Tuesday, June 30, 2015

வடக்கே ஆக்ராவை தலைநகராகக் கொண்டு பாபர் ஹூமாயூன் அக்பர் போன்றோர் ஆண்டுகொண்டிருக்க தெற்கே மதுரையை தலைநகராகக்கொண்டு நாயக்கர்களும் சில தென்காசிப் பாண்டியர்களும் ஆண்டுகொண்டிருந்த அந்த காலகட்டத்தில் தான் பிரிட்டனில் முதல் ஆங்கில வேதாகமம் வெளியானது. சபையின் இருண்ட காலங்கள் அது. அந்த கால‌ சர்ச் வேண்டுமென்றே மக்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த‌ பல்வேறு வேதாகம ரகசியங்கள் அப்போது வெளி உலகுக்கு தெரியவந்தன. அப்படியாக பிறகு நாமெல்லாரும் படித்து புரியும் படியாக நம் மொழிகளிலேயே வேதாகம‌ங்கள் வெளியாகத் தொடங்கின. அந்த சர்சின் ஆதிக்கமும் அத்தோடு கொஞ்சம் கொஞ்சமாக விலகத்தொடங்கியது. இருளிலிருந்த ஜனங்கள் மிகப் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். நாமெல்லாருக்கும் வேதாகமம் ஒரு விலையுயர்ந்த‌ பொக்கிஷம்.அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். சங்கீதம் 119:72


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment