Thursday, November 30, 2006

நாத்திகன்

நாத்திகன் யார்? என்ற கேள்விக்கு பெரியார் ஒருவரின் பதில்: "சரீரக் கண்ணால் பார்க்கக்கூடாத ஒருவருடைய உதவி யாருக்கு இல்லையோ அவன் நாத்திகன்" என்பதாகும்.கடவுள் இல்லை என்கிற ஒருவனுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிற இறைவனின் பங்கு எவ்வாறு கிடைக்கும்?

ராபர்ட் இங்கர்சால் என்ற நாடறிந்த நாஸ்திகன் ஒருவன் வேதாகமத்தைக் குறைகூறி பல நூல்களை எழுதினான்.தான் எழுதிய நாத்திக புத்தகமொன்றை தெய்வ பக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான்.அந்நூலின் முதல் பக்கத்தில் அவன் கையால் எழுதி இருந்ததைக் கவனியுங்கள்:
"கிறிஸ்தவர்கள்எல்லோரும் என் அத்தை சாராளைப் போல் ஜீவித்தால் இப்புத்தகம் எழதப்பட்டிருக்க மாட்டாது."
இதை வாசிக்கிறவர்களின் கவனம் இங்கர்சாலின் கையெழுத்தில் செல்லட்டும்.

யாக்கோபு:1:22. அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

James:1:22.But be ye doers of the word, and not hearers only, deceiving your own selves

Sunday, November 19, 2006

அறிஞர்களும் வேதமும்

நான் ஒரு வேளை ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது,என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரம் கொண்டு போகலாம் எனக் கூறினால், நான் பைபிளை (வேதாகமத்தை) மாத்திரமே தெரிந்தெடுப்பேன்-கோதே (Goethe)

வேதாகமம் ஒரு பழமையான புத்தகமோ, அல்லது புதுமையான புத்தகமோ அல்ல.அது நித்திய காலமாக உள்ள ஒரு அழிவற்ற நூலாகும்-மார்ட்டின் லுத்தர்

ஒரு சிறு பிள்ளையின் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு இவ்வுலக ஞானிகளின் அறிவைப் பரிகாசம் செய்யும் ஓர் புத்தகமே வேதாகமம்-பேராசிரியர் பீட்டெக்ஸ்

உலகப் புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதிய ஆங்கில எழத்தாளர் சர் வால்டர் ஸ்காட் தனது மரணப் ப்டுக்கையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் பொழுது தனது மூத்த மகனிடம் ,"அந்தப் புத்தகத்தை எனக்குத் தா"என்றாராம்.மகன் அவரிடம்,"எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்?"என்று கேட்டார்.அப்பொழுது ஸ்காட் பதிலுரைத்தார்,"இவ்வுலகில் 'புத்தகம்' என அழைக்கப்படக்கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே"!

நூறு முறை வேதாகமத்தை வாசித்து முடித்த பின் ஸ்பர்ஜன் கூறினார்,"நான் நூறாவது முறை வேதத்தை வாசித்த போது ,முதல்முறை வாசித்ததை விட அதை மிகவும் அழகுள்ளதாகக் கண்டேன்"

சங்கீதம்:19:10.
(கர்த்தருடைய வேதம்)பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
More to be desired are they than gold, yea, than much fine gold: sweeter also than honey and the honeycomb.

Monday, November 13, 2006

மெய்வாழ்வும் மகிழ்ச்சியும் செல்வத்திலா?

இல்லை!
ஜேய் கோல்டுஎன்ற மிகப்பெரிய பணக்காரர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர்.அவரிடம் 700 மில்லியன் டாலர்கள் (சுமார் 864 கோடி)மதிப்புள்ள சொத்து இருந்தது.அவர் தான் மரிக்கும் போது "மகிழ்ச்சியே இல்லாத பரிதாபமானவன் இவ்வுலகில் நானாகத்தான் இருக்கும்"என்று கூறினாராம்.இவ்வளவு செல்வத்திலும் அவரால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியவில்லை.

ஜார்ஜ் ஈஸ்ட்மென் அமெரிக்காவிலிருந்த மிகப் பெரிய போட்டோ தொழிலகத்தின் மிக நேர்மையான அதிகாரியான இருந்தார்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர்.தனது செல்வத்தில் 750 மில்லியன் டாலர்களை தர்மத்திற்கென்று கொடுத்தவர்.அதுகூட அவர் வாழ்வில் முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.தனது 60ஆம் வயதில் மனதில் திருப்தி அற்றவராக 1932ஆம் ஆண்டு மார்ச்சு 14ஆம் நாள் அவர் தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.என்ன பரிதாபம்.

இதேபோல் ராபர்ட் யங் என்ற மிகப்பெரிய கோடீஸ்வரர் தான் பெரிய அதிகாரியாக வேண்டும் என பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு முடிவில் நியூயார்க் மாநகரின் ரயில்வே அதிகாரியானார்.மன மகிழ்ச்சியின்மையின் காரணமாக தான் போராடி பெற்ற செல்வம்,அதிகாரம் எல்லாவற்றையும் எறிந்து விட்டு தனது அரண்மனை போன்ற "ப்ளோரிடா"என்ற மாளிகையில் 1958ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார்.தான் போராடி பெற்ற மிகப்பெரிய பதவியின் மூலம் கிடைத்த செல்வத்திலும் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கவே இல்லை.பரிதாபம் அன்றோ!

இன்பத்திலா?

இல்லை! பைரன் பிரபு (ஜார்ஜ் கார்டன்)என்பவர் ஆங்கிலக் காதல் காவியங்களை எழுதும் சிறந்த கவிஞர்.அவர் உலக இன்பத்தைக் காவியங்களின் வாயிலாக அனுபவிப்பவர்.அவர் தனது வாழ்வின் கடைசி ஆண்டான 36ஆம் வயதில் பின்வருமாறு காவியம் ஒன்றை எழுதினார்:

"என்னுடைய வாழ்நாளெல்லாம் பழுத்த இலையில் உள்ளது
மலரின் மணமும்,கனியின் சுவையும்,அன்பும் போய் விட்டது
பூச்சியும் புழுவும் துக்கமுமே என் பங்கு!"

உண்மையான மகிழ்ச்சியில்லாத வாழ்வால் நிம்மதியற்ற நிலையில் இவ்வாறு எழுதினார்.

பதவியிலும்,புகழிலும் கிடைக்குமா?

இல்லை! பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் புகழ்பெற்ற பிரிட்டீஷ் அதிகாரி.பதவி,புகழ் இரண்டையும் பெற்றவர்.அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

"இளமைப் பருவம் தவறானது,
இடைப்பருவம் போராட்டம் மிக்கது,
முதுமைப்பருவம் வருத்தம் மிக்கது"

பெரும் புகழும் பதவியும் பெற்றவர் இவ்வாறுஎழுதும் போது நம் நிலைமைஎன்ன? சற்றே சிந்திப்பீர்!

பலத்திலா?அதிகாரத்திலா?

இல்லை! மகா அலெக்ஸாண்டர் வரலாற்று சிறப்பு மிக்கவர்.அவர் தனது பலத்தால் இந்த முழு உலகத்தையே வென்றவர்.இத்தகைய ஆச்சரியமான வெற்றியின் முடிவில் தனது கூடாரத்தில் கண்ணீருடன் கூறினது:
"இனி வெற்றி பெற வேறு உலகம் இல்லை!"

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாலமோன் ஞானி பின்வருமாறு தீர்மானித்து எழுதிவைத்துள்ளதை மேற்க்கண்டவர்கள் உறுதிபடுத்தினர்

பிரசங்கி:2:17. ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
Therefore I hated life; because the work that is wrought under the sun is grievous unto me: for all is vanity and vexation of spirit.

அப்படியானால் எங்குதான் அந்த முழுமையான மகிழ்ச்சியினைக் காணமுடியும்?
இயேசு கிறிஸ்துவில் மட்டுமே!

யோவான் 6:35. இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
And Jesus said unto them, I am the bread of life: he that cometh to me shall never hunger; and he that believeth on me shall never thirst.

சங்கீதம் 107:8. தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
Oh that men would praise the LORD for his goodness, and for his wonderful works to the children of men!

அப்போஸ்தலர் 16:31. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house.