Monday, June 22, 2015

வேதாகம காலத்தில் கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று காடைகளை சமுத்திரத்திலிருந்து கொண்டுவந்து நிலத்தில் கொட்டி, வனாந்திரத்திலிருந்த இஸ்ரேலியர்களின் பசியை போக்கியது என படிக்கிறோம். அதைப்போலவே அந்த சம்பவத்தை நிரூபிக்கும் வண்ணமாக சுழல்காற்று ஒன்று சமுத்திரத்திலிருந்த‌ மீன்களை அள்ளிக் கொண்டுவந்து நிலத்தில் மழையாக கொட்டின நம்மூர் செய்தியை பாருங்கள். வேதாகமம் எத்தனை சத்தியம். "அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்" எண்ணாகமம் 11:31,32


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment