Monday, April 27, 2015

நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது - இயேசு கிறிஸ்து (மத்தேயு:15:28)


Saturday, April 25, 2015

இயேசு கிறிஸ்துவும் மகா அலெக்சாண்டரும். இருவரும் வாழ்ந்தது முப்பத்திமூன்று ஆண்டுகளே. ஆனால் ஒருவர் அம்பினால் தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். இன்னொருவரோ அன்பினால் தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். ஒருவர் தன்பின்னே படைகள் அணி தொடர வீரமாய் நடந்தார். இன்னொருவரோ தன் பின்னே சிலரே தொடர‌ தாழ்மையாய் நடந்தார். ஒருவர் முழுஉலக‌த்தையும் ஆண்டுகொண்டும் ஒன்றுமில்லாமலேயே மரித்தார். இன்னொருவரோ மரித்து முழுஉலகத்தையே ஆண்டுகொண்டார். ஒருவர் தனது வெற்றிக்காக‌ எத்தனையோ பேர் இரத்தத்தை சிந்தினார். ஆனால் இன்னொருவரோ தனது இரத்தத்தை உலகோர் அனைவரின் மீட்புக்காகவும் சிந்தினார். மகா அலெக்சாண்டர் மாவீரனாக‌ நன்றாக ஜீவித்திருந்தும் சடுதியில் மரித்துப்போனார். ஆனால் மகாபிரபு இயேசு கிறிஸ்துவோ மரித்தும் இன்றைக்கும் ஜீவிக்கின்றார்.


அத்திமரம் துளிர் விட்டு இன்றோடு 67 வருடமாச்சு. உலர்ந்த எலும்புகள் உடல்கொண்டு இன்றோடு 67 வருடமாச்சு. ஆம் இஸ்ரேல் தேசம் உருவாகி இன்றோடு 67 வருடங்கள். நம்ம காலண்டர் படி மே 15 தான். ஆனால் யூத காலண்டர் படி இன்று தான் அவர்கள் சுதந்திரம் பெற்ற நாள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் சுதந்தரித்துக் கொண்ட நாள். நமதாண்டவர் சொல்லிச்சென்றார். "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்" என்று. ஆம் அவர் வாசலருகே வந்திருக்கிறார் என்பதற்கு துளிர்விட்டிருக்கும் இந்த அத்திமரமாகிய இஸ்ரேல் தேசமே சாட்சி.