitted to the Apollo hospital on January 29 due to heart and kidney ailments. The evangelist, who founded 'Jesus Calls' and made it a worldwide ministry, breathed his last at around 0630 hrs with his family members at the bedside, sources said. Chief Minister M Karunandhi was among the first to place a wreath on the body and pay homage to the departed missionary.

Recalling his long association with Dinakaran, Karunanidhi said he was deeply shocked on hearing the news of his death.

"Lakhs of people used to throng his meetings to hear his speech. Today, he has departed leaving all those people in tears," he said, and expressed his condolences to the bereaved family members.

Isaiah 57:1,2
The righteous perishes, And no man takes it to heart;
Merciful men are taken away, While no one considers
That the righteous is taken away from evil.
He shall enter into peace; They shall rest in their beds,
Each one walking in his uprightness.

Tuesday, February 19, 2008

கோபம்..புத்தி புகட்டிய நாய்

கோபம்..
புத்தி புகட்டிய நாய்


பிரசங்கிகளின் ராஜன் எனப் பேர் பெற்ற ஸ்பர்ஜன் ஐயருக்கு பூந்தோட்டம் அதிகப் பிரியம். அவருடைய தோட்டத்தின் ஒரு பாகத்தில் ரோஜாச்செடிகள் பூத்திருக்கின்றன. இன்னோர் பாகத்தில்-ரோஜாச் செடி பதியமிட்டிருக்கிற இடத்தில் அவருடைய நாய் படுத்துக்கொண்டு பதியக் குச்சிகளை வெளியே இழுத்துப் போட்டிருக்கிறதை பார்த்துவிட்டார்.

ஐயரவர்களுக்குத் தாங்க முடியாத கோபம் வந்து விட்டது. தோட்டத்தின் ஒரு மூலையில் கிடந்த தடிக்கம்பை எடுத்து எறிந்தார். கம்பு நாய்மீது படாமல் பக்கமாய் விழுந்திருக்கிறது. உடனே அந்த நாய் தடிக்கம்பை வாயில் கவ்வி, வாலை ஆட்டிக்கொண்டு ஸ்பர்ஜன் ஐயர் இருந்த இடத்துக்குப் போய், தலையைத் தூக்கி திரும்பவும் தடியை எடுத்து எறியுங்கள் என்று கெஞ்சிக் கேட்கும் பாவனையில் நின்றதாம்.

நாய் நிற்கிற பாங்கினைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார் ஐயர். தடியை தூக்கி தூர எறிந்தார். பகுத்தறிவற்ற பிராணி என் கோபத்தை மாற்றி எனக்கு புத்தியும் கற்பித்துவிட்டதே என்றுணர்ந்து நாயை அன்போடு வருடி சமையல் அறைக்குக் கொண்டு போய் நல்ல சாப்பாடு கொடுத்து அனுப்பினார்.

நீதிமொழிகள்:15:1
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

எபேசியர்:6:4
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.

Monday, February 18, 2008

"வருகிறவர்" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்

கிறிஸ்துவுக்கு முன் 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்-ம்(Socrates) இரண்டாம் அல்சிபியாடெஸ்II-ம்(Alcibiades-II) ஆலயத்தில் யாகம் செய்ய போகும்போது அவர்களிடையே நடைபெற்ற உரையாடல் இது.

அல்சிபியாடெஸ்II: யாகத்தில் தெய்வத்திடம் எதைக் கேட்பது நல்லது?

சாக்ரடீஸ்: யாதொன்றையும் கேளாமல் பொறுத்திருப்பதே நல்லது. தெய்வத்தினிடத்தும் மானிடரிடத்தும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நமக்கு ஒருவர் வந்து போதிக்கும் வரையில் நாம் தாமதித்திருப்பது நல்லது.

அல்சிபியாடெஸ்II: அந்த காலம் எப்போது வரும்? நமக்கு குருவாக வரப் போகின்றவர் யார்? ஆவல் எனக்கு அதிகமாகின்றது.

சாக்ரடீஸ்: நான் யாரைச் சுட்டிக்காட்டிப் பேசுகின்றேனோ அவர் உம்மைப்பற்றி மிகவும் கவலையோடு விசாரிக்கிறவர்.

அல்சிபியாடெஸ்II: அவர் வரட்டும்.அவர் வந்து தமக்குச் சித்தமானபோது இந்த அந்தகாரத்தைத் துடைத்து விடட்டும். நான் இப்போது இருப்பதைக் காட்டிலும் பரிசுத்தனாக வேண்டியது தான் எனக்குத் தேவை. அவர் வந்து எதை கற்பிப்பாரோ அதன் படி நடக்கவே நான் விரும்புகிறேன்.

சாக்ரடீஸ்: நான் பேசுகிற அவர் உமக்கு நன்மை செய்ய எப்போதும் ஆவல் உள்ளவர் என்பதைத் திட்டமாக மீண்டும் உமக்கு சொல்லுகிறேன்.

அல்சிபியாடெஸ்II: அப்படியானால் அவர் வரும் வரை நான் இந்த யாகங்கள் செய்யாமல் இருப்பது நல்லதல்லவா?

சாக்ரடீஸ்: ஆம் ஐயா, நீர் செய்கிற யாகத்தினால் ஆண்டவர் மகிழ்கிறாரோ அல்லது வெறுப்பு அடைகிறாரோ. இதை அறியாமல் நீர் யாகம் செய்வதைக் காட்டிலும் செய்யாமல் இருப்பதே நலம்.

அல்சிபியாடெஸ்II: அப்படியே நிறுத்திவிடுகிறேன்.உரிய காலம் வரும் போது நாம் யாவருமே அவருக்கு யாகம் செலுத்துவோம். அக்காலம் நிறைவேற வெகு நாள் செல்லாது என நினைக்கிறேன்.

Alcibiades II.150; Jowett, p. 805
Jowett, B., translator (1937), The Dialogues of Plato (New York: Random House), Vol. II.

மத்தேயு 3:11,12

யோவான் ஸ்னாபகன்-"மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் (இயேசு) என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்" என்றான்

Socrates-Alcibiades Dialogues

Socrates (c. 469-399 B.C.) was the greatest philosopher of ancient Greece. He left no writings, but his teachings have been preserved (with some embellishment) by Plato and others.

In one of his Dialogues, Plato records a conversation between Socrates and Alcibiades. The great philosopher informs Alcibiades that there is a risk in approaching his god in prayer, lest he should be refused and even penalized. He counsels Alcibiades therefore to keep silence and “wait until we find out how we should behave toward the gods and towards men.”

When Alcibiades inquired as to how long he must wait, Socrates replied that he must wait until “he [comes] who takes a special interest in you” and removes the “darkness. . . in which your soul is now enveloped. . . Afterwards the means may be given to you whereby you may distinguish between good and evil” (Alcibiades II.150; Jowett, p. 805). This passage is remarkable from several vantage points.

First, it confesses there is a manner in which we should behave. Human beings are not free to act merely as they will. They have an intrinsic sense of responsibility.

Second, the philosopher confesses that we wander in a state of darkness in terms of knowing how to behave. Through all the centuries of human history, the moral confusion and ethical depravity of the human family have been painfully obvious.

Third, it acknowledges then the need for instruction as to how men ought to behave. There is the implication that this instruction will be external to man, i.e., an objective body of truth that lies beyond the mere inclinations of his own conscience.

Fourth, Socrates suggests that human beings have a dual obligation – that which is directed towards deity, and that which is obligatory toward one’s fellow man. The former we would call religious responsibility; the latter we would designate as moral or ethical obligation. It is amazing that so many labor under the illusion that simply being “good” to others represents the totality of their spiritual duty.

Fifth, it is clear that this admonition from the famous philosopher is illustrative of the void that was resident in the ancient pagan heart – a longing for release from the heaviness that burdens the soul, and seeks relief from the guilt of wrongdoing.

Finally, the sage of Greece suggested that man’s ignorance would be remedied only when “he who takes a special interest in you” comes. There is the implication that a personal interest in mankind must be evidenced by a higher source.

It is truly thrilling how the revelation from God, as embodied in the mission and message of Jesus Christ, has addressed these basic needs of the human family. Consider the following.


1. The prophets of God repeatedly stressed that without divine revelation, humanity is in a state of “darkness.” At the commencement of his preaching ministry Jesus himself emphasized that through his message those who “sat in darkness” would be granted the illumination of a “great light” (Mt. 4:16).

2. Because of the Creator’s deep “care” (compassion) for fallen man (cf. Mt. 18:27), he lovingly sent his own Son to teach us how to behave (Jn. 3:2; 14:6).

3. The Savior’s instruction was complete, tutoring us as to how we might fulfill our obligation to both God and man. He masterfully summed up the matter with the word “love” (agape), which entails the idea of obedience toward God, and service to our fellows (Mt. 22:35-40).

4. The divine instruction was embodied in a library of sacred literature which found its culmination in the NewTestament. When Paul penned his first letter to Timothy, he suggested there is a manner in which “men ought to behave themselves” (3:15). The word “behave” translates the Greek anastrepho, which literally means “to turn back.” Associated with the word, therefore, is the idea of “return” (cf. Acts 5:22). In the larger context of the Scriptures, it has to do with returning to a divine standard of conduct, and a “manner of life” consistent therewith (cf. 2 Cor. 1:12; 1 Tim. 4:12).

Later the apostle would say: “All scripture is given by inspiration of God, and is profitable for doctrine, for reproof, for correction, for instruction in righteousness. . . “(2 Tim. 3:16-17).

How amazing it is that the deep and manifold longings of the antique pagan world were so wonderfully satisfied in the advent of God’s Messiah. We can only stand in awe of the sacred plan of redemption.

Sources

Jowett, B., translator (1937), The Dialogues of Plato (New York: Random House), Vol. II.

Friday, February 15, 2008

யாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா?

ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே!

ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார்."எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஐயா,இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்"என்றாள் அவள்.

"ஏனம்மா,இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?" என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார்.

"அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா" என்றாள் அவள்.

"கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?"

சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய வார்த்தைதான் என நிரூபிக்க வேண்டுமே!

அவள் திடீரென்று வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனைச் சுட்டிக்காட்டி, "ஏனய்யா அது சூரியன்தான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?"என்று கேட்டாள்.

"அது சூரியன்தான் என்று நிரூபிப்பது எளிதான காரியம். அது ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறதே!"என்றார் அவர்.

"உண்மைதான், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கான நிரூபணமும் இதுதான். அது என் உள்ளத்திற்கு அனலையும், வெளிச்சத்தையும் அளிக்கிறது"என மகிழ்ச்சியோடு பதிலளித்தாள்.

நல்லவோர் நிரூபணம் அன்றோ!!

சங்கீதம் 119:105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

எரேமியா 23:29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Wednesday, February 13, 2008

மாவீரன் நெப்போலியனும் கிறிஸ்துவும்

மாவீரன் நெப்போலியனிடம் (Napoleon Bonaparte) இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேட்ட போது அவர் இவ்வாறாக கூறினாராம்.

"இயேசுவின் சிலுவை மரணம் இன்றும் உலகை வென்று கொண்டிருக்கிறது. நான் உயிரோடிருக்கும் வரையில் என் சேனை எனக்குக் கீழ்படிந்து செயலாற்றும். ஆனால் இயேசு சிலுவையில் தொங்கி ஜீவனை விட்ட பின்பும் அவரது சேனை அவருக்கு கீழ்படிந்து செயலாற்றுவது விந்தையிலும் விந்தையன்றோ! மரித்த அவர் உயிர்த்தெழுந்தவராய்க் கட்டளையிட்டு பெரியதோர் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தி வருவது வியப்பன்றோ!என் இராஜ்யம் என்னோடு முடிந்து போகும்.என்றென்றும் நிலைநிற்கும் இராஜ்யத்தை ஏற்படுத்தி வளர்த்திக்கொண்டிருக்கும் இயேசு என்னை விட எத்தனையோ மடங்கு பெரியவர், வல்லவர் என்பதில் சந்தேகமேயில்லை"

-"சாமுவேல் மாரிஸ் விசுவாச வீரன்" by லின்ட்லே பால்ட்வின்


மாற்கு 8:36 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

யோவான் 18:36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.


Napoleon's Words - Bonaparte talks of Jesus

Yet, in an extraordinarily staggering statement about Jesus Christ, Napoleon said something that is almost unexcelled by any political leader. I quote it at length because of its incredible insight. I only wish I had it with me when I met with these generals. Napoleon expressed these thoughts while he was exiled on the rock of St. Helena. There, the conqueror of civilized Europe had time to reflect on the measure of his accomplishments. He called Count Montholon to his side and asked him, "Can you tell me who Jesus Christ was?" The count declined to respond. Napoleon countered:



Well then, I will tell you. Alexander, Caesar, Charlemagne and I myself have founded great empires; but upon what did these creations of our genius depend? Upon force. Jesus alone founded His empire upon love, and to this very day millions will die for Him.... I think I understand something of human nature; and I tell you, all these were men, and I am a man: none else is like Him; Jesus Christ was more than man.... I have inspired multitudes with such an enthusiastic devotion that they would have died for me.... but to do this it was necessary that I should be visibly present with the electric influence of my looks, my words, of my voice. When I saw men and spoke to them, I lighted up the flame of self-devotion in their hearts.... Christ alone has succeeded in so raising the mind of man toward the unseen, that it becomes insensible to the barriers of time and space. Across a chasm of eighteen hundred years, Jesus Christ makes a demand which is beyond all others to satisfy; He asks for that which a philosopher may seek in vain at the hands of his friends, or a father of his children, or a bride of her spouse, or a man of his brother. He asks for the human heart; He will have it entirely to Himself. He demands it unconditionally; and forthwith His demand is granted. Wonderful! In defiance of time and space, the soul of man, with all its powers and faculties, becomes an annexation to the empire of Christ. All who sincerely believe in Him, experience that remarkable, supernatural love toward Him. This phenomenon is accountable; it is altogether beyond the scope of man's creative powers. Time, the great destroyer, is powerless to extinguish this sacred flame; time can neither exhaust its strength nor put a limit to its range. This is it, which strikes me most; I have often thought of it. This is which proves to me quite convincingly the Divinity of Jesus Christ.


Whatever else one may say in response, it is difficult to explain this away as mere eloquence. In fact, it was to counter mere eloquence and such artificial power that Napoleon said what he did. With unbelievable insight, he saw how Jesus Christ conquered. It was not by force, but by winning the heart.
Napoleon understood Jesus far better then Pilate did. Pilate probably had no clue what Jesus meant when He said, "My kingdom is not of this world," or how far into the future this Christ would conquer-and that without the methods by which empires are normally expanded, of which Rome was a prime example.

-Quoted in Henry Parry Liddon, Liddon's Bampton Lectures 1866
(London: Rivingtons, 1869), 148.

Tuesday, February 12, 2008

பி.வி.நரசிம்மராவின் தாகம்


டிசம்பர் 28 1992-ல் இந்தியாவின் தென்கோடியிலுள்ள கன்னியாகுமரியில் ஒரு விவேகானந்தர் விழாவில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள் (P.V.Narasimha Rao) இவ்வாறாக மனம் உருகி பேசினார்.

"பாலைவனத்திலுள்ள நான் இந்தியாவில் தண்ணீரை தேடியலைந்தேன்.தாகமாய் பார்த்தேன்.எனக்கு கிடைத்ததெல்லாம் கானல் நீர் தான்.ஏமாற்றத்துடன் தான் இப்போதும் இருக்கிறேன்.நான் அத்தண்ணீரை பெற இந்த உலகின் எந்த பகுதிக்கும் செல்ல தயார்."
-தினமலர் 29:12:1992

"இங்கு கிடைத்தது கானல் நீர் தான்"-ராவ் உருக்கம் என தலைப்பு செய்தியாகவே நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

யோவான்:4: 13,14 -ல் இயேசு கிறிஸ்து இவ்வாறாக சொல்கிறார்."இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்"

நண்பரே! உன் ஆத்துமாவில் தாகமாயிருக்கிறாயா? தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரை இயேசு உனக்கு தருகிறேன் என்கிறார்.

Saturday, February 09, 2008

ஒருவனாகிலும்

கிறிஸ்துவுக்காய் செலவு செய்வதில் நம்மில் அநேகருக்கு அதிகமாய் ஆர்வம் இருப்பதில்லை. உலக பிரகாரமான புராஜெக்ட்களுக்கு உலகம் எவ்வளவாய் செலவு செய்கின்றார்களென்று பாருங்கள். கோடிக்கணக்கான பணங்கள் செலவு செய்து திரைப்படங்களை எடுக்கிறார்கள். லட்சக்ககணக்காண ரூபாய்கள் செலவு செய்து தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள், வீடுகள் என லாபநோக்கில் அமைக்கின்றார்கள். நாமும் கூட அவ்வாறே. தனியொருவர் நன்மைக்காக கணக்கு வழக்கின்றி செலவளிக்க முற்ப்படும் நம்மால் கடவுள் பணிக்கு அதிகம் கொடுக்க முன்வருவதில்லை. தன் கடைசி நயா பைசா வரைக்கும் செலவுசெய்து நூறாண்டுகளுக்கு முன் மக்கள் சேவையே இறை சேவையென கருதி அந்தகால கிறிஸ்தவ மிஷனரிமார்கள் மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும் எழுப்பிச் சென்றார்கள்.

"இந்தத் தைலத்தை (பணத்தை) இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்? இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே" என்று அவர்கள் சிந்திக்கவில்லை.(மாற்கு:14:5) அதன் பலனை இன்றைக்கு உலகறியும். பல கல்விமான்களை, கணிணி மேதைகளை, பிரபல மருத்துவர்களை அவை உருவாக்கின. கிறிஸ்துவின் நாமம் அவர்கள் மூலம் மகிமைப்பட வேண்டும்.

1992,1993-ல் "பைபிள்"எனும் தொலைக்காட்சி தொடர் தூர்தர்ஷன் சானலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதில் கிறிஸ்தவ வேதாகம கதைகள் உலகம் சிருஷ்டிக்கப்பட்ட நாள் முதல் நடைபெற்ற சம்பவங்கள் அழகாய் படமாக்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டன. பலருக்கும், ஏன கிறிஸ்தவர்கள் சிலருக்கு கூட அது பிடிக்கவில்லை. முடிவில் அது ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டது.ஏதேதோ காரணங்களால் அப்படியாகிப் போனது.யாரும் அதை தொடர்ந்து ஒளிபரப்பாக ஆக வேண்டிய முயற்சியை செய்யவில்லை.

இப்படியாக பைபிள் டிவி தொடர் 'கட்'டானதை தொடர்ந்து வெளியான கட்டுரை ஒன்றில் "தி வீக்" பத்திரிகை இந்த வசனம் எழுதி அதை தொடங்கியது. அது என்ன? "நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை." (சங்கீதம்:14:3) என்ற வசனம் தான். (The Week 25:6:1993)

There is no one who does good, not even one. (Psalm 14:3)

Monday, February 04, 2008

அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message

அந்திக்கிறிஸ்துவின் காலம்
கடைசிகால தேவ தரிசன செய்திகள். End time Christian Message in Tamil Audio mp3 format download here.

Antichristuvin kaalam (Anthikiristhu Period) Endtime message

Contact Address
God`s Vision Message
Pastor.YKP.Hentry
14,Agasthiar Street,
Palayamkottai,
Thirunelveli District
Tamilnadu India
Ph:0462-2560124
Cell:94434-46460

Thursday, January 31, 2008

Rev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு

Download these Rev. Paul Thangiah Mp3 songs from here

ஆராதனை ஆராதனை Aaraathanai Aaraathanai


தேவா சரணம் கர்த்தா சரணம் Devaa Saranam Kartha Saranam


பனி போல பெய்யும் Pani Poola Peyum


கலிலேயா என்ற ஊரில் Kalileya Entra Ooril


அல்லேலூயா தேவனுக்கே Alleluaiah Devanukkey


இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே Yesu Enakku Jeevan


காத்திடும் Kaathidum


இயேசுகிறிஸ்து ஆண்டவர் Yesu Kiristhu Aandavar


புகழும் வேண்டாமே Pukalum Veendaamey

Tuesday, January 29, 2008

மண் கூடு

ஈரம் கலந்த மண்ணை பிசைந்து கொண்டிருந்தன அந்த சின்னஞ் சிறு கரங்கள். அப்படியே மண்ணை கையால் பிடித்து, குவித்து அப்பி சிறு வீடு ஒன்றை எழுப்பிக்கொண்டிருந்தான் கடற்கரை மணலில். ரம்மியமான சூழல். கடலலைகளின் வேகம் சிறுக சிறுக கூடிக்கொண்டே வந்தது. மாலை நேர வெயில். வரவேற்ப்பறை, நடுவறை, படுக்கையறை, சமையலறை கட்டி மேல்மாடிக்கு வந்திருந்தான் சிறுவன்.கொண்டு வந்திருந்த சிறு சிறு பிளாஸ்டிக் சாதனங்கள் அவன் மண் வீட்டை அழகாய் அலங்கரித்துக் கொண்டிருந்தன. கோபுரத்தில் சின்னதாய் ஒரு பறக்கும் வண்ணக் கொடி.

இப்போது கடலலைகளின் சூரமும் அதிகமாக தொடங்கிவிட்டது.அப்பா வரவும் நேரமாகிவிட்டது.சிறு வீடு கட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தான் அச்சிறுவன். கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து விட்டார்கள்.அப்பாவை எட்டிப் பார்க்கும் நேரத்தில் எங்கிருந்து தான் வந்ததோ அந்த ராட்சத பேரலை மொத்தமாய் சிறுவனின் வீட்டை வாரிக்கொண்டு போய்விட்டது. கை கொட்டி சிரித்தான் சிறுவன் சத்தமாய். மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. சுத்தமாய் காணாமல் போயிருந்த இடிபாடுகளை சுட்டி காட்டியபடியே ஓடோடி வந்த சிறுவன் இறுக்கமாய் அப்பாவின் கரங்களை பற்றிக்கொண்டான். காரில் அமர்ந்திருந்த போது மீண்டும் ஒருமுறை சிரித்துக் கொண்டான்.உண்மையான வீடு தூரத்தில் அல்லவா இருக்கிறது.அது அவன் அப்பா கட்டியது.

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

மத்தேயு 7:25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

Monday, January 28, 2008

பைபிளும் இவர்களும்

நான் ஒரு வேளை சிறைசாலையில் அடைக்கப்படும் போது,என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரம் கொண்டு போகலாம் எனக் கூறினால், நான் பைபிளை (வேதாகமத்தை) மாத்திரமே தெரிந்தெடுப்பேன் - கோதே (Goethe)

வேதாகமம் ஒரு பழமையான புத்தகமோ, அல்லது புதுமையான புத்தகமோ அல்ல. அது நித்திய நித்திய காலமாக உள்ள ஓர் அழிவற்ற நூலாகும்- மார்ட்டின் லுத்தர் (Martin Luther)

ஒரு சிறு பிள்ளையின் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு இவ்வுலக ஞானிகளின் அறிவைப் பரிகாசம் செய்யும் ஓர் புத்தகமே வேதாகமம்.- பேராசிரியர் பீட்டெக்ஸ்

நூறு முறை வேதாகமத்தை வாசித்து முடித்த பின் ஸ்பர்ஜன் (Charles Haddon Spurgeon) கூறினார், "நான் நூறாவது முறை வேதத்தை வாசித்தபோது, முதல்முறை வாசித்ததை விட அதை மிகவும் அழகுள்ளதாகக் கண்டேன்."

உலக புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதிய ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) தனது மரணப்படுக்கையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது தனது மூத்த மகனிடம், "அந்தப் புத்தகத்தை எனக்குத் தா" என்றாராம்.மகன் அவரிடம், "எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்?"என்று கேட்டார். அப்பொழுது ஸ்காட் பதிலுரைத்தார், "இவ்வுலகில் 'புத்தகம்'என அழைக்கப்படக்கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே".

பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin) இவ்வாறாக கூறினார்."A Bible and a newspaper in every house, a good school in every district--all studied and appreciated as they merit--are the principal support of virtue, morality and civil liberty."

நம் தேச தந்தை மகாத்மா காந்தி இவ்வாறாக கூறினார்."The Bible is as much a book of religion with me as the Gita and the Koran."
- "Mahatma" Mohandas Karamchand Gandhi,in The Words of Gandhi by Richard Attenborough

I will sing - Don Moen Live Video

A great worship service by Evangelist Don Moen Live Video in English with captions.
Download these as mp3 songs from here.

Watch it on iPhone or Ipad or iPod Touch

"I will sing" Worship - Don Moen Live Video with subtitles.

Thursday, January 24, 2008

நாதஸ்வர நாதங்கள்

These videos are from Paul Sheik Naathaswara Naathangal VCD Vol-1
Its MP3 version you can download from here

Credit Goes to:
Lightning & Thunder Trust
No.4-A,Thangaiyah Street
Srirangam
Trichy-620 006
Ph:0091-431-2432620 India
email:paulsheik@hotmail.com
http://www.paulsheik.org

இசை அடக்கம்.
1.இசை நாதஸ்வரம் அறிமுகம்
2.கருணை நிறைந்த தேவா
3.நற்கருணை நாதனே
4.துதிப்பேன் இயேசுவின் பாதம்
5.ஆதி திருவார்த்தை
6.தந்தையே நின் தஞ்சம்
7.ஒருபோதும் மறவாத
8.தவில் தனி ஆவர்தனம்
9.சிங்கார மாளிகையிலே
10.ஜெபம்

1.இசை நாதஸ்வரம் அறிமுகம் Isai naathaswaram Arimugam


2.கருணை நிறைந்த தேவா Karunai niraintha theevaa


3.நற்கருணை நாதனே Narkarunai naathaney


4.துதிப்பேன் இயேசுவின் பாதம் Thuthippeen yesuvin paatham


5.ஆதி திருவார்த்தை Aathi thiruvaarthai


6.தந்தையே நின் தஞ்சம் Thanthaiye nin thanjam


7.ஒருபோதும் மறவாத Orupoothum Maravaatha
flashvars="">

8.தவில் தனி ஆவர்தனம் Thavil thani aavarthanam


9.சிங்கார மாளிகையிலே Singaara Maalikaiyiley


10.ஜெபம் Jebam

Wednesday, January 23, 2008

God is Good by Don Moen Live Video

A great worship service by Evangelist Don Moen Live Video in English with captions.
Download these as mp3 songs from here.

Watch it on iPhone or Ipad or iPod Touch
God is Good Worship - Don Moen Live Video with subtitles.

Tuesday, January 22, 2008

கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message

கிருபையின் காலம்
கடைசிகால தேவ தரிசன செய்திகள்.
in Tamil Audio mp3 format download here.

Kirubaiyin kaalam (Grace Period) Endtime message

Contact Address
God`s Vision Message
Pastor.Y.K.P.Henry
14,Agasthiar Street,
Palayamkottai,
Thirunelveli District
Tamilnadu India
Ph:0462-2560124
Cell:94434-46460

Monday, January 21, 2008

கிறிஸ்தவமும் பிளினியும்

கிறிஸ்து உலகில் வாழ்ந்தது கட்டுக்கதையல்ல.அது ஒரு வரலாறு. அதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. நம் பள்ளிப்பருவத்தின் வரலாற்று பாடநூல்களின் மூலம் பிளினி (Pliny the Younger-61/63 - ca. 113)-என்பவரைப்பற்றி நாம் அறிவோம்.

இவர் பிதினியா-சின்ன ஆசியா (Bithynia) நாட்டின் அதிபராக இருந்தவர். இவர் கி.பி 110-ல் ரோம மன்னன் டிராஜனுக்கு(Trajan) எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கும் பொருட்டுத் தாம் கையாடிய கொடுஞ்செயல்களை விளக்கி எழுதியுள்ளார்.(Colin Chapman எழுதிய Christianity on Trial,பக்கம் 422,423)

Friday, January 18, 2008

Jesus Calls Bro.Dinakaran Tamil Mp3 Songs Download

இயேசு அழைக்கிறார் சகோ.தினகரன் தமிழ் கிறிஸ்தவ MP3 பாடல்கள் Yesu Alaikiraar Jesus Calls Christian Tamil Bro.Dinakaran Mp3 Songs Download

To Download following songs.Click here

அக்கினி அபிஷேகம் Akkini Abishegam .mp3
கிறிஸ்தவ இல்லறமே Christava Illarame .mp3
எங்கே ஓடுவேன் Enge Oduvean .mp3
எங்கே தேடுவேன் Enge Theduvean .mp3
ஏதுக்கழுகிறாய் Ethukkazhukiraai .mp3
இன்றைத்தினம் உன் அருள் Inraithinam Un Arul .mp3
இறைவா உம் அருள் Iraiva Um Arul .mp3
ஸ்தோதிரம் ஸ்தோதிரமே Isthothiram Isthothirame .mp3
காப்பார் உன்னை காப்பார் Kaappaar Unnai Kaappaar .mp3
கடல் கொந்தளித்து Kadal Konthalithu .mp3
காலமே நீ எழுந்து Kalame Nee Ezhunthu .mp3
காரிருளில் என் நேச தீபமே Karirulil En Nesa Deepame .mp3
மன்னிப்பு மன்னிப்பு Mannippu Mannippu .mp3
மறவாதே மனமே Maravathey Maname .mp3
நடுக்குளிர் காலம் Nadukkulir Kaalam .mp3
ஒரு மருந்தரும் குரு மருந்து Oru Maruntharum Guru Marunthu .mp3
பாடுவேன் பரவசமாகுவேன் Paduvean Paravasamaguvean .mp3
பிளவுண்ட மலையே Pilavunda Malaiye .mp3
சோர்ந்து போகாதே Sornthu Pogathey .mp3
திருப்பாதம் சேராமல் Thiruppatham Seraamal .mp3
திருப்பாதம் சேராமல் Thiruppathem Seraamal .mp3
உம்மண்டை தேவனே Ummandai Devane .mp3
உந்தன் சுயமதியே Unransuya Mathiye .mp3
உந்தன் ஆசி தாருமே Unthan Aasi Tharum .mp3
உந்தன் சுயமதியே Unthan Suyamathiye .mp3
வழி நடத்தும் Vazhi Nadathum .mp3
வினை சூழ்ந்ததிந்த Vinai Soozhathintha .mp3
இயேசு அழைக்கிறார் Yesu Azhaikkirar .mp3
இயேசு நசரேயின் அதிபதியே Yesu Nasaraiyin Athipathiye .mp3

Saturday, January 12, 2008

இங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை

அமெரிக்காவை சேர்ந்தவர் லூவாலஸ் (Lew Wallace - April 10, 1827 – February 15, 1905) - இவர் ராபட் இங்கர்சால் (Robert Ingersoll)என்னும் பிரபல நாத்திக அமெரிக்கரின் உற்ற நண்பர் ஆவார்.நியூமெக்ஸிகோ பகுதியின் ஆளுநராய் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர்.

இவர் இயேசுகிறிஸ்து என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்குப் போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தின் பெரும் பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே முடியவில்லை.ஏனெனில் அவருக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது, வாழ்ந்தது, அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. எனவே இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்ட பென்ஹர் (Ben-Hur: A Tale of the Christ) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

அந்நூல் பின்பு நான்கு முறை திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு புகழடைந்தது.

Wednesday, January 09, 2008

கிறிஸ்துவும் விவேகானந்தரும்

இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.

இவர் இவ்வாறாக சொல்கிறார்.

"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)

""மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)


""தீமையைத் தீமையால் எதிர்க்காதே" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)

"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)

Thursday, January 03, 2008

பெருமையின் முடிவு

தோல்வி....
பெருமையின் முடிவு

ஸ்பானிய தேசத்து அரசன் பிரான்ஸ் தேசத்தை ஜெயிக்க புறப்பட்டான்.பத்திரிகை நிருபர்களை வரவழைத்தான்.

"பிரான்சு தேசத்தின்மீது படையெடுக்கப் போகிறோம்;நான் நிச்சயம் அதை ஜெயிப்பேன். யுத்த செய்திகளை வரிசைக் கிரமமாய் எழுதும்படி போதுமான கடிதாசிகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று பெருமையுடன் கூறினான்.

"என்னை எதிர்த்துப் போர் செய்யக்கூடியவர்கள் ஒருவருமேயில்லை" என கர்வத்தோடு மேன்மை பாராட்டினான்.

சேனைகளைத் திரட்டிக்கொண்டு போனபோது வழியில் கொள்ளைநோய் வந்து சேனையில் ஏராளமானோர் மாண்டனர்.எஞ்சினோர் மிகக் கொஞ்சமே! அகந்தையின் முடிவு அழிவு.

-----------------------------------------------------------------------------------
பட்டம் பெற்ற பாதிரியார் ஒருவர் முதல் தடவையாகப் பிரசங்க மேடைமீதேறிப் பிரசங்கம் செய்யப் போகிறார். பெருமையோடும், கர்வத்தோடும் பிரசங்க மேடைமீது ஏறினார்.

பிரசங்க வாக்கியம் ஞாபகத்திற்கு வரவில்லை. பிரசங்கக் குறிப்பை அங்கி அறையில் மறதியாக வைத்துவிட்டார். திண்டாடி ஏதொ சொல்லிவிட்டுப் பத்து நிமிடத்தில் தலை கவிழ்ந்து தாழ்மையுடன் இறங்கினார்.

ஆலயத்திலிருந்த பெரியவர் ஒருவர் வந்து, "சகோதரரே, நீர் இறங்கும்போது என்ன நிலைமையிலிருந்தீரோ, அதே நிலையில் நீர் ஏறிப்போயிருந்தால் சந்தோசத்துடன் இறங்கியிருப்பீர்"என்றார்.

மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

-------------------------------------------------------------------------------------

நூற்று முப்பது ஸ்பெயின் போர்க்கப்பல்கள் இங்கிலாந்துக்கு விரொதமாய் படை எடுத்துச் சென்றன. இங்கிலாந்தின் கப்பல்கள் எண்பது தான். அவைகளில் யுத்தத்திற்குப் பயன்படக்கூடியது முப்பதுதான். ஸ்பெயின் கப்பல்களை நிலவு போன்று

வளைவாக விட்டுக்கொண்டு இங்கிலாந்துக் கப்பல்களை சுற்றிவளைத்தனர்.

ஆங்கில நாட்டுக் கப்பல்கள் பின்வாங்கி ஓடின. ஸ்பெயின் கப்பல்கள் மிகுந்த அகந்தையோடு ஆங்கிலக் கப்பல்களைத் துரத்திச் சென்றன.

ஸ்காட்லாந்தின் பக்கம் குன்றுகளடர்ந்த தீவுகள் பல இருந்தன. அக்குன்றுகளில் ஸ்பெயின் கப்பல்கள் மோதி உடைந்தன. ஐம்பத்து நான்கு சேதப்பட்ட கப்பல்கள்தான் ஸ்பெயினுக்குத் திரும்பின.

வீண் டம்பம் கொண்ட ஸ்பெயின் வீரர்கள் வெட்கி நாணினார்கள்.

எஞ்சினோர் மிகக் கொஞ்சமே!
நெஞ்சித்திமிர் என்றும் சஞ்சலமே!


நீதிமொழிகள் 8:13.
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

I பேதுரு 5:5
பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.