Tuesday, June 27, 2006

*பாவ மன்னிப்பு*

தீயணைக்கும் (இஞ்சின்) வண்டிவரும் மணியோசையைக் கேட்டு மகிழ்ச்சியுடன் தன் படுக்கையிலிருந்தது எழுந்தான் பென்னி! கால்களை இழந்து ஊன்றுகோலின் துணையுடன் நடந்துவந்த பென்னி,மகிழ்ச்சி உந்த,பக்கத்து ஜன்னலைத் திறந்து பார்வையை வீதியில் உலவ விட்டான்!

அவன் இருந்தது,அந்த வீட்டின் நான்காவது மாடி பகுதி!

ஜன்னலைத் திறந்தவன் திடுகிட்டான்.மூன்றாம் மாடி வரை தன் பசியைத் தீர்த்துவந்த தீப்பிழம்புகள்,நான்காம் மாடியையும் முற்றுகையிட வேகமாய் வந்து கொண்டிருந்தது.!
செய்வதறியாது திகைத்த பென்னி, கூக்குரலிட்டான்!புகைமண்டலம்,பின் புறச்சன்னல் வழியாக,அவன் அறைக்குள்ளும் நுழைந்தது.அவனால் கம்பு ஊன்றி கீழே இறங்கமுடியாத பரிதாப நிலை!

"உதவி செய்யுங்கள்" "காப்பாற்றுங்கள்" என்று அபயக்குரலிட்டான்.

கீழே,தீயணைக்கும் வண்டியிலிருந்து ஏணியொன்று,மேலுயர்த்தப்பட்டது.அதில் ஏறிசென்ற ஒருவன்,"தம்பி! உடனே கீழே குதித்துவிடு;கீழே சில வீரர்கள் உன்னை காப்பாற்ற தங்கள் கைகளில் அகன்ற வலையை விரித்து காத்து நிற்பதை பார்" என்றான்.

"ஐயோ,அவர்களால் என்னைப் பிடித்துக்கொள்ள முடியாது! வேறு வழியில் உதவுங்கள் என்று மேலும் கூக்குரலிட்டான் பென்னி.

அவனிருந்த அறையின் பின்புற சன்னல் தீக்கிரையானது!

"தம்பி!பயப்படாதே! வலையும் பெரிது,அதை பிடித்து நிற்கும் எம் வீரர்களின் ஊக்கமும் பெரிதே!ஆகவே,நம்பிக்கையுடன் கீழே குதி!என்று மீண்டும் ஏணியில் நிற்பவன் கூறினான்.

பென்னி பின்னால் பார்க்கிறான்! இன்னும் சிறிது நேரத்தில் அவன் தீயில் மடிவது உறுதி!ஆகவே அவன் தன் வலிமையெல்லாம் கூட்டி கீழே குதித்தான்!

இறுதியில் தீயணைக்கும் படையினரின் வலையில் அவன் விழுந்து காப்பாற்றப்பட்டான்!

நீங்களும் இன்னும் எவ்வளவு காலம் அபாயக் கட்டத்திலேயே தரித்திருக்கப் போகிறீர்கள்? படைத்த இறைவனுக்கு முன்பாக நாம் பாவம் செய்து மாமிசத்தில் பலவீனப்பட்டுள்ளோம்.நாம் பாவத் தீயிலிருந்து காப்பாற்றப்பட வேண்டாமா!?.....

உன்னால் உன்னைக் காப்பாற்றக் கூடுமா? நிச்சயமாக முடியாது! ஏனெனில் நீயும் பென்னியைப்போலவே காணப்படுகிறாய். ஆகவே உன்னை நீயே காப்பாற்ற முடியாது.இயேசு கிறிஸ்துவால் மட்டுமே உன்னைக் காப்பாற்ற முடியும்!

இயேசு கிறிஸ்து உனக்காக பாவநிவிர்த்திப் பலியானார்! அவர் முற்று முடிய உனக்காக தன்னையே அளித்து,உன் பாவக் கடனைத் தீர்த்தார்.

நீ செய்ய வேண்டியதென்ன? அவரை விசுவாசி.பென்னி செய்ததைப்போல்,எந்த வித துணையும் அற்ற நிலையில்,அவன் வலையில் குதித்து நிலையான வாழ்வினை மீண்டும் பெற்றது போல் நீயும் உன்னைக் காப்பாற்ற முயற்சி செய்.கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் உன்னைக் காப்பாற்ற முடியும் என நம்பி,அவரிடம் பாவ மன்னிப்பை வேண்டி பெற்றுக்கொள்.

அப்போஸ்தலர்:16:31
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment