Thursday, November 11, 2010

சங்கீதம் 4:7 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper

Wednesday, November 03, 2010

நமது வேதாகமத்திலிருந்து சில விசேஷம், இது வித்தியாசங்கள்

  • 969 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த ஒரு அதிசய மனிதன் பற்றி ஆதி:5:27-ல் காணலாம்.
  • தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்ட காலம் ஆதி:6:2 -ல் உள்ளது.
  • கற்களில் ஒன்றை தலையணையாக பயன்படுத்திய ஒரு நபர் இங்கே ஆதி:28:11
  • பிள்ளை பிறக்கும் முன்பே அதின் கையில் சிவப்புநூலைக் கட்டிய சம்பவம் ஆதி:38:28,29 -ல் உள்ளது.
  • ஒரு மனிதன் தன் கைகளை உயர்த்தி பிடித்ததினால் போரில் வெற்றி கொண்ட அதிசய சம்பவம் யாத்:17:11-ல்.
  • கழுதை ஒரு மனிதனிடம் பேசிய அதிசயம் எண்ணாகமம்:22:28.29-ல்.
  • 13 அடி நீளமும் 6 அடி அகலமும் உடைய இரும்புக்கட்டில் கொண்ட இராட்சத மன்னன் ஒருவன் உபாகமம்:3:11
  • விவாகம் செய்யும் முன் தலையை சிரைத்துக் கொள்ளவேண்டிய ஸ்திரி பற்றி உபாகமம்:21:11-13-ல்.
  • புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது உபாகமம்:22:5
  • சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுதும் நடுவானத்தில் நின்ற சம்பவம் யோசுவா:10:11
  • ஆணியை நெற்றியிலே அடித்து ஒரு மனிதனை கொன்று போட்ட ஸ்திரி நியாயாதிபதிகள்:4:17-21
  • தண்ணிரை நாய் நாவினாலே நக்குவது போல நக்கி குடித்த மனிதர்கள் பற்றி நியாயாதிபதிகள்:7:5
  • இடதுகை வாக்கான எழுநூறுபேர் கொண்ட ராணுவம் நியாயாதிபதிகள்:20:16
  • வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளும் ஒருவனின் தலைமயிரின் நிறை ஏறக்குறைய மூன்று கிலோ. II சாமுவேல்:14:26
  • கைகளில் ஆறு, கால்களில் ஆறு என இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; II சாமுவேல்:21:20
  • எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் கொண்டவன் I இராஜாக்கள்:11:3
  • வானத்திலிருந்து அக்கினி இறங்கி வாய்க்காலிலிருந்த தண்ணீரை முழுவதும் நக்கிப்போட்ட அதிசயம் I இராஜாக்கள்:18 :38
  • இரதத்தை முந்தி ஓடிய ஒரு மனிதன் I இராஜாக்கள்:18 :45,46
  • இரும்புக் கோடரி தண்ணீரில் மிதந்த அதிசயம் II இராஜாக்கள்:6:6
  • மகனை ஆக்கித் தின்ற ஒரு ஸ்திரி II இராஜாக்கள்:6:29
  • ஸ்திரியின் மாமிசத்தை தின்ன நாய்கள் II இராஜாக்கள்:9:36
  • என்பத்தி எட்டு பிள்ளைகளை பெற்ற ஒரு மனிதன் II நாளாகமம்:11:21
  • பத்துப்பாகை பின்னோக்கிச் சென்ற சூரியன் ஏசாயா:38:8
  • மூன்றுவருஷம் வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தவன் ஏசாயா:20:2,3
  • ஒரே இரவில் 185,000 பேர் சங்கரிக்கப்பட்டது ஏசாயா:37:36
  • விண்ணப்பம் செய்ததால் வாழ்நாளில் பதினைந்து வருஷம் கூடியது ஏசாயா:38:1-5
  • வெட்டுக்கிளியை ஆகாரமாகக் கொண்ட மனிதன் மத்தேயு:3:4

Monday, November 01, 2010

நன்றிப்பலிபீடம் கட்டுவோம் பாடல்


Nantri Palipeedam Kattuvom Father.Berchmans Song Lyrics.

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீக்கிட கழுவி விட்டீர்
உமகென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர் (வெளி 1:16)

2. சிற‌ந்த‌ முறையிலே குர‌ல் எழுப்பும் (எபி 12:24)
சிலுவை இர‌த்த‌ம் நீர் சிந்தினீரே
இர‌த்த‌க் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
எதிரி நுழையாம‌ல் காத்துக்கொண்டீர் (யாத் 12:13)

3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டார்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமைச் சொத்தாக‌ வைத்துக் கொண்டீர் (கொலோ 1:13)

4. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

5. இருக்க நல்ல வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர் (மத் 26:28)

6. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே (1 பேது 1:20)