Showing posts with label Bible Study. Show all posts
Showing posts with label Bible Study. Show all posts

Saturday, July 20, 2013

நிச்சயமாக பதில் உண்டு


அன்னாள் அழுதாள் - சாமுவேல் பிறந்தான்.

ஆகார் அழுதாள் - தண்ணீர் துரவைக் கண்டாள்.

எசேக்கியா அழுதான் - ஆயுளில் 15 ஆண்டுகள் கூட கிடைத்தது.

நெகேமியா அழுதான் - எருசலேமின் அலங்கம் கட்டப்பட்டது.

எஸ்தர் அழுதாள் - யூதருக்கு அழிவிலிருந்து விடுதலை கிடைத்தது.

பாபிலோனிலிருந்த யூதர்கள் அழுதார்கள் - விடுதலை பெற்று ஒரு ஜாதியாய் நிலைநாட்டப் பட்டார்கள்.

மகதலேனா மரியாள் அழுதாள் - உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவதாக‌ தரிசித்தாள்.

நீ ஏதற்காக‌ அழுகிறாய் ??
நிச்சயமாக பதில் உண்டு


உன் நம்பிக்கை வீண்போகாது!

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18


தேவன் தெரிந்துகொண்ட...

யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரனாயிருந்தான்
பேதுருவுக்கு சட்டென‌ கோபம்வ‌ரும்
தாவீது பிறன் மனை நோக்கினான்
நோவா குடித்து வெறித்திருந்தான்
யோனா தேவ‌னை விட்டு விலகி ஓடினான்
ப‌வுல் கொலை செய்கிறவனாயிருந்தான்
மிரியாம் முறுமுறுத்தாள்
தோமா ஒரு ச‌ந்தேகப்பேர்வ‌ழி
சாராளுக்கு பொறுமை கிடையாது
மோசே திக்குவாயன்
ச‌கேயுவோ குள்ள‌ம்
ஆபிர‌காம் வ‌ய‌தான‌வனாயிருந்தான்

ஆனாலும் தேவ வார்த்தை சொல்வது என்ன தெரியுமா?

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்."
II கொரி:12:9

Saturday, February 23, 2013

கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

உங்க‌ளுக்குத் தெரியுமா?
தேவ‌ன் அன்பாக‌வே இருக்கிறார்.
ஆனால் சில‌ காரிய‌ங்க‌ள் அவ‌ருக்கு அருவருப்பானவைகள்.
1.மேட்டிமையான கண்.
2.பொய்நாவு.
3.குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
4.துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்.
5.தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்.
6.அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி.
7.சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல்.
நீதிமொழிக‌ள்:6:16-19


Monday, July 23, 2012

திருமண அழைப்பிதழ்



ஜெபதொனி ஜூலை 2012
JebaThoni July 2012

Tuesday, July 17, 2012

பாஸ்டர் M.S.வசந்தகுமாருடன் ஒரு நேர்முக‌ பேட்டி

  l
http://www.youtube.com/watch?v=TajA7a3Kvlo
Pastor. M.S. Vasanthakumar Interview
Founder and president of Tamil Bible Research Center
Credit goes to Tamil Christian Media and http://tamilbibleresearchcentre.com/
Telephone Number : 020 8374 4004
Mobile Number: 07814 252 077
Postal Address:
M.S Vasanthakumar
8 Broadlands Avenue,
Enfield,
London.
EN3 5AH
United Kingdom
E-Mail: msvtbrc@googlemail.com

Tuesday, July 03, 2012

சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்

சர்வாயுதவர்க்கங்களாவன  Whole full armor of God
1.சத்தியம் என்னும் கச்சை - The Belt of Truth
2.நீதியென்னும் மார்க்கவசம் - The Breastplate of Righteousness
3.சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை - The Shoes of the Gospel of Peace
4.விசுவாசமென்னும் கேடகம் - The shield of faith
5.இரட்சணியமென்னும் தலைச்சீரா - The Helmet Of Salvation
6.தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் - The Sword of the Spirit,The Word of God.



எபேசியர்:6

11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,
16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

சர்வாயுதவர்க்கங்கள் அடங்கிய ஒரு பாடல்

கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும்
கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம்
உயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும்
உன்னதர் படையில் பணிபுரிவோம்

இறைமகன் இயேசு வாழ்க வாழ்க
அதிசயமானவர் வாழ்க வாழ்க
வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க
மரித்துயிர்த் தெழுந்தாரே

சத்திய கச்சையை அரையினில் கட்டியே
நீதியின் மார்க்கவசம் தரிப்போம்
ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே
விசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன்

ரட்சண்ய தலைசீராவை அணிந்து
வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்
சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்
இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் – இறைமகன்

வாழ்க வாழ்க வாழ்க (2)
வாழ்க நீர் வாழ்க உன் நாமம் வாழ்க
உன் புகழ் வாழ்க என்றென்றும் வாழ்க – இறைமகன்

Sunday, May 06, 2012

ஆவியின் கனி

ஆவியின் கனி ஒன்பது இருப்பினும், ஆவியின் கனிகள் என்று பன்மையில் அழைக்கப்படாமல் ஆவியின் கனி என்று ஒருமையில் அழைக்கப்பட காரணமென்ன? விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கலாம். நன்றி.

Source
ஆவியின் கனி கோரஸ் பாடல்
ஆவியின் கனியோ ஒன்பதாம்
 அன்பு சந்தோஷம் சமாதானமாம்
நீடியபொறுமை தயவு
நற்குணமும் விசுவாசமாம்
சாந்தம் இச்சையடக்கமாம்
கலாத்தியர் 5-ல் உள்ளதாம்
22,23-ம் வசனங்களிலே உள்ளதாம்.

Fruit of the Spirit
Love
Joy
Peace
Patience
Kindness
Goodness
Faithfulness
Gentleness and
Self-control.
Galatians 5:22-23