Wednesday, October 27, 2010

ஏழு..எட்டு...ஒன்பது....

தேவனுடைய ஆவிகள் ஏழு (வெளி:4:5) (ஏசாயா:11:2)
1.ஞானத்தை அருளும் ஆவி
2.உணர்வை அருளும் ஆவி
3.ஆலோசனையை அருளும் ஆவி
4.பெலனை அருளும் ஆவி
5.அறிவை அருளும் ஆவி
6.கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவி
7.கர்த்தருடைய ஆவியானவர்

சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டியவைகள் எட்டு (பிலிப்பியர் 4:8)
1.உண்மையுள்ளவைகள்
2.ஒழுக்கமுள்ளவைகள்
3.நீதியுள்ளவைகள்
4.கற்புள்ளவைகள்
5.அன்புள்ளவைகள்
6.நற்கீர்த்தியுள்ளவைகள்
7.புண்ணியம்
8.புகழ்

ஆவியின் கனி ஒன்பது (கலாத்தியர்:5:22,23)
1.அன்பு
2..சந்தோஷம்
3.சமாதானம்
4.நீடியபொறுமை
5.தயவு
6.நற்குணம்
7.விசுவாசம்
8.சாந்தம்
9.இச்சையடக்கம்

ஆவியின் வரங்கள் ஒன்பது (Iகொரி:12:8-10)
1.ஞானத்தைப் போதிக்கும் வசனம்
2.அறிவை உணர்த்தும் வசனம்
3.விசுவாசம்
4.குணமாக்கும் வரம்
5.அற்புதங்களைச்செய்யும் சக்தி
6.தீர்க்கதரிசனம் உரைத்தல்
7.ஆவிகளைப் பகுத்தறிதல்
8.பற்பல பாஷைகளைப்பேசுதல்
9.பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல்

Friday, October 22, 2010

சங்கீதம் 2:12 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper

Wednesday, October 13, 2010

வேதாகம சுவாரஸ்யங்கள்


  • பழைய ஏற்பாட்டிலேயே மிகப் பழமையான புத்தகமாக சிலர் யோபுவையும் (கி.மு.1500), வேறு சிலரோ முதல் ஐந்து ஆகமங்களையும் (கி.மு 1446-1406) குறிப்பிடுகின்றனர்.
  • பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களையும் எழுதியது மோசே. இவற்றை எபிரேய மொழியில் தோரா (Torah)என்பர். இது தான் யூதர்களின் புனிதப் புத்தகம்.
  • பழைய ஏற்பாட்டில் மிக சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகம் மல்கியா.இது எழுதப்பட்ட காலம் கி.மு 400.
  • புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான புத்தகமாக கருதப்படுவது யாக்கோபு. இது கி.பி 45-ல் எழுதப்பட்டது.
  • புதிய ஏற்பாட்டின் லேட்டஸ்டாக எழுதப்பட்ட புத்தகம் வெளிப்படுத்தின விசேசம், இது கி.பி 95-ல் எழுதப்பட்டது.
  • எஸ்ரா:6 -க்கும் 7-க்கும் இடையே கன்பூசியசும் புத்தரும் மரித்துப்போனார்கள். (கிமு 516-458)
  • சங்கீத புத்தகத்தில் ஒரு ஹாட்ரிக் சாதனை உண்டு. வேதாகமத்தின் மிகச் சிறிய அதிகாரம் சங்கீதம் 117, நடுவான வசனம் சங்கீதம் 118-ல் உள்ளது. மிக நீளமான அதிகாரம் சங்கீதம் 119.
  • IIஇராஜாக்கள் 19 -ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஜெராக்ஸ் எடுத்தது போல் ஒரே மாதிரியானவை. காப்பி பேஸ்ட் செய்யப்பட்டவை போலிருக்கும்.
  • I கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தை “அன்பின் அதிகாரம்” என்றால், எபிரெயர் 11-ம் அதிகாரத்தை “விசுவாசத்தின் அதிகாரம்” எனலாம்.
  • வேதாகமத்தில் பாட்டி என்கின்ற உறவுமுறை குறித்து ஒரே ஒருமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது.II தீமோத்தேயு 1:5.
  • வேதாகமத்தில் மிக அதிகமாக பேசப்படும் விலங்கு ஆடு. நாய்கள் பற்றி 14 முறையும் சிங்கத்தை குறித்து 55 முறையும் குறிப்பிடபட்டுள்ளது.வேதாகமத்தில் பூனை பற்றிய குறிப்பு ஒருமுறை கூட இல்லை.
  • வேதாகமத்தின் படி மிக அதிகமான நாட்கள் பூமியில் உயிரோடு வாழ்ந்தவர் மெத்தூசலா. இவன் நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்.(ஆதி:5:27)
  • இருவர் வேதாகமத்தின் படி மரிக்கவேயில்லை.ஒருவர் ஏனோக்கு(ஆதி:5:22-24). இன்னொருவர் எலியா(IIஇராஜா:2:11). இவ்விருவரும் உயிரோடிருக்கும் போதே தேவனால் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.
  • வேதாகமத்தில் மிக பராக்கிரமசாலியான மனுஷன் சிம்சோன்.
  • மிக ஞானியாக திகழ்ந்தவர் சாலோமோன்.
  • மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தவன் மோசே.(எண்:12:3)
  • மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்தவர் கிதியோன். தேவ உதவியோடு 135,000 மீதியானியர்களை வெட்டிப்போட்டவன்.
  • அதிக மனைவிகளையும், மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தவர் சாலமோன் இராஜா.700 மனைவிகளையும் 300 மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தார்.
  • வேதாகமத்தில் மிக உயரமான மனிதனாக வருபவன் கோலியாத்.ஒன்பதரை அடி உயரம்.
  • குள்ளமான மனிதனாக வர்ணிக்கப்பட்டவர் சகேயு.
  • எபிரேயன் என வேதாகமத்தில் முதன் முதலில் அழைக்கப்பட்டவன் ஆபிரகாம்.
  • எபிரேயர்கள் முதன் முதலாக யூதர்கள் என அழைக்கப்பட்டது II இராஜாக்கள்:16:6-ல்.
  • கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவன் எனும் சொல் வேதாகமத்தில் மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே வருகிறது. அப்:11:26,அப்:26:28 மற்றும் Iபேதுரு:4:16
  • வேதாகமத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை யோவான் சீஷனால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் நான்கு முறை இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். மூன்று முறை Iயோவானிலும், ஒருமுறை IIயோவானிலும் வருகிறது. வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை பயன்படுத்தப்படவேயில்லை
  • புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களை எழுதியது அப்போஸ்தலனாகிய பவுல். இவர் எழுதிய புத்தகங்கள் மொத்தம் 14 .
  • யாரோ சொன்னார்கள் பைபிள் சொல்லின் விரிவாக்கம் B.I.B.L.E - Basic Instructions Before Leaving Earth

சங்கீதம் 1:2 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper

Monday, October 11, 2010

இயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்


Yesu Raja Vanthirukkiraar Father.Berchmans Song Lyrics.

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
கவலைகள் மறந்து நாம் பாடுவோம்

1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார் கொண்டாடுவோம்

2. மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே (மகளே)

3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
இன்றே நிறைவேற்றுவார்

Sunday, October 10, 2010

உம்மையே நான் நேசிப்பேன் பாடல்


Ummaiye Naan Nesipen Fr.SJ.Berhmens Song Lyrics.

உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா (உம்)
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்(உம்)
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும்----- 2
அசைக்கப்படுவதில்லை நான்

Saturday, October 09, 2010

உயிரோடு எழுந்தவரே பாடல்



Uyirodu Ezhundavarae Rev. Paul Thangiah Song Lyrics.

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா - (4)

Friday, October 08, 2010

அதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்


Fr.S.J.Berchman's Athikaalayil um thiru mugam theedi song.lyrics.


அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன்

ஆராதனை ஆராதனை
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

Wednesday, October 06, 2010

சிரிக்கவல்ல-சிந்திக்க சில உலக மொழிகள்

”ஓ, கடவுளே, இமாம் அல்-மக்தியின் வருகையை விரைவாக்கும். அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றியையும் கொடும். எங்களை அவரை பின்பற்றுவோராக்கும், அவர் நீதியை சார்பவர்களையும் அப்படியே ஆக்கும்.”
-ஈரானிய அதிபர் மக்மூத் அகமதினஜாத் 23 செப்டம்பர் 2010 நியூயார்க் ஐநா சபையில் பேசியது.
"Oh, God, hasten the arrival of Imam Al- Mahdi and grant him good health and victory and make us his followers and those who attest to his rightfulness"
-Mahmud Ahmadinejad President of Iran before the 65th Session of the United Nations General Assembly New York 23 September 2010
http://www.president.ir/en/?ArtID=24129

“யூதப் படுகொலைகள் என்று ஒரு பொய்யான சம்பவத்தை உருவாக்கி அதை கடவுளுக்கும், மதங்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் மேலாக கருதுகிறார்கள்”
-ஈரானிய அதிபர் மக்மூத் அகமதினஜாத்
"They have created a myth today that they call the massacre of Jews and they consider it a principle above God, religions and the prophets"
-Mahmud Ahmadinejad President of Iran
http://news.bbc.co.uk/2/hi/middle_east/4527142.stm

"யூதர்கள் நம்மைவிடவும் கடினமான வாழ்வா சாவா சூழ்நிலைகளை தாண்டி வந்திருக்கிறார்கள். யூதப் படுகொலைகளுக்கு சமமானது வேறொன்றும் இல்லை.
-பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் கியூபா அதிபர்.
”The Jews have lived an existence that is much harder than ours. Nothing compares to the Holocaust"
-Fidel Castro, former Cuban leader. Time September 20 2010 Page 22

“இஸ்ரேலியர் எங்களை மிரட்டினால் அவர்களை இரண்டே நாளில் ஒழித்து விடுவோம்.இதற்காகவே நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்”
-முன்னாள் ரஷ்ய தூதுவர் ஆண்டொலி டாப்ரிமின்

“எங்களுடைய அடுத்த யுத்தம் ரஷ்யாவோடு இருக்கும்”
-முன்னாள் இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் மோசேடயான்

“We believe that the evil which was placed in the heart of the Arab world should be eradicated"
"அரபிய உலகின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் தீய சக்தியை நிர்மூலமாக்குவோம் என்று நம்புகிறோம்”
-முன்னாள் எகிப்திய ஜனாதிபதி நாசர் யோர்தானின் மன்னர் ஹூசேனுக்கு 13-3-1961-ல் எழுதியது.

“The Arab National aim is the elimination of Israel"
"அரபியருடைய தேசிய நோக்கம் இஸ்ரவேலை அழித்து தீர்த்துக் கட்டி விடுவது தான்”
-முன்னாள் எகிப்திய ஜனாதிபதி நாசர் இராக் ஜனாதிபதி ஆரப்போடு சேர்ந்து 25-5-1965-ல் வெளியிட்ட கூட்டறிக்கை.

”We are resolved, determined and united to achieve our clear aim of wiping Israel off the map.This is the day to wash away the stain.God willing we shall meet in TelAviv and Haifa"
"நாம் கூட்டாகவும் ,உறுதியாகவும் நமது தெளிவான நோக்கமாகிய இஸ்ரேல் நாட்டை உலகப்படத்திலிருந்து அழித்துப் போடத் தீர்மானித்து விட்டோம், இந்தக் கறையை கழுவிப்போட இது தான் தருணம். கடவுளுக்கு சித்தமானால் நாம் இஸ்ரவேலிலுள்ள டெல் அவீவிலும் யோப்பாவிலும் சந்திப்போம்”.
-முன்னாள் இராக் ஜனாதிபதி ஆரப் பாக்தாத் ரேடியோவில் 1-6-1967-ல் தம் கூட்டு நாடுகளுக்கு விடுத்த செய்தி.

“பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க இஸ்ரவேல் தயார்”
-முன்னாள் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சைமன் பெரஸ் 18:5:1993-ல் அறிவித்தது.

“This will be a war of extermination and a momentous massacre which will be spoken of like the Mongolian massacre and crusades"
"இந்தப் போர் சிலுவைப்போர் அல்லது மங்கோலியப் படுகொலையைப் போல் சடுதியில் சங்காரம் செய்து யூதரைக் கூண்டோடு அழிக்கும் யுத்தமாக இருக்கும்”
-15-5-1948-ல் அரபு கூட்டு நாடுகளின் பொது காரியதரிசி ஆஜம் பாஷா, இஸ்ரேலிய சுதந்திர போரில்.

”இஸ்ரேல் தாக்குதலை சம்மாளிக்க அரபுநாடுகள் உதவ வேண்டும்”
-லெபனான் ராணுவ அமைச்சர் முகமது சல்மான் 28-7-1993 அறிவித்தது.

”விண்வரை போனோம்.அங்கு ஒரே இருட்டாகவுள்ளது. கடவுளை தேடினோம். அங்கு காணவேயில்லை.”
-முன்னாள் ரஷ்ய அதிபர் குருசேவ் 1959

“இந்த யுத்தம், ( 1990 வளைகுடா போர்) யுத்தங்களுக்கெல்லாம் தாய் யுத்தம்”
-சதாம் உசேன் கூறியதாக தினமணியில்

“இஸ்ரேலுக்கு இது மாபெரும் நஷ்டம் தான். ஆனாலும் முயற்சியினால் முன்னேறுவோம்”
-ஈசாக் ராபின் 13-9-1993 PLO ஒப்பந்தத்தை தொடர்ந்து தினமலரில்

“இது பாலும் தேனும் ஓடும் நாட்டிற்கான தொடக்கமே”
-செப்டம்பர் 1993 ஒப்பந்தத்தின் போது பெரஸ் சொன்னதாக Hindu-ல்

“He said Arabs and Jews were cousins. Both descended from Abraham. He could not be a Muslim unless he regarded David as a prophet"
-Yassar Arafat 15-9-1993 Hindu
“அராபியர்களும் யூதர்களும் தூரத்து சகோதரர்கள். இரு குலத்தோரும் ஆபிரகாம் வழி வந்தவர்கள். தாவீது ஒரு தீர்க்கதரிசி என்று ஒவ்வொரு முஸ்லீமும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்”
- செப்டம்பர் 1993 ஒப்பந்தத்தின் போது யாசர் அராபத் சொன்னதாக Hindu-ல்

"தனி நாடு மற்றும் எருசலேமை பற்றிய பேச்சுக்கே இடமில்லை”
-கிளிங்டன், ராபின் PLO ஓப்பந்தத்தில்

“எசே:37:1-23, ஏசா:43:5-7 இன்று இந்த வேதவாக்கியங்கள் நிறைவேறுகின்றன”
-டேவிட் பென் கூரியன் இஸ்ரேல் முதல் பிரதமர் 1948 மே 15 இஸ்ரவேல் நாட்டை பிரகடனபடுத்திய போது.

கிமு 1000-ல் முன்னுரைத்தது:
சங்கீதம்:83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.