Thursday, April 21, 2011

ஜாமக்காரன் ஏப்ரல் 2011 பதிப்பு

(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15


முன்னுரை

“ஒவ்வொரு முக்கியமான கட்டங்களில் அந்தந்த சபை விவரங்களை என் வாசகர்கள் அறியவேண்டி விளக்குகிறேன்.”

“எனக்கு CSI மட்டுமல்லாமல், எல்லா சபைகளிலும் ஆயிரக்கணக்கில் வாசகர்கள் உண்டு. அவ்வப்போது ஒவ்வொரு சபைகளின் பிரச்சனைகளைக் குறித்தும் எழுதுகிறேன், விவரங்களை அறிவிக்கிறேன்.”

”ஆகவேதான் பவுல் கூறுகிறதைபோல் எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்கிறது. 2கொரி 11:28 என்கிறார். அன்றாட சுமையாய்யிருக்கிறது. 2கொரி 11:28 (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு) ஆகையால் அருமையானவர்களே! ஆண்டவரின் வருகையும், நம் வயதும் ஏற ஏற மரணமும் நம்மை நோக்கி நெருங்கிவந்துக்கொண்டிருக்கிறது. ஆகவே நாம் எல்லாவற்றையும் சந்திக்க தைரியமுடையவர்களாய் நம்மை எல்லா நிமிடமும் ஆயத்தப்படுத்திக்கொள்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

20,00,00,000 கோடிகள் இந்திய ஆட்சியில் ஊழல்
”பிரதமர் நல்லவர்தான், ஆனால் நடவடிக்கை எடுக்கும் தைரியமில்லாதவராக, ஆளுமைதிறமை இழந்தவராகிப்போனார். நடவடிக்கை எடுக்கமுடியாதவராக, கைகள் கட்டப்பட்டவராக ஆகிப்போனபின் இவருக்கு பதவி எதற்கு? உள்ள நல்ல பெயரையும் காப்பாற்றிக்கொள்ள தன் பதவியை ராஜினாமா செய்துவிடுவதுதான் நாட்டுப்பற்று உள்ளவருக்கு நல்ல அடையாளம் ஆகும்”

கிறிஸ்தவ CSI சபைகளில் மெகாஊழல் கோடிக்கணக்கில்...
(CSI சபை அல்லாதவர்கள் இந்த கட்டுரையை வாசிக்கவேண்டாம்)

யார் அந்த அந்திக்கிறிஸ்து?
"இயேசு தாம் பிறப்பதற்கு யூத குலத்தைத் தேர்ந்தெடுத்ததைப்போல, அந்திக்கிறிஸ்துவும் யூத குலத்தில்தான் பிறப்பானா?"

“யூதர்களுக்கு தாங்கள் மாத்திரமே கடவுளின் நேரடி வாரிசுகள் என்ற எண்ணமும் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு. இயேசுவின் மூலம் நாங்களும் கடவுளின் பிள்ளைகள்தான் என்று விவாதிப்பீர்களேயானால் வேறு வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். அதை எவ்வளவு விளக்கினாலும் நம்பமாட்டார்கள்.”

“யூதர்களுக்கு அதிபதியாக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிபதியாக இருக்கவேண்டுமானால் அது ஒரு யூதனாகத்தான் இருக்கவேண்டும். இயேசுவை இன்றளவும் யூதர்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம். இயேசு முழுமையான யூதரல்ல என்று அவர்கள் நினைத்ததேயாகும்.”

“வெளிப்படப்போகும் அந்திக்கிறிஸ்து கிறிஸ்துவின் போலியான மாதிரி என்பதால் அவன் கிறிஸ்துவைப்போலவே தன்னையும் யூதகுலத்திலிருந்தே வெளிப்படப்பண்ணவேண்டும். வேறொரு குலத்தில் பிறந்த ஒருவரையும் யூதர்கள் கிறிஸ்து என்றோ, தங்கள் மேசியா என்றோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ”

கேள்வி - பதில்
“பூமியதிர்ச்சி உண்டாகும் பூமியின் (பெல்டில்) அமைப்பில் ஜப்பான் அமைந்தால் எப்போதும் அந்த நாட்டில் பூமியதிர்ச்சியும், எரிமலை வெடிப்பதும், சுனாமி அலை வருவதும் அவர்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு ஒரு தீர்க்கதரிசனம் தேவையில்லையே. செய்திதாள்களை பார்த்தாலே போதும்.”

“இவர்கள் யாவரும் பத்திரிக்கை செய்தி வாசிப்பவர்கள் என்பதையும், இவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல என்பதையும் இனியாவது உணருங்கள்.”

”உலகத்தின் முடிவும் கிறிஸ்துவின் வரவும் மிகவும் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது நூற்றுக்குநூறு உண்மைதான். ஆனால் மாதத்தையோ, வருடங்களையோ யாருமே குறிப்பிடமுடியாது. குறிப்பிடக்கூடாது.”

எனக்கு சம்பந்தமில்லை
”ஜாமக்காரனிலிருந்து யார், எதை போட்டோகாப்பி எடுத்து எத்தனை பேர்களுக்கு அனுப்பினாலும் எனக்கு பிரச்சனையில்லை. மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அது ஆண்டவருக்கும் மகிமை.”

விசேஷ ஜெபம் தேவை
”3 நாட்கள் சாப்பாடு இல்லை, பால் இல்லை, குடிநீர் இல்லை, ஆனால் ஜப்பானில் ஒரு இடத்திலும் கடைகள் சூறையாடப்பட்டதாகவோ, கடைகள் உடைக்கப்பட்டு பொருட்களை கொள்ளையடித்ததாகவோ ஒரு நிகழ்ச்சியும் நாம் கேள்விப்படவில்லை.”

”உண்மையான தெய்வத்தை அறியாத அந்த மக்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு மிகவும் பாராட்டதக்கது ஆகும்.”

“அமெரிக்கா குண்டுவீச்சினால் உண்டான பாதிப்பிலிருந்து உடனே எழுந்து உலகத்தின் பொருளாதாரத்தில் முன்னிலை வகித்த அந்த நாடு இம்முறை ஏற்பட்ட பேரிழப்பில் மக்கள் சோர்ந்துவிடாதபடி இருக்க நம் ஜெபம் அவர்களுக்கு தேவை. ஜப்பான் மக்களுக்காக ஜெபிப்போம்.”

மேலும் படிக்க http://jamakaran.com

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment