Wednesday, October 30, 2013

வேதாகம தீர்க்கதரிசனங்கள் நிறைவடைகின்ற‌ காலத்தில் நாம் இருக்கிறோம்


"வேதாகம தீர்க்கதரிசனங்கள் நிறைவடைகின்ற‌ காலத்தில் நாம் இருக்கிறோம்" என ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தைரியமாக உலக தலைவர்களின் மத்தியில் தெரிவித்தார். மேலும் அவர் வேதாகமத்தின் ஆமோஸ் 9:14,15 வசனங்களை மேற்கோள்காட்டி "அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லை" என இஸ்ரேல் தேசத்தின் உதயத்தை குறித்து வேதாகமம் முன்கூட்டியே எடுத்துக் கூறியிருப்ப‌தை சுட்டி காட்டினார். பைபிள் வசனப்படி "இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தாய்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் இனி பிடுங்கப்படுவதில்லை" என ஆணிப் பூர்வமாக‌ தெரிவித்தார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக‌.

http://www.timesofisrael.com/full-text-netanyahus-2013-speech-to-the-un-general-assembly/

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment