Tuesday, August 04, 2015

கனியோடு விதைகளையும் கொடுத்தார் கடவுள். ஆனால் சுயநலமாய் மனிதன் இப்போதெல்லாம் கனிகளை மட்டும் கொடுத்து விட்டு விதைகளை தன்னிடமாய் வைத்துக்கொண்டான். வேதாகமம் சொல்லுகிறது "இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது" என்று.கனியோடு விதைகளையும் கொடுத்து அதன் மூலம் பூமியை கனிதரும் விருட்ச‌ங்களால் நிறைப்பது தான் கடவுளின் திட்டம்.தேவன் அது நல்லது என்று கண்டார். ஆனால் சுயநலமிக்க மனிதனோ கனியை மட்டும் பணத்துக்காக விற்க‌ கற்றுக்கொண்டான். அதன் விதையை தன்னிடமாய் ஒளித்து வைக்கவும் கற்றுக்கொண்டான். என்ன பரிதாபம்.(ஆதியாகமம் 1:12,29)


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment