Tuesday, April 30, 2013

சோதோம் கொமாரா ரிட்ட‌ன்ஸ்


"உங்க‌ளை நினைத்தால் எங்க‌ளுக்கு பெருமையாக‌ இருக்கிற‌து ஜேச‌ன் காலின்ஸ்!. ந‌ம‌து நாட்டில் இதொரு மிக‌ப்பெரிய‌ முன்னேற்ற‌ம்" என‌ அமெரிக்க‌ முத‌ல் பெண்ம‌ணி மிச‌ல் ஒபாமா த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் வாழ்த்துத‌ல் தெரிவித்துள்ளார்.

என்ன‌மோ ஜேச‌ன் காலின்ஸ் மிக‌ப்பெரிய‌தொரு அரிய‌ சாத‌னையை ப‌டைத்துவிட்டார், வ‌றுமையை ஒழிக்க‌ வ‌ழி க‌ண்டு பிடித்து விட்டார். தீவிர‌வாதிக‌ளின் ச‌தியை ஒட்டு மொத்த‌மாக‌ முறிய‌டித்து விட்டார் என‌ நினைக்க‌ வேண்டாம். த‌ன்னை ஒரு கே (Gay) என‌ அவ‌ர் அறிவித்துவிட்டாராம்.அத‌ற்கு தான் இந்த‌ ஆர்பாட்ட‌ம்.வேதாக‌மமோ அதை "ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து" என்கிற‌து (ரோமர்:1:27)

முன்னாள் அதிப‌ர் பில் கிளிங்ட‌னின் ம‌க‌ள் வாழ்த்துத‌ல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிப‌ர் பில் கிளிங்ட‌னோ ஒரு ப‌டி முன்னே போய் த‌ன‌து வாழ்த்துசெய்தியில் இவ்வாறாக‌ எழுதுகிறார்.

Clinton wrote. "It is also the straightforward statement of a good man who wants no more than what so many of us seek: to be able to be who we are; to do our work; to build families and to contribute to our communities."

என்ன‌து "to build families"சா
என்ன‌ப்பா ஆச்சு இவ‌ங்க‌ளுக்கு? ந‌ல்லாதானே இருந்தாங்க‌?
ஆணோடே ஆண்,பெண்ணோடே பெண் இருந்து அவலட்சணம் செய்து விட்டு குடும்ப‌த்தை எப்ப‌டி க‌ட்டுவ‌துப்பா? ந‌ல்லா இருக்குதே க‌தை? எப்ப‌டி இவ‌ர்க‌ளையெல்லாம் குருடாக்கியிருக்கிறான்யா அவ‌ன்? 
இவ‌ர்க‌ளுக்கெல்லாம் விண்ண‌ப்ப‌ம் ஏறெடுப்ப‌துவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.

Thursday, April 04, 2013

ஆழ்க‌ட‌லில் எறிந்துவிட்டார்




உலக‌ ச‌முத்திர‌ங்க‌ளிலேயே மிக‌ ஆழ‌மான‌ ப‌குதி எதுவென்று தெரியுமா? ஜ‌ப்பானுக்கு அ‌ருகே ப‌சுபிக் பெருங்க‌ட‌லிலுள்ள‌ ம‌ரியானாஸ் டிரெஞ்ச் ‌என்ப‌து தான் அது.இத‌ன் ஆழ‌ம் 35,827 அடிக‌ள். அதாவ‌து இந்த‌ ஆழ‌த்தில் எவ‌ரெஸ்ட் சிக‌ர‌த்தையே அலாக்காக‌ தூக்கி போட்டு விட‌லாமாம். ஏனென்றால் எவ‌ரெஸ்டின் உய‌ர‌ம் வெறும் 29,035 அடிக‌ள் ம‌ட்டுமே. உல‌க‌ம‌கா சிக‌ர‌த்தையே விழுங்கிக் கொண்டு அத‌ற்கான‌ அடையாள‌மே இல்லாம‌ல் அமைதியாக‌ கிட‌க்கும் இந்த‌ ம‌ரியானாஸ் ஆழ‌ம். 


அன்ப‌ரே! உங்க‌ள் பாவ‌ங்க‌ள் எவெரெஸ்ட் ம‌லைய‌த்த‌னையாய் குவிந்திருக்கிற‌தே என‌ வ‌ருந்துகிறீர்க‌ளா? வேதாகம‌ம் மீகா:7:19 ல் சொல்லுகிற‌து க‌ட‌வுள் "நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்" என்று. உங்க‌ள் பாவ‌ங்க‌ளும் அக்கிர‌ம‌ங்க‌ளும் எவெர‌ஸ்ட் சிக‌ர‌ம் போல் குவிந்திருந்தாலும் அதை சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு காணாம‌ல் போக‌ச்செய்ய‌ கர்த்த‌ர் ஒருவ‌ரால் ம‌ட்டுமே முடியும். அவ‌ர‌ண்டை அண்டிக்கொள்வாயா? அவ‌ர் அருளும் ச‌மாதான‌த்தை பெற்றுக்கொள்வாயா?