Thursday, June 15, 2006

மோசஸ் மோசடி

கல்கரி சிவா சார்
"நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 3" என்ற தங்கள் பதிவுக்கு என் பின்னூட்டம் இது.

//மோசஸ்தான் முதன் முதலில் ஒரு தேவதூதர் வரப் போவதாக் அறிவித்தார். அந்த தூதர் வந்த மக்களின் பிரச்னைகளையும் துயரங்களையும் களையப் போவதாகச்சொன்னார்.இது ஒரு பெரிய அரசியல் மோசடி.//
இதில் என்ன மோசடி சார்...நல்ல செய்தி தானே.

//மோசஸ் மிக சாமர்த்தியமானவர்//
நீங்கள் சொல்வது போல் அவர் மிக சாமர்த்தியமானவராய் இருக்கவில்லை.பைபிளில் யாத்திராகமம் 4:10 சொல்கிறது அவர் வாக்குவல்லவன் அல்ல; திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்று.ஒரு வேளை கடவுள் அவரை மிக சாமர்த்தியமானவராக மாற்றியிருக்கலாம்.

//இவர்களின் புண்ணிய பூமியும் வரவில்லை இவர்களின் தேவதூதரும் வரவில்லை.//
இவர்கள் எதிர்பார்த்த தேவதூதரை பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.

//ஆனால் நம்பிக்கை மட்டும் கொழுந்துவிட்டு எரிகிறது.//
சரியாய் சொன்னீர்கள்.இன்றும் அந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு யூதரும்.

//அந்த நேரத்தில் மோசஸும் தன்னுடைய தோல்வியை உணர்ந்தார்.அவசர அவசரமாக இதுதான் நம்முடைய் இஸ்ரேல் என அந்த பாழாய் போன பாலைவனத்தை அறிவித்தார்.//
இதெல்லாம் ஓவர் கதை.இப்படியெல்லாம் வரலாறில் எங்குமே இல்லை சார்.Sorry for that.பட் நல்லாஎழுதுரீங்க.really.உங்கள் எழுத்து திறமை அபாரம்.

//உடனே மோசஸும் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கிறேன் எனக் கூறி அவர்களை அங்கே விட்டுவிட்டு கிளம்பி போய்விட்டார்.உண்மையில் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடி விட்டார்.//
நல்ல கதை சார்.தப்பித்து ஓடிய மோசஸை தான் இன்றைக்கும் யூதர்கள் கொண்டாடுகிறாக்களா?.கோழை அல்லது ஏமாற்றியவர் என தூசிக்க மாட்டார்களா?சிந்திக்க வேண்டுகிறேன்.

//அப்படி ஓடியவர் காஷ்மீரில் தொலைந்தவர்களை கண்டுபிடித்தார். அங்கேயே உயிரையும் விட்டார்//
ஆனால் சார்,பைபிள் இப்படி சொல்கிறது.
உபாகமம்:34
5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.
6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.
7. மோசே மரிக்கிறபோது நூற்றிருபதுவயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
8. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்;


//காஷ்மீரிகள் உண்மையில் யூதர்களே. பிறகுதான் அவர்கள் முகமதியர்களாக மாற்றபட்டார்கள். மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் மூக்கைப் பாருங்கள் அவர் யூத வழித் தோன்றல் என நிச்சய்மாகத் தெரியும்.)//
உண்மையிருக்கலாம்.ஆராய வேண்டும்.aBraham-Brahmin..Sara-SaraSWATHY...போன்ற ஆய்வுகள். :)

Any way good stuff.தொடரட்டும் தங்கள் தேடல்கள்.வாழ்த்துக்கள்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment