Tuesday, November 29, 2011

நன்மை தருவார் இயேசு MP3 பாடல்கள்

Nanmai Tharuvaar Yesu Audio CD from Yesu Viduvikiraar (Jesus Redeems) Ministries.

MP3 பாடல்கள்ஐ பதிவிறக்கம் செய்ய, மவுஸினால் இங்கு வலது சொடுக்கி, “save target as” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

[mp3] 1.Nanmai Tharuvar Yesu.mp3 0 days old 0 4.0 MB

[mp3] 2.Verutha Ennai.mp3 0 days old 0 3.9 MB

[mp3] 3.Nesar Easuvin.mp3 0 days old 0 4.6 MB

[mp3] 4.Thulli Thulli.mp3 0 days old 0 4.4 MB

[mp3] 5.Kanakku Vaikkum.mp3 0 days old 0 3.5 MB

[mp3] 6.Thayin Karuvil Irunthu.mp3 0 days old 0 5.7 MB

[mp3] 7.Ennai Palapadhuthum.mp3 0 days old 0 4.8 MB

[mp3] 8.Kalangathae Maname.mp3 0 days old 0 4.6 MB


Nanmai Tharuvaar Yesu
NANMAI THARUVARar Yesu.mp3 JOHN PANNEER SELVAM - NANMAI THARUVAR EASU 4:22 · 128 Kbit/s · 4 MB · MP3
VERUTHA ENNAIai.mp3 MOHAN C.LAZARUS - NANMAI THARUVAR EASU 4:18 · 128 Kbit/s · 3.94 MB · MP3
NESHAR EASUVINn.mp3 VASANTHI PAUL - NANMAI THARUVAR EASU 5:00 · 128 Kbit/s · 4.57 MB · MP3
THULLI THULLIli.mp3 RATHINARAJ & VASANTHI PAUL - NANMAI THARUVAR EASU 4:50 · 128 Kbit/s · 4.43 MB · MP3
KANAKKU VAIKKUMum.mp3 JOHN PANNEER SELVAM - NANMAI THARUVAR EASU 3:51 · 128 Kbit/s · 3.53 MB · MP3
THAYEEN KARUVILl Irunthu.mp3 JOHN PANNEER SELVAM - NANMAI THARUVAR EASU 6:13 · 128 Kbit/s · 5.69 MB · MP3
ENNAI PALAPADUTHUMhum.mp3 DAFFINE - NANMAI THARUVAR EASU 5:15 · 128 Kbit/s · 4.8 MB · MP3
KALANGATHAE MANAMAEe.mp3 JOHN PANNEER SELVAM - NANMAI THARVAR EASU 5:01 · 128 Kbit/s · 4.59 MB · MP3

Thursday, November 24, 2011

Give Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்

Happy Thanks giving to every body!!



Lyrics

Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He's given Jesus Christ, His Son.

Give thanks with a grateful heart
Give thanks to the Holy One
Give thanks because He's given Jesus Christ, His Son.
And now let the weak say, "I am strong"
Let the poor say, "I am rich"
Because of what the Lord has done for us.

And now let the weak say, "I am strong"
Let the poor say, "I am rich"
Because of what the Lord has done for us.

Give thanks
Give thanks
Give thanks.

நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்

பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய்

நன்றி
நன்றி
நன்றி

Wednesday, November 23, 2011

வேதாகம துணுக்குகள்-1

1.தாவீது மூன்று முறை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான்.
a. தன் வீட்டார் மத்தியில் 1 சாமு 16:12,13
b. தன் கோத்திரத்தார் (யூதா) மத்தியில் – 2 சாமு 2:4.
c. தன் தேசத்தாரின் மத்தியில் – 2 சாமு 5:3.

2.கிதியோன் மீதியானியரை ஜெயிக்க சதாரணமான பொருட்களையே பயன்படுத்தினான்.நியா 7:16-22.
a. எக்காளம்
b. வெறும் பானை
c. தீவட்டி

3.மூன்று விதமான கிறிஸ்துக்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
a. இயேசு கிறிஸ்து – எபி 13:8
b. அந்திக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.

4.பேய் என்ற வார்த்தை பழைய ஏற்ப்பாட்டில் 3 முறை வருகிறது.
a. லேவி 17:7;
b. உபா 32:17;
c. 2 நாளா 11:15.

5.தாவீதின் பராக்கிரமசாலியான “பெனாயா” என்பவன் மூன்று சிங்கங்களை கொன்றவன் என 2 சாமு 23:20,22-ல் பார்க்கிறோம்

6.மனுஷனுக்குள் ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற 3 தத்துவங்கள் அடங்கியிருக்கிறது.1 தெச 5:23.

7.யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

8.ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் மூன்று பேர்கள்.
a. எலியா – 1 இராஜ 18:37,38.
b. தாவீது – 1 நாளா 21:25,26.
c. சாலொமோன் – 2 நாளா 7:1.

9.“அப்பா பிதாவே” என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் மூன்று முறை வருகிறது.
a. மாற் 14:36
b. ரோம 8:15
c. கலா 4:6.

10.நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.

நன்றி:KS

Friday, November 18, 2011

”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம் டவுன்லோட்


Title : Thirinoora? Siluvaya? (Tamil) (Is it Sacred Ash or the Cross which is the symbol of Christianity?)

Author : By Dr. M.Deivanayagam-2002

Dravidian Spiritual Movement,
253-Konnur High Road,
Ayanavaram Post,
Chennai - 600023

The author traces the role of Sacred Ash in Old Testament as well as in the Tamil Religious texts of India and claims that Sacred Ash and the Kumkum used by Early Indian Christians on the person of individuals may be more appropriate a Christian symbol to India than the Cross

திருநீரா சிலுவையா Thirinoora? Siluvaya? in Tamil pdf book download link

Thursday, November 17, 2011

ஆவி, ஆத்துமா,சரீரம் விளக்கம் தரவும் - குறும்பதில்கள்

Dear Bro in Christ,
I have some Doubt in Spiritual.Please give explanation for below this in tamil.
God Bless You and Your Ministries.
ஆவி, ஆத்துமா,சரீரம் விளக்கம் தரவும்.


வேத பண்டிதனல்ல நான். ஆகிலும் எனது சிறிய அறிவுக்கு எட்டிய அளவில் விளக்கம் தர முயற்சிக்கிறேன்.
முதலில் ஆவி, ஆத்துமா,சரீரம் இவற்றின் தோற்றத்தை பார்க்கலாம்.
தேவன் தனது சொந்த கரம் கொண்டு பூமியின் மண்ணினாலே மனிதனை உருவாக்கினார். இது சரீரத்தின் தோற்றம்.
இச்சரீரம் இன்னும் உயிர் பெறவில்லை. தேவன் தனது சுவாசத்தை அந்த சரீரத்தின் நாசியிலே ஊத ஆவி உள் புகுகிறது. அவன் ஜீவ ஆத்துமாவானான்.
இந்த ஆத்துமாவானது பாவம் செய்வதன் மூலம் மரணம் அடைகிறது.
இதுதான் பாவத்தின் சம்பளம் மரணம் என்பது. இது முதலாம் மரணம்.(ரோம 6:23)
எல்லாருமே முதலாம் மரணம் அடைகின்றோம்.
எனவே தான் நாம் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது.(யோவா 3:3)
மறுபடியும் பிறந்த ஆத்துமாவுக்கு இனி மரணமேயில்லை.
இப்படி மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆத்துமாவும் இறுதியில் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கிறது.
பாவம் செய்து முதலாம் மரணம் அடைந்து மறுபடியும் பிறவாத ஆத்துமா
இறுதியில் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்குபெறும்.(வெளி 21:8)
சரீரத்துக்கும் ஆவிக்கும் இறுதியில் என்ன நேரிடும்?
"சரீர மரணத்துக்கு" பின் சரீரம் மண்ணுக்கும் (ஆதி 3:19), ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கும் திரும்பும்.(பிர 12:7)
முடிக்கும் முன் ஒரு விசயம் கூட சொல்லிவிடுகிறேன்.
தேவன் தம்முடைய சாயலாகவே மனிதனை படைத்தார் என்று பார்க்கிறோம்.(ஆதி 1:26)
எனவே நாம் நம் சாயலை தெரிந்து கொள்ள அவரையே பார்க்கலாம்.
அவரைப் போலவே நாமும் நம்மில் மூன்றாயும் ஒன்றாயும் இருக்கிறோம்.
அவரில் பிதா குமாரன் பரிசுத்தாவி.
நம்மில் ஆத்துமா சரீரம் ஆவி.
நாம் அவரின் பிரதிபலிப்பு.

Tuesday, November 15, 2011

சகோ.டைட்டஸ் தாயப்பன் வாழ்வில் இயேசு செய்த அற்புதங்கள் வீடியோ

இந்து மதத்தில் தீவிரமாயிருந்து பின் கிறிஸ்துவின் அன்பிற்குள் வந்த சகோ.டைட்டஸ் தாயப்பன் அவர்களின் வாழ்வில் இயேசு செய்த மாபெரும் அற்புதங்கள் சாட்சியாக இங்கே வீடியோவில்.
Hindu To Christian Testimony in Tamil Language - Bro. Titus Thayappan



Download this video.

Monday, November 14, 2011

"இந்தச் சந்ததி" யார்? - குறும்பதில்கள்

Dear Brother in Christ,
Praise the lord, I am KS. Bro i have one doubt in bible plz send ans for me மத்தேயு 24 : 34 "இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."இங்கு கூறப்பட்டுள்ள "இந்தச் சந்ததி" யார்?


கிறிஸ்துவில் பிரியமான சகோதரர் அவர்களுக்கு,
எனக்கு தெரிந்த வகையிலும் புரிந்த வகையிலுமான பதிலை இங்கே உங்களுக்கு தந்துள்ளேன். மாற்று கருத்துக்கள் இருப்பின் அவைகள் வரவேற்க்கப்படுகின்றன. வேதத்தின் ஆழங்களை அறிவது அத்தனை சுலபமல்லவே.

சிலர் “இந்த சந்ததியை” இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இருந்த சந்ததி என்று குறிப்பிடுவர். அக்கருத்துபடி பார்த்தால் எருசலேம் தேவாலய அழிவை அவர் இருந்த கால ஜனங்கள் பார்த்தார்களே ஒழிய மேலும் அவர் அந்த 24-ம் அதிகாரத்தில் கூறிய இரண்டாம் வருகை சம்பவங்களை அவர் இருந்த கால ஜனங்கள் பார்க்கவில்லை. எனவே இக்கருத்தை நாம் தவறான கருத்தாக கொள்ளலாம்.

வேறு சிலரோ அதே அதிகாரத்தில் குறிப்பிடப்படும் அத்திமரம் துளிவிடும் காலத்தில் அதாவது இஸ்ரேல் தேசம் மீண்டும் உருவாகும் காலத்தில் வாழும் சந்ததியினரே இயேசுவானவர் குறிப்பிடுகிறார் என்கிறார்கள். அதாவது 1948-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகள் (1 சந்ததி) அதாவது 2018 வரையான காலத்தில் வாழும் மக்கள் தான் அந்த "இந்தச் சந்ததி"யாம். எனக்கு ஏனோ இந்த கணக்கீட்டிலும் உடன்பாடு இல்லை. ஆனால் அதனை நம்புவோர் தொடந்து அதனையே நம்பிக்கொண்டிருக்க வேண்டுகிறேன்.

எனது கணிப்பு அவர் "இந்தச் சந்ததி” என குறிப்பிட்டது யூத சந்ததியை அதாவது யூத வம்சத்தை. ஒரு தேசத்தை அல்லது ஒரு குல ஜனங்களை கூட குறிப்பிட இந்த ஜெனரேசன் அல்லது சந்ததி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை நாம் மத்தேயு:12:39 மற்றும் மத்தேயு:23:36 போன்ற வசனங்களில் காணலாம். கிறிஸ்துவின் காலத்துக்குப் பின் எருசலேமில் ரோமர்களின் படையெடுப்பு அதையடுத்து யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப்படல், சிறைப்பிடிக்கப்படல் நடந்தது. இவ்வாறு சொந்த வீட்டை இழந்து நாட்டை இழந்து உலகமெங்கும் சிதறியபோதும் "இந்தச் சந்ததி” ஒழிந்துபோகாதென்று, அதாவது யூத இனம் ஒழிந்து போகாது வேதத்தில் கூறப்பட்டுள்ள இயேசுவின் இரண்டாம் வருகை சம்பவங்கள் அனைத்தையும் பார்க்க அந்த ஜனம் கண்டிப்பாக இருக்கும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.எப்படி உங்கள் கருத்து?

Tuesday, November 08, 2011

ஜாமக்காரன் அக்டோபர் 2011 பதிப்பு

(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15


முன்னுரை
666 சீக்கிரம் வந்துவிடும் அபாயம்
வெளிநாட்டில் வாழும் (NRI) இந்தியர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தூய ஆவியின் ஞானஸ்நானம்
ஞானஸ்நானத்தின் (திருமுழுக்கின்) விளக்கம்:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றி எடுத்துக்கூறும் வேத வசனங்கள்:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றிய பலவித கருத்துக்கள்:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது ஒரு சரித்திர நிகழ்ச்சியாகும் என்பதற்கான ஆதாரங்கள்:
இன்று வாழும் விசுவாசிகளுக்கும், பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்திற்கும் உள்ள தொடர்பு:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இதன் பொருள்
ஞானஸ்நானத்தோடு சம்பந்தப்பட்ட வேறு சில வசனங்கள்:
ஆவியின் ஞானஸ்நானம், அக்கினி ஞானஸ்நானம் ஆகிய இவைகளுக்குள்ள வேறுபாடு:

அவசர ஜெபம்

கேள்வி - பதில்
கேள்வி: என் சொந்த கம்பெனியில் கூலி வேலை செய்யும் யாவருக்கும் நாங்கள் சுவிசேஷம் அறிவிக்கிறோம். அவர்களில் பலர் இரட்சிக்கப்பட்டு நாங்கள் ஆராதிக்கும் பெந்தேகோஸ்தே சபைக்குதான் அவர்களும் கலந்துக்கொள்கின்றனர். எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் கூலியாட்களில் ஒருவன் நல்ல மனந்திரும்பினவன், உண்மையுள்ளவன். ஆனால் இப்போ கொஞ்சகாலமாக வேலையில் அக்கறை காட்டுவதில்லை. வேலைக்கு தாமதமாக வருகிறான், இவன் காரணமாக மற்ற கூலியாட்களை எங்களால் சரியாக வேலை வாங்கமுடியவில்லை - அவனையும் கண்டிக்க மனம் வரவில்லை - தண்டிக்கவும் மனம் வரவில்லை, நான் கடினமாக நடந்துக்கொண்டால் அவன் பின்வாங்கிப்போவானோ என்று அஞ்சுகிறேன். உங்கள் ஆலோசனையை கூறுங்கள்.

கேள்வி: CSI & LUTHERAN சபைகளின் பணக்கொள்ளை, ஆலய நிலம் விற்றல் ஆகியவைகளை செய்யும் பிஷப்மார்களுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்தினால் என்ன?

கேள்வி: Sleeveless (கையில்லாத ஜாக்கெட்) அணிவது பாவமா? உஷ்ண காலத்தில் அப்படிப்பட்ட உடுப்புகள் அணிவது சரீரத்துக்கு சவுகரியமாக இருக்கிறதே, அது ஆரோக்கியதுக்கு நல்லதுதானே? டென்னிஸ் விளையாடும் பெண்கள் அப்படி அணிகிறார்களே? அது தவறில்லையா?

கேள்வி: திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்தவரும், தமிழ் இலக்கணத்தை தமிழர்களுக்கே முதலில் எழுதி கற்று கொடுத்த வெளிநாட்டினவரான வீரமாமுனிவர் என்று அழைக்கப்படுபவரின் இயற்பெயர் என்ன?

கேள்வி: நம் சபைகளுக்கான தீர்க்கதரிசனம் என்னவாக இருக்கும்? இப்படி நான் கேள்வி கேட்க காரணம், இன்று அவரவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் என்று கூறிக்கொள்கிறார்களே உலகத்தின் முடிவு வந்துவிட்டதோ?

கேள்வி: கனடா தேசத்தில் உள்ள பெரும்பாலான பாஸ்டர்கள் ஜெர்மனியிலும், இலங்கையிலும் உங்கள் பிரசங்கம் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்களும், ஊழியத்துக்கு ஒப்பு கொடுத்தவர்கள். சிலரை கனடாவில் பாஸ்டராக ஊழியராக, மேய்ப்பராக நீங்களே அபிஷேகம் செய்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று அறிவேன். ஆனால் அந்த பாஸ்டர்கள் உங்களோடு ஆரம்பத்தில் கொண்டிருந்த அன்பும் தொடர்பும் இப்போது உங்களோடு இல்லையே ஏன்?

கேள்வி: கனடா நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில் தனி நபர் பாதுகாப்புக்குறித்து TORANTO நகர காவல்துறை அதிகாரி மிச்சேல் சாங்குயினிட் அவர்கள் பேசும் போது அவர் குறிப்பிட்ட கருத்து உலகம் முழுதுவம் உள்ள பெண்களை போர் கொடி தூக்கவைத்துள்ளது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கேள்வி: உங்களுக்கு பரலோகத்தையோ, தேவ தூதர்களையோ இங்கிருந்து பார்க்க பிடிக்காதா? அப்படிப்பட்ட ஆனந்த அனுபவத்தை இந்த உலகத்திலேயே அனுபவிக்க உங்களுக்கு ஆசையில்லையா? ஒருவேளை உங்களுக்கு அந்த ஆசையில்லை என்றால் அப்படிப்பட்ட அனுபவம் பெற்ற ஊழியர்களை நீங்கள் குறை சொல்ல கூடாதல்லவா?

கேள்வி: இரட்சிக்கப்பட்ட ஒருவர் தன் மரண நேரத்தில் நான் மரித்தால் தன்னைப் புதைக்கக்கூடாது என்றும், தன் சரீரத்தை எரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சபையினரும், எங்கள் மெத்தடிஸ்ட் சபை போதகரும், அவர் குடும்ப உறவினர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து எரித்துவிட்டனர். இவர்கள் செய்தது சரியா? மெத்தடிஸ்ட் பாஸ்டர்மார் அதற்கு எப்படி சம்மதம் தெரிவிக்கலாம்?

கேள்வி: உங்களுக்கு AOG சபையின் மீது திடீரென்று இத்தனை வெறுப்பு உண்டாக காரணம் என்ன?

சபை பாஸ்டர்களுக்கான செய்தி
மேய்ப்பனாயிராதவனும்
யோவான் 10:12
தேவ எச்சரிப்பின் செய்தி
நல்ல மேய்ப்பன் (பாஸ்டர்)
முன்கோபம்
தகுதியில்லாத மூப்பர்கள்
தற்பெருமை
வெளிநாட்டு ஊழியம்
கள்ள தீர்க்கதரிசனம்

அமெரிக்கா - ஜெர்மனி - பிரான்ஸ் வெளிநாட்டு ஊழியங்கள்
அமெரிக்காவில் என் ஊழியங்கள்
Tamil United Church of Christ(CHICAGO)ல்
நடந்த தியான கூட்டங்கள்
மலையாள பாஷை கூட்டம்
சிக்காகோ நகரில் உள்ள CHRIST CHURCH-ல் நடந்த கூட்டம்
(USA) ORIGAN மாநில கூட்டங்கள்
ஜெர்மனியில் என் கூட்டங்கள்
பிரான்ஸில் என் கூட்டங்கள்
France பெந்தேகோஸ்தே சபை கூட்டங்கள்

ஜெப வேண்டுகோள்
Dr.சாம்கமலேசன் அவர்கள் மரண ஆபத்தை கடந்தார்

மேலும் படிக்க http://jamakaran.com

Address:
Dr.PUSHPARAJ
89, Majeeth Street,
Old Suramangalam,
Salem-636 005.
Tamil Nadu. INDIA.
Phone:+91-427-2387499
Fax:+91-427-2386464
E-mail:
drpushparaj@jamakaran.com
jamakaran@yahoo.com

Monday, November 07, 2011

கள்ளரைப் போல நடத்தப்பட்ட தேவமனிதர்கள்

இந்தியாவில் சுகபோகமாக ஹாயாக சுற்றிவந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ நண்பர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையின் செய்தி. எங்கோ இறுகிக்கொண்டிருக்கும் கயிறு நாளை நம் கழுத்தையும் நெறிக்கலாம். உஷாராக இறைவனிடம் பிரார்திக்க இப்போதே தொடங்கிவிடுவது நல்லது. அமெரிக்காவைச் சேர்ந்த தேவ ஊழியர் வில்லியம் லீ (William Lee) கேரளாவில் ஒரு இசைப்பெருவிழாவில் (Musical Splash 2011) கலந்து கொண்டதற்காக ஒரு திருடனைப்போல கைது செய்யப்பட்டு சிறையில் பல குற்றவாளிகளோடு மூன்று நாட்கள் அடைக்கப்பட்டிருக்கிறார். சுற்றுலா விசாவில் வந்த அவர் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டாராம் இதுதான் இந்திய அரசு கொடுத்த விளக்கம். இனிமேல் வில்லியம் லீ இந்திய மண்ணில் கால்வைக்கக் கூடாது என தடையும் இட்டிருக்கிறார்கள். நாம் மிகவும் விரும்பி கேட்கும் பாடகர் ரான் கெனோலியும்(Ron Kenoly) இந்த கொச்சி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. அவருக்கும் இந்திய அரசு ஆயுட்கால தடைவிதித்துள்ளது.
வெறுமனே கிறிஸ்தவ பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக கைது செய்து சிறையில் அடைத்து கேவலப்படுத்திய இந்திய அரசாங்கம், ஆசிரமங்களுக்கும் யோகிகளிடமும் செல்லும் வெளிநாட்டவர்களை மட்டும் விட்டு வைப்பது எந்த வகையில் நியாயமோ. உனக்கொரு சட்டம். எனக்கொரு சட்டம். எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இது போன்ற நெகடிவ் செய்திகள் பலரையும் சென்றடைந்து பரவிவிடாமல் இருக்க கவனமாக பார்த்துக்கொள்வோம்.
இதனால் யாரும் இதுபோன்ற பிரச்சனைகளுக்காக ஜெபிக்கவும் மாட்டார்கள். நாமும் வீழ்ந்துகொண்டேயிருப்போம் நாமறியாமலே.
William Lee Ministries
Ron Kenoly Ministries

மாற்கு 14:48 கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும், தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;

மாற்கு 13:9 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.

http://www.ucanews.com/2011/10/19/judge-confirms-evangelist-deportation/
http://www.news-journalonline.com/news/local/east-volusia/2011/10/22/evangelist-home-in-ormond-beach-after-being-jailed-in-india-for-preaching-without-proper-visa.html

Thursday, November 03, 2011

ஆசீர்வாதம் நவம்பர் 2011 பத்திரிகை டவுண்லோட்

உள்ளடக்க கட்டுரைகள்

  • மிஷனரிப் பணிக்குக் கொடுப்போம்! - R.ஸ்டான்லி
  • ஆசீர்வாத இளைஞர் இயக்கம் - துவக்கம்,நோக்கங்கள்,செயல்கள்
  • குப்பையிலிருந்து... - ஆஷீஷ் தீப், மிஷனரி
  • அங்கிள் ஜான் ஸ்டாட் - E.L.மதன்சிங்
  • ஆத்துமாதாயம் - பலவீனமான என்னையும்...! - திருமதி ஜெமிமா சுகிர்தராஜ்,பாளையங்கோட்டை
  • தேவன் பேசுவது அர்த்தமில்லாமல் தெரியும்போது--- - திருமதி ஜெமிமா ராஜேஷ்,திருச்சி
  • பணிக்களச் செய்திகள்


ஆசீர்வாத இளைஞர் இயக்கம்
சர்ச் காலனி
வேலூர் 632 006,இந்தியா
Tel:00 91 416 2242943, 2248943
www.bym-india.org

You can also transfer money online:
SB A/C No.10545849472
State Bank of India
Siruthozhil Branch, Vellore 632 006
Branch Code: 007274
IFSC Code:SBIN 0007274


மேலும் படிக்க பத்திரிகையை டவுண்லோடு செய்யவும்
Blessing Tamil Magazine November 2011 PDF Download Link டவுண்லோட் லிங்க்