Tuesday, November 18, 2008

காலம் குறுகியது

நாம் ஒரு அற்புதமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனித குல வரலாற்றில் வேறெந்த காலத்திலும் இல்லாதவாறு இக்குறுகிய காலத்தில் பல்வேறு வேதாகம தீர்க்கதரிசன வசனங்கள் நம் கண்முன்னே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவின் வருகைக்குமுன்னால் உலகத்தின் நிலை எப்படி இருக்கும் என அவ்வசனங்கள் சொல்லியுள்ளனவோ அப்படியே உலகத்தில் காரியங்கள் நடந்துவருகின்றன.கடந்த நூறு வருடங்களில் உலகம் கடந்து வந்த பாதையை இக்குறுகிய வீடியோவில் நீங்கள் காணலாம்.
மனிதன் விமானத்தில் பறக்க தொடங்கினான்.இரு உலகப் போர்கள், பஞ்சங்கள், வறுமைகள், மனிதனிடையே போட்டி பொறாமைகள், புயல், சூறாவளி ,பல அந்திகிறிஸ்துகள், சீறி பாய்ந்த எரிமலைகள், அறிவு பெருத்து போகுதல், இஸ்ரேல் ராஜ்யத்தின் உதயம், கணிப்பொறி கண்டுபிடிப்பு, உலகின் பலபகுதிகளில் குழப்பங்கள் , கொலைகள், வெறிகள், விண்வெளி பயணங்கள், பல சர்வாதிகாரிகள், வெடிக்கும் பீரங்க்கிகள், தொடரும் குண்டு வெடிப்புகள் இப்படி 100 ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் பல. உங்களுக்கு தெரியுமா? 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட மனிதனின் முக்கிய போக்குவரத்து வாகனமாய் இருந்தது குதிரைகள் மட்டுமே. இப்போது வாகனங்களும் விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று மனிதன் விண்வெளிக்கும் சுற்றுலா போகிறான்.இவையெல்லாம் கடந்த 110 ஆண்டுகளுக்குள் நடந்து முடிந்தன.

தானியேல் 12:
4.அப்பொழுது (இறுதிகாலத்தில்) அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்

மத்தேயு 24:
6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.
7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment