Thursday, October 24, 2013

தேவன் தந்த இந்த அழகிய பூமி



உங்களுக்கு ஒன்று தெரியுமோ?

நிலவில் ஒரு பகல் பொழுது 
327 மணிநேரங்கள் நீட்டிக்குமாம்.
அடுத்து தூங்கப்போனாலும் 
327 மணிநேரங்கள் தொடர்ச்சியாக‌ தூங்க வேண்டுமாம்.
என்னவாவது.

ஆனால்
புவியில் இறைவன் அருமையாக தந்திருக்கின்றான்.
8 மணி நேரம் தூங்க
8 மணிநேரம் உழைக்க
8 மணிநேரம் களிக்க என 
24 மணிநேரங்கள்.
இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே 
இறைவனின் கைவண்ணமும் அவன் மாட்சியும்.

மனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை 
அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என 
அக்கரை அக்கரையாக 
பார்த்து பார்த்து படைக்கப்பட்டது தான் இப்பூமி.
அது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது. 

அதனாலேயே வேதம் சொல்லுகிறது 
வானங்கள் கர்த்தருடையவைகள்; 
பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார் என்று.
சங்கீதம்:115:16

நன்றி தகப்பனே! 
நீர் தந்த இந்த அழகிய பூமிக்காக‌!!

1 comment:

  1. இந்தியர்கள் 24 மணியை இப்படி பிரித்து விட்டார்கள். (தினமும் தாமதமாக சென்று) உழைக்க 7 மணி ; உறங்க 8 மணி; டி.வி. பார்க்க 4 மணி; செல்போனில் அரட்டை அடிக்க 2 மணி : உத்தியோகத்திற்கு போக வர : 2 மணி; வீட்டில் மற்றவர்களோடு சண்டை போட 1 மணி, மொத்தம் 24 மணி நேரம் சரியாகப் போய் விட்டது. ஆகவே கர்த்தரைத் தேட, ஜெபிக்க நேரம் : 0. இனியாவது பெற்றுக்கொண்ட இரட்சிப்பை பாதுகாத்து நித்திய ஜீவனை அடைய தேவனைத் தேடுவோம்.

    ReplyDelete