Wednesday, June 10, 2015

நியூயார்க் ந‌கரத்து ஒன்பது மில்லியன் ஜனங்க‌ளுக்கும் குடிநீர் கொடுப்ப‌து இந்த கென்சிகோ அணையேயாகும். இது நியூயார் நகருக்கு வடக்கே 15 மைல்கள் தொலைவில் உள்ளது. இந்த அணையின் உச்சியில் இருபுறமும் உள்ள‌ கல்மண்டபங்களில் கீழ்க்கண்ட வேதாகம‌ வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. "அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்" சங்கீதம் 147:8,16,18 ஆமாங்க இது அந்த‌ காலத்து அமெரிக்காங்க.. தேவனுக்கு பயந்திருந்த அமெரிக்காங்க... அதனாலேயே அபரிதமாக‌ ஆசீர்வதிக்கப்பட்டிருந்த அமெரிக்காங்க.... வேதம் சொல்லுகிறது "கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை" சங்கீதம் 34:9


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment