Wednesday, April 27, 2011

பைபிளில் வரும் அரசன் டேரியஸ்

2500 ஆண்டுகளுக்கு முன் சைரஸ் என்ற மன்னர் பாரசிகத்தை ஆண்டு வந்தார். பாரசிகம் அன்று உலகின் தன்னிகரற்ற பேரரசு. அதனுடன் போட்டி போட எந்த அரசும் அன்று இருக்க வில்லை.கிழக்கே சிந்துநதியே அந்த பேரரசின் எல்லை.மேற்கே எகிப்தின் நைல் நதி அதன் எல்லை.வடக்கே கிழக்கு ஐரோப்பாவின் டான்யூப் நதி அதன் எல்லை. சைரஸ் மன்னர் ஆட்சிகாலத்தில் ஜெருசலம் அவர் வசம் இருந்தது.அது ஏசு பிறப்புக்கும், கிறிஸ்தவ மதத்துக்கும் முற்பட்ட காலம்.அன்று யூதர்கள் ஜெருசலத்தில் வசித்து வந்த சிறு கூட்டத்தினர். ஜெருசலத்துக்கு இன்றுள்ள முக்கியத்துவம் அன்று இல்லை. ஐரோப்பியர்கள் நாட்டார் தெய்வங்களை வணங்கி வந்தனர். கிரேக்கர்கள் ஜீயசையும், ஜூபிடரையும் பிற தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.பாரசிக மன்னர் நெருப்பை வணங்கும் சொராஷ்ட்ர மதத்தை சார்ந்தவர் (இன்றைய பார்சிகள் மதம்).

சைரசுக்கு பின் பாரசீகத்தை அவர் மகன் கேம்பிசெஸ் (பைபிளின் எஸ்றா கால ஆகாஸ்வேரு) கிமு 529 முதல் 522 வரை ஆண்டார். அவருக்கு பின் ஸ்மெர்திஸ் எனும் அரசன் பத்து மாதங்கள் பாரசீகத்தை ஆட்சி புரிந்தார்.இவருக்கு பின்னர் டேரியஸ் கிமு 521 முதல் 486 வரை ஆட்சிபுரிந்தார். ஸ்மெர்திஸ் ராஜாவாயிருந்த காலத்தில் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் கட்ட யூதர்களுக்கு தடைவிதித்திருந்தான்.இது பற்றிய குறிப்பு எஸ்றா :4:21-ல் “இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு பிறக்கும்வரையும் அந்த மனிதர் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள்.”என வருகிறது.இந்த தடை அவனுக்கு பின் வந்த டேரியஸ் மன்னர் ஆட்சி காலத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டது. எஸ்றா:4:24. "அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு(டேரியஸ்) ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது" ஜெருசலத்தை பிடித்த டேரியஸிடம் யூதர்கள் "எங்களுக்கு ஒரு கோயில் கட்ட அனுமதி கொடுங்கள்" என கேட்டார்கள்."சரி கட்டிக்க" என பெருந்தன்மையுடன் அனுமதி கொடுத்தார் டேரியஸ்.யூதர்களுக்கு மத சுதந்திரமும் கொடுத்தார். அன்றைய நாட்களில் மத சுதந்திரம் எல்லாம் ரொம்ப ரேர்.இதனால் அகமகிழ்ந்த யூதர்கள் டேரியசை கொண்டாடி பைபிளில் பழைய ஏற்பாடில் (புதிய ஏற்பாடு இன்னும் பிறக்க 800 வருடம் இருந்தது) எல்லாம் அவரை புகழ்ந்து வசனங்களை எழுதிவைத்தனர்)

பதினோராம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் சைரஸ் பற்றிய குறிப்பு


இந்த டேரியஸ் மகாராஜாவின் பெயருடன் கூடிய வசனங்கள் குறிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வருகிறது. இது வேதாகமம் ஒரு சரித்திரபுத்தகம் என மீண்டும் நிரூபிக்கிறது.

எஸ்றா:6:15 ராஜாவாகிய தரியு (டேரியஸ்) அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.

Ezra: 6:15 And this house was finished on the third day of the month Adar, which was in the sixth year of the reign of Darius the king.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment