Sunday, November 10, 2013

தமிழகம் வரும் இஸ்ரேலின் விவசாயப் புரட்சி

பாழாய்க்கிடந்த ஒரு தேசம் ஏதேன் தோட்டம் போலாகிக் கொண்டிருக்கும் கதை உங்களுக்குத் தெரியுமா? அத்தேசத்தின் செழிப்பின் ரகசியம் உலகத்திற்கே வியப்பளிக்கிறது. எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 35ம் வசனம் சொல்கிறது.”பாழாய்க்கிடந்த இஸ்ரேல் தேசம், ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப் பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.” ஒரு காலத்தில் வனாந்திரமாய் பராமரிப்பற்று ஆளரவமற்ற பாலைநிலமாய் கிடந்த இஸ்ரேல் நிலங்கள் இன்று வேதாகமம் முன்னுரைத்தது போலவே வேளாண்துறையில் முன்னணியிலுள்ள நாடாக மாறிவிட்டது. தமிழக மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநில விவசாயிகள் அவர்களிடமிருந்து இரகசியங்களை கற்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் ஒரே ஒரு நீர்த்தேக்கம் மட்டுமே உள்ளது. அந்த நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால், அங்குள்ள விவசாயிகள் தோட்ட பயிற்சி மற்றும் விவசாய பயிர்களை பயிரிடுவதில் பெரும் சாதனை படைத்து, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகள் உயர் தொழில்நுட்ப நவீன கருவிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதுதான் என்கிறார்கள். இருக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு நீரைக்கூட வீணடிக்காமல், பயிர்களுக்கு பயன்படுத்தி இப்புரட்சியை செய்துள்ளனராம். தமிழகத்திலும் இதுபோன்ற விவசாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இங்குள்ளோரின் விருப்பமும். ஆனால் அதற்கும் மேலான‌ ஒரு பிரதான இரகசியம் இருக்கிறது. அது தான் கடவுளின் ஆசீர்வாதம். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 30-ம் வசனம் இப்படியாக சொல்கிறது ”நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்” என்று. இதுதான் உண்மையான இரகசியம். நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் அல்லவா? (Iகொரி:3:7

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment