Sunday, October 29, 2006

பூவும் சூரியனும்

ஆங்கில கவிஞன் டென்னிசன் ஒரு நாள் தம் நண்பருடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.நண்பர் அவரைப்பார்த்து ,"கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்குக் கிறிஸ்து எப்படிப் பட்டவராக இருக்கிறார்?"என்று கேட்டார்.

டென்னிசன் சற்று அமைதியாக உலாவினார்,

பின்பு,"அதோபாருங்கள்,"என்று ஒரு மலரைச் சுட்டி காட்டினார்.

`அது ஒரு அழகான புஷ்பம்` என்றார் நண்பர்.

அப்பூவிற்குச் சூரியன் எப்படியோ அப்படியே கிறிஸ்துவும் எனக்கு என்றாராம்.

கிறிஸ்து உங்களுக்கு எப்படிப்பட்டவர்?

ஓசியா (Hosea):14:8
"நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று"
"I am like a green fir tree. From me is thy fruit found."

யோவான் (John) :15:4
"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்"
"Abide in me, and I in you."

பிலிப்பியர் (Philippians):1:21
21. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
"For to me to live is Christ, and to die is gain."


இதுவல்லவோ இரண்டறக்கலந்த வாழ்வு?

Sunday, October 22, 2006

இந்திராகாந்தியும் விவிலியமும்

இந்தியாவின் பிரதமராய் இருந்த இந்திராகாந்தி,தன் மகனாகிய சஞ்சய்காந்தியை விமான விபத்திலே பறிகொடுத்தபோது அவர்கள் திரும்பத்திரும்ப மலைப்பிரசங்கத்தையும் யோவான் 14ம் அதிகாரத்தையும் இணைத்து வாசித்தார்கள்."அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதலாய் இருந்தது"என்று ஒருமுறை குறிப்பிட்டார்கள்
- அன்றன்றுள்ள அப்பம் சகோ.சாம் ஜெபத்துரை 2 அக்டோபர் 2006

ஏசா:26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

Isaiah 26:3
You will keep in perfect peace those whose minds are steadfast, because they trust in you.

முகவரிகள் Addresses

அன்றன்றுள்ள அப்பம் Antantulla Appam
சகோ.J.சாம் ஜெபத்துரை
J.SAM JEBADURAI,
50,RAILWAY STATION ROAD,
KODAMBAKKAM
CHENNAI 600 024
INDIA
EMAIL appam@appamonline.com
Web http://www.appamonline.com

Yesu viduvikkiraar
Jesus Redeems Ministries
இயேசு விடுவிக்கிறார்
சகோ.மோகன் சி.லாசரஸ்
நாலுமாவடி Naalumaavadi
628 211
தூத்துக்குடி மாவட்டம் Tuticorin District
24 மணிநேர ஜெப உதவிக்கு 04639-235315
Ph:(04639)-235 305,235 705
Fax:(04639)-235 415

EMAIL info@jesusredeems.com
Web http://www.jesusredeems.com

Monday, October 16, 2006

மாவோவும் கடவுளும்

மாவோ (Mao Zedong December 26, 1893 – September 9,1976)கடுமையான நாத்திகன்.1936-ல் மத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினராக இருந்தபோது நோயினால் பாதிக்கப்பட்டார்.அப்போது அவர் ஞானஸ்நானம் பெற விரும்பி ஒரு கன்னியாஸ்திரியின் மூலமாக ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.
மாவோவின் சியாங்கே ஷேக்கின் மனைவி படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட போது "The Immortals" என்னும் மதக்கவிதையே மாவோ எழுதினார்.
"snow" என்னும் ஆங்கில பத்திரிகைக்கு மாவோ பேட்டியளித்தார்.அதில் "விரைவில் நானும் கடவுளுக்கு முன்பாக நிற்க வேண்டும்"என்று குறிப்பிட்டார்.

-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

வெளி :20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

Revelation 20
12 And I saw the dead, great and small, standing before the throne, and books were opened. Another book was opened, which is the book of life. The dead were judged according to what they had done as recorded in the books.

13 The sea gave up the dead that were in it, and death and Hades gave up the dead that were in them, and each person was judged according to what he had done.

Saturday, October 07, 2006

சங்கர்தயாள் சர்மாவும் வேதமும்

"பரிசுத்த வேதம் நம்மெல்லாருக்கும் தேவையான செய்தியைக் கொண்டுள்ளதென்பதை நினைவூட்டட்டும்.பரிசுத்த வேத புத்தகத்தை ஒருவன் படித்து புரிந்து கொண்டால்,தடுப்புச் சுவர்கள் பல தரை மட்டமாகும்."பகவத் கீதை மட்டும் தொலைந்து போனால் நான் இழந்து போனது ஒன்றுமில்லை.மலைப்பிரசங்கம் இருக்கிறதே"என்றார் காந்தியடிகள்.வில்லியம் கேரி பரிசுத்த வேதாகமத்தை படித்து அதன் படி நடந்தார்."
-முன்னாள் இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மா (Shankar Dayal Sharma August 19, 1918 - December 26, 1999)
40 மொழிகளில் வேதத்தை மொழிபெயர்த்த வில்லியம் கேரியின் 100-ம் ஆண்டு நினைவு ஒட்டி தபால் தலை வெளியிட்டதை தொடர்ந்து பேசியது.

சங்கீதம் 119:72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.

Psalm 119:72 The law of thy mouth is better unto me Than thousands of gold and silver.

Wednesday, October 04, 2006

ஸ்டாலினும் கடவுளும்

நாஸிகளுக்கு எதிராக சர்ச்சில்-ரூஸ்வெல்ட்-ஸ்டாலின் மூவரும் யுத்தத்தை நடத்தினர்.முதல் இருவரும் கிறிஸ்தவர்கள்.சர்ச்சில் இந்த யுத்த நிகழ்ச்சிகளைக் குறித்து ஆறு புத்தகங்களைஎழுதினார்.கிறிஸ்தவ விசுவாசிகளான இருவரும் ஒருமுறை கூட தங்கள் உரையாடல்களில் "கடவுள்" என்ற வார்த்தையை உதட்டால் உச்சரிக்கவில்லை.
ஸ்டாலின் (ரஷ்ய சர்வாதிகாரி-Joseph Stalin-December 18 1878– March 5, 1953), மட்டும் "கடவுள் நமக்கு வட ஆப்ரிக்கா முற்றுகையில் வெற்றிதரட்டும்"-"நடந்தவைகளெல்லாம் கடவுளுக்கு சொந்தம்" முதலிய பல வார்த்தைகளைச் சொன்னதாக கூறப்பட்டுள்ளது.

-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

சங்கீதம் 107:6 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.

Psalm 107:6
Then they cried out to the LORD in their trouble,
and he delivered them from their distress.