Thursday, August 06, 2015

வேறே பூமிகள் உண்டு, அங்கே புத்திசாலித்தனமான ஏலியன்களும் இருக்கலாம் என வாட்டிகன் முதல் இப்போது எல்லோருமே ஒத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் கூட பூமி போன்றதொரு புதிய கோள் கண்டுபிடிப்பு என செய்திகள் வெளியாகின.உயிரினங்கள் வாழ தகுதியுடன் பூமியை போன்று 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு எனவும் செய்திகள் வெளியாகின. இந்த கடைசிகாலத்தில் ஏலியன்கள் உண்டு என உலகத்தை நம்ப வைப்பதுவும் பிசாசின் ஒரு திட்டமே.அப்போது தான் கிறிஸ்துவின் பிள்ளைகள் திடீரென ஒருநாள் எடுத்துக் கொள்ளப்படும்போது அதை "வெளிக்கிரகவாசிகள் பூமியின் மீது திடீர் முற்றுகை. பல்லாயிரக் கணக்காணோரை காணோம்" என செய்திகளாக‌ வெளியிட்டு உலகை நம்பவைத்து ஏமாற்றமுடியும். அதற்காகவே பூமியை இப்போதே தயாராக்கிக் கொண்டிருக்கின்றான். இது போன்றதான புதிய பூமிகள், வேற்றுகிரக வாசிகள் செய்திகள் இனி அதிகமாகவே வெளிவரும். பூமியின் இறுதியுத்தமும் கூட பூலோக வாசிகளுக்கும் ஏலியன்களுக்கும் இடையேதான் இருக்கும் என வேதம் சொல்லுகிறது (வெளி:19:19). இதில் விசித்திரம் என்னவென்றால் பூலோகவாசிகள் என ஒன்றாக குழுமி The New World Order பேசும் நாம் தான் பூமிக்கு ஏலியன்கள். ஏலியன் என இந்த உலகத்தான் பேசும் நம் தேவன் தான் இப்பூமிக்கு ஒரிஜினல் சொந்தக்காரர். வேதம் சொல்லுகிறது பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது. Iகொரி:10:26


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment