Saturday, October 31, 2009

செயற்கை ஒளி

தமிழ்முரசு 5/29/2008 மகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்...
Magara Vilakku is artificial made light. Sabarimalai priest says.




யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

யோவான் 9:5 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

யோவான் 12:46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

Sunday, October 25, 2009

இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

பாழாய்க்கிடந்த ஒரு தேசம் ஏதேன் தோட்டம் போலாகிக் கொண்டிருக்கும் கதை உங்களுக்குத் தெரியுமா? அத்தேசத்தின் செழிப்பின் ரகசியத்தை தெரிந்துகொள்ள தமிழக விவசாயிகள் குழு அத்தேசத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 35ம் வசனம் சொல்கிறது.”பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

இக்குழுவினரை சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பிவைத்த வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:

இஸ்ரேல் நாட்டில் ஒரே ஒரு நீர்த்தேக்கம் மட்டுமே உள்ளது. அந்த நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால், அங்குள்ள விவசாயிகள் தோட்ட பயிற்சி மற்றும் விவசாய பயிர்களை பயிரிடுவதில் பெரும் சாதனை படைத்து, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகள் உயர் தொழில்நுட்ப நவீன கருவிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதுதான்.

இருக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு நீரைக்கூட வீணடிக்காமல், பயிர்களுக்கு பயன்படுத்தி இப்புரட்சியை செய்துள்ளனர். தமிழகத்திலும் இதுபோன்ற விவசாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். அதை நிறைவேற்றும் வகையில், உலக வங்கி உதவியுடன் தமிழக விவசாயிகள் ஒரு வார பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

செய்முறை பயிற்சி மட்டுமின்றி பல்வேறு விவசாய பண்ணைகளுக்கு சென்று, அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்வர். தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி காலங்களில் விவசாயம் செய்வது தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு வார பயணமாக இஸ்ரேலுக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றனர்.

வறட்சி காலங்களில் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி லாபகரமாக விவசாயம் நடத்துவது தொடர்பான நவீன தொழில்நுட்பத்தை தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்ள உலக வங்கி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, விவசாயிகள் நலவாரிய தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் 21 பேர் கொண்ட விவசாயிகள் குழு நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை வழியாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றனர்.

நீர் ஆதாரம் இல்லாத இஸ்ரேல் நாட்டில் நடந்து வரும் விவசாயப் புரட்சி குறித்து அறிந்துகொள்ள, உலக வங்கியின் ஏற்பாட்டில் தமிழக விவசாயிகள் 21 பேர், இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றனர்.

இஸ்ரேல் நாட்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளில் நடைமுறையில் உள்ள சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், சொட்டுநீர் மூலம் உரமிடல், பசுமைக் குடில்கள் அமைத்தல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை அறிந்துவர 8 நாள் பயணமாக 17.10.2009 அன்று தோட்டக் கலைத் துறை மூலம் தமிழக விவசாயிகள் இஸ்ரேல் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விவசாயிகள் குழுவில் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத் தலைவர் கே.பி. இராமலிங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல மேம்பாட்டு வாரியத் துணைத் தலைவர் கே. செல்லமுத்து, தமிழ்நாடு இரயில்வே மண்டல உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ப. கௌசிக பூபதி உள்ளிட்ட 21 விவசாயிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், இரவு 8.00 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார்.

இவர்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 30-ம் வசனம் இப்படியாக சொல்கிறது ”நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்”
இதுதான் இரகசியம்.

மூலங்கள்
http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=Chennai&article=13353
http://www.newindianews.com/view.php?2e3C0cA20aeY4DD32edSYOJd2ccdQoOKc4d4AOMogcb34RlYmad43fVm43a002c4C60e
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18020

Friday, October 23, 2009

சமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி



Download this video
Peace_Bro. Mohan C. Lazarus.wmv

சமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ தேவசெய்தி
திருப்பூர் இயேசு விடுவிக்கிறார் விடுதலைப் பெருவிழா 06-08-2009

Bro.Mohan.C.Lazarus video message Viduthalai Peruvilaa Tirupur
Peace Samaathaanam Yesu Viduvikiraar
Jesus Redeems Ministries Naalumaavadi

Saturday, October 17, 2009

தாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி



தாழ்மையின் தாற்பரியம் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி
Gems Media presents Thaazhmaiyin Thaarpariyam
Bro.D.Augustin Jebakumar.
தாழ்மையின் தாற்பரியம் வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

GEMS
16-A,Chinna Koil Street,
Adaikalapuram,
Murugankurichi,
Tirunelveli-627002.
Ph:0462-2581131
email:nellaioffice@gemsbihar.org

Saturday, October 10, 2009

நீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி



நீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி
Gems Media presents Neeyum Poi Sei
Bro.D.Augustin Jebakumar.
நீயும் போய் செய் வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

Wednesday, October 07, 2009

இடிக்கப்படவிருக்கும் மதில்கள்


பரிசுத்த வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்களில் சில அப்படியே எழுத்தின் பிரகாரமாக நிறைவேறும்.உதாரணமாக இயேசு கிறிஸ்து எருசலேம் தேவாலயத்தை பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனத்தை குறிப்பிடலாம். மத்தேயு 24:2-ல் இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் என்ற தீர்க்கத்தரிசனம் அப்படியே எழுத்தின் படியாக கிபி 70-ல் நடைபெற்றது.ரோம பேரரசனான தீத்து எருசலேம் தேவாலயத்தை ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடித்துப்போட்டான்.

இன்னும் சில தீர்க்கத்தரிசனங்களோ ஞானர்த்தம் கொண்டவையாய் இருக்கும். அது எழுத்தின்படி அப்படியே நிறைவேறாமல் அதின் மூலம் விளக்கப்படும் அர்த்தம் நிறைவேறுவதாய் இருக்கும். உதாரணமாக கீழ்கண்ட இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தை குறிப்பிடலாம்.யோவான் 2:19-ல் இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார் என்ற தீர்க்கதரிசனம் எழுத்தின் படியான தேவாலயமாய் இருக்காமல் ஞானர்த்தமாய் அவர் தன் சரீரத்தையே குறிப்பிட்டார்.அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள் என்ற வசனம் அவர்கள் எழுத்தின் பிரகாரமான தேவாலய கட்டடத்தை பற்றி சிந்தித்ததையும் ஞானர்த்தமாய் அவருடைய சரீர மரணத்தையும் மூன்றாம் நாளில் உயிர்ப்பதையும் குறித்து சிந்திக்காமல் இருந்தார்கள் என்பதையும் காட்டுகிறது. தானியேலிலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் வரும் வினோதமான கொம்புள்ள மிருகங்கள், சிலைகள், ஸ்திரீகள், காட்சிகள் எல்லாமே வரவிறுக்கும் வெவ்வேறு சம்பவங்களை ஞானர்த்தமாய் குறிப்பிடுவனவேயாகும்.

இங்கு எழுத்தின் படியே அப்படியே சீக்கிரத்தில் நடக்கவிருக்கும் ஒரு தீர்க்கதரிசனத்தை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.28 ஆண்டுகளாக மேற்கு ஜெர்மனியையும் கிழக்கு ஜெர்மனியையும் இரண்டாக பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவர் 1989-ஆம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட போது ஜெர்மானியர்களின் சந்தோஷ ஆர்ப்பரிப்பில் உலகமே அவர்களை வாழ்த்தியது.இது போன்று இஸ்ரேலின் சில சுவர்கள் இடிக்கப்பட உள்ளன. இஸ்ரேல் தன்னை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் அவர்கள் ஊடுருவலை தடுக்கவும் தேசத்தை சுற்றிலும் உயரமான சுவர்களை எழுப்பியுள்ளது.இதனை Israel’s Security Fence அல்லது Israeli West Bank barrier என்பார்கள்.இதன் நீளம் ஏறக்குறைய 400 கிலோமீட்டர்கள் ஆகும்.இவைகள் அங்காங்கே checkpoints எனப்படும் கதவுகள் கொண்டிருக்கின்றன.இச்சுவர்கள் பெருமளவு தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளதால் இதன் நீளத்தை இன்னும் இஸ்ரேல் தேசத்தை சுற்றிலும் அதிகப்படுத்தியவாறு உள்ளனர். இந்த சுவர்கள் சீக்கிரத்தில் இடிக்கப்படும் என எசேக்கியேல் தனது தீர்க்கத்தரிசனத்தில் உரைக்கிறார்.

எசேக்கியேல் 38ம் அதிகாரம் 12ம் வசனம் சொல்கின்றது ”நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.”

எப்போது இந்த இஸ்ரேலின் சுவர்கள் இடிக்கப்படும்?
அந்திக்கிறிஸ்து எனப்படும் பொய்மேசியாவின் அமைதிபேச்சு வார்த்தைகளுக்கு உடன்பட்டு அதனால் இஸ்ரேல் பிராந்தியத்தில் ஒரு அசாதாரண சமாதானம் உண்டாக உற்சாகத்தில் இஸ்ரேல் தேசமானது இம்மதில்களை இனித் தேவையில்லை என நினைத்து இடித்துப்போடும். அத்தருணத்தில் அவர்கள் நிர்விசாரமாக சுகத்தோடே Peace and Security-உடன் யூதர்களும் பாலஸ்தீனர்களுமாக ஒரே நிலப்பரப்பில் கூடி இருக்கும் போது அந்த யுத்தம் நிகழும். வடக்கிலிருந்து வரும் அந்த தேசம் இஸ்ரேலுக்கு எதிராக வரும்.இதுவே எசேக்கியேல் 38 மற்றும் 39 கூறும் கோகு மாகோகு யுத்தமாக அமையும்.

Saturday, October 03, 2009

உபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி



Watch it on iPhone or Ipad or iPod Touch

உபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி
Gems Media presents Ubayogamaai Irungal
Bro.D.Augustin Jebakumar.
உபயோகமாய் இருங்கள் வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்