Wednesday, February 27, 2008

சிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்

சிரிக்க அல்ல,சிந்திக்க சில மொழிகள் தமிழகத்திலிருந்து

"இயேசுவினிடம் கேட்டால்தான் கிடைக்கும். புரட்சித்தலைவியிடம் கேட்காமலே கிடைக்கும்"
-முன்னாள் தமிழக அமைச்சர் ஜனார்த்தனன்.

"ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நான் கூறமாட்டேன்.ஆத்மாவில் எனக்கு நம்பிக்கை கிடையாது"
-தமிழக முதல்வர் கருணாநிதி 28-11-1993 தினகரன்

"ஆண்டவன் இருப்பது உண்மையாக இருந்தால், எனக்கு நீண்ட ஆயுளை தரட்டும். எனக்காக அல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்காக, அதற்காக மற்றவர்களை போல் நான் கோவில் கோவிலாக சென்று பூஜை செய்து ஆயுளை நீட்டிக்க விரும்ப மாட்டேன். தியாகங்கள் மூலம், மக்கள் பணி செய்து வருகிறோம்."
-தர்மபுரியில் முதல்வர் கருணாநிதி 27/2/2008 தினமலர்

"தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்"
-"பாப்பா"க்கான அறிவுரையில் பாரதியார்

"பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்த கிருஷ்ணன் கடவுளா? உலக பாவங்களுக்காக பலியான கிறிஸ்து கடவுளா?"
-சென்னை மெரினா பீச்சில் அறிஞர் அண்ணா

"மெஜாரிட்டி தமிழர்கள் வாழும் இடம் வந்த மைனாரிட்டி ஆங்கிலேயர்கள் தான் தமிழ் கற்றிருக்க வேண்டும்.ஆனால் நடந்தது வேறு.இது ஓர் அதிசயம்"
-நாகர்கோவிலில் தமிழக அமைச்சர் துரைமுருகன்

"இந்தியாவின் தலைநகரம் மாஸ்கோ"
-தமிழ் துக்ளக் ஏடு ஆசிரியர் சோ

"அரபு நாடுகளுக்குச் சென்றால் நமது சமய புத்தகங்களைக் கூட எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது நாட்டில் நமது மதத்திற்குப் பாதுகாப்பில்லாதது கண்டுவருந்துகிறேன்.இந்த அவல நிலைக்கு மாற்றம் காண வேண்டும்"
-கோவை நா.மகாலிங்கம்

"LTTE தலைவர் பிரபாகரனை இலங்கை அரசால் பிடிக்க முடியாவிடில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் உதவியை மத்திய அரசு நாடலாம்"
-முன்னாள் அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி ஜூனியர் போஸ்டில் 13/3/1992

"புதுவை கிறிஸ்தவர்கள் மாநிலமாக மாறுகிறது. அதை தடுக்க கிளர்ச்சி நடத்துகிறோம்"
-RSS தலைவர் இராமகோபாலன் 13/3/1994 தினகரன்

"இந்து சமுதாயம் பலமுனை தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.நமது நாட்டில் இந்து எழுச்சி ஏற்ப்பட்டுள்ளது.நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும்.இதன் மூலம் இந்தியாவில் இந்து சாம்ராஜ்யம் உருவாகும்"
-தமிழக இந்து முண்ணணி அமைப்பாளர் ராம கோபாலன் 2/11/1995 தினமலர்

"பிரிட்டீஷ்காரர்கள் இந்திய சரித்திரத்தை கி.பி, கி.மு என பிரித்துள்ளார்கள். ஆனால் அது எவ்வளவு சரியோ தவறோ தெரியவில்லை.இந்தியாவில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை வைத்து சரித்திரம் மாற்றி எழுதுவது நல்லது"
-ஜெயேந்திர சுவாமிகள் சங்கராச்சாரியார் 20-11-1993 மாலைமலர் தேன்மலர்

"விலங்குகள் கோவிலுக்குள்ளே செல்லலாம்.மனிதர்கள் மட்டும் கூடாது.அதனால் மனிதர்களை மனிதர்களாக மதிக்கற மதத்துக்கு செல்கிறோம் என்கிறார்கள். அதில் என்ன தவறு? அது அவர்கள் விருப்பம்.யாருக்கு எந்த மதம் விருப்பமோ அதை அவர்கள் பின்பற்றலாம். அனைத்துக்கும் அனுமதி கொடுப்பதே மதசார்பற்ற தன்மை. மத சார்புள்ள இஸ்ரேலில் கூட ஜெருசலேம் மசூதியை இடிக்க விடாது ராணுவம் 3 முறை விரட்டியடித்தது"
-வை.கோ 9-1-1994 தினகரன்

"நீங்கள் இன்று என்னை கொன்று போட்டாலும் நான் மோட்சத்துக்கு தான் போவேன்"
-இந்து முண்ணணி அலுவலகம் குண்டு வைத்து தகர்கப்பட்டதில் கைதான இமாம் அலி(27)

சங்கீதம்:2:1,4
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

Psalm 2:1,4
Why do the nations conspire
and the peoples plot in vain?
The One enthroned in heaven laughs;
the Lord scoffs at them.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment