Thursday, August 19, 2010

”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம் டவுன்லோட்

”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம் இந்த லிங்கில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.(சகோதரி. லதா டேவிட் / சகோ.C . டேவிட்- நித்தியர் இயேசு ஊழியங்கள் தூத்துக்குடி)

Bible and Incidents in Tamil pdf book download link

Excerpts:

2. a) தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
- ஆதியாகமம் 2:7
உலகமெங்குமுள்ள மனிதர்கள் ஏதாவது ஓரு மண்ணின் நிறத்தில்தான் இருக்கின்றனர். (பிரௌன்) (Brown)
மனித சரீரத்தின் முக்கிய மூலகங்களான நைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன், கால்சியம், தண்ணீர் போன்றவை மண்ணிலும் இருக்கிறது என்பதை விஞ்ஞான உலகம் கண்டுபிடித்த உண்மை. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகள் கட்டுக்கதைகள் அல்ல.

b) பூமியானது மிருகங்களையும்... ஊரும் பிராணிகளையும்... பிறப்பிக்கக்கடவது
என்றார். (ஆதி. 1:24)
பூமியின் மண்ணிலுள்ள அதே மூலகங்கள்தான் மிருகங்களின், ஊர்வனவற்றின்
சரீரத்தில் இருப்பதாக விஞ்ஞானமும் ஒத்துக் கொள்கிறது.

3. காற்று தெற்கே போய் வடக்கேயும் சுற்றி சுழன்று அடித்து தான் சுற்றின
இடத்துக்கே திரும்பவும் வரும். பிரசங்கி 1:6
பருவக் காற்றுகள்தான் மழையைக் கொண்டு வருகின்றன. வேதம் சொல்லும்
இம்முறையையே உலகப் பருவக் காற்றுகள் இன்றும் பின்பற்றுகின்றன.

4. வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததுபோல ... என் தாசனாகிய
தாவீதின் சந்ததியையும் வர்த்திக்கப் பண்ணுவேன் என்று... ஏரேமியா 33:22
1930 இன்றுவரை சுமார் 100 மில்லியன் நட்சத்திரங்கள் தான் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பினர். பிறகு 40 Sextillion நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிட்டனர் (40க்கு பக்கத்தில் 22 பூஜ்ஜியங்கள் போட வேண்டும்.) பிறகு நட்சத்திரங்களை கணக்கிடவே முடியாது என்று முடிவாக அறிவித்து விட்டனர். வேத வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டாகி விட்டது.

Wednesday, August 18, 2010

சிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்

சிரிக்க அல்ல,சிந்திக்க சில மொழிகள் இந்தியாவிலிருந்து

”கம்யூனிஸத்துக்காக நாம் இரத்தம் சிந்தவும் தயாராக வேண்டும். இன்று இல்லாவிடினும் ஒருநாள் இந்த உலகத்தையே கம்யூனிஸம் ஆளத்தான் போகிறது”
- முன்னாள் கேரள முதல்மந்திரி நம்பூதிரிபாடு 13-10--1993 மாலைமலர்.

”மாஸ்கோவை இந்தியாவிற்கு அழைத்து வந்து உங்கள் கண் முன் காட்டுவேன்”
-நேரு அண்ணாவின் பொற்செல்வம் பக்:84,85.

"இந்தியாவின் தலைநகரம் மாஸ்கோ"
-தமிழ் துக்ளக் ஏடு ஆசிரியர் சோ.

“சோஷலிசத்திற்கேற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து கிறிஸ்தவ முதலாளிடகளுக்கும், இஸ்லாமிய சக்திகளுக்கும் இடையே தவிர்க்க முடியாத மோதல் ஏற்படும்”
-ராஜீவ் காந்தி இந்தியா டுடே ஜூன்21-ஜூலை5 1990.

நாங்கள் தொடக்க போகும் சாத்தான் நாட்டுக்கு (அமெரிக்கா) எதிரான யுத்தத்தில் முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேரும் படி கேட்டுக்கொள்கிறோம்.
-சோமாலியா - அமெரிக்க அமைதிபடைகளை எதிர்த்து முஸ்லீம் பிரமுகர்கள் மெதிமக்க ஆகஸ்ட் 1993.

”பாதுகாப்புக்காக ஆளுக்கொரு துப்பாக்கியை வைத்துக்கொள்ளுங்கள்”
-முன்னாள் இந்திய பிரதமர் சந்திரசேகர்.

“நான் பம்பாயின் ஹிட்லராக மட்டுமல்லாது, இந்தியாவின் ஹிட்லராகவும் இருக்க விரும்புகிறேன்”
-பால்தாக்கரே தினமலரில்.

”காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து விட்டதை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. சர்ச்சைக்குரிய அப்பகுதி இந்தியாவின் ஒரு பகுதி அல்ல”
-அமெரிக்க வெளியுறவு துறை துணை செயலாளர் ராபின் ரபேல் (தென் ஆசியா பொறுப்பு) 29-10-1993-ல் வாஷிங்டனில் கூறியதாக 31-10-93 தினகரன்.

“எந்த நாடாயிருந்தாலும் (பாகிஸ்தான்) சும்மா விடப் போவதில்லை” - இந்திய பிரதமர் ராவ் மற்றும் ஜனாதிபதி S.D.சர்மா 10-3-93 (பம்பாய் தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து).

“இஸ்ரேல் தீவிரவாத நாடு, எல்லா நாசவேலைகளை எடுத்தாலும் அதில் “மொஸாத்” பங்கு இருக்கும். பம்பாய் குண்டு வெடிப்பிலும் தொடர்பு உண்டு. பின் ஏன் அதனுடன் ராவ் உறவு கொள்கிறார் ராஜீவ் முதல் நேரு வரை யாரும் நெருங்காத போது இவர்.... வெளியுறவு கொள்கையில் மாற்றமா?”
- அப்துல் சமது முஸ்லீம் லீக். தமிழகம் ஜீன் 1993.

“இந்தியா எந்த நாட்டுக்கும் அடிபணியாது, கீழ்படியாது”
-பிரதமர் நரசிம்மராவ் 9-5-1992 தினமலர்.

”இந்தியாவிற்குள் மீண்டும் பாகிஸ்தானை கொண்டு வரவேண்டும். இதுதான் என் தேசிய வாதம்”
-கல்யாண்சிங். இந்தியாடுடே அக்டோபர்21-நவம்பர்4 1993.

“கிறிஸ்தவர்கள் அவர்களது நாட்டுக்கு போக வேண்டும்”
-முன்னாள் இந்திய துணை பிரதமர் தேவிலால்.

“கிறிஸ்தவர்கள் வேண்டாம் என்று அற்பமாக ஒரு போதும் நான் சொல்லமாட்டேன்”- சஞ்சீவரெட்டி 1978-ல் ஜான் ரபீந்திரநாத்துடன் கூறியதாக 1993 நவம்பர் “இயேசு வருகிறார்” பத்திரிகை.

”கிறிஸ்தவர்கள் மூட்டை பூச்சி போன்றவர்கள். அவர்களை நசுக்கினால் அவர்கள் பலுகிபெருகுவார்கள்.அவர்களை தொடாதீர்கள்”
- முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜி.

“கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவர்களை விட காந்தியடிகள் இயேசுவுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை அறிதல் வேண்டும். இயேசுவின் கொள்கைகளைப் பெரும்பாலும் கடைப்பிடித்து நடக்கின்றவர் காந்தியடிகளே”
-நேரு Glimpses Of World History பக்:89.

”பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை இல்லை. அடுத்தவனுக்கு உலை வைக்காமல் எதை செய்தாலும் சரிதான். எனக்கு என்னை மீறிய ஒரு சக்தியிடம் நம்பிக்கை இருக்கிறது. கடவுளிடம் பயம் இல்லை;ஆனால் பக்தி உண்டு”
-நடிகை பூஜாபட்.

You might like this post also:
சிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்
http://www.thewayofsalvation.org/2008/02/blog-post_27.html

Monday, August 16, 2010

காலத்தை அறிவாயோ? - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி


Gems media presents Kaalathai Arivayo?
Bro.D.Augustin Jebakumar.
காலத்தை அறிவாயோ? வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

Saturday, August 14, 2010

நியூட்டன் கணித்த கிபி:2060

”கோள்களில் நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”-சர் ஐசக் நியுட்டன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல் மேதையாக கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியுட்டன் (1643-1727). புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்ததன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியானார். ஆனால் இதே ஐசக் நியூட்டன் வேதாகமப் பிரியராகவும் அதிலும் குறிப்பாக தானியேலின் புத்தகத்திலும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்திலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் நாம் பலரும் அறியாதது. ஏன் உலகுக்கே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிய வந்தது.

விஞ்ஞானியாய் இருந்த காலத்திலேயே அவர் பல வருடங்கள் வேத ஆராய்ச்சியில் செலவிட்டுள்ளார். வேதாகம தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதை உணர்ந்த அவர், வேதபுத்தகமானது உலக வரலாற்றை முன்கூட்டியே தன்னில் எழுதிவைத்திருக்கின்றது என முழுவதுமாக நம்பினார். இதனால் பைபிள் புத்தகத்தின் படி நடக்கக்போகும் சம்பவங்களையும் அது நடைபெறப்போகும் காலங்களையும் வெகுவாக ஆராய்ந்து எழுதினார். யூதர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிவருதல், மூன்றாவது எருசலேம் தேவாலயம் கட்டப்படுதல், அந்திக்கிறிஸ்துவின் வருகை, அர்மகெதோன் யுத்தம் போன்றவற்றை பற்றியும் அவை நடைபெறப்போகும் காலங்களை பற்றியும் தனக்கு தெரிந்த அளவில் அலசி ஆய்ந்து எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலங்களில் ஒருவேளை தனது பிற விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு வரவேற்பு இல்லாமல் போய் விடும் என்று பயந்தும், அக்கால சபைத் தலைவர்களுக்கு பயந்தும் அந்த ஆய்வுகளை அவர், அவர்காலத்திலேயே வெளியிடவில்லை.

அந்த கையெழுத்து கோப்புகள் யாருக்கும் தெரியாமல் கடந்த இரு நூற்றாண்டுகளாக ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளில் அவைகள் ஏலத்துக்கு வர அவர் எழுதிய வேதாகம தீர்க்கதரிசன குறிப்புகளும் வெளிஉலகுக்கு தெரியவந்தன. சர் ஐசக் நியூட்டனின் இந்த குறிப்புகள் மூலம் அவர் கிபி:2060-ல் உலகம் ஒரு முடிவுக்கு வரும் என நம்பியதாக தெரிகிறது. உலகத்தை படைத்த இறைவனே அதை அழிக்கவும் வருவதாக அவர் நம்பினார். அவர் கணக்கிட்ட காலக்கணக்கின் படியே 1940களில் இஸ்ரேல் தேசம் உருவானது இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியர் ஒருவரே நியூட்டனின் கையெழுத்துக் கோப்புகளை ஏலம் எடுத்ததால் இன்றைக்கு அவை நியூட்டன் எதிர் காலத்தில் உருவாகும் என நம்பின இஸ்ரேல் தேசத்திலேயெ இருப்பது ஒரு ஆச்சரிய பொருத்தம்.

மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

Wednesday, August 11, 2010

ஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி


Rejoice Gospel communications release ஜெபத்தோட்டம் டிரஸ்ட் வழங்கும் அருட்தந்தை S.J.பெர்க்மான்ஸ் “ஆயத்தமாவோம்” செய்தி கோவை அற்புத விடுதலைப் பெருவிழாவில் வழங்கியது.

Saturday, August 07, 2010

உங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்


Unga Mugathai Paarkanume Yesaiah Tamil Christian song.
Download as MP3