Wednesday, October 24, 2007

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்


ethai ninaithum nee kalangathey mahane berhmens song

என் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song


en kirubai unakku poothuம் father berhmens

போஷிப்பவர் நீரே Rev Paul Thangaiah Video Song


pooshippavar neerey Rev.paul thangaiah song

Monday, October 22, 2007

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ருசித்துப் பார்...
ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

ஒரு நாத்திகன்....கடைந்தெடுத்த நாஸ்திகன் மேடையினின்று பிரசங்கிக்கிறான்.

"அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும்" என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள்.

"கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாசலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான்.

அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள்.

கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான்.

அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெரிய குடிகாரன் ஒருவன் - குணப்பட்டு கிறிஸ்தவனானவன் - மேடைமீது ஏறினான்.

தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

"கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன்.

பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.

தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் ஆங்காரத்துடன்.

"கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.

நாஸ்திகன் தலைகுனிந்து போனவன் போனவன் தான்.

சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்

1பேதுரு 2:17
தேவனுக்குப் பயந்திருங்கள்

Psalm 34:8
Taste and see that the LORD is good;

1 Peter 2:17
fear God

Tuesday, October 09, 2007

கடவுளைக் காட்டு...

கடவுளைக் காட்டு...
சூரியனின் சூட்சமம்

"கடவுள் நம்மைப் பார்க்கிறவர் என்று சொல்லுகிறீரே,அந்த கடவுளை எனக்கு காட்டும்" என்றார் திரேஜன் சக்கரவர்த்தி யூதரபியிடம்.

"கடவுள் ஆவியாய் இருக்கிறாரே,அவரைக் கண்ணால் பார்க்க முடியாதே" என்றார் யூதரபி."நாம் பார்க்கமுடியாத கடவுள் நம்மை எப்படிப் பார்ப்பார்,இது பித்தலாட்டம்;மேலும் நீர் சொல்வதை நான் நம்பமுடியாது;கடவுளை இப்பொழுது எனக்கு காட்டத்தான் வேண்டும்" என்று வற்புறுத்தி கட்டாயப்படுத்தினார் சக்கரவர்த்தி.

மத்தியானம் 12 மணிக்கு சக்கரவர்த்தியை அழைத்துக்கொண்டு வெளியே போய் "இப்பொழுது சூரியனைப்பாரும்" என்றார் யூதரபி.

"கண் கூசுகிறதே,சூரியனை என்னால் எப்படிப் பார்க்கமுடியும்?" என்றார் சக்கரவர்த்தி.

"கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவைகளில் ஒன்றாகிய சூரியனையே உம்மால் பார்க்க முடியவில்லையே,சிருஷ்டிகராகிய கடவுளை எப்படிப் பார்க்கமுடியும்" எனச் சொல்லிச் சென்றார் யூதரபி.

சக்கரவர்த்திக்கு பேச நாவெழவில்லை.

சங்கீதம் 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

வெளி 4:11
கர்த்தாவே, தேவரீர்,...நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்,

Psalm 14: 1
The fool hath said in his heart, There is no God.

Revelation 4:11
Thou art worthy, O Lord,...for thou hast created all things,