Wednesday, June 03, 2015

உலகம் ப‌ல டைம் சோன்களை கொண்டது எனவும் பூமியின் ஒரு பகுதி பகலாக இருக்கும் போது மறுபகுதி இரவாக இருக்கும் என்பது போன்ற தகவல்களும் நாம் அறிந்ததே. இதையெல்லாம் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக‌ சமீபகாலத்தில் தான் நாம் அறிவோம். அதற்கேற்ப உலகெங்கும் டைம் சோன்களை பிரித்துள்ளார்கள். ஆனால் வேதாகம காலத்திலேயே கிறிஸ்துவானவர் இதனை சூசகமாக குறிப்பிட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா? கிறிஸ்துவானவர் வெளிப்படும் நொடியில் ஓர் உலகம் தூங்கிக்கொண்டு இருக்கும் எனவும் இன்னோர் உலகம் வேலைசெய்து கொண்டு இருக்கும் எனவும் இன்னோர் உலகத்தில் அங்கே சாயுங்காலமாக இருக்கும் எனவும் நாம் காணலாம். வேதம் சொல்லுகிறது... " அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்" - இது இரவு நேரம். "வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்" - இது பகல் நேரம் "இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்" - இது சாயுங்கால நேரம். ஒரே நொடி ஆனால் உலகெங்கும் வெவ்வேறு தருணங்கள். வேதாகம் எத்தனை அற்புதமான புத்தகம்!!


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment