Wednesday, October 24, 2007

திருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்


Thiru Karathaal Thaangi Ennai tamil song

யேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்


Yesu Entra Thiru Naamathirku

மகிழ்வோம் மகிழ்வோம் பாடல்


mahilvom makilvoom tamil song

சந்தோசம் பொங்குதே பாடல்


santhosam pongkuthey

நன்றியால் துதிபாடு பாடல்


Nantriyal thuthi paadu

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்


ethai ninaithum nee kalangathey mahane berhmens song

என் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song


en kirubai unakku poothuம் father berhmens

போஷிப்பவர் நீரே Rev Paul Thangaiah Video Song


pooshippavar neerey Rev.paul thangaiah song

Monday, October 22, 2007

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ருசித்துப் பார்...
ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் - குணப்பட்டு கிறிஸ்தவனானவன் - மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.

பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.

"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.

நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

1பேதுரு 2:17
தேவனுக்குப் பயந்திருங்கள்

Psalm 34:8
Taste and see that the LORD is good;

1 Peter 2:17
fear God

Tuesday, October 09, 2007

கடவுளைக் காட்டு...

கடவுளைக் காட்டு...
சூரியனின் சூட்சமம்

"கடவுள் நம்மைப் பார்க்கிறவர் என்று சொல்லுகிறீரே,அந்த கடவுளை எனக்கு காட்டும்" என்றார் திரேஜன் சக்கரவர்த்தி யூதரபியிடம்.

"கடவுள் ஆவியாய் இருக்கிறாரே,அவரைக் கண்ணால் பார்க்க முடியாதே" என்றார் யூதரபி."நாம் பார்க்கமுடியாத கடவுள் நம்மை எப்படிப் பார்ப்பார்,இது பித்தலாட்டம்;மேலும் நீர் சொல்வதை நான் நம்பமுடியாது;கடவுளை இப்பொழுது எனக்கு காட்டத்தான் வேண்டும்" என்று வற்புறுத்தி கட்டாயப்படுத்தினார் சக்கரவர்த்தி.

மத்தியானம் 12 மணிக்கு சக்கரவர்த்தியை அழைத்துக்கொண்டு வெளியே போய் "இப்பொழுது சூரியனைப்பாரும்" என்றார் யூதரபி.

"கண் கூசுகிறதே,சூரியனை என்னால் எப்படிப் பார்க்கமுடியும்?" என்றார் சக்கரவர்த்தி.

"கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவைகளில் ஒன்றாகிய சூரியனையே உம்மால் பார்க்க முடியவில்லையே,சிருஷ்டிகராகிய கடவுளை எப்படிப் பார்க்கமுடியும்" எனச் சொல்லிச் சென்றார் யூதரபி.

சக்கரவர்த்திக்கு பேச நாவெழவில்லை.

சங்கீதம் 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

வெளி 4:11
கர்த்தாவே, தேவரீர்,...நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்,

Psalm 14: 1
The fool hath said in his heart, There is no God.

Revelation 4:11
Thou art worthy, O Lord,...for thou hast created all things,

Monday, October 08, 2007

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை பாடல் வரிகள்

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)

உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா

கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும்

என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும்

-பாஸ்டர்.வெஸ்லி (அரியலூர்)

Friday, October 05, 2007

கிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்

தமிழ் மகா கவி சி.சுப்பிரமணிய பாரதியார் கிறிஸ்துவை பற்றி இவ்வாறு பாடுகிறார்.Subramaniya Bharathiyar(1882-1921)

சி.சுப்பிரமணிய பாரதியார் பாடிய சுதேச கீதங்கள்.
(2-ம் பாகம் 153-ம் பக்கம்)

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தம் காப்பார்,
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்.

அன்பு காண் மரியாள் மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்,
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலேனா
ஆஹா!சாலப் பெருங்களி யிஃதே.

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்,
வண்மைப் பேருயிர்- யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியாள் மக்தலேனா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.

Translation:
The Lord descended and died on the Cross;
Rose up on the third day.
Mary Magdalene witnessed in person.
People of all nations!
Listen to the implication thereof.
The Lord enters our selves
To protect us for ever from the doom,
If only we kill our ego.

Mary Magdalene is but love;
Jesus Christ is but the soul.
When first the evil is dispensed with,
Resurrection occurs on day three.
Looking at the resurrected,
On the face bright as gold,
Mary Magdalene praised the Lord.
Aha! Great indeed is the delight!

Crucify the senses on the cross of Truth
With nails of tapas.
Thence revealed is the heavenly form
Of Jesus Christ thereon.
Mary Magdalene is but womanhood.
Jesus Christ is but virtue preserved.
Such is the subtlety of the episode
As can be understood in a moment.


மாற்கு 16:6
அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.

Mark 16:6
And he saith unto them, Be not affrighted: Ye seek Jesus of Nazareth, which was crucified: he is risen; he is not here: behold the place where they laid him.

Thursday, October 04, 2007

சுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது

பிரபல தமிழ் கவிஞர் சுத்தானந்த பாரதி அவர்கள் (Shuddhanadha Bharati 1897-1990) கிறிஸ்துவைப்பற்றி இவ்வாறு பாடினார்.
Tamil poet Shuddhanadha Bharati wrote about Jesus Christ as follows.

மரணத்தை வென்றவனே! மன்னவனே அன்புருவே!
தரணி உய்யப் பிறந்தவனே! தாவீதரசன் குலக் கொளுந்தே
கருணையுடன் அவதரித்தாய்! காத்திடவே மெய்யறத்தை
அரண் எமக்குன் திருவருளே அறிவெல்லாம் அமர்ந்தவனே!

நலத்தினைப் பழகிக் காட்டி நன்னெறித் தவத்தில் ஓங்கி
நலத்தினை மாந்தர் உய்ய நவின்றனை அன்பினாலே,
நலத்தினை அறியா மாக்கள் நவிலருங் கொடுமை செய்ய.
நலத்தினை அறியக் காட்ட நல்கினை பலியாய் உன்னை.

உன் பெயராலே இந்த உலகினில் உயிர்ப்போம்!நாங்கள்
உன் பெயராலே உண்போம்,உன் அருள் சிறக்க வாழ்வோம்
உன் பெயராலே எங்கும் உத்தமத் தொண்டு செய்வோம்.
உன் பணித் திறத்திற்கெங்கள் உழைப்பெலாம் ஈந்து வாழ்வோம்.


II தீமோத்தேயு 1:10
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்

2 Timothy 1:10
But is now made manifest by the appearing of our Saviour Jesus Christ, who hath abolished death, and hath brought life and immortality to light through the gospel:

Wednesday, October 03, 2007

666 SixSixSix Mark வலதுகை முத்திரை


சீக்கிரத்தில் மனிதனின் நடமாட்டத்தை கண்காணிக்க அவன் வலது கையில் ஒரு சிலிகன் சிப்பை (Verichip அல்லது xmark) பொருத்த போகின்றார்கள்.இந்த சிப் இரு அரிசி அளவே இருக்கும். செருகப்பட்ட பின் அது செருகப்பட்டது சுத்தமாய் எவருக்கும் தெரியாது. அந்த சிப்பிலுள்ள 16 டிஜிட் எண்வழி அவன் கணிணியால் கண்காணிக்கப்படுவான் அடையாளம் காணப்படுவான். இதை radio-frequency identification (RFID) என்கின்றார்கள்.அப்புறமென்ன? மொத்த ஜாதகத்தையும் அது காட்டிவிடும்.

அமெரிக்க நிறுவனங்களான Wal-Mart, Procter & Gamble, மற்றும் அரசு தபால் நிறுவனமான United States Postal Service போன்றவை இவற்றை தங்கள் பணியார்களிடையே அமுல்படுத்த போவதாக பேசிக்கொள்கின்றார்கள்.

இச்சிப்களை தயாரிக்கும் Verichip எனும் நிறுவனம் சமீபத்தில் இந்த நுட்பத்தின் பெயரை xmark என மாற்றியது.பொதுவாக x எனும் எழுத்து கிறிஸ்துவை குறிக்கும் சொல்.உதாரணமாய் Christmas-ஐ xmas என்பர்.இங்கே அது xmark அதாவது கிறிஸ்துவின் முத்திரை அதாவது அந்திகிறிஸ்துவின் முத்திரை என வருவதாக பலர் பயப்படுகிறார்கள்.

அதன் வெப்சைட் http://www.xmark.com/ இப்படியாக கூறுகிறது

Welcome to Xmark, the new corporate identity for our healthcare security products. Our new name emphasizes our focus on healthcare security. You may have known us under the eXI or VeriChip brand, but we are now bringing all our products under the Xmark name

இந்த மாதிரி சிப் வைக்கமாட்டோம் என குரலெழுப்பி ஒரு சாரார் கிளம்பியிருக்கிறார்கள்.
http://www.wethepeoplewillnotbechipped.com

காலம் சமீபமாயிருக்கிறது.


வெளி:13:16,17,18
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.


Revelation:13:16-18
And he causeth all, both small and great, rich and poor, free and bond, to receive a mark in their right hand, or in their foreheads: And that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name. Here is wisdom. Let him that hath understanding reckon the number of the beast: for it is the number of a man; and his number is Six hundred and sixty six.

Monday, October 01, 2007

பெரிய கடவுளா,சின்னக் கடவுளா?

கேள்வியும் பதிலும்...
பெரிய கடவுளா,சின்னக் கடவுளா?

கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு சாதாரண சமுசாரியை இடைமறித்து - அயர்லாந்து ராஜ தந்திரி காலின்ஸ் என்பவர் கீழ்க்கண்டவாறு உரையாடினார்.

"எங்கே போகிறாய்?"

"கடவுளைத் தொழுதுகொள்ள"

"அந்தக் கடவுள் பெரிய கடவுளா,சின்னக் கடவுளா?"

"வானங்களும், வானாதி வானங்களும் கொள்ளாத அவ்வளவு பெரிய கடவுளாகவும்,என் இருதயத்தில் தங்கும்படியான அவ்வளவு சின்னக் கடவுளாகவும் இருக்கிறார்" என்றான் சமுசாரி.

"கடவுளைப் பற்றி எத்தனையோ புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் இந்த சாதாரண விவசாயி கொடுத்த உத்தரவு தான் என்னை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது" என்றார் காலின்ஸ்

சங்கீதம்:111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

வெளி 22:13
நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

Psalm 111:10
The fear of the LORD is the beginning of wisdom

Revelation 22:13
I am Alpha and Omega, the beginning and the end, the first and the last.