Monday, July 23, 2012

திருமண அழைப்பிதழ்



ஜெபதொனி ஜூலை 2012
JebaThoni July 2012

Thursday, July 19, 2012

இயேசு இந்தியா வந்தாரா? - குறும்பதில்கள்

கேள்வி: இயேசு தன்னுடைய கடைசி காலத்தில் இந்தியாவிற்கு வந்ததாகவும் சிலுவையில் அறையப்பட்டவர் அவர் அல்லவென்றும், இயேசுவின் கல்லறை காஷ்மீரி›ல் இருக்கிறதென்றும் சிலர் சொல்கிறார்களே? அதுபற்றி உங்கள் விளக்கம் என்ன?

பதில்: இப்படியொரு கருத்து பல காலமாக சொல்லப்பட்டு வருவது உண்மை தான். இயேசு இந்தியாவிற்கு வந்தார். காஷ்மீரி›ல் போய் சமாதியாகி விட்டார் என்று சொல்பவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கொள்வது பர்னபாவின் சுவிசேஷம் என்ற நூலைத்தான் (Gospel of Barnabas). இந்த பர்னபாவின் சுவிசேஷம் இயேசுவின் மரணம் பற்றி என்ன சொல்கிறது? ரோமவீரர்கள் இயேசுவைக்கைது செய்ய அனுப்பப்பட்டபோது கர்த்தர் குறுக்கிட்டு தேவ தூதர்களை அனுப்பி இயேசுவைத் தூக்கிக் கொண்டு வரச் சொல்லிவிடுகிறார். இயேசுவைக் கைது செய்ய வந்த வீரர்கள் இயேசுவை உருவத்தில் ஒத்திருந்த யூதாஸை இயேசு என்று கருதி கைது செய்து கொண்டு போய்விடுகிறார்கள். யூதாஸ், தான் அவனி›ல்லை என்று எத்தனையோ மன்றாடியும் பாவம் அவனை சிலுவையிலறைந்து விடுகிறார்கள். நீர் அழைத்தீர் என்பதினாலே தானே ஊழியத்திற்கே வந்தேன். கடைசியில் இப்படி ஏன் கைவிட்டீர்' என்று கதறியதாக சொல்லப்பட்டுள்ளது. (பாவம் யூதாஸ்).சரி. தேவதூதர்களால் தூக்கிச் செல்லப்பட்ட இயேசு என்னவானாராம்? அவரை அவர்கள் பரலோகத்திற்கு கொண்டு செல்லாமல் எருசலே•முக்கு வெளியிலிருந்த வனாந்திரம் ஒன்றில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்களாம். தனக்கு விதிக்கப்பட்ட சிலுவை தண்டனை யூதாஸிடத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதை அறிந்து கொண்ட இயேசு இரகசியமாக அவருடைய தாயாரையும், சீடர்களையும் காண வந்தாராம். அதைத்தான் அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டதாக சொன்னார்களாம். தொடர்ந்து தான் எருசலேமில் தங்க •முடியாது என்ற மு•டிவுக்கு வந்த இயேசு அங்குமிங்கும் சுற்றித்தி›ரிந்து கடைசியில் காஷ்மீருக்கு வந்து சேர்ந்துவிட்டாராம். அங்கே அந்த நாட்களில் தீவிரவாதிகள் இல்லாததினால் அங்கேயே தொடர்ந்து தங்கிவிட்டு ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்கொண்டு குடும்பமாய் வாழ்ந்துவிட்டு கடைசியில் காஷ்மீ›ரிலேயே மரி›த்தும் போய்விட்டாராம் என்று அள்ள அளவில்லாமல் கற்பனைகளை அள்ளித்தெளித்திருக்கிறது அந்த பர்னபாவின் சுவிசேஷத்தில்.

இதையொட்டி எழுதப்பட்ட புத்தகங்களுள் பேபர் கெய்சர் (Faber Kaiser) என்பவர் 1977ல் வெளியிட்ட "Jesus Christ Died in Kashmir' என்ற புத்தகத்தில் ""இயேசு உண்மையில் ம›ரிக்கவில்லை. அவர் கோமா நிலையிலிருந்தார். அவர் ம›ரித்துவிட்டார் என்று தவறாக கருதி அவரை கல்லறையில் வைத்து விட்டார்கள். இரண்டுநாள் மயக்கநிலையிலிருந்து விட்டு பின்னர் விழிப்புத்தட்ட, இயேசு எழுந்து பார்த்துவிட்டு கல்லறையின் கல்லை தாமாகவே புரட்டி வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி காஷ்மீருக்கு வந்துவிட்டார். அவர் கல்லறை இன்னமு•ம் அங்கே இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியா கல்லறையை காட்டுங்கள் என்று கேட்டால் மலைகளுக்கிடையில் இருக்கும் ஒரு நீண்ட கல்லறையை காட்டுகிறார். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாம் என்றால் தொந்தரவு பண்ணாதீர்கள் இயேசு தூங்கட்டும் என்கிறார். இவர்தவிர, பஞ்சாபில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது (Mirza Ghulam Ahmad) என்கிற இஸ்லாமிய அறிஞர் இயேசு இந்தியாவிற்கு வந்தார் என்று சொல்லுகிறார். விளக்கம் கேட்டால் மத்திய பஞ்சாபில் இயங்கிவந்த பழைய ஊழிய நிறுவனம் ஒன்றை காட்டுகிறார். விளக்கம் பு›ரியாமல் நீங்கள் அவரைப் பார்த்தீர்களேயானால் உடனே ஆமாம் தம்பி... இயேசு இந்தியா வந்திருந்தபோது அவர் தான் இதை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார் என்பார். சரி›, இவைகளுக்கான விளக்கம்தான் என்ன? பர்னபா ஏன் அப்படியொரு சுவிசேஷம் எழுதினார்? காஷ்மீரி›ல் இவர்கள் காட்டும் கல்லறை யாருடையது? என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் பார்ப்போம்.

மு•தலில் பர்னபாவின் சுவிசேஷம். இது நீங்கள் நினைக்கிற மாதி›ரி பவுலுடன் ஊழியம் செய்த பர்னபா எழுதியதல்ல. வேறுயாரோ ஒரு டுபாக்கூர் பர்னபா. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 1349ல். அதாவது இயேசுவின் மரணத்திற்கு பின்பாக ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு பிறகு. அப்படியானால் இது வேதத்தில் காட்டப்படும் பர்னபாவினுடையது அல்ல. எனவே இது நம்பகமானது அல்ல. இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு மரணம் பற்றி அவருடனே இருந்தவர்கள் அல்லது அவர்காலத்தில் வாழ்ந்தவர்களின் சாட்சிகளைத்தான் நம்பகமானதாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இயேசுவைப் பற்றி அவருடனே வாழ்ந்த அல்லது அவர்காலத்திலேயே வாழ்ந்த மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்றவர்கள் எழுதிவைத்த சுவிசேஷங்கள் தான் நம்பகமானவை. காரணம், இவையாவும் மு•தல் நூற்றாண்டிலேயே அதாவது இயேசுவின் நினைவுகள் எல்லார் மனதிலும் பசுமையாக இருக்கும்போதே எழுதப்பட்டவை. மாத்திரமல்ல, இவைகளில் காணப்படும் நிகழ்ச்சிகளுக்கும், இயேசுவின் சிலுவை மரணத்திற்கும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளில் அக்காலத்தில் ஆண்ட ஆளுநர்களின் கையெழுத்துடன் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பர்னபாவின் சுவிசேஷம் எழுதின பர்னபா யார் என்பதற்கே ஆதாரங்கள் இல்லை. இரண்டாவது மிர்சா குலாம் அகமதுவின் கூற்று பற்றியது. இந்த மீர்சா குலாம் துவக்கத்தில் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து கடைசியில் தன்னை இறுதிக்கால நபி என்று பிரகடனம் செய்து கொண்டார். பைபிள் மாத்திரமல்ல. குர் ஆனைப்பற்றியும் நிறைய தாறுமாறான கருத்துக்களை சொல்லியுள்ளார். இவரை இதனால் ஒரு கூட்டம் ஜனங்கள் தவிர யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்பற்றியவர்கள் அகமதியர்கள் (Ahmadiyya) எனப்பட்டனர். எனவே, இவரது சாட்சியும் நம்பகமானதல்ல. கெய்ச›ன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இயேசு சரி›யாக மரி›க்கவில்லை. கோமாவில் கிடந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த கற்பனை ரகங்கள். ரோம வீரர்கள் சிலுவை தண்டனை நிறைவேற்றுவதில் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு நாளைக்கு இது மாதிரி› பலபேரை சிலுவையில் அறைந்து கொல்லும் புரபஷனல் கொலைகாரர்கள். அவர்கள் இயேசு மரி›த்ததை உறுதி செய்யத்தான் அவர் விலாவிலே குத்தினார்கள். சரி›யாக மரி›க்கவில்லையென்றால் உடனடியாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதுவும் தவிர இயேசு கல்லறையில் வைக்கப்பட்ட போது இயேசுவின் சரீŸரத்தை அவர் சீடர்கள் ஒளித்து வைத்துவிட்டு அவர் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லிடுவார்கள் என்று மனுச்செய்துதான் யூதர்கள் அவர்கள் கல்லறையை காவல் செய்ய உத்தரவு பெற்றனர். அதன்படி ரோம அரசாங்கம் அவர் கல்லறையை காவல் செய்ய வீரர்களை நியமித்திருந்தது. இயேசு கோமா தெளிந்து எழுந்து தன்னிஷ்டப்படியெல்லாம் இந்த வீரர்களை தாண்டி வெளியே போய்விட மு•டியாது. அதுவும் தவிர, கோமாவில் கிடந்த ஒரு மனிதர் எழுந்தவுடன் அவர் நடக்க •முடியாது. அப்படியே நடக்கவேண்டுமானாலும் நாலைந்து பே›ரின் உதவியுடன் தான் செய்ய மு•டியும். இங்கே கெய்சர் புத்தகத்தில் சிலுவையிலறையப்பட்டு கோமாவில் கிடந்த இயேசு எழுந்து பார்த்து கல்லைத் தாமே புரட்டிப்போட்டு விட்டு (கல்லறைக்கல் என்பது பெ›ரிய பாறை) ஹாயாக நடந்து போயிருப்பது தமிழ் சினிமாக்களில் கூட பார்க்க• முடியாத கற்பனை ரகம். ச›ரி. இவர் காட்டும் காஷ்மீர் கல்லறை பின்னே யாருடையது? •முதலாம் நூற்றாண்டில் கிரேக்க, ரோமானிய உலகில் பெரும்புகழ் பெற்றிருந்தவர் அபோலநிபஸ் என்பவர். இவர் நம்‰மூர் சித்தர்கள் மாதிரி› பல அமானுஷ்ய செயல்களை நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. பின்வந்த, நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கால இடைவெளியில் மக்கள் இயேசுவையும் அகோ லிநிபஸையும் ஒன்று என்று ஜனங்கள் கருதியிருக்கலாம். எனவே காஷ்மீரி›ல் கெய்சர் காட்டுவது இயேசுவின் கல்லறையல்ல. மாத்திரமல்ல. இயேசுவுக்கு எங்குமே கல்லறை இல்லை. அவர் மரி›த்தபோது அவரை வைத்திருந்த இடம் தான் இருக்கிறது. கல்லறை என்றால் அதனுள்ளே ம›ரித்தவர் இருக்கவேண்டும். இயேசு உயிர்த்ததினால் அவர் அங்கே இல்லை. பின்னர் இதுமாதிரி› கதைகள் ஏன் கிளப்பிவிடப்படுகின்றன? இயேசுவின் மரணத்தை ஒத்துக் கொள்ள •முடியாத சிலர் அவர் மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கை காரணமாகத்தான் இறைவன் மனிதனாக அவதரி›த்து இவ்வளவு மோசமான மரணத்தை அடைந்திருக்க மு•டியாது என்று கருதி இதுபோல கற்பனை செய்துகொண்டு புத்தக•ம் எழுதிவிடுகிறார்கள்.(இயேசுவின் தொனி மார்ச் 08)

 அப்போஸ்தலனாகிய யோவானை தவிர , மற்ற 12 அப்போஸ்தலர்களும், பவுல், மற்றும் யூதாசுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ் உட்பட அனைவருமே இரத்த சாட்சிகளாக கொலை செய்யப்பட்டு கிறிஸ்துவுக்காக மரித்தார்கள். ஒரு பொய்க்காக ஏன் இவர்கள் அனைவரும் தங்கள் உயிரை அப்படி மாய்த்திருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள். உண்மையில், எந்த புத்தகமும் இந்த அளவு ஆழமாய் ஆராயப்பட்டதில்லை. இந்த 2000 ஆண்டுகளில் பைபிளில் குறைகண்டு அதை எப்படியாவது அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏராளம்.ஆனால் வேதாகமமோ இன்னமும் இருக்கின்றது. அநேகருடைய வாழ்க்கையை இன்னும் மாற்றிய படி இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியை உலகுக்கு பறைசாற்றியபடி உள்ளது. 

ஏசாயா:40:8. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்

Tuesday, July 17, 2012

பாஸ்டர் M.S.வசந்தகுமாருடன் ஒரு நேர்முக‌ பேட்டி

  l
http://www.youtube.com/watch?v=TajA7a3Kvlo
Pastor. M.S. Vasanthakumar Interview
Founder and president of Tamil Bible Research Center
Credit goes to Tamil Christian Media and http://tamilbibleresearchcentre.com/
Telephone Number : 020 8374 4004
Mobile Number: 07814 252 077
Postal Address:
M.S Vasanthakumar
8 Broadlands Avenue,
Enfield,
London.
EN3 5AH
United Kingdom
E-Mail: msvtbrc@googlemail.com

Friday, July 13, 2012

ஆச்சரியமாய் உயிர்பெற்ற எபிரேய மொழி

உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக, மூல மொழிகளாக திகழும் செம்மொழியாகும் தகுதியை கீழ்கண்ட ஆறு மொழிகளே பெற்றிருக்கின்றன.


1.கிரேக்கமொழி
2.இலத்தின்மொழி
3.சீனமொழி
4.எபிரேயமொழி
5.சமஸ்கிருத மொழி
6.தமிழ்மொழி

இவற்றில் கிரேக்கமொழி, இலத்தின்மொழி,  சமஸ்கிருதமொழி ஆகிய மூன்றும் இறந்து போன மொழிகளாகும். எபிரேயம் - கி பி 2ம் நூற்றாண்டில் இஸ்ரேல் ஜனங்களான யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப் பட்டபோது வழக்கற்று ஒழிந்த மொழியாய் போனது. அப்படியே அந்த மொழி காணாமல் போயிருக்க வேண்டும்.பொதுவாக நமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகள் சென்ற அனேகர் தம் தாய் மொழியை சீக்கிரமாகவே மறந்து விடுகின்றனர் என்பது மிக உண்மை.அமெரிக்காவில் வாழும்,அங்கு பிறந்த இந்திய வம்சா வழி குழந்தைகளிடம் அவர்கள் தாய்மொழியை சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இஸ்ரேல் ஜனங்கள் ஆயிரம் ஆண்டுகளாக பிற நாடுகளில் சிதறடிக்கப்பட்டிருந்தும்,பல நூறு ஆண்டுகள்  எபிரேயமொழி பேசப்படாமலே எழுதப்படாமலே இருந்தும், இம்மொழி மீண்டும் வந்து பைபிள் முன்னறிவிப்பு படி இன்று லட்சக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது என்பது மிகவும் ஆச்சர்யம். கி பி 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த எலியேசர் பென் யெஃகுடா (Eliezer Ben-Yehuda) என்ற மொழியியல் அறிஞர் எபிரேயு மொழியை மீண்டும் உயிர்பெற வைத்தார். இது இன்றைய இஸ்ரேலின் ஆட்சி மொழியாக வாழ்கிறது. 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. பரிசுத்த வேதம் முழுக்க முழுக்க உண்மை என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

செப்பனியா 3:9. அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.

Wednesday, July 11, 2012

அமெரிக்காவில் திறப்பின் வாசல் ஜெபங்கள் 2012

கடந்த வருடம் மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்ற திறப்பின் வாசல் ஜெபங்கள் இந்த வருடமும் டெக்சாஸ், கலிபோர்னியா மற்றும் வாசிங்டன் டி.சி பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஈஸ்ட் கோஸ்ட் பகுதியிலிருந்து வாசிங்டன் டி.சி திறப்பின் வாசல் ஜெபத்தில் பங்கு பெறுவோர் பென்சில்வேனியா இடமாற்றத்தை கவனிக்கவும்.

  • Thirappin vasal jebam 2012 at Highland Lakes Camp North Spicewood Texas USA July 13,and 14 Yesu viduvikiraar Bro.Mohan.C.Lazaras and Bro.David Stewart Jr
  • Thirapin vaasal jebam 2012 at Family Community Church San Jose Bay Area SanFrancisco California USA July 19,20 and 21
  •  Thirappin vaasal jebam (Stand in the Gap Prayer) 2012 at Hotel Brunswick Lancaster PA  Washington DC America July 26,27 and 28 Jesus Redeems
எசேக்கியேல் 22:30 நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.

Tuesday, July 10, 2012

உயிர்த்தெழுதல் நடந்ததா?


 இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஆல்பர்ட் ஹென்றி ராஸ் (Albert Henry Ross,1881-1950). இவர் பிராங்க் மாரிசன் (Frank Morison) என்கின்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் எழுதிய பல புத்தகங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கிறிஸ்தவ மதம் என்றாலே எட்டிக்காய் போல வெறுப்பவர். இவர் இயேசுவின் உயிர்தெழுதலே சம்பவிக்கவில்லையென்று ஒரு நூல் எழுதினால் பல கிறிஸ்தவர்களை கிறிஸ்துவை விட்டு பிரித்து விடலாம் என்று திட்டமிட்டார். இதற்கான புத்தகத்தை எழுதுவதற்காக வேதாகமத்தை இரவும் பகலுமாக வாசிக்க ஆரம்பித்தார். புத்தகத்தின் சில பக்கங்களை எழுதவும் துவங்கி விட்டார். இவர் கிறிஸ்துவுக்கு விரோதமாக புத்தகம் எழுதுவதை கேள்விப்பட்ட சில உண்மையான கிறிஸ்தவர்கள் இவருக்காக ஜெபித்தார்கள். இந்நிலையில் வேதம் இவர் மனதில் கிரியை செய்யத் துவங்கியது. முதல் அத்தியாயம் எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே கிறிஸ்துவின் விசுவாசியாக மாறினார். கடைசியில் இயேசு மெய்யாகவே உயிர்த்தெழுந்தார் என்று பலமான சாட்சிகளுடன் தன் புத்தகத்தை எழுதி முடித்தார். அவர் எழுதிய நூலின் பெயர் Who moved the stone? 1930ம் ஆண்டில் முதலில் வெளியான இப்புத்தகம் பிற்பாடு 1944, 1955, 1958, 1962, 1977, 1981, 1983, 1987, 1996 மற்றும் 2006 ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படி இந்த புத்தகம் இலட்சக்கணக்காக விற்பனையாயின. ஆங்கிலத்தில் இயேசுவைப் பற்றிச் சொல்லும் புத்தகங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் புத்தகம்.


சங்கீதம் 145:18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

Saturday, July 07, 2012

பைபிள் ஜோக்ஸ்

வேதாகம அடிப்படையிலான சில கடி ஜோக்குகள் இங்கே உங்களுக்காக . சிரிக்க மட்டும், சிந்திக்கவல்ல.
Bible based one-liner jokes. Just for fun. Not to be taken seriously.


Q. What kind of man was Boaz before he married Ruth?
A. Ruthless.

Q. What do they call pastors in Germany?
A.German Shepherds.

Q Who was the greatest financier in the Bible?
A. Noah. He was floating his stock while everyone else was in liquidation.

Q. Who was the greatest female financier in the Bible?
A.Pharaoh's daughter. She went down to the bank of the Nile and drew out a little prophet.

Q. What kind of motor vehicles are in the Bible?
A. Jehovah drove Adam and Eve out of the Garden in a Fury. David's Triumph was heard throughout the land. Also, probably a Honda, because the apostles were all in one Accord.

Q. Who was the greatest comedian in the Bible?
A. Samson. He brought the house down.

Q. What excuse did Adam give to his children as to why he no longer lived in Eden ?
A. Your mother ate us out of house and home.

Q. Which servant of God was the most flagrant lawbreaker in the Bible?
A. Moses. He broke all 10 commandments at once.

Q. Which area of Palestine was especially wealthy?
A. The area around Jordan The banks were always overflowing.

Q. Who is the greatest baby-sitter mentioned in the Bible?
A. David. He rocked Goliath to a very deep sleep.

Q. Which Bible character had no parents?
A. Joshua, son of Nun.

Q. Why didn't they play cards on the Ark ?
A. Because Noah was standing on the deck.

Q. Did you know it's a sin for a woman to make coffee?
A. Yup, it's in the Bible. It says . . . "He-brews"

Q: Where was Solomon's temple located?
A: On the side of his head.

Q: Who was the shortest man in the Bible?
A: Some think it was Zacheus, some Nehemiah (Knee-high Miah,
    Others thinks it was Bildad the Shuhite (Shoe height), but in fact,
    It was Peter - he slept on his watch!

Q. Where is the first math homework problem mentioned in the Bible?
A. When God told Adam and Eve to go forth and multiply.

Q: Why did Moses cross the red sea?
A: To get to the other side

Q: What man is known for having killed 1/4 of the world's population
   in one day?
A: Cain when he killed Abel.

Q: How long did Cain hate his brother
A: As long as he was able (Abel)

Q: In what place in the world did the cock crow when all the world
heard him?
A: On Noah's ark

Q: At what time of the day was Adam created?
A: A little before Eve.

Q: If Moses were alive today, why would he be considered a remarkable man?
A: Because he would be several thousand years old.

Q: Where is medicine first mentioned in the Bible?
A: When God gave Moses two tablets.

Q: Why was job always cold in bed?
A: Because he had such a miserable comforters

Q: If Methuselah was the oldest man in the Bible (969 years old), why
did he die before his father?
A: His father is Enoch.  Enoch never died, God took him.

Q.   When was meat first mentioned in the Bible?
A.   When Noah took Ham into the ark.
 
Q. If Eve was Chinese, sin would have not happened.Why?
A. She would have ate the snake, not the apple.

Proverbs 17:22 A merry heart does good, like medicine
நீதிமொழிகள் 17:22 மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்

Tuesday, July 03, 2012

சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்

சர்வாயுதவர்க்கங்களாவன  Whole full armor of God
1.சத்தியம் என்னும் கச்சை - The Belt of Truth
2.நீதியென்னும் மார்க்கவசம் - The Breastplate of Righteousness
3.சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை - The Shoes of the Gospel of Peace
4.விசுவாசமென்னும் கேடகம் - The shield of faith
5.இரட்சணியமென்னும் தலைச்சீரா - The Helmet Of Salvation
6.தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் - The Sword of the Spirit,The Word of God.



எபேசியர்:6

11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,
16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

சர்வாயுதவர்க்கங்கள் அடங்கிய ஒரு பாடல்

கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும்
கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம்
உயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும்
உன்னதர் படையில் பணிபுரிவோம்

இறைமகன் இயேசு வாழ்க வாழ்க
அதிசயமானவர் வாழ்க வாழ்க
வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க
மரித்துயிர்த் தெழுந்தாரே

சத்திய கச்சையை அரையினில் கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரிப்போம்
ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே
விசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன்

ரட்சண்ய தலைசீராவை அணிந்து
வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்
சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்
இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் – இறைமகன்

வாழ்க வாழ்க வாழ்க (2)
வாழ்க நீர் வாழ்க உன் நாமம் வாழ்க
உன் புகழ் வாழ்க என்றென்றும் வாழ்க – இறைமகன்

எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி

கர்த்தருக்குள் மிகவும் பிரியமானவர்களே!
ஆண்டவருக்காக மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை கீழே விழத்தள்ள சாத்தான் நடாத்தும் மிகப்பெரிய போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும் காலத்துக்கும் எழும்பாதபடி அடிக்க அவன் வாய்ப்பு பார்த்துக்கொண்டிருக்கிறான். விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இச்செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். நக்கீரன் போன்ற பொது ஊடகங்களில் இவ்விடயம் வெகுவாக விவாதிக்கப்படுகிறபடியால் இனியும் நாம் இதுபற்றி பேசாமல் இருப்பது நல்லதுவல்லவே என எண்ணி இங்கே பகருகிறோம். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரித்தலே மெய்.சம்பந்தப்பட்ட நபர்கள் கூடிய சீக்கிரத்தில் சரியான விளக்கங்களை அளிப்பார்கள் என நம்புவோம்.

சீரழிக்கப்பட்ட இளம்பெண்கள்! அடுத்த நித்தி! - பதறவைக்கும் வாக்குமூலம்! - என நக்கீரன் பத்திரிகை இட்ட கட்டுரை.
முழுகட்டுரை இங்கே
பிரபல கிறிஸ்தவ போதகர் மீது பரபரப்பு செக்ஸ் புகார்!

தேவ ஊழியர்களுக்கு எதிரான எல்லா சாத்தானின் தந்திரங்களும் முறியடிக்கப்பட நாம் ஜெபிப்போம்.

I பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

மத்தேயு 6:13 எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்

இதில் சில சம்பவங்கள் தொடர்பாக கடந்த 2010 நவம்பர் மாத அற்புத ”இயேசுவின் தொனி” பத்திரிகையில் சகோ.வின்செண்ட் செல்வகுமார் அவர்கள் எழுதியுள்ள விளக்கம் இங்கே.








சமீபத்தில் வெளியான நக்கீரன் கட்டுரைக்கு பின் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் கரூரில் அளித்த விளக்கம். 
http://www.youtube.com/watch?v=ShxYjiEch9k


சகோ.வின்சென்ட் செல்வகுமார் குறித்து சகோ.மோகன் சி லாசரஸ்
http://www.youtube.com/watch?v=8HzoWQD4ETc
ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.