Friday, May 05, 2006

"கிறிஸ்துவோடிருப்பது எவ்வளவோ மேல்.........."

நான் எந்தப் பாதை வழி சென்றாலும் என் நேசர் எனக்கு முன்னதாக அப்பாதையில் சென்றிருக்கிறார்.அவர் அனுபவித்திராத வேதனையையோ அவர் பட்டிராத கஷ்டத்தையோ புதிதாக நான் ஒன்றும் அனுபவித்து விடப் போவதில்லை - எமி


பனிப்பாறைகள்
சமயத்துக்கு சமயம் மாறும்
மாய அன்பினில் மாய்ந்திடாதே(-அவை பனிப்பாறைகள்)
மனித அன்பினில் மயங்கிடாதே(-அவை பனிப்பாறைகள்)
மகிபன் யேசுவின் மாசற்ற அன்பை
மகிழ்வுடன் நீயும் பெற்றுக்கொள்வாய்
(19:8:93)

உலகம் முடியும் வரையும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா தேவனன்றோ
நம்பிடுவாய் துணை அவரே

இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.சங்கீதம்:48:14

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment