இன்றைக்கும் யூத சமுதாயம் பூமியில் பிழைத்திருப்பது வரலாற்று அறிஞர்கள் பலருக்கும் ஆச்சரியமான ஒரு விசயம்.பல்வேறு போராட்டங்கள் கலகங்கள் எதிர்ப்புகள் சிறைபிடிப்புகள் சிதறடித்தல்கள் படுகொலைகள் மத்தியிலும் இன்னும் அந்த சமுதாயம் தனி கலாச்சாரம் பண்பாடு மதம் மொழியென வாழ்ந்து கொண்டிருப்பது வியக்க தகு காரியம்.ஆனால் அவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இரகசியம் பலருக்கும் தெரியாது. 1986ம் வருடத்திய சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் எலியேசர் வீசல் (Eliezer Wiesel) .இவர் ஒரு யூதர். நாசிக்களின் யூத படுகொலையிலிருந்து (Holocaust) தப்பியரும் பிரபல விரியுரையாளரும் ஆவார். ஒரு முறை திபத்திய மத தலைவரான தலாய்லாமா வீசலை சந்திக்க ஆர்வம் தெரிவித்தார். வியந்து போன வீசல் காரணம் அறிய முற்பட்டபோது, தலாய் லாமா சொன்ன பதில் இது தான்."உங்கள் இனத்தார் படாத பாடுகள் இல்லை இன்னல்கள் இல்லை.2000 ஆண்டுகளுக்கு முன் சிறைபிடிக்கபட்டு போனார்கள். ஆனாலும் இன்றைக்கு பிழைத்திருக்கிறார்கள். நாங்கள் எங்கள் தேசத்தை விட்டு வெளியே வந்தோம். ஆனால் இன்றும் அகதிகளாகவே இருக்கிறோம்.கற்றுத்தாருங்கள் நீங்கள் எப்படி பிழைத்தீர்களென". (Spector,S.A;2011)
யூத குலம் இன்னும் வாழ்வதின் இரகசியம் இது தான். அது தலாய் லாமாவுக்கு கூட தெரியாத இரகசியம்.
"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே." யாத் 20:2.
"நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்." எசேக்கியேல் 36:24
"அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." சகரியா 8 :8
இந்த ஜீவனுள்ள தேவனை நீயும் அண்டிக் கொள்வாயா?
Reference: Romanticism/Judaica: A Convergence of Cultures.By Sheila A. Spector (2011) Pg 13
Tuesday, December 11, 2012
தலாய் லாமாவுக்கு கூட தெரியாத இரகசியம்.
Labels:
Bible Prophecy,
End Time News,
History,
Israel,
Jerusalem,
Jews,
Quotes
Tuesday, December 04, 2012
2012-ல் உலகம் அழியுமா?
Labels:
Bible,
Bible Prophecy,
End Time News,
Revelation,
Second Coming,
USA
Sunday, November 11, 2012
என் ஜனங்கள் என்னை விட்டுவிட்டார்கள்
அமெரிக்காவில் அதிபர் தேர்தலும் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தங்களுக்கு யார் வேண்டும் என மக்களே தீர்ப்பளித்து விட்டார்கள். மேலும் மெய்னே,மெரிலேண்ட், வாசி்ங்டன் மற்றும் மின்னசோட்டா மாகாணங்கள் கூட முழு மனதாக ஒருபால் திருமணத்துக்கு (Same sex marriage) ஏக ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். அருமையான முன்னேற்றம். மன்னன் எவ்வழியோ அப்படியே மக்கள் வழியும். நாட்டு அதிபரே அதற்கு வெளிப்படையாக ஆதரவை தெரிவித்து விட இனியும் யோசிக்க என்ன இருக்கிறது. எங்கேயோ போய்கொண்டிருக்கிறது தேசங்கள். தான் பேசப் போன பல்கலைகழகத்தில் இருந்த கிறிஸ்தவ அடையாளங்களையெல்லாம் டிவியில் தெரியாதபடி திரை போட்டு மறைக்க சொன்னவர் தானே அவர். இயேசு கிறிஸ்துவை குறிக்கும் I.H.S.அதாவது இலத்தீன் மொழியில் Iesus Hominum Salvator பொருள் இயேசு, மனிதரின் இரட்சகர் என்ற அடையாளத்தையும் சிலுவையும் வேண்டுமென்றே மறைத்தார்களே. மற்றதெல்லாம் இனிக்க கிறிஸ்து மட்டும் ஏனோ பயங்கர கசப்பு. அதிபருக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பகவத்கீதையை வைத்து பதவிப்பிரமாணம் எடுக்க இருக்கிறார் ஹவாயிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பெண் துளசி கப்பர்ட். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேச தலைவர்கள் பொறுப்பாய் செயல்பட்டு தங்கள் பணிகளை இறை பயத்தோடு செய்ய நம் ஜெபங்களில் இவர்களை கருத்தாய் நினைத்துக்கொள்ளுங்கள்.
எரேமியா:2:13. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பகவத்கீதையை வைத்து பதவிப்பிரமாணம் எடுக்க இருக்கிறார் ஹவாயிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பெண் துளசி கப்பர்ட். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேச தலைவர்கள் பொறுப்பாய் செயல்பட்டு தங்கள் பணிகளை இறை பயத்தோடு செய்ய நம் ஜெபங்களில் இவர்களை கருத்தாய் நினைத்துக்கொள்ளுங்கள்.
எரேமியா:2:13. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
Labels:
End Time News,
USA
Tuesday, October 23, 2012
பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்
படத்தில் நீங்கள் காணும் இந்த புகழ்பெற்ற “பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்” சிற்பமானது ("Let us beat swords into plowshares") நியூயார்க் மாநகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மனிதனை அழிக்கும் போர்க்கருவியான பட்டயங்களையெல்லாம் மனிதனுக்கு பயனாகும் கருவியான மண்வெட்டிகளாக மாற்றுவோம் என்பது தான் இந்த சிற்பம் சொல்லும் நீதி. இந்த அற்புதமான கருத்து எதிலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா? நமது வேதத்தின் ஏசாயா:2:2-டிலிருந்து தான். “அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” என்பது தான் அந்த வசனம். இந்த சிலையை ஐநாவுக்கு பரிசாக 1959-ல் வழங்கியது சோவியத் யூனியன் என்பது இன்னொரு ஆச்சரியமான உண்மை. யுத்தங்களே இல்லாத இப்படியான ஒரு பொற்காலம் இயேசுகிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பது யாருமே ஒத்துக்கொள்ளாத ஆனால் நிச்சயம் நடைபெறப்போகும் ஒரு சம்பவமாகும்.
ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.(சங்:72:8 ) தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:6) சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.(சங்:72:11.)
ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.(சங்:72:8 ) தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:6) சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.(சங்:72:11.)
Labels:
Bible Prophecy,
End Time News,
Pictures,
Revelation,
Second Coming,
USA
Friday, September 21, 2012
காத்துக்கிடக்கும் கிழக்கு வாசல்
இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களோ இல்லையோ, ஆனால் இந்த கிழக்கு வாசல் ரொம்பநாட்களாக காத்து கிடக்கிற கதை தெரியுமோ உங்களுக்கு. இந்த வாசல் வழியாகத் தான் யூதருக்கு ராஜாவாக அந்த முதல் குருத்தோலை திருநாளில் கடைசியாக எருசலேமுக்குள் இயேசுகிறிஸ்து நுழைந்தார். இப்போது மீண்டும் அவர் மட்டுமே இந்த வாசல் வழியாக ராஜாவாக நுழையவேண்டும் என்பதற்காக இந்த வாசல் இன்னும் பூட்டப்பட்டிருக்கிறது ஒரு அதிசயகரமான சம்பவம்.அதை பூட்டி வைத்தது ஒரு முகமதிய மன்னனான சுல்தான் சுலைமான் மன்னன்.
வேதம் சொல்லுகிறது”இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.” எசேக்கியேல்:44:2 அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.
கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப் பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.
அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்? மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். ”இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.” எசேக்கியேல் 44:3.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.(சங்கீதம் 24:9,10)
வேதம் சொல்லுகிறது”இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.” எசேக்கியேல்:44:2 அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.
கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப் பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.
அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்? மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். ”இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.” எசேக்கியேல் 44:3.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.(சங்கீதம் 24:9,10)
Labels:
Bible Prophecy,
End Time News,
Geography,
History,
Israel,
Jerusalem,
Jesus,
Palm Sunday,
Second Coming
Subscribe to:
Posts (Atom)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்


