Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Saturday, November 19, 2022

ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம்.

 

ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம் இந்த “ஒரே” எல்லாம் யெகோவா தேவனுக்கு பிடிக்காத விஷயம். மனிதர்கள் இப்படி ஒன்று கூடும் போதெல்லாம் உற்றுபார்க்க வந்துவிடுகிறார் இறைவன் (ஆதியாகமம் 11). ஆபத்து மக்களே. இதுவும் "புதிய உலக ஒழுங்கு - NWO New World Order"க்கு இட்டுசெல்லும் பாதையே.

Saturday, September 25, 2021

வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி.

 உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு இடம் கிடைத்துள்ளது நமக்கெல்லாம் பெருமையே (Vellore CMC Hospital).


வேலூர் கிறிஸ்தவ மருத்துவ‌ கல்லூரிக்கு நமது வாழ்த்துக்கள். Well done CMC!! நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் வரிசையில் நம்ம சிஎம்சி....! #NIRF2021 #NIRFRankings


தாவர இனத்துக்கு வில்லியம் கேரியின் பெயர்.


 

யானை, குரங்கு, மயில் மாமல்லபுர சிற்பமும் பைபிள் வாக்கியமும்.

யானை, குரங்கு, மயில் இணைந்து காணப்படும் மாமல்லபுர சிற்பம். பைபிளில் ஒரு வாக்கியம் வரும், இஸ்ரேலின் "சாலோமோன் ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்" என்று. I இராஜாக்கள் 10:22. சாலோமோன் ராஜாவின் காலம் கிமு 970-931.



Friday, June 04, 2021

இந்தியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பும் மனாசேயின் வம்சத்தார்கள்.

இந்தியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பும் பைபிள் கால மனாசேயின் வம்சத்தார்கள். இவர்கள் 2700 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலிலிருந்து சிதறடிக்கப்பட்டு இந்தியா வந்தவர்கள். மீண்டும் இப்போது பைபிள் வாக்கு படி இஸ்ரேல் செல்கிறார்கள். பைபிள் சொல்லுகிறது "இதோ, நான் அவர்களை அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன். இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார்". எரேமியா 31:8,10



Friday, September 25, 2020

இந்த கொரோனா காலத்தில் மிஷனெரி ஊழியங்கள்

 இந்த கொரோனா காலத்தில் மிஷனெரி ஊழியங்கள்

✝️வெகுவாய் பாதிக்கப்பட்டிருப்பதை அறியீர்களா?❓
காடுகளிலும்🌳 மலைகளிலும்⛰ கிறிஸ்துவுக்காய் வேலை 🛐செய்யும் பெரும்பாலான மிஷனெரி ஊழியர்களுக்கான உதவிகள்💲 சராசரி நம்மைப்போன்ற கிறிஸ்தவர்களிடமிருந்தே⛪️செல்கின்றன. ஆனால் இன்றைய நிலையில் சராசரி ஜனங்களின் பொருளாதாரமே மிக மந்தமாய். ஆடி காற்றில்🌪 அம்மியே பறக்கும் போது இலவம்பஞ்சுகள்?
கிறிஸ்துவில் பிரியமானவர்களே!!
ஒன்றுமே இல்லாவிட்டாலும் இருக்கிறதில் முதல் அடையை 🍞ஊழியர்களுக்கு தயார்செய்யலாமே?
வற்றிப்போயிருக்கும் சூழ்நிலையிலும் ஒரு கலசம் தண்ணீர்☕️ கிறிஸ்துவின் பணியாளர்க்கு வழங்கலாமே?
மகா வறட்சியான நிலமையிலும் கடவுள் அனுப்பிய காகமாய்🍗 நாம் ஆகலாமே?🙏
1) FMPB Chennai : Name : Friends Missionary Prayer Band
Bank : State Bank of India (SBI)
A/c. No. : 10402752621
Branch : Ambattur ( Chennai)
IFS Code : SBIN0000987
email : recelptsfinance@fmpb.org
whatsapp : 9444396217
2) IEM Bangalore : Name : Indian Evangelical Mission
Bank : State Bank of India (SBI)
A/c. No. : 10977242162
Branch : Bangalore
IFS Code : SBIN0000813
email : finance@iemoutreach.org
SMS : 9965747672
3) BYM Name : Blessing Youth Mission
Bank : State Bank of India (SBI)
A/c. No. : 37268642054
Branch : Siruthozhil. Vellore
IFS Code : SBIN0007274
4) Tribel Mission : Name : Dr. K. Muraldhar
Bank : The Catholic Syrian Bank Ltd.,
A/c No. : 0156-00706354-190001
Branch : Perubavoor
IFS Code : CSBK0000156
email : tribalmission@hotmail.com
5) Vishvavani : Founded by Bro. Emil Jaba Singh
Name : Vishwavani
Bank : State Bank of India
A/c No. : 10151750252
Branch : Amanjikarai, Chennai
IFS Code : SBIN0003273
email : vishwavaninet@vishwavani.org
Mobile : 9444455646

Support our ministries

Everyone of us came to the saving knowledge of Jesus Christ through a minister of God.
Please support all the ministers of God in this difficult time.

1) FMPB Chennai : Name : Friends Missionary Prayer Band
Bank : State Bank of India (SBI)
 A/c. No. : 10402752621
Branch : Ambattur ( Chennai)
IFS Code : SBIN0000987
email : recelptsfinance@fmpb.org
whatsapp : 9444396217

2) IEM Bangalore : Name : Indian Evangelical Mission
Bank : State Bank of India (SBI)
 A/c. No. : 10977242162
Branch : Bangalore
IFS Code : SBIN0000813
email : finance@iemoutreach.org
SMS : 9965747672

3) BYM Name : Blessing Youth Mission
Bank : State Bank of India (SBI)
A/c. No. : 37268642054
Branch : Siruthozhil. Vellore
IFS Code : SBIN0007274

4) Tribel Mission : Name : Dr. K. Muraldhar
Bank : The Catholic Syrian Bank Ltd.,
A/c No. : 0156-00706354-190001
Branch : Perubavoor
IFS Code : CSBK0000156
email : tribalmission@hotmail.com

5) Vishvavani : Founded by Bro. Emil Jaba Singh 
Name : Vishwavani
Bank : State Bank of India
A/c No. : 10151750252
Branch : Amanjikarai, Chennai
IFS Code : SBIN0003273
email : vishwavaninet@vishwavani.org
Mobile : 9444455646

Friday, January 04, 2019

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்.

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்

January 1, 2019

பாலை, உப்பு நீர், சீரற்ற பருவம் என அனைத்து சாபக்கேடுகளையும் தன்னகத்தே கொண்டது, இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டும் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது.

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்
விவசாயத்தில் புதுப்புது யுக்திகளைப் புகுத்தி சாதித்து வரும் நாடு இஸ்ரேல். அந்த நாட்டின் நிலப்பகுதி விவசாயம் செய்ய ஏற்ற நிலம் கிடையாது. பாலை நிலம் கொண்டது. ஆனால், தான் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி விவசாயம் செய்து உலக நாடுகளை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது, இஸ்ரேல். உலகிலேயே இந்த நாட்டில்தான் அதிக அளவிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேலில் மழையின் அளவு மிகக் குறைவு. வெயில் அதிக அளவு சுட்டெரிக்கும். நாட்டின் வடக்குப் பகுதியில் மழை சிறிதளவில் பெய்தாலும், தெற்குப் பகுதி எப்போதும் காய்ந்த பூமிதான். ஜோர்டான் நதியின் நீரை 'கலிலோ' என்னும் ஏரியில் சேமித்தனர். இந்த ஏரி பூமியின் மட்டத்திலிருந்து 700 அடிக்கும் கீழே இருக்கிறது. இந்த நீரை 800 அடிக்கு மேலே பம்ப் மூலம் எடுத்து இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் விவசாயம் பார்க்கிறார்கள். நாட்டில் கொஞ்சம் பெய்யும் மழையைக்கூட வீணாக்காமல் சேமித்து சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பயிர்களை வளர்க்கிறார்கள். கழிவு நீரை முழுமையாகச் சுத்திகரித்து விவசாயத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள். 
இஸ்ரேல்
இஸ்ரேல் விவசாயத்தில் உபயோகப்படுத்தப்படும் தண்ணீரில் 75 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்தான் என்கிறது புள்ளிவிவரம். நீரைக் குறைந்த அளவில் உபயோகித்துப் பல யுக்திகளைக் கையாண்டு விவசாயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, இஸ்ரேல். தாவரத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே கொடுக்கிறார்கள். அதிக அளவில் தண்ணீரைப் பாய்ச்சி நீரை வீணாக்குவது இல்லை. அதேபோல பயிர்களின்மீது மல்ஷிங் சீட் எனப்படும் பிளாஸ்டிக் உறையைப் போர்த்தி, தேவையான அளவு மட்டுமே சூரிய வெப்பத்தைப் படும்படி செய்கிறார்கள். அதிகமான வெயில் பட்டால் தாவரத்தின் நீர்ச் சத்து ஆவியாகிவிடும் என்பதால்தான் இந்தப் பாதுகாப்பு முறை. 
கடல் நீரைக் குடிநீராக்கி குடிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நிலத்தில் ஒரே பயிரை மீண்டும் பயிரிடுவதில்லை. பயிர்சுழற்சி முறையில் பல தாவரங்களைப் பயிரிடுகிறார்கள். 1948-ம் ஆண்டு 74 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த இஸ்ரேல், தற்போது 4 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறது. நம் நாட்டில் விவசாயம் செய்வதுபோலவே அங்கும் நிலத்தைத் தனியாக பிரித்து விவசாயம் செய்து வருகிறார்கள். அதேபோல அரசுக்குச் சொந்தமான இடத்தில் குழுக்களாக விவசாயம் செய்து பங்கு போட்டுக் கொள்ளும் வழக்கமும் இஸ்ரேலில் உள்ளது. கோதுமை, சோளம், காய்கறிகள், பழங்கள் என அதிக அளவில் விளைவித்து சாதித்துக் கொண்டிருக்கிறது. தக்காளி, வெள்ளரி, சுரைக்காய், வாழை, பேரிச்சை, ஆப்பிள், செர்ரி, பேரிக்காய் உள்ளிட்டவை அதிக அளவில் விளைகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் இஸ்ரேலுக்குத்தான். அதேபோல ஒயின் உற்பத்தி, பருத்தி உற்பத்தி எனப் பலவற்றில் முன்னணியில் இருக்கிறது. லில்லி மலர்களைப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு உலக சாதனை படைத்திருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேல்
அதிக அளவில் மாடுகளை வைத்து பால் உற்பத்தியிலும் முன்னணி இஸ்ரேல்தான். மரங்களால் கிடைக்கும் அத்தனை பயன்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் உலகின் ஒரே நாடு இஸ்ரேல். புதிய தொழில்நுட்ப நீர்ப் பாசனம், வறண்டப் பாலைவனத்தில் பயிர் செய்யும் முறை, நல்ல விளைச்சலைத் தரும் புதுப்புது தாவரங்கள் என அவ்வப்போது ஆச்சர்யத்தைக் கொடுத்து வருகிறது, இஸ்ரேல். மற்ற நாடுகள் இஸ்ரேலின் தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் அதிகமான அளவில் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது, இஸ்ரேல். வறண்ட நிலப்பகுதி கொண்ட இஸ்ரேல்... விவசாய தொழில்நுட்ப வளர்ச்சியின் முதன்மையான நாடாகத் திகழ்கிறது.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமான பழ ஏற்றுமதி செய்யும் நாடும் இஸ்ரேல்தான். இதற்குக் காரணம், விவசாயிகளின் கூட்டுப் பண்ணைத் திட்டமும், இயற்கை விவசாயம்தான்.  
வெப்பம் நிறைந்த பாலை, குடிக்க உதவாத உப்பு நீர், சீரற்ற பருவநிலை என அனைத்து சாபக்கேடுகளையும் தன்னகத்தே கொண்டது இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டே வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது. இதனால் இந்தியா இஸ்ரேலிய வேளாண் தொழில்நுட்பங்களை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இது நிச்சயம் இந்திய விவசாயத்தில் மாற்றம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் வளமான மண் இல்லை, தண்ணீர் இல்லை, வேளாண்மை செய்ய ஆட்கள் இல்லை, சீரான பருவநிலை இல்லை. ஆனால், இந்தியாவைப் போல, 10 மடங்கு அதிகமாக விவசாய பொருட்களை விளைவிக்கிறது. இந்த வளர்ச்சிதான், இன்று நவீன விவசாய முறைக்கு உதாரணமாக உலகமே சுட்டிக்காட்டுகிறது.
விவசாயம்
நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடியில் உயர் மகசூல் எடுத்து வருகிறது இஸ்ரேல். அங்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இந்திய விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், இந்திய அரசு இஸ்ரேல் நாட்டோடு இணைந்து இந்தியாவில் ஏழு பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. அவற்றில் மூன்று பயிற்சி மையங்கள் தமிழகத்தில் உள்ளன. மலர் சாகுபடிக்காக ஓசூரிலும், மா சாகுபடிக்காகக் கிருஷ்ணகிரியிலும், காய்கறிச் சாகுபடிக்காகத் திண்டுக்கல்லிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

Wednesday, April 18, 2018

ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஏசு தரிசனம் - தி இந்து


Thursday, April 12, 2018

பிறப்பு முதல் இறப்புவரை ஆதார்

அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளி 13:16,17

Wednesday, April 11, 2018

தானதர்மம் செய்வதில் கிறிஸ்தவர்கள் முதலிடம்

The hindu - Christian households top in donations for charity.

ஆசியாவின் மிகப்பெரிய ஆலயம்

Biggest church in Asia

Friday, March 30, 2018

"இயேசு கிறிஸ்து மனித குலத்தின் மிகப்பெரிய போதகர்களில் ஒருவர்" . மகாத்மா காந்தி.


Gandhi`s letter about Jesus Christ

Tuesday, November 05, 2013

இயேசு கிறிஸ்து விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்

"யுத்தங்களையும் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வர இயேசு கிறிஸ்துவின் போதனைகள் உதவும்" துணை ஜனாதிபதி திரு.அன்சாரி பேச்சு.

இந்திய துணை ஜனாதிபதி திரு.ஹமீது அன்சாரி அவர்கள், பெங்களூரிலுள்ள எக்கியுமெனிக்கல் கிறிஸ்டியன் சென்டரில் ஒரு பொன் விழா கொண்டாட்டத்தில் பேசும் போது, “மனித வர்க்கத்தில் மடமைத்தனங்கள் தொடர்வதால், உலகின் பல பகுதிகளிலும் மனித வர்க்கம் வெறுப்புணர்வுகளுக்குள்ளும் மோதல்களுக்குள்ளும் உந்தி தள்ளப்படுகிற நிலையில், இயேசுவின் என்றென்றும் நிலைத்திருக்கும் செய்தியான அன்பு மற்றும் மனதுருக்கம், ஜனங்களுக்கு மீட்பின் வழியை காண்பிக்கிறது. நாம் அப்படியே எழுத்தின் பிரகாரமும் ஆவியின் பிரகாரமும் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்ததை பின்பற்றுவோமானால், நம்மால் நிச்சயமாக யுத்தங்களையும் போராட்டங்களையும் இந்த‌ உலகத்தை விட்டு நீக்க முடியும். அதன் மூலம் கிடைக்கும் நீடிய‌ சமாதானம் வழியாக மனித சமுதாயத்திற்கு தேவையான முன்னேற்றத்தையும் செழிப்பையும் நாம் ஏற்படுத்த முடியும்" எனக் கூறினார்.   மேலும் அவர் கூறும் போது "சமுதாயத்தில் தாழ்ந்த வறுமை நிலையிலுள்ள‌  மக்களுக்கு கல்வி,ஆரோக்கியம், தொண்டு வழியாகவும் சமூக சீர்திருத்தங்கள் வாயிலாகவும் நம் இந்திய தேசத்திற்கு கிறிஸ்தவ சமுதாயம் ஆற்றிய சேவைகளை இந்திய மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நானும் கூட, சிம்லாவிலுள்ள ஐரிஸ் சகோதரர்கள் நடத்திய பள்ளியிலும், கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெசுய்ட்ஸ் நடத்திய கல்லூரியினாலும் உருவாக்கப்பட்டவன் தான்” என்று திரு.அன்சாரி அவர்கள் கிறிஸ்துவைக் குறித்தும் கிறிஸ்தவத்தைக் குறித்தும் பேசினார்.

வேதாகமம் சொல்லுகிறது,இயேசு கிறிஸ்து உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று.கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.இயேசு சொன்னார் "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக"(யோவா:8:36,IIகொரி:3:17, யோவா:14:27)

Friday, October 25, 2013

உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி


இது கடந்த 21-ம் தியதி நம்மூர் செய்தித்தாள்க‌ளில் வெளியான செய்தி. இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இஸ்ரேல் நாட்டிலே குடியேற்றப்படுவார்கள் என்பது வேதாக முன்னறிவிப்பு. அதன்படியே நம்ம‌ தேவனின் வார்த்தைகள் நம் கண்ணெதிரேயே எப்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நிறைவேறுதுனு பாருங்கோ! தேவர்களில் நம்ம தேவனுக்கு ஒப்பானவர் யாருங்கோ!

இதோ அந்த வேதாகம வார்த்தைகள்:
இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி (இந்தியா ஒரு கிழக்கு நாடு என நினைவில் கொள்க‌), உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன். (ஏசாயா:11:12,27:12,43:5, ஆமோஸ்:9:14,16)

Wednesday, September 18, 2013

வழிநடத்தும் வல்லவர்

Indian Boxing Champion Mary Kom for Jesus Testimony

Tuesday, September 11, 2012

பாவமூட்டையுடன் செல்வேன் என்றார் பேரரசர் அவுரங்கசீப். அப்போ நீங்கள்?

பிரபல தாஜ்மகாலை கட்டிய ஷாஜகான் மன்னரின் வாரிசாக வந்தவர் பேரரசர் அவுரங்கசீப். ஆறாவது முகலாய மன்னராக அரியணைக்கு வந்த இவர் தனது அரசை மேலும் விரிவுபடுத்தி அக்கால பூமியின் மக்கள் தொகையில் நாலின் ஒருபங்கை அரசாண்டு வந்தார்.

ஆனால் பேரரசர் அவுரங்கசீப்பின் இறுதி காலங்களோ பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது. ”நான் என் பேரரசை பாதுகாக்க தவறிவிட்டேன். விலை மதிப்பற்ற என் வாழ்வை நான் வீணாக்கிவிட்டேன்” என சொல்லி தன் மூத்த மகன் அசாமிடம் அவர் புலம்பியிருக்கிறார்.
மரணம் அவரை நெருங்கும் வேளையில் அவுரங்கசீப் இவ்வாறாக தன் இளைய மகன் கம் பாக்ஷ்க்கு கடிதம் எழுதினார்:
"நான் இழைத்த ஒவ்வொரு கொடுமையின், நான் செய்த ஒவ்வொரு பாவத்தின், தவறின் பலனை நான் சுமந்து செல்கிறேன். என்ன விசித்திரம் நான் பிறந்த போது உலகில் சுதந்திரமாக பிறந்தேன். இறக்கும் போதோ பாவமூட்டையுடன் செல்வேன். நான் பார்க்கும் இடமெல்லாம் அல்லா மட்டுமே தெரிகிறார். நான் ஒரு மிக மோசமான பாவி. எனக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ தெரியவில்லை.” 
என எந்த ஒரு நம்பிக்கையும் இன்றி எழுதியிருந்தார். 1707-ல் கிட்டத்தட்ட அவரது தொண்ணூறு வயதில் அவுரங்கசீப் காலமானார்.

ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுகிற நமக்கோ ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என சொல்லுகிறது வேதம். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28) என்று சொல்லி இயேசு பாவிகளை அழைக்கிறார். பாவங்களை இயேசு கிறிஸ்து மன்னிக்கிறார். நீங்கள் அவரிடம் வேண்டும் போது உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்ல அவருக்கு அதிகாரம் உண்டு. நாம் சுமக்க வேண்டிய தேவையில்லை.  எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள் (ரோமர் 4:7 ), என்ன அருமையான வேத வசனம் இது.

Reference:
http://www.srichinmoylibrary.com/books/1368/9/8/index.html

Monday, September 10, 2012

கிறிஸ்துவுக்கு ஒரு இரத்த சாட்சி

கிறிஸ்து முன்னுரைத்த வாக்கியங்கள் அப்படியே நூற்றுக்கு நூறு நிறை வேறிவருவதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு வருகிறோம். நம் இயேசு சொல்லி சென்றிருக்கிறார் ”அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” என்று (மத்தேயு 24:9).

கிறிஸ்தவர்கள் அதிக சதவீதம் உள்ள, பெரும்பாலான சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கிறிஸ்தவர்களாக கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்திலேயே ஒரு 29 வயது இளைஞர் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். 15 பேர் மட்டுமே கூடிய ஒரு வீட்டு ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு கும்பல் அங்கு நின்றிருந்த வாகனங்களையும், சொத்துக்களையும் சேதப்படுத்திவிட்டு இந்த இளைஞரையும் அடித்து கொன்று போட்டு விட்டு சென்றுவிட்டது. அதை தொடர்ந்து குற்றவாளிகளை அரசு பிடிப்பதை விட்டு விட்டு, அமைதியாக இரங்கல் பேரணி சென்ற 13,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. என்ன கொடுமை.கர்த்தர் தாமே இரத்தசாட்சியாக மரித்துப்போன சகோதரன் எட்வின் ராஜ் குடும்பத்துக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பாராக.

 I தெசலோனிக்கேயர் 4:16,17,18 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

Saturday, August 25, 2012

மற்ற ஒன்பது பேர் எங்கே?

நம் தேவன் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (சங்கீதம் 113:7). ஆனால் அதில் எத்தனை பேர் இறுதி வரைக்கும் இறைவனில் நிலைத்திருக்கிறார்கள் என்றால் மிகவும் சொற்பமே. அன்றொரு நாள் இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக்கா 17:17) என்று கேட்டது போலவே இன்றைக்கும் கேட்க கூடிய நிலை. வல்லமையாக நான் பயன்படுத்திய ஊழியக்காரர்கள் பல பேர் உண்டே. அவர்களையெல்லாம் எங்கே என்று நியாயதீர்ப்பு நாளில் தேவன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அன்றைய கால பாலாசீர் லாரி முதல் சமீபத்திய கே.ஏ.பால் வரை அநேக அசரவைக்கும் பின்மாற்றங்கள்.

நம்மில் அநேகருக்கு கே.ஏ.பாலை தெரிந்திருக்க நியாயமில்லை. சகோதரன் தினகரன் அவர்களைப் பற்றி பேசும் போது ஒருநாள் ஒரு இந்து தெலுங்கு நண்பர் கே.ஏ.பாலை பற்றியும் பெரிதாக கூறினார். அப்போது அவரைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆந்திராவிலேயே ஏதோ ஒரு மிகப் பெரிய சபையின் போதகராக இருக்கலாம் என எண்ணம். சொந்தமாக போயிங் 747 விமானம் வைத்திருக்கும் ஒரே இந்திய பிரசங்கியார் என்கிற விபரம் கூட தெரியாதிருந்தது. ஆனால் சமீபத்திய செய்தி விவரங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆரம்ப காலங்களில் மிக வல்லமையாக பயன்படுத்த பட்ட இந்த சகோதரனின் இன்றைய நிலை மிகவும் பரிதாபம். இவரது Global Peace Initiative எனும் இணைய தளம் போனால், தான் பிரபலங்களுடன் (அன்னை தெரசா முதல் லிபிய கடாபி வரை) எடுத்துக்கொண்ட படங்களால் நிறைந்திருக்கிறது. எல்லாம் சுயதம்பட்டம். இவரது Gospel to the Unreached Millions என்ற பணியை நம்பி கோடிக்கணக்கான பணங்கள் நன்கொடைகளாக கொடுக்கப்பட்டன. ஆனால் இப்பணிக்கென ஒரு வெப்சைட் கூட இருப்பதாக தெரியவில்லை. சுவிசேசத்தை விட்டு விட்டு Global Peace Initiative எனும் நிறுவனத்தை பிரதானமாக Non-profit,non-religious என அறிவித்துக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சேகரமாக பின் இவர் அரசியலில் புகுந்ததால் அரசியல் விளையாட்டில் இந்நிறுவனத்தின் பணங்கள் ஆந்திர அரசால் முடக்கப்பட்டன. இவரைப் பின் தொடர்ந்து ஆறு வாரங்களை செலவிட்ட ஒரு நிரூபர் கூறும் போது “he only quotes one or two sentences from the Bible, and rarely mentions it” என்றார். இப்போது எல்லாவற்றிற்கும் மேலாக காயீனைப்போல தன் சொந்த சகோதரனையே ஆள் வைத்து கொன்ற கொலைப்பழியில் கையும் மெய்யுமாக போலீசில் சிக்கியிருப்பது மிகவும் வேதனையான விசயம்.சிம்சோனைப் போல இப்போதாவது மீண்டும் தேவனிடம் வந்து சரணடைந்தால் இவருக்கு நலமாயிருக்கும்.

பிரியமானவர்களே! பிரபலமான தேவ ஊழியர்களுக்கு வரும் சோதனைகளும் பயங்கரமானவைகள். இவைகளிலிருந்தெல்லாம் தேவன் அவர்களை தப்புவித்து கடைசி வரைக்கும் போராடி ஜெயிக்க பெலன் கொடுக்க தேவ பிள்ளைகள் நாமெல்லாரும் ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
மேலும் விவரங்கள்.

தானியேல் 12:3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
வெளி 12:4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று;