Wednesday, March 26, 2008

இரட்சிப்பு...இலவசம்

பேர்பெற்ற மிஷனரியாகிய ஆதாம் ஸ்மித் சுவிசேஷப்படை முயற்சிக் கூட்டமொன்றில் பிரசங்கம் செய்துமுடித்தபின் "இப்பொழுது அந்நிய நாடுகளில் நடந்தேறும் மிஷனரி ஊழியத்திற்காக காணிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் எழுந்து நின்று,"ஐயா,இரட்சிப்பு இலவசம் என்று இவ்வளவு நேரமும் பிரசங்கம் கேட்டோம்.அப்படியானால் காணிக்கை எதற்காக எடுக்கவேண்டும்?" என்றாள்.

இருவருக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது:-

"அம்மா,நீங்கள் தண்ணீர் கிரையம் கொடுத்து வாங்குகிறீர்களா?"

"இல்லை,இலவசம்"

"இலவசமாக தண்ணீர் உங்கள் வீட்டண்டை வர,இரண்டு மைல் தூரத்தில் பம்பில் ஸ்டேஷன் கட்டி யந்திரங்கள் வைத்து,பூமியில் குழாய்கள் பதித்து,தண்ணீரை உங்கள் வீட்டுக்கு முன் கொண்டு வந்து இலவசமாய்க் கொடுக்கிறார்கள்.எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்."

"ஐயா நான் புத்தியீனமாய்க் கேட்டுவிட்டேன்.தயவு செய்து மன்னியுங்கள்."

இரட்சிப்பு இலவசம் தான்.அதை அறிவிக்க ஆட்கள் வேண்டாமா? கர்த்தருடைய நாம மகிமைக்கென்றுதான் காணிக்கை.

"என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை"
-ஏசாயா:46:13

"கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன்"
-ரோமர்:15:21

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment